Thursday, July 30, 2009

மலையக தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சியும் பொருளாதாரத்தின் பங்களிப்பும்

-எம். இராமச்சந்திரன்-
“மலையக சமூகத்தின் வளர்ச்சியின் வேகம் ஏனைய சமூகத்தைவிட மந்த கதியிலேயே நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஏனெனில் பொருளாதார வளத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் நமது மலையக சமூகம் காணப்படுவதே முக்கிய காரணமாகும். அவ்வாறாயின் பொருளாதார வளத்தை உயர்த்திக் கொள்வதற்கான வழிகளையும், பொருளாதார வளர்ச்சியின் தடைக்கற்கள் பற்றியும், மாற்று வழிகளை கையாளும் சந்தர்ப்பத்தில் தேயிலை உற்பத்தியில் பின்விளைவுகள் பற்றியும் ஓர் ஆய்வினை பார்ப்போம்.”
இலங்கையின் தேசிய பொருளாதாரத்தில் தேயிலை உற்பத்தியின் பங்களிப்பு இன்றியமையாதது. எனினும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் மாதாந்த வருமானம் அவர்களின் ஜீவனோபாயத்திற்குக் கூடப் போதியளவாக அமையவில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் அன்றாட தேவைகளில், உணவு, உடை, உறையுள் ஆகியன மிக முக்கியமானவையே. ஆயினும் மூன்று வேளை முறையாகப் பசியாறக் கூட தனது வருமானம் போதாத நிலையில் வாழ்கின்றனர்.
இவ்வாறான நிலையில் தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டுமாயின் அவர்களது வாழ்க்கையையே ஓர் போர் களமாக மாற்ற வேண்டியுள்ளது. மாதாந்த வேலை நாட்களில் ஒரு நாள் சுகயீனத்தாலோ அல்லது தனது சுய தேவையின் பொருட்டோ வேலைக்குச் செல்லத் தவறும் பட்சத்தில் தனது மாத நாட் சம்பளத்தில் நாள் ஒன்றுக்கு நூறு ரூபாய் வீதம் கழிவுத் தொகையுடனேயே சம்பளத்தைப் பெறுகின்றனர். இவ்வாறான தோட்டக் கம்பனிகளின் சட்ட திட்டங்களுக்குப் பயந்து உடல் நலமற்ற நிலையிலும் கட்டாயமாக வேலைக்குச் செல்ல வேண்டிய வேதனைக்குரிய நிலையிலேயே தனது வாழ்க்கையை நடத்துகின்றனர்.
ஏனைய மக்கள் அனுபவிக்கும் வாழ்க்கைச் சுகத்தை தோட்டத் தொழிலாளர்கள் கனவுலகிலேயே அனுபவிக்கின்றனர். பெருந் தோட்டப் புறங்களைப் பொறுத்தமட்டில் பெரும்பாலும் தேயிலைத் தொழிலையே நம்பி வாழ்கின்றனர். இல்லையெனில் நகர்ப்புறங்களில் இயங்கும் ஆடைத் தொழிற்சாலையையே இளைஞர் யுவதிகள் நாட வேண்டியுள்ளது. இந்நிலையில் தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கங்களா அல்லது தொழிற் சங்கங்களுக்காக தொழிலாளர்களா என எண்ணத் தோன்றுகின்றது.
அரச நிர்வாகத்திற்கு கீழ் இயங்கிக் கொண்டிருந்த தேயிலைத் தோட்டங்கள் தனியார் துறையிடம் கையளிக்கப்பட்ட பின் தொழிலாளிகளின் இரத்தம் இன்று தேயிலைச் செடிகளுக்கு உரமாகிக் கொண்டிருக்கின்றது.
அரச நிர்வாகத்திடமிருந்து தனியார் துறைக்குக் கைமாறிய சந்தர்ப்பத்தில் தேயிலை தொழிலாளிகளுக்குக்கே குத்தகை அடிப்படையில் தேயிலை விளை நிலங்களைப் பெற்றுக் கொடுக்க முனைந்திருப்பார்களாயின் “கூலித் தொழிலாளி” என்ற அடிமை சாசனத்திலிருந்து விடுதலை பெற்றுக் கொடுத்த பெருமை தொழிற்சங்கங்களைச் சார்ந்திருக்கும். அத்தோடு பெருந்தோட்ட தேயிலை உற்பத்தியும் மேலும் தன்னிறைவு அடைவதோடு தொழிலாளிகளும் தன்னிறைவு அடையும் சூழல் ஏற்பட்டிருக்கும்.
தொழிற் சங்கங்கள் உருவாகி அறுபது வருடங்கள் கடந்துவிட்ட போதும் இன்னும் எத்தனையோ, தோட்டங்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் காணப்படுகின்றன. தொழிலாளிகளின் சம்பளத்தைக் கூட ஒப்பந்த அடிப்படையில் நிர்ணயிப்பது தொழிலாளர்களை அடகு வைப்பது போன்றே உணரத் தோன்றுகின்றது.
தொழிற் சங்கங்கள் மூலம் தனது பொருளாதாரத்தையும் அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள எத்தனிப்பதை விட ஒவ்வொருவரும் தனது சுய தேவைகளைத் தானே பூர்த்தி செய்து கொள்ளள பழகிக் கொள்ள வேண்டும்.
தொழிற்சங்கங்களின் வளர்ச்சியும் தொழிற்சங்கங்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் ஏறுவரிசையாக அமைந்தாலும், அத் தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்களாகிய தொழிலாளர்கள் நின்ற இடத்திலேயே ஓடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே காணப்படுகின்றனர். வெறுமனே தேயிலைத் தொழிலைமட்டும் நம்பியிராமல் மாற்றுத் தொழிலையும் நாட வேண்டிய கட்டாயத்திலுள்ளனர்.
இன்று ஒவ்வொரு தொழிலாளியும் தன்னைப் போலத் தனது பிள்ளைகளைத் தொழிலாளியாக அன்றி வேறு உயர் நிலைத் தொழில்களுக்கு தயார்படுத்த எத்தனிக்கின்ற போதும் அவர்களது பொருளாதாரம் ஆட்டிப்படைக்கின்றது.
எனவே பொருளாதார வளத்தை உயர்த்த வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் தேயிலைத் தொழிலாளிகள் உள்ளனர். மாற்றுவழிகளைக் கையாள வேண்டுமாயின் சிறுகைத்தொழில்களில் தனது ஈடுபாட்டைச் செலுத்த வேண்டும்; தையல், விவசாயம், பண்ணை, கால்நடை வளர்ப்பு போன்றவற்றுடன் சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு அமைப்புகள் தமது சேவையை இன்றும் தோட்டப்புறங்களில் விரிவுபடுத்த வேண்டும்.
நகர்ப்புறங்களில் வியாபார ஸ்தாபனங்களை நிறுவியுள்ள மலையக தொழிலதிபர்கள் தமது சமூகத்தின் விடிவுக்காகத் தோட்டப்புறத்தில் மூடப்பட்டிருக்கும் தேயிலைத் தொழிற்சாலைகளைப் பெற்று உற்பத்திகளை மேற்கொள்ள முன் வருவார்களாயின் இப்பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகள் எற்படும்.
எனினும், பெருந்தோட்ட தொழிலாளிகளின் அன்றாட அத்தியாவசிய செலவீனங்களைக் கருத்திற்கொண்டு காலத்திற்கு ஏற்ப சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க சம்பந்தப்பட்ட தரப்புகள் முன்வராத நிலையில், தேயிலைத் தொழிலாளிகளின் தொழில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதனவையே. காலப் போக்கில் தொழிலாளிகள் பற்றாக்குறையை சந்திக்க நேரிடலாம். அவ்வாறாயின் இறுதியில் தேயிலை உற்பத்தியின் தேசிய பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையை நோக்கி பயணிப்பதை தவிர்க்க முடியாது போய்விடும்.
நன்றி- தினகரன்
நியாயமான சம்பள உயர்வை அரசு பெற்றுக்கொடுக்க வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டுமென அம்பகமுவ பிரதேச சமூக விழிப்புணர்ச்சி மன்ற செயலாளர் எம்.ஆறுமுகம் அம்பகமுவ பிரதேச சமூக விழிப்புணர்ச்சி மன்ற செயலகத்தில் வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பாக உரையாற்றும் போது தெரிவித்தார். மேலும் பேசுகையில் மலையகப் பகுதியில் வாழும் இந்திய வம்சாவழியினர் இலங்கையில் சகல பிரிவிலும் தோட்டங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.
தொழிற்சங்கங்கள் தங்களுக்கென வருடத்தில் 2 தடவை ஜூன் 30 ஆம் திகதியும் டிசம்பர் 31 ஆம் திகதியும் தங்களுக்குத் தேவையான தொழிலாளர்களை தொழிற்சங்கங்களில் இணைந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறான சந்தர்ப்பங்களில் தொழிற்சங்கங்கள் அனைத்தும் தங்களது அமைப்பின் ஊடாக தொழிலாளர்களை தங்களது சங்கங்களில் இணைந்து கொள்ள தங்களின் முழுமையான சக்தியையும் பயன்படுத்தி செயற்படுகின்றது. இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படும் தொழிலாளர்களிடமிருந்து மாதா மாதம் சந்தாவை மட்டும் பெற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படுவதில்லை என தோட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கடந்த மார்ச் மாதம் முடிவுற்ற சம்பளப் பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியான நிலையில் உள்ளது. அர சாங்க ஊழியர்களுக்கு மாத்திரம் ஒவ்வொரு வரவுசெலவுத் திட்டத்தின் போதும் சம்பள உயர்வு கிடைப்பது போல் தோட்டத் தொழிலாளர்களுக்கும் அரசாங்கமே முன்நின்று சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
ஒரு சில தோட்டங்களில் மின்சார வசதி இல்லாது மண்ணெண்ணெய் விளக்கையே பாவிக்கின்றனர், அதன் விலையும் உயர்ந்து கொண்டே போகின்றது. தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளம் 200 ரூபாவாகும். மேலதிகமாக 20 ரூபா மற்றும் 70 ரூபாவை பெற வேண்டுமாயின் தோட்டத்தில் 21 நாள் வேலை செய்தே ஆக வேண்டும். அவ்வாறு வேலை செய்யாவிடின் குறிப்பிட்ட மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. இது தொழிலாளர்களுக்கு இரண்டு வருட ஒப்பந்தத்தில் இணைக்கப்படும் சாபக் கேடாகும்.
மேலும், ஒப்பந்தம் பற்றிய விளக்கத்தினை தோட்ட மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். ஒப்பந்தங்களில் அடங்கியுள்ள விடயங்கள் என்ன என்பதை தோட்ட மக்களுக்கு அறிவிக்க வேண்டும். இது இவ்வாறு இருக்க தோட்டத் தொழிலாளர்களைத் தங்களது தொழிற்சங்கங்களில் இணைத்துக் கொள்ள அக்கறையுடன் செயற்படுபவர்கள் தொழிலாளர்கள் மீது அக்கறை காட்ட வேண்டும். ஜூன் மாத காலப் பகுதியில் வழங்கப்படும் வாக்காளர் பட்டியலைப் பூர்த்தி செய்து கொடுக்கவும் வாக்காளராக இல்லாதோரை வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான சகல வழிகளையும் செய்து கொடுக்க வேண்டும். எமது ஜனாதிபதி இந்நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் இந் நாட்டு பிரஜைகள் எனக் கூறியும் இன்னும் வாக்காளர்களாகப் பதிவு செய்ய மறுக்கின்றனர்.
ஆகவே தொழிலாளர்களின் சந்தாவை மட்டும் எதிர்பார்க்காமல் அவர்களின் நலன் கருதி வாக்காளர்களாகப் பதிவு செய்ய ஏற்பாடு செய்து கொடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தோட்டக் குடியிருப்புகளுக்கு கிராம சேவையாளர்கள் நேரடியாகச் சென்று படிவங்களை வழங்குவதுடன் அவர்களின் குடும்பத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோரை வாக்காளராகப் பதிவு செய்ய வேண்டியது கிராம சேவையாளரின் கடமையாகும்.
தொழிற்சங்கங்கள் தோட்டங்களில் உள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு சில தோட்டங்களில் தோட்டத்தில் வேலை செய்ய ஆள் பற்றாக்குறை உள்ளதால் ஒரு தொழிலாளிக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு சம்பளம் வழங்குகின்றனர். ஒரு சில தோட்டங்களில் வேலைக்கு இளைஞர், யுவதிகள் இருந்தும் பெயர் பதிவதில்லை. அப்படியே பெயர் பதிந்தாலும் ஊழியர் சேமலாப நிதி,ஊழியர் நம்பிக்கை நிதி என்பன வழங்கப்படுவதில்லை.
மலையகத்தைச் சேர்ந்த அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து பலம்மிக்க ஒரு தொழிற்சங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டும்.
மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணத் தேர்தலின் போது எமது உறுப்பினர்கள் என்றும் இல்லாதவாறு அங்கத்துவத்தை இழந்துள்ளனர். அதற்குக் காரணம் எமது தலைவர்கள். எல்லோரும் தலைவர்களாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதனாலாகும். பலமான தொழிற்சங்க அமைப்பை உருவாக்கி எமது மக்களையும் இணைத்துக் கொண்டு எதிர்காலத்தைச் சிறந்ததொரு காலமாக உருவாக்க வேண்டிய பாரிய கடமை தற்போதைய தலைவர்களின் கையில் உள்ளது. அதை அவர்கள் எதிர்வரும் பராளுமன்றத் தேர்லுக்கு முன் ஏற்படுத்த வேண்டும்.
தினக்குரல்

Sunday, July 26, 2009

இன அடிப்படையில் எம்மவர்களின் ஆட்சி அதிகாரத்தில் 25 பிரதேசத்தில் இயங்க வேண்டும்.

இலங்கையில் பரவலாக வாழும் மக்களை அரச சேவைகள் இலகுவாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மாகாணசபைகள், பிரதேச சபைகள் உருவாக்கம் பெற்றன. இந்த சபைகளின் சிறப்பான பணிகளின் பொருட்டு கடந்த வாரம் 13ம் திகதி முதல் 18ம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட மாகாண சபைகள் உள்ளுராட்சி வாரம் நுவரெலியா பிரதேச சபை ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டது. இந் நிகழ்வில் பல விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. கொட்டகலை ஸ்ரீP முத்துவிநாயகர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற இதற்கான பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக சமூக அபிவிருத்தி சமூக அநீதி ஒழிப்பு அமைச்சர் பெ.சந்திரசேகரன் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந் நிகழ்வில் அமைச்சர் பெ. சந்திரசேகரன் பேசுகையில் இலங்கையில் ஆட்சி அதிகாரத்தை பரவலாக்கும் நோக்கிலேயே மாகாண சபைகள், பிரதேச சபைகள் உருவாக்கம் பெற்றன.
மலையக மக்களின் விகிதாசார அடிப்படையில் நோக்கும் போது குறைந்த பட்சம் 25 பிரதேச சபைகள் எம்மவர்களின் ஆட்சியின் கீழ் இருக்க வேண்டும். எனினும் தற்போது அம்பகமுவ பிரதேசசபை, நுவரெலியா பிரதேச சபை என்பனவே எம்மவர்களின் ஆட்சியின் கீழ் உள்ளன. எதிர்காலத்தில் இந்த நிலைமையினை மாற்றியமைக்கக் கூடிய வகையில் நாம் செயற்பட வேண்டும். இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவர உள்ளேன். நுவரெலியா பிரதேசசபையை பொறுத்தவரையில் குடாஓயா, கொட்டகலை, நானுஓயா, அம்பேவல என்று அதன் எல்லைகள் பரந்து இருந்த போதும் இப் பிரதேச சபைக்கு கிடைக்கின்ற வருமானம் மிகக் குறைவாகும். இருந்தபோதும் முன்னேற்றகரமான செயல் திட்டங்களை வகுத்து செயல்படும் பிரதேச சபை தலைவரின் பணிகள் பாராட்டத்தக்கது.

Friday, July 24, 2009

இளைஞர்கள் தமக்கு கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்த வேண்டும்

மலையக இளைஞர்கள் தமக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும். தோட்ட தொழிலை மட்டும் நம்பியிருந்த காலம் மாறி இன்று சுயதொழிலில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக இவ்வாறு இளைஞர் வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் மூலமாக தனது அமைச்சினால் "நவசக்தி' சுயதொழில் நிதி உதவி மற்றும் பயிற்சி வழங்கல் திட்டத்தின் மூன்று நாள் பயிற்சியினை கண்டி குருதெனியவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கல்வி வள நிலையத்தில் ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் பேசும் போது தெரிவித்தார். மேலும் நவசக்தித் திட்டமானது சுயதொழில் ஒன்றினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் தொழில் பயிற்சி, ஆலோசனை வழங்குவதுடன் மக்கள் வங்கி மூலம் கடன் பெற்றுத் தரப்படும். இது வட்டியில்லாக் கடனாகவே இளைஞர்களுக்கு வழங்கப்படுவதோடு வங்கி வட்டியினை அமைச்சே செலுத்தவுள்ளது. இந்திய உயர் மட்டக்குழு மூலமாக பயிற்சியும் வழங்கப்பட்டு தொழில் அபிவிருத்திப் பற்றி மேற்பார்வை செய்யப்படவுள்ளது. வருமானம் பெறும் வழி, வருமானத்தினைப் பெருக்கிக் கொள்ளும் முறை, இடையூறுகள், பிரச்சினைகள் பற்றி தொடர்ந்தும் மேலான்மை செய்யப்படும். கடனை மூன்று மாதத்திற்குப்பின்னரே செலுத்த தொடங்க வேண்டும். இக் காலப்பகுதிக்குள் ஒரு நிலையான வருமானத்தை ஈட்ட முயற்சிக்க வேண்டும். இந்தப் பயிற்சியின்போது சித்தியடைபவர்களுக்கே இக்கடன் உதவி வழங்கப்படும். எனவே இந்த மூன்று நாள் பயிற்சியினை ஒழுங்கான முறையில் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
தொழிலாளரின் சம்பள உயர்வை முடக்கும் சில தொழிற்சங்கங்கள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை சாதகமாக்கிக் கொண்ட சில தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் அவற்றை முடக்கி வைத்துள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் பண்டாரவளை குருக்குடி டிவிசனில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் உலக நாடுகளில் வாழும் நமது இந்திய வம்சாவளியினர் குறிப்பாக மலேசியா, பிஜித்தீவு, மொரிசியஸ் மற்றும் தென்னாபிரிக்க நாடுகளில் வாழுபவர்கள் காலத்தின் தேவைக்கேற்ப தம்மை மாற்றி தமது தொழிற்துறை மற்றும் பொருளாதார பாதையிலும் புதிய வடிவங்களுடன் தன்னிறைவு அடைந்து வருகின்றனர்.அந்தவகையில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பெருந்தோட்டத்துறையில் கடமை புரியும் தொழிலாளர்களுக்கு வேலைக்குச் சென்றால் தான் வேதனம் என்ற வேதனைக்குரிய சம்பிரதாயம் தொடருகின்றது. இதை மாற்றியமைக்க மலையகத்திற்கு மாற்றம் தேவையென்ற தொனிப் பொருளில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் காங்கிரஸ் எதிர்கால நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

Wednesday, July 22, 2009

மலையக இளைஞர்களை விடுவிக்க நடவடிக்கை - அமைச்சர் வடிவேல் சுரேஷ்

யுத்தம் முடிவடைந்துள்ள இவ்வேளையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்ட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான மலையக இளைஞர்,யுவதிகளை விடுவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பெருந்தோட்ட வைத்தியசாலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசும் போது பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

தோட்ட மக்களையும் கிராமிய மக்களையும் இணைக்கும் வகையிலான வேலைத்திட்டம் அரசினால் பொறுப்பேற்கப்பட்டு நவீன மயப்படுத்தப்பட்ட தோட்ட வைத்தியசாலைகளின் திறப்பு விழா நிகழ்வுகளுடனே ஆரம்பமாகியுள்ளன. தோட்ட வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்றதன் நோக்கமே அரசின் இலவச சுகாதார சேவைகளை பெருந்தோட்டத்துறை மக்களும் பெறவேண்டுமென்பதற்கேயாகும்.
அரசின் அந்நோக்கம் தற்போது நிறைவேறி கொண்டிருக்கின்றது. தோட்ட வைத்தியசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்டு பெருந்தோட்ட மக்களுக்கு சிறந்த சேவைகள் கிடைக்கவேண்டுமென்ற எனது கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்ததையடுத்தே திட்டத்தினை நடைமுறைப்படுத்தினார்.
இரண்டரை வருடங்களுக்குள் 50மலையக பெருந்தோட்ட வைத்தியசாலைகளை முதற்கட்டமாக அரசினால் பொறுப்பேற்று அவ்வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட்டு நவீன மயப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் புனரமைப்பு பணிகளுக்கென பெருந்தொகை நிதியினையும் வழங்கப்பட்டுள்ளது..கோடிக்கணக்கான ரூபா செலவில் பதுளை மாவட்ட பெருந்தோட்ட வீதிகள் அமைத்தலும் ஏற்கனவே இருந்த வீதிகளை புனரமைத்தலுமான வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்ப் பாடசாலைகள் பலவற்றிற்கும் கணினித் தொகுதிகளையும் ஆலயங்களுக்கான உபகரணத் தொகுதிகளையும் வழங்கியுள்ளது என்றார்
ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் 2008க்கான வருடாந்த தேயிலை மதிப்பீடு

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தேயிலை தரகுத் துறைசார்ந்த துணை நிறுவனமான ஜோன் கீல்ஸ் நிறுவனம், அண்மையில் அதன் 2008ம் ஆண்டுக்கான தேயிலை மதிப்பீட்டை வெளி யிட்டுள்ளது.அதன் முதற்பிரதியானது தேயிலை சபையின் தலைவர் லலித் ஹெற்றியாச்சியிடம் வழங்கப்பட்டது.
தேயிலை துறையின் மீது பூகோள பொருளாதாரம் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி ஆராயும் அதேவேளை, அது மேற்கு, நுவரெலியா, ஊவா, சி.டி.சி. லோ குரொன், டஸ்ட் மற்றும் பிற தரங்களுக்கான தேயிலைச் சந்தைகள் மற்றும் உலகளாவிய உள்ளுர் தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பற்றியும் இவ்வறிக்கை விரிவாக எடுத்துரைக்கிறது.
இவ்வறிக்கையின் படி, கடந்த ஆண்டில் உலகளாவிய அளவில் தேயிலையின் விலை யில் முன்னெப்போதுமில்லாத விலைத் தளம்பல் ஏற்பட்டிருந்தது. கென்யா போன்ற பிரதான தேயிலை உற்பத்தி நாடுகளில் தேயிலை வழங்கலில் ஏற்பட்ட கட்டுப்பாடு காரணமாக, இலங்கையின் தேயிலை விலை வரலாறு காணாத உயரங்களைத் தொட்டது.
உலக பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு ஏலத்தில் கேள்விகோருநர் இல்லாமையினால் பெருமளவான தேயிலை விற்பனை நடைபெறவில்லை. தேயிலை தொழிற் றுறையில் ஒரு நம்பகமற்ற நிலை தோற்றுவிக்கப்பட்டது. அது வழங்கற் சங்கிலி முழுவதும் ஒரு பண ஓட்டத்தில் நெருக்கடியைத் தோற்று வித்தது. விற்கப்படாத தேயிலையின் வீதமானது தேயிலை சபையின் அனுசரணையால் குறைக்கப்பட்ட அதேவேளை, உற்பத்தியாளருக்கு தேவையாக இருந்த பணஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
2008ல் உலக தேயிலை உற்பத்தி 3.7 பில்லியன் கிலோ. இது 2007 ஐ விட 12 மில்லியன் கிலோக்கள் குறைவு. கென்யா தேயிலை உற்பத்தியில் குறிப்பிடத்தகுந்த இறக்கம், அதாவது முதல் ஆண்டைவிட 24 மில்லியன் கிலோக்கள் குறைவாக இருந்தது.
மாறாக சீனாவும் இலங்கையும் முறையே 20 மில்லியன் கிலோ மற்றும் 14 மில்லியன் கிலோ தேயிலையை அதிகமாக உற்பத்தி செய்திருந்தன. இந்தியாவில் 36 மில்லியன் கிலோக்களை அதிகமாக உற்பத்தி செய்திருந்தது.

2008ல் இலங்கையின் தேயிலை உற்பத்தி உச்சத்தை 318.7 மில்லியன் கிலோவைத் தொட்டது. 2005 ல் உற்பத்தியான 317.2 மில்லியன் கிலோவை விட இது அதிகம். அதாவது 2007 ஐ விட 4.6 வீதம் அதிகம். கடந்தாண்டு மதிப்பீட்டின்படி ஹைகுரோன் உற்பத்தி 16 வீதம் அதிகமாகவும் மீடியம் குரோன் 10 வீதம் குறைவாகவும், லோ குரோன் 4 வீதம் உயர்வாகவும் அமைந்திருந்தது.
உலக ஏற்றுமதியானது முந்திய வருடத்தின் 71 மில்லியன் கிலோவைவிட இவ்வாண்டு 1.6 மில்லியன் கிலோவாக அமைந்தது. 2007 ஆண்டைவிட 11.6 வீதம் அதிகமாக 383.4 மில்லியன் கிலோவுடன் கென்யா மிகப்பெரிய ஏற்றுமதியாளர் என்ற நிலையை தக்க வைத்துக் கொண்டது.
இலங்கை இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக விளங்கியது. 2008ல் இந்தியா, சீனா, இந்தோனேசியா போன்றவை ஏற்றுமதியில் ஏற்றத்தை காட்டிய அதே வேளை, ஆஜன்டினா, உகன்டா, தன்சானியா, மாலாவி போன்றவை ஏற்றுமதியில் இறக்கத் தைக் கண்டிருந்தன.
இலங்கையின் 2008க்கான தேயிலை ஏற்றுமதி 319.3 மில்லியன் கிலோவை விட அதில் 299.2 மில்லியன் கிலோவைவிட தேறிய ஏற்றுமதியாக இருந்தது. இலங்கைத் தேயிலைக் கான பிரதான ஏற்றுமதி மையங்கள் எனும் நிலையை ரஷ்யா, ஈரான், சிரியா, மற்றும் துருக்கி என்பன தக்க வைத்துக்கொண்டன. ஏற்றுமதி வருமானமும் 2007 ஆண்டுக்கான 113.5 பில்லியன் ரூபாவைவிட 2008ல் 137.5 பில்லியன்களாக அமைந்திருந்தது

Sunday, July 19, 2009

போக்குவரத்து வசதிகள் அற்ற நிலையில் பெருந்தோட்டங்கள் கவனிக்குமா இ.தொ.கா.?


பெருந்தோட்டப் பகுதிகளில் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்ற போதிலும் தொழிலாளர்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.


கம நெகும, மக நெகும திட்டங்கள், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் தோட்டப் பாதை கள் கொங்கிரீட் போடப்பட்டு செப்பனிடப்பட்டுள்ளன. ஆனால் நகரப் பகுதிகளுக்குச் செல்லும் வீதிகள் குன்றும் குழியுமாகவே காணப்படுகிறது. வெள்ளைக்கார துரைமாரின் நிர்வாகத்தின் கீழ் இருந்ததைவிட மிகவும் மோசமான நிலையில் பிரதான வீதிகள் காணப்படுகின்றன.


இன்றைய நவீன யுகத்தில் மலையக மைந்தர்கள் இலக்குகளுக்காக இடைவிடாது குரல்கொடுத்து வருகின்ற போதிலும் வீதிப் புனரமைப்பும், வாகன போக்குவரத்து வசதிகளும் இன்றுவரை பூர்த்தி செய்யப்படாமல் இருக்கிறது.


குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் மிகவும் செறிவான தொழிலாளர்களை உள்ளடக்கிய தல வாக்கலை நகரை அண்மித்த தோட்டப் பகுதி வீதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது. இரவு நேரங்களில் மனித நடமாட்டத்திற்கு ஏற்றதாக வீதிகள் இல்லை.


குன்றும் குழியுமாக காட்சி தரும் இந்த வீதிகளில்தான் தினமும் மக்கள் பயணிக்கின்றனர்.


தோட்டங்களுக்கும் நகரத்திற்குமிடையே சாதாரணமாக 5 கி. மீற்றரிலிருந்து 15 கி. மீற்றர் வரையான தூர த்தை நடந்தே கடக்க வேண்டியிருக்கிறது. இடை நிலை, உயர்தர மாணவர்கள் நகர்ப்புற பாடசாலைகளுக்கு செல்வதானால் அதிகாலை 5.00 மணிக்கெல்லாம் புறப்பட்டே ஆக வேண்டும். சற்று தாமதமானால் கூட பாடசாலைக்குச் செல்ல முடியாது போய்விடும்.


காலை முதல் மாலை வரை தேயிலை மலை முகடுகளில் மண்டியிட்டுக் கிடந்து, கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் மக்கள் கால்நடையாகவே நகரங்களுக்கு செல்கின்றனர்.


நாளொன்றுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இவ்வாறான வீதிகளைப் பயன்படுத்துகின்றனர். வீதிகள் குன்றும் குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.


இவ்வாறான வீதிகளில் வாகனங்கள் சேவையில் ஈடுபடுவது மிகவும் குறைவு. தோட்டப் பகுதிக்கு பஸ் போக்குவரத்துகள் இடம்பெறுவதில்லை என்றே கூறவேண்டும். கிராமப் பகுதிகளுடன் ஒப்பிடும் போது தோட்டப் பகுதிகளின் நிலைமைகள் மிகவும் கவலைக்குரிய நிலையில் காணப்படுகிறது.


தோட்டத்தில் வேலை செய்து ஓய்வுபெற்ற ஒரு தொழிலாளர் தமது ஊழியர் சேமலாப நிதியில் ஒரு வாகனத்தை மிகவும் குறைந்த விலையில் அவ்வாகனம் வீதியில் நகர்ந்து சென்றாலே போதும் என்ற நிலையில் தான் காணப்படும்.அவ்வாறான வாகனங்களே தோட்டப் பகுதிகளுக்கான சேவையில் ஈடுபடு கின்றன. பழைய வாகனங்களே மக்களை ஏற்றி இறக்கும் பணியை கனக்கச்சிதமாக செய்து வரு கின்றன.


ஓரிரு வாகனங்கள் சேவையில் ஈடுபடுகின்றன.சேவை மனப்பான்மையில் அவர்கள் ஈடுபடுவதில்லை. எந்தளவுக்கு பணத்தை வசூலிக்க முடியுமோ அந்தளவிற்கு சாதித்துவிடுவர்.


இரண்டு வாகனங்கள் அந்த வீதியில் சேவையில் ஈடுபடுமாயின் அவர்களுக்குள் போட்டா போட்டிகள் வேறு. ஒரு வாகனத்தில் செல்லும் ஒரு மாணவன் அந்த வாகனம் பழுதடைந்து விட்டால் வேறு வாகனத்தில் ஏற்றாத சம்பவ ங்களும் நடந்திருக்கின்றன.


இந்நிலையில் வாகனங்களில் பயணம் செய்து பழக்கப்பட்ட அந்த மாணவர்கள் அதிகமாக மழைபெய்யும் நாட்களில் பாடசாலைக்குச் செல்ல முடியாமல் போவதாக அந்த பெற்றோர் தெரிவித்தனர். தோட்ட வீதிகளில் செல்லும் வாகனங்களில் சாதாரணமாக 12 பேருக்கு மேல் பயணம் செய்ய முடியாது. எனினும் வாகனச் சொந்த க்காரர்கள் அவர் களால் முடிந்தள விற்கு ஆட்களை ஏற்றி மூச்சுகூட வெளியில் விட முடியாமல் நகர்ந்து நகர்ந்து செல்லும், போக்குவரத்துக்கென பயணிகளிடமிருந்து அறவிடப்படும் கட்டணமானது மூன்று மடங்கு அதிகரித்த நிலையே காணப்படுகிறது.


தமது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது கஷ்டப்படும் இந்த மக்கள் கட்டண அதிகரிப்பு காரணமாக தமது வீட்டுக்குத் தேவையான சாமான்கள் அனைத்தையும் ஒரு மூடையாகக் கட்டி அதனைத் தலையில் சுமந்துகொண்டு கால் நடையாகவே வீடுகளுக்குத் திரும்புவதுண்டு


இவர்களின் நிலைமை இவ்வாறிருக்க பெரும்பாலான தோட்டப் பகுதிகளில் ஐந்தாம் வகுப்பு வரையே கற்பிக்கப்படுகின்றது.


ஒரு சில பாட சாலைகளில் மட்டுமே சாதாரண தரம் வரை கற் பிக்கப்படுகிறது. உயர்தர பாடசாலைகள் நகர்ப் புறப் பகுதிகளிலேயே அமைந்துள்ளன. இதனால் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் மிகுந்த அசௌகரியமான சூழலை எதிர்நோக்குகின்றனர்.


சில பெற்றோர் தோட்டப் பாடசாலையில் ஆசிரியர்கள் சரிவர கற்பிப் பதில்லை எனக்கூறி நகர்ப்புறப் பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை அனுப்புகின்றனர்.


இச் சிறார்கள் தமது சக்திக்கும் பலத்திற்கும் அப்பாற்பட்டு புத்தகப் பைகளை சுமந்துகொண்டு பல மைல் தூரம் நடந்தே பாடசாலைக்குச் செல்கின் றனர். பாடசாலை செல்வதற்கிடையில் களைத்துப் போகும் இச்சிறார்கள் உரியமுறையில் தங்கள் கல்வியைத் தொடர முடியாதுள்ளது.


பள்ளிச் சிறார்கள் தினமும் மழையிலும் குளிரிலும் நடந்து செல்வதைப் பார்க்கும் போது பரிதாபமாக இரு க்கிறது. மண் சரிவு, இடி, மின்னல் போன்ற இயற்கை அனர்த்த சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கும் இச்சிறார்களின் கல்வியையும் எதிர்கால இலட்சியத்தையும் பாதுகாப்பதற்கு மலையக அரசியல் தலைமைகள் முன்வரவேண்டியது அவசியமாகும்.


போக்குவரத்து பிரச்சினை காரணமாக பல மாணவர்கள் ஆரம்ப நிலையிலேயே கல்வியை இடைநிறுத்தி வீட்டு வேலைகளில் ஈடுபடுவதையும், தேயிலைத் தோட்டங்களில் வேலைக்குச் சேர்ந்து விடுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.


கர்ப்பிணிப் பெண்கள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் ஆகியோர் தமக்கான வைத்திய சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு கால்நடையாகவே நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.


ஆபத்தான நிலையில் இருக்கும் தொழிலாளர்களை தோட்ட வாகனங்களுக்காக காத்திருந்து அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கிடை யில் உயிரிழந்த சம்பவங்களும் தோட்டப் பகுதிகளில் நடந்திருக்கின்றன. கர்ப்பிணிப் பெண்களை ட்ரக்டரில் ஏற்றிக்கொண்டு செல்லும் வழியில் குழந்தைகளை பிரசவித்த தாய்மார்தான் எத்தனை பேர்.
இந்நிலை மாற வேண்டும். தேயிலை தோட்டத்திலேயே காலாகாலமாக பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வரும் தொழிலாளர் சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.


மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் 1திர்காலத்தில் மலையக அரசியல் தொழிற்சங்கத் தலைமைகளினது நிலைமைகள் கேள்விக் குறியாகிவிடும்.


சந்ததி சந்ததியாக தேயிலைத் தோட்டத்திலேயே பிறந்து வளர்ந்து அங்கேயே சமாதியாகிப் போகின்ற மலையக மக்களினது போக்குவரத்துப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக்காண வேண்டியது எம் தலைவர்களினதும் கட்டாய கடமையாகும்.


தோட்டத்திற்கும் நகர்ப்புறப் பகுதிகளுக்கும் இடையிலான வீதிகள் புனரமைக்கப்பட்டு போக்குவரத்துக்காக பஸ் சேவைகள் நடத்தும்படி தொழிலாளர்கள் கோருகி ன்றனர். சாராயத் தவறணைகளை திறப்பதற்கு பதிலாக மக்கள் நலனுக்கான பணிகள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றில் இந்த போக்குவரத்துத் துறையும் ஒன்று. அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண சபை அமைச்சர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும்.


தோட்டப் பகுதி மக்களின் நலன் கருதி இ. தொ. கா. பஸ் சேவைகளை நடத்தப் போவதாக செய்திகள் வெளியாகின. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நடத்தப்ப டும் இச்சேவையை ஒரு கட்டமைப்பின் கீழ் எதிர்காலத்தில் சிறந்த போக்குவரத்து சேவைகளை நடத்தக்கூடிய ஒரு ஸ்தாபனமாக அது இருக்க வேண்டும்.


போக்குவரத்து வசதிகள் இல்லாத தோட்டங்களில் இப் போக்குவரத்து சேவைகளை நடத்தக்கூடிய சக்தியும் பலமும் இ. தொ. காவிற்கே இருக்கிறது. மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதுபோல மக்களின் நலனில் அக்கறை கொண்டு இவ்வாறான பஸ் போக்குவரத்து சேவைகளை நடத்தும்படி தோட்ட மக்கள் வேண்டுகின்றனர். இவ்விடயத்தில் அரசியல், தொழிற்சங்க வேறுபாடுகள் எதனையும் பார்க்காமல் கூடிய விரைவில் பஸ் சேவைகளை நடத்த இ. தொ. கா. ஆவன செய்ய வேண்டும்.


டி. உமாதேவி

பேராதனைப் பல்கலைக்கழகம்

Wednesday, July 15, 2009

தொழிலாளர்களின் உரிமைப் பிரச்சினைகள்

தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறைகளுக்கு மேலதிகமாக தற்காலிக கொட்டில்களை நிர்மாணித்துக் கொள்ள வேண்டிய கட்டாய தேவை ஏற்படுகிறது. இவ்வாறு தற்காலிக கொட்டில்களை அமைத்துக் கொள்வதற்கு தோட்டங்களில் சில விதி முறைகள் கடைபிடிக்கப்படுவதுண்டு. 1975 இல் தோட்டங்கள் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத் தலைவராக ரஞ்சன் விஜேரத்னா இருந்த போதே சகல தொழிற்சங்கத் தலைவர்களையும் அழைத்து தோட்டத் தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக பேசி தற்காலிக கொட்டில்களை அமைத்துக் கொள்வதற்கான இணக்கப்பாடொன்று காணப்பட்டது.



இதன்படி தோட்டத் தொழிலாளி ஒருவர் தற்காலிக கொட்டில் அமைத்துக் கொள்ள வேண்டுமானால் தோட்டத் துரையோடு இணக்கப்பாடொன்றுக்கு வர வேண்டும். இணக்கப்பாட்டின் முடிவில் சம்பந்தப்பட்ட தொழிலாளி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுவிட்டு தோட்டத் துரையின் அனுமதியோடு தற்காலிக கொட்டிலை நிர்மாணித்துக் கொள்ள முடியுமாகவிருந்தது.




தோட்டத்துரையின் அனுமதியின்றி கொட்டில் ஒன்றை நிர்மாணித்த குற்றச்சாட்டின் பேரில் அல்லது தோட்டத்தில் காலியாக இருந்த லயன் அறைகளில் அத்துமீறி குடியேறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தோட்டங்களிலிருந்து அநேகமானவர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவதுண்டு. சம்பந்தப்பட்ட தொழிலாளியை தாங்கள் வேலை நீக்கம் செய்யவில்லை எனவும் இவர் தான் பலவந்தமாக பிடித்து வைத்திருக்கும் லயன் காம்பிறாவை தோட்ட நிர்வாகத்திடம் மீண்டும் கையளிக்கும் வரை அவர்pன் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் அல்லது சம்பந்தப்பட்ட தொழிலாளி நிர்வாகத்தின் அனுமதியின்றி நிர்மாணித்த தற்காலிக கொட்டிலை உடைத்து அகற்றும் வரை இவர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் நிர்வாகத்தின் வாதமாக இருக்கும்.



எனவே வேலை நீக்கம் அல்ல ( No termination) இது ஒரு வேலை இடைநிறுத்தமே (Suspension from work) எனவே தொழில் பிணக்கு சட்டத்தின் 31(ஆ) பிரிவின் படி தொழிலாளிக்கு இம் மனுவை இந் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் உரிமை இல்லை என்றும் இம் மனுவை விசாரிக்கும் அதிகாரம் தொழில் நீதிமன்றத்துக்கும் இல்லை என்பதும் நிர்வாகத்தின் வாதமாகும்.



சில சமயங்களில் தொழிலாளியின் சார்பில் வாதிடும் சட்டத்தரணி அல்லது தொழிற்சங்கப் பிரதிநிதியின் சாமர்த்தியத்தால் சில வழக்குகளில் தொழிலாளிக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஏற்கனவே தோட்டத்துரையை சந்தித்து பேசி அவர் இந்த காம்பிறாவை சம்பந்தப்பட்டவருக்கு தருவதாக ஒத்துக் கொண்டுள்ளார் என்றும் அல்லது தற்காலிக கொட்டிலை அமைத்துக் கொள்ளும் முன்பு தோட்ட சின்னத்துரையிடம் சொல்லிவிட்டுதான் இதனை செய்தார் என்றும் சாட்சிகளை நெறிப்படுத்தி அவ்வாறான சாட்சிகளில் தொழிலாளிக்கு ஏற்படும் சாதகமான பலாபலன்களை ஆதாரமாக வைத்து இது ஒரு ஊகித்தறிந்த வேலை நீக்கமே (Constructive termination) என்றும் இது நிர்வாகத்தின் நியாயமற்ற செயல் என்றும் விவாதித்து வழக்குகளை வெல்லும் சந்தர்ப்பங்களும் உண்டு. இருப்பினும் இவ்வாறு நீதிமன்றங்களுக்கு முன் எடுத்துச் செல்லப்பட்ட வழக்குகள் பலவற்றில் இது வேலை நீக்கம் அல்லது (Not termination) தோட்டத்துரையின் சட்ட ரீதியிலான கட்டளையை (Lawful Orders) நிறைவேற்றும் வரை தொழிலாளி வேலையிலிருந்து இடைநிறுத்தம் மாத்திரமே செய்யப்பட்டுள்ளார்.(Suspension from work) என்று பல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.




எனவே தொழிலாளி ஒருவரின் பிரச்சினை முன்னெடுக்கப்படும் பொழுது அது அவரது அது அவரது சட்ட ரீதியிலான உரிமையை நிர்வாக ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கையா அல்லது யதார்த்தமான சூழ்நிலைகள் காரணமாக தோன்றிய மனிதாபிமான ரீதியில் அணுகக்கூடிய பிரச்சினைகள் என்பது போன்ற அம்சங்கள் ஆராயப்படுகின்றன.




தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் வசதியின்மை காரணமாகவும் அவர்களுக்கென்று குளியலறைகள் தனியாக இல்லாத காரணங்களினாலும் தங்களின் வீடுகளுக்கு முன் வாளிகளில் தண்ணீரை நிரப்பி அவசர அவசரமாக குளிப்பது வழக்கம். வீட்டிலுள்ள வயது வந்த பெண் பிள்ளைகளுக்குக்கூட மறைவாக நின்று குளிக்க முடியாதுள்ளதே என்ற காரணத்தினால் தொழிலாளர்கள் தங்களின் மரக்கறி தோட்டங்களிலோ வீட்டுக்குப் பக்கத்திலோ தற்காலிக கொட்டில்களை நிர்மாணித்து கொள்வது வழக்கம்.




தொழிலாளிக்கும் தொழில் கொள்வோருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தொழில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளிக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது தொழில் நிபந்தனைகளில் ஒன்றாகும். இந்த நாகரிகமான காலத்திலும் கூட இளம் பெண்கள் திறந்த வெளியில் நின் குளிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது ஆச்சரியத்துக்குரியதாகும். இந்த வசதிகளை செய்து கொடுப்பது தொழில் கொள்வோரின் கடமையும் பொறுப்புமாகும். இவ்வாறான வசதிகள் நிர்வாகத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட தொன்றல்ல என்று அப்பீல் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.




(ஆதாரம் Bagawathy VS SLSPC-CA 47 87)) நீதிமன்றங்களுக்கு செல்லும் போது தொழிலாளர்களின் பிரச்சினைகளை உரிமைகள் மற்றும் மனிதாபிமான காரணங்களை ஆதாரங்களாக வைத்தும் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ளும் வழி வகைகளும் உண்டு.


எஸ். இராமநாதன்


மாத்தனை

Monday, July 13, 2009

தோட்டத்துறை இளைஞர்களின் மனித உரிமை நிலை

இலங்கையின் பெருந்தோட்ட பயிராக்கவியல் செயற்பாடுகளுக்கென பிரித்தானியரால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டவர்களின் வழித் தோன்றல்கள் தான் இன்றைய மலையகத் தமிழர்கள். 18ம் நூற்றாண்டின் குருதி கசிந்த சோக வரலாற்றின் உலகறியாத மக்கள் கூட்டமாக இன்று இம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மனிதகுல நாகரிகம் வெட்கி நிற்குமளவிற்கு இம் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு கிடந்த போதும் தம் அயராத உழைப்பின் மூலம் இந் நாட்டின் மத்திய மலை நாட்டில் இந் நாட்டுக்கு பெரும் புகழையும் பொருளாதார ஊற்றையும் உருவாக்கி இலங்கையின் ஒட்டுமொத்த அபிவிருத்தியிலும் காத்திரமான பங்களிப்பினை வகித்து வருகின்றார்கள்.

மனித நேயம் வென்றெடுத்த நாகரிகத்தின் எந்தவொரு வினைப்பயனையும் இம் அனுபவிக்கக்கூடாது என்பதிலும் அம் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக வளர்ந்துவிடக் கூடாது என்பதிலம் காலம் காலமாக பதவிக்கு வந்த அதிகார வர்கத்தினர் மிகவும் சிரத்தையுடன் இருந்தனர். வேறு வார்த்தையில் கூறுவதாயின் இம் மக்களை நவீன அடிமைகளாக வைத்து மலிவு ஊழியர்களாக (Cheep Labour) பயன்படுத்தி தொடர்ச்சியாக சுரண்டினார்கள் என்றே கூற வேண்டும்.

நாட்டின் பொருளாதார கட்டுமானத்தை பலப்படுத்த அயராது பாடுபட்ட இம் மக்களின் உழைப்பு நாடு வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்றுக்கொள்வதில் பெரிதும் பங்காற்றியது என்பதனை மறந்துவிட முடியாது. ஆனால் இங்கு வேடிக்கை என்னவெனில் நாடு சுதந்திரம் பெற்றபோது இம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டமையாகம். வாழ்வுரிமை மறுக்கப்பட்டமையானது இம் மக்களை அரசியல் அநாதைகள் என்ற அசாதாரணமான நிலைக்கு தள்ளியதுடன் அனைத்து அரசியல் சமூக பொருளதார உரிமைகளையும் அனுபவிக்க முடியாதவாறு ஒடுக்கப்பட்டார்கள்.
இதன் விளைவாக ஏனைய சமூகத்தவர்கள் அனுபவித்த அடிப்படை மனித உரிமைகளை மலையக மக்கள் அனுபவிக்க முடியாத நிலை உருவாகியது. சர்வதேச ரீதியாக இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல மனித உரிமை நியமங்களையும் (International Human Rights Standards) அனுபவிக்க முடியாத நிலைக்குள்ளானார்கள். சுமார் மூன்று நூற்றாண்டு காலமாக சகல அடிப்படை மனித உரிமைகளையும் அனுபவிக்க முடியாத, மனித கௌரவத்துடன் (Human Dignity) வாழ முடியாத ஒரு மக்கள் கூட்டமாக இந் நாட்டில் இருந்தார்கள் குறிப்பாக 1970ம் ஆண்டு ஆகும் வரையில் தாம் இழந்த அரசியல் மற்றும் ஏனைய சமூக பொருளாதார உரிமைகளை பெற்றுக்; கொள்வதற்காக காத்திருந்தனர்.
1970 களுக்கு பின்னரும் சகல மனித உரிமைகளுடனும் ஒரு நாகரிகமான மக்கள் கூட்டமாக வாழும் சூழல் உருவாகவில்லை. படிப்படியாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்ட நியாயப் பிரச்சாரங்களினூடாகவே (Advocacy) ஓரளவேனும் அடிப்படை மனித உரிமைகளை வென்றெடுக்க முடிந்தது என்பது மனங்கொள்ள வேண்டிய விடயமாகும்.

முலையகத்தில் 18 தொடக்கம் 35 வயதுக்குட்பட்ட பெருமளவான இளைஞர்கள் சகல தோட்டப் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கையினை சரியாக வரையறுப்பது கடினமாகவே உள்ளது. அது குறித்த சரியானத் தரவுகள் திரட்டப்பட்டதாகத் இது வரையில் தெரியவில்லை. ஆயினும் மொத்த இளைஞர்களில் சுமார் 48 சதவீதமானோர் தொழில் அற்றவர்களாக இருக்கின்றார்கள்.

போதிய கல்வி தேர்ச்சியின்மை குறைந்த மட்ட விஞ்ஞான தொழில்நுட்ப அறிவு குறைந்த மட்ட தொழில் திறன், குறைந்த உலக அனுபவம், குறைந்த மட்ட துறைசார் பயிற்சி ஆகிய பல பிரச்சினைகள் இவர்கள் மத்தியில் காணப்படுகின்றன. அதனையும் தாண்டி ஒரு சில படித்த இளைஞர்களும் அரச தொழில் வாய்ப்புக்களில் பாரபட்சம், தோட்ட முகாமைத்துவ தொழில்களில் பாரபட்சம், அரச சேவைகளில் பாரபட்சம், புறக்கணிப்புக்கள் அந்நியப்படுத்தல் ஆகிய பல பாகுபாடுகளுக்கு உட்பட்டு வருகிறார்கள்.
அதற்கு விதிவிலக்காக ஒரு சிலர் தான் பாடசாலைக் கல்வியில் பெற்றுக்கொண்ட அறிவினை மூலதனமாகக் கொண்டு சில ஏற்றங்களை அடைந்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் நீண்ட பிரயத்தனங்களின் மூலம் பல்கலைகழக மற்றும் கல்வியியல் கல்லூhயிpல் அனுமதிப் பெற்றுக் கொள்வதன் மூலம் தமது எதிர்காலத்தை செம்மைப்படுத்திக் கொள்கிறார்கள்.
மலையக இளைஞர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற தொழில் வாய்ப்பு என்பது ஆசிரியர் தொழிலுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதானது வருந்ததக்க விடயமாகும் ஏனைய துறைகளில் இவர்களின் பங்கு ஒப்பீட்டளவில் மிக குறைவாகும். ஏவ்வாறாயினும் போதிய கல்வித் தேர்ச்சி இன்மையால் நீண்டகால்;;;ம் நிரந்தர தொழிலின்றி பெற்றோர்களின் உழைப்பில் தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகின்றார்கள்.

இவ்வாறு நீண்ட காலம் தங்கியிருப்பதனால் ஏற்படும் வறுமை மற்றும் அதிகரித்த குடும்ப சுமை காரணமாக தோட்டப்பகுதிகளை விட்டு நகர்புறங்களுக்கு தொழில் வாய்ப்பு தேடிச் செல்கிறார்கள். இவ்வாறு தொழிலுக்கு செல்லும் இந்த இளைஞர் யுவதிகள் அண்மைக்காலமாக எதிர்கொள்ளும் மனித உரிமை பிரச்சினைகள் அதிர்ச்சியூட்டுவனவாக காணப்படுகின்றன.

- இரா. ரமேஸ்-

Saturday, July 11, 2009

மூடப்பட்டுவரும் தேயிலை தொழிற்சாலைகள்

மலையக பகுதியில் உள்ள சகல தோட்டங்களும் வெள்ளையர்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் போது சகல தேயிலை தோட்டங்களும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்தது. அப்போது தொழிலாளர்கள் பெரும் பிரச்சினைகளின்றி மாதம் 30 நாட்களும் வேலை செய்து வந்தனர். அக்கால கட்டத்தில் சகல தேயிலை தோட்டங்கள் தோறும் தேயிலை தொழிற் சாலைகள் இருந்தன. அந்தந்த தேயிலை தோட்ட தேயிலை கொழுந்துகளை அதே தோட்ட தொழிற்சாலைகளில் அரைத்து தேயிலையை நல்ல விலைக்கு பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.

அக்கா¡லத்தில் தோட்டங்களில் இருந்த தெருக்கள் சுத்தமாக இருந்தன. வைத்திய சாலைகள் பராமரிப்பில் இருந்தன. தோட்ட சுத்திகரிப்பாளர்கள் கடமையில் இருந்தனர். தோட்டப் பளிச்சென இருந்தது.

இவ்வாறான தேயிலை தோட்டங்களையும் இறப்பர் தோட்டங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்று அரச உடமைகளாக்கியது. அப்போது அரச பெருந்தோட்டயாக்கம், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை என இரண்டு பிரிவுகளின் கீழ் தோட்டங்கள் இயங்கி வந்தன. தேயிலை தோட்ட பராமரிப்பு ஓரளவுக்கு சிறந்து காணப்பட்டது.

இவ்வாறான கால கட்டத்தில் அரசாங்கம் ஒரு சில தேயிலைத் தோட்டங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்தது. அவ்வாறு இணைக்கப்பட்ட போது அத் தோட்டங்களில் இருந்த தேயிலை தொழிற்சாலைகளை மூடி விட்டனர்.

அவ்வாறு மூடப்பட்ட தேயிலை தொழிற் சாலையில் இருந்த உபகரணங்களை விலை மனு கோரி விற்று விட்டனர்.

பின்னர் தோட்டங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன. அவ்வாறு குத்தகைக்கு எடுத்த சிலர் தேயிலை கொழுந்தை மட்டும் பறித்து விற்றனர். ஆனால் தேயிலை தோட்டங்களை துப்புரவு செய்யவில்லை. பல தோட்டங்கள் தற்போது காடாகி வருகின்றன. பராமரிப்பில் அக்கறை குறைந்து வருகிறது.

தோட்டங்களில் இருந்த மரங்களை வெட்டி விற்று விட்டனர்.அந்தப் பணத்தில் தொழிலாளர்களுக்கு பங்கு வழங்கவில்லை முழுமையாக கம்பனிகள் சுருட்டி கொண்டன.

மேலும் அக்காலத்தில் மூடப்பட்ட தேயிலை தொழிற்சாலைகளையும் விலை மனு கோரி விற்பனை செய்கின்றனர். அவ்வாறு விற்பனை செய்யும் பணமும் கம்பனிகாரர்கள் சுருட்டி கொள்கின்றனர்.

இவ்வாறாக கிடைக்கப் பெறும் இலாபங்களை தொழிலாளர்களுக்கு ஒரு சதமேனும் வழங்குவது இல்லை. இவ்வாறு தோட்டங்களில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் விற்று தீர்ந்த உடன் தொழிலாளர்களுக்கு என்ன மிஞ்சப் போகிறது? இவ்வாறு விற்பனை செய்வதை அரசாங்கமும் தோட்டத் தொழிற் சங்கங்களும் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்னும் தோட்டங்களில் லயன் அறைகளில் வசிப்போர் உள்ளனர். 8 ஒ 8 காம்பிராக்களில் வசிக்கின்றனர். அதனை நவீன மயப்படுத்த வேண்டும். தற்காலிக கொட்டில் அமைத்து கொண்டும் உள்ளனர். தோட்ட நிர்வாகம் சம்பாதித்து கொண்டு செல்வதை மட்டும் பார்க்காமல், இவர்களுக்கான வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க முன்வர வேண்டும். சகல வேலைகளையும் அரசாங்கம் செய்து கொடுக்கும் என்ற எதிர்பார்பில் தோட்ட கம்பனிகள் தொழிலாளர் நல விஷயங்களை கண்டு கொள்வதில்லை. இலாபம் தேடுவதிலேயே குறியாக உள்ளன.

தொழிலாளர்களின் சம்பளத்தை கூட்டிக் கொடுக்க கம்பனிகள் இழுத்தடிப்பு செய்கின்றன. கம்பனிகாரர்களினால் தான் இது நடக்கின்றது. கிடைக்கும் இலாபம் எல்லாம் எங்கு போகின்றது?

ஒருசில தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்கினாலும் பல தோட்டங்கள் பாரிய இலாபத்தினை தேடி கொடுக்கின்றன. அதற்குக் காரணம். தோட்டத்தை நிர்வாகம் செய்யும் முகாமையாளரும் தோட்ட தொழிலாளரும் தான் காரணம்.

மஸ்கெலியா பகுதியை எடுத்துக் கொண்டால் சீட்டன் தோட்ட தேயிலை தொழிற்சாலை, புரவுண்லோ தேயிலை தொழிற்சாலை, அப்புகஸ்தனை தேயிலை தொழிற்சாலை, பெரிய நடுதோட்ட தேயிலை தொழிற்சாலை, ராணி தோட்ட தேயிலை தொழிற்சாலை மல்லியப்பு தேயிலை தொழிற்சாலை மினிசிங் லேன் தேயிலை தொழிற்சாலை நல்ல தண்ணி தேயிலை தொழிற்சாலை மடுல்கல தேயிலை தொழிற்சாலை என்பன மூடப்பட்டுள்ளன.
இவற்றில் மல்லியப்பு தேயிலை தொழிற்சாலையை அப்புறப்படுத்தும் வேலை ஆரம்பமாகி விட்டது.இதனால் தோட்ட தொழிலாளர்களுக்கு எந்த நன்மையும் கிடையாது கம்பனிக்காரர்களுக்கே இதில் இலாபம்.

ஏனையவற்றையும் இழந்து விடாமல் காப்பாற்றிக் கொள்ள தொழிலாளர்கள், தொழிற் சங்கங்கள், அரசாங்கம் முன்வர வேண்டும்.
-பெருமாள்-

Friday, July 10, 2009

நான்கு மாதங்களாக ஊதியமின்றி வேலை செய்த தொழிலாளர்கள்

ஹொரணை,மொரகஹஹேன யாலகல தனியார் தோட்டத்தைச் சேர்ந்த ஐம்பது தொழிலாளர்களுக்கு,தோட்ட உரிமையாளர் கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ம.ம.மு யின் இங்கிரிய மாவட்டப் பிரதிநிதி எம்.எஸ்.பெருமாள் தோட்ட உரிமையாளருடன் தொடர்பு கொண்டபோது தோட்ட உரிமையாளர் இதற்கான காரணத்தைக் கூறாது இழுத்தடித்து வருவதாகவும், இதனையடுத்து தொழிலுறவு அதிகாரி மற்றும் பாணந்துறை தொழில் காரியாலயத்திலும் முறைப்பாடு செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்
இதேவேளை, சம்பளம் வழங்கப்படாததால் இங்குள்ள தொழிலாளர்கள் ஊதியமில்லாது பெரும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளதுடன் தொடர்ந்தும் வேலைக்குச் சென்று வருகின்றனர். தனியார் தோட்ட உரிமையாளர்கள் பலர் இன்று தோட்டங்களில் வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்குரிய சம்பளம், ஊழியர் சேம இலாப நிதியம், உரிமைகள், சலுகைகள் மற்றும் நிவாரணங்கள் போன்றவற்றை வழங்குவதில் பின்னின்று வருவதுடன், தொழிலாளர்களை அசௌகரியத்திற்குட்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளுங்கள்

ஒவ்வொரு ஆண்டு ஜூன் முதலாம் திகதி தொடக்கம் வாக்காளர் இடாப்புக்களை மீளாய்வு செய்யும் பணிகள் கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.
கிராம சேவகர் மூலம் விநியோகிக்கப்படும் விண்ணப்பப் படிவங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கிராம சேவகரிடம் ஒப்படைக்க வேண்டும். நாடு முழுவதிலும் இவ்வாறான நடைமுறைகளே பின்பற்றப்படுகிறது.
தேர்தல் காலம் வந்தால்தான் நம்மில் பலர் தமது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாமை –குறித்து குறை கூறுவோரும் இருக்கிறார்கள். குறிப்பாக பெருந்தோட்டங்களில் வாழும் பெரும்பாலானோர் வாக்காளர் இடாப்பில் தமது பெயர் விபரங்களைப் பதிவு செய்து கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை.
வாக்காளர் பட்டியலில் தமது பெயர்களைப் பதிவு செய்து கொள்வதன் மூலம் தேர்தலில் வாக்களிப்பதைத் தவிர வேறு அரச, நிர்வாக ரீதியில் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் பற்றிய தெளிவில்லாதவர்களாகவே இன்னமும் இருக்கிறார்கள். தமது பெயர்களை பதிவு செய்யாமல் வாக்களிப்பதற்கு வாக்குச் சீட்டு கிடைக்கவில்லை. வாக்களிப்பு நிலையம் வரை சென்று கடமையில் இருக்கும் உத்தியோகத்தர்களால் திருப்பியனுப்பப்படுகின்றனர்.
தற்போது கிடைத்துள்ள இச்சந்தர்ப்பத்தை பெருந்தோட்ட வாக்காளர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதல் வேலையாக வாக்காளர் பட்டியலில் தமது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலமே உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது. உங்களது பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ள ஒரு வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்ள, அரச நிர்வாகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இந்த வாக்குரிமை மிகவும் அவசியமான தொன்றாகும். உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் தான் தேர்தல் காலங்களில் உங்களைத் தேடி ஐயாமார் வருவார்கள். நீங்களும் மதிப்புக்குரியவர்களாக தேர்தல் காலங்களில் மட்டும் இருப்பீர்கள்.
தேர்தல் காலங்களில் அரசியல் வாதிகள் தோட்டப் பகுதிகளுக்கு வருவார்கள். வழமையாக கொடுக்கும் வாக்குறுதிகளை கொடுத்து வாக்குகளை பெறுவார்கள். தேர்தல் முடிந்தவுடன் எல்லாம் முடிந்துவிடும். அதன்பின் இம்மாதிரியான சமூக சேவைகள் செய்வதற்கு அரசியல்வாதிகள் நேரடியாக வந்து உங்களுக்கு சேவை செய்வதில்லை. செய்தால் பாராட்ட வேண்டும் அப்படி நடப்பது குறைவு.
1988 ஆம் ஆண்டுக்கு முன் பெருந்தோட்டப் பகுதிக்கு தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் படையெடுப்பது குறைவாக காணப்பட்டது. மலையக மக்களிடம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையே அதற்கான காரணமாகும். தோட்டத் தொழிலாளர்களுக்கும் நன்கு தெரியும்.
1977 ஆம் ஆண்டு தனியொரு மனிதனாக மலையக மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த மறைந்த இ. தொ. கா. தலைவரும் அமைச்சருமான சௌமிய மூர்த்தி தொண்டமான் எடுத்த நடவடிக்கை காரணமாக 1988 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலுள்ள மலையக மக்களுக்கு முதல் இலங்கையிலுள்ள மலையக மக்களுக்கு வாக்களிப்பதற்குத் தகுதியை பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் பிரதேச சபை, நகர சபை, மாகாண சபை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு மலையக மக்கள் செல்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கு வாக்குரிமை அவசியம். கிடைத்த வாக்குரிமையை மக்கள் தொடர்ந்து பாதுகாப்பது மக்களின் கடமையாகும்.
படித்த இளைஞர், யுவதிகள் பெருந்தோட்டப் பகுதியில் இருக்கிறார்கள். ஏன் ஒவ்வொரு தோட்டத்திலும் ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். இதேபோன்று தோட்டங்களில் தொழிற்சங்க தோட்ட கமிட்டிகள் இயங்குகிறது. மற்றும் பல மன்றங்கள், மகளிர் இயக்கங்கள் இருக்கின்றன.
இவர்கள் நினைத்தால் இதனை வெற்றிக் கொள்ள முடியும். ஒவ்வொரு தோட்டத்திலும் ஒருநாள் சிரமதானப் பணியைப் போல நினைத்து குடியிருப்புக்களுக்குச் சென்று வாக்காளர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க முடியும். இதன் மூலம் ஒவ்வொரு தோட்டத்திலும் மக்களின் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
தேசிய அடையாள அட்டை வாக்களிப்பதற்கு அவசியம் தேவை. விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள இடத்தில் தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை கட்டாயம் குறிப்பிட வேண்டும். வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதினால் பல நன்மைகள் உண்டு.
அவையாவன வாக்களிப்பது தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு வதிவிடத்தினை உறுதிப்படுத்துவது விடயத்திலும் தொழில் சம்பந்தமான வேலைவாய்ப்பு பெறுவதிலும் இன்றைய சூழ்நிலையில் இருப்பிடத்தை உறுதிப்படுத்தி நன்சான்றிதழ் பெறுவதற்கும், பிள்ளைகளை பாடசாலைக்கு; சேர்ப்பதற்கும் முக்கியமாகும். ஆகவே, வாக்காளர் இடாப்பை பெயர்களை பதிவு செய்வதில் உள்ள நன்மைகளாகும் என்பதால் வாக்காளர் இது விடயத்தில் அலட்சியப்படுத்தாமல் உரிய கால எல்லைக்குள் குறிப்பிட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உடனடியாக உங்கள் பகுதி கிராம சேவகரிடம் கையளிக்க வேண்டும்.
குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் சில மக்கள் எல்லாமே நமது கைக்கு வந்து சேர வேண்டும் என்ற மனப்போக்கில் இல்லாமல் தாங்கள் இந்த விசயத்தில் கவனம் செலுத்தி முடிந்தளவு தோட்டங்களில் படித்த இளைஞர்,யுவதிகளிடம் மற்றும் விசயம் தெரிந்தவர்களிடம் சென்று விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய் வதற்கு முயற்சி செய்ய வேண்டும். இது சம்பளப் பிரச்சினை இல்லை. தொழிற்சங்கங்கள் பேச்சு வார்த்தை நடத்தி பெற்றுக் கொடுப்பதற்கு இது உங்கள் அரசியல் உரிமை பிரச்சினை. இதில் நீங்கள் தான் கூடிய அக்கறை செலுத்த வேண்டும். இதனை ஒவ்வொருவரும் தெரிந்து செயல்பட வேண்டும்.
டி.வி. குமார்

Wednesday, July 8, 2009

14 தோட்டக் கம்பனிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய 17 கோடி ரூபா

குத்தகைக்கு விடப்பட்டுள்ள அரச தோட்டங்களை நிர்வகித்த 14 கம்பனிகள் இதுவரை 17 கோடி ரூபா வரை அரசுக்கு வரி செலுத்தவில்லையென பெருந்தோட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றில் எனவே நாம் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதன் மூலமே எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றார். குருநாகல் தோட்டக் கம்பனி மூன்றரை கோடி ரூபாவை திறைசேரிக்கு செலுத்த வேண்டியுள்ளது. இவ்வரி ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்பு செலுத்தப்பட வேண்டுமென தோட்டத்துறை அமைச்சு அரச மற்றும் தனியார் தோட்டக் கம்பனிகளுக்கு அறிவித்துள்ளது. வரி செலுத்தத் தவறியுள்ள 14 கம்பனிகளில் 3 அரச தோட்டங்களும் 11 தனியார் கம்பனித் தோட்டங்களும் அடங்கும். பெருந்தோட்டத்துறை அரசின் நிர்வாகத்தில் இயங்கும் தோட்டக் கம்பனிகள் அரசுக்கு வரியாக 7 கோடி ரூபாவை செலுத்தியுள்ளன. தோட்டக் கம்பனிகள் வரிப்பணத்தை அரசுக்கு செலுத்தவில்லையெனின் அந் நிர்வாகங்களுக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு 600 ரூபா கிடைக்க வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு நியாயமான சம்பளமாக 600 ரூபாய் கிடைக்க வேண்டுமென்பதே கோரிக்கையாகும் பிரதியமைச்சர் பி.இராதாகிருஷ்ணன் பெல்மதுளை, உனுவல தோட்டத்தில் அமைச்சர் பி.சந்திரசேகரனின் 2,82,000 ரூபா நிதியில் கட்டப்பட்ட நீர்;ப்பம்பியுடன் கூடிய குடிநீர்;த்திட்டத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார். மேலும் தாம் கூட்டு ஒப்பந்தத்தில் பங்காளிகள் அல்ல. என்று குறிப்பிட்ட அமைச்சர் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதில் தாம் ஆணித்தரமாக இருப்பதாக குறிப்பிட்டார். தாம் ஒரு மனிதனுக்குரிய அடிப்படை தேவைகளான சுகாதாரம், வீடு, குடிநீர் மின்சார வசதி போன்றவற்றை பெற்றுக் கொடுப்பதில் முன்முரமாக செயற்படுவதாக தெரிவித்தார். இதனை எனவே நாம் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதன் மூலமே எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றார்

Monday, July 6, 2009

பெருந்தோட்டப் பாடசாலைகளில் பெறுபேறுகள் வீழ்ச்சியடைவதற்கு காரணம் என்ன?

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கென போதியளவு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பது, யாரும் அறிந்த விடயமாகும். இருப்பினும் மத்திய சப்ரகமுவ, ஊவா, மாகாணங்களில் உள்ள தோட்டப் பாடசாலைகள் ஏன், நகர பாடசாலைகளில் கூட போதியளவு பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.
இதற்கு பல்வேறு காரணங்களை பலரும் கூறினாலும், இத்துறையில் பணி செய்யும். ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள், கல்வி அமைச்சர் இவர்கள் அனைவரும் தங்களுடைய கடமைகளைச் சரிவரச் செய்கின்றார்களா? இதை எந்த பெற்றோர்களாவது தட்டிக் கேட்க முன்வருகின்றார்களா என்பது கேள்விக் குறியாகவுள்ளது.
எமது சமூகத்தில் உள்ள அனைவரும் அரசியல், கல்வி, சுயதொழில் வாய்ப்பு, போசணை என்பவற்றில் குறைந்தளவான அறிவையே கொண்டிருக்கின்றனர். இவர்கள் அநேக விடயங்களில் வாய் மூடிய மௌனிகளாக இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
தரம் 5, 11, 13 வகுப்பு தேசியப் பரீட்சைப் பெறுபேறுகளை இன்னும் தேசிய மட்டத்துடன் உயர்த்திக் கொள்ள முடியாமல் போயுள்ளது. பரீட்சை பெறுபேறுகள் வீழ்ச்சியடைந்தவுடன், அதிபர், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள், யிஷிதி அமைச்சர்கள் ஆவேசமாக அறிக்கை விடுவது பேசுவது மட்டுமே வருடம் தோறும் நடைபெறுவதைக் காணலாம்.
கல்வித்துறையோடும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளோடும் தொடர்பு பட்டவர்கள் பரீட்சைப் பெறுபேறுகளை உயர்த்துவதற்கான வேலைத்திட்டங்களை, பாடசாலை, கோட்ட, வலய, மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களில் செயற்படுத்த வேண்டும்.
பரீட்சைப் பெறுபேறுகளை உயர்த்துவதற்கு உள்ளக மேற்பார்வை வெளியக மேற்பார்வை வகுப்பறை மேற்பார்வை அவசியம். இவை அனைத்தும் அதிபராலும், கல்வி அதிகாரிகளாலும் முறையாகச் செய்யப்படுகின்றதா? இந்த மேற்பார்வை முறையின் குறைபாடுகளே வருட இறுதியில் மாணவர்களின் அடைவு மட்டம் குவைதற்கு காரணமாக அமைந்து விடுகின்றன என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உணர்வார்களா? பரீட்சைப் பெறுபேறுகள் சில பாடசாலைகளில் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளன, கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், மொழி பாடங்களில் இதனை எவ்வாறு நிவர்த்தி செய்வது. தொடர்ந்து இந்நிலை நீடித்தால், உயர்தர வகுப்பிற்கும், பல்கலைக்கழகத்திற்கும் செல்லும் வாய்ப்பு மேலும் குறைவதற்கே வாய்ப்புள்ளது. வெறுமனே கல்வித்துறையில் மலையகம் வீழ்ச்சியடைந்து வருகின்றது என குறை கூறுவதில் பயனில்லை. பொறுப்பான பதவியில் உள்ளவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வர வேண்டும்.
ஒரு கோட்டத்தில் 800 மாணவர்கள் க.பொ.த. (உஃத) பரீட்சைக்குத் தோற்றினால் அதில் 152 மாணவர்கள் மட்டுமே கணிதம் உட்பட ஏனைய பாடங்களில் சித்தி பெற்றுள்ளார்கள். பரீட்சையில் சித்தியெய்தத் தவறிய மாணவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திப்பவர்கள் யார்? இம் மாணவர்கள் மீண்டும் எமது சமூகத்திற்கு உள்ளேயே வரப் போகின்றார்கள். இவ்வாறு வருடம் தோறும் நடைபெற்றால் இதன் முடிவு என்ன? இதை நிறுத்துவதற்கு முன்வர வேண்டியவர்கள் வருவார்களா?
எனவே ஒரு நிறுவனத்தின் முகாமைத்துவத்தில், மதிப்பீடு என்பது முக்கியம். எமது பெறுபேறு தொடர்ந்து நிலையானதாக இருக்க வேண்டும். எனவே பாடசாலை மாணவர்களின் பெறுபேற்றை அதிகரிப்பதற்கு பல தொண்டு நிறுவனங்கள், அமைப்புக்கள், நாடுகள், உதவி செய்கின்றன. இவற்றையெல்லாம் முறையாகப் பயன்படுத்தி மாணவர்களுக்கு சென்றடைய வைப்பதற்கு முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
பெறுபேறு குறைவதில் மலையகப் பெற்றோர்களின் பங்கும் அதிகமாக இருப்பதை அவதானிக்கலாம். இவர்கள் பாடசாலை, நிர்வாகம், பாட ஆசிரியர்கள் ஆகியோர் மத்தியில் கலந்தாலோசிப்பது இல்லை. எனவே பாடசாலை மேற்பார்வை என்பது அடிக்கடி வகுப்பு ரீதியாக அதிபரினால் சகல பாடங்களுக்கும் நடத்தப்பட வேண்டும். அத்துடன் சகல ஆசிரியர்களையும் சமமாக அவர்களுடைய கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய வேண்டும். சில பாடசாலைகளில் அதிபருக்கு சார்பானவர்களை எந்த விதத்திலும் கண்டு கொள்வதில்லை. இதனால் இவர்களை நம்பி இருக்கின்ற மாணவர்கள் மட்டுமே பாதிக்கப் படுகின்றார்கள் என்பதை அதிபர்கள் உணர வேண்டும்.
சில அதிகாரிகள் ISA, AD,principals-Subject cordinations) அனைவரும் சில வேளைகளில் அரசியல்வாதிகளின் செல்வாக்கினாலும், அதிகாரிகளின் செல்வாக்கினாலும் பதவி உயர்வுகளை பெற்றுக் கொள்வதால் அதற்கான கல்வித் தகமை, தொழிற் தகைமை இல்லாத போது அவர்களால் சில ஆசிரியர்களைக் கூட மேற்பார்வை செய்ய முடியாதளவிற்கு அப்பாவிகளாக உள்ளார்கள்.
எனவே கல்வி அதிகாரிகளை நியமனம் செய்யும் போது, சிபாரிசுகள், அரசியல் தலையீடுகளை தவிர்க்க வேண்டும். எந்த ஒரு நிறுவனமும் தன்னை சுயமதிப்பீடு செய்து கொண்டு தொடர்ந்து செல்ல வேண்டும். பாடசாலை என்பது மாணவர்களை சத்தமில்லாமல் வைத்திருப்பதும், ஆசிரியர் மாணவர்களின் பொழுது போக்குவதற்குமான இடம் இல்லை என்பதை உணர வேண்டும். மற்றும் பாடசாலையை 8.00 மணிக்கு திறப்பதும், 2.00 மணிக்கு மூடுவதும் ஒரு பெரிய வேலையில்லை. அங்கு மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முறையாகவும், நேர்த்தியாகவும் நடைபெற வேண்டும்.
பாடசாலை மட்டக் கணிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளதா? தவணைக்குரிய பாடங்கள் முடிக்கப்பட்டுள்ளதா? மாணவர்களின் அடைவு மட்டம் எவ்வாறு உள்ளது? பின் தங்கிய மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டம் செய்யப்பட்டுள்ளதா? லீவில் இருக்கும் பாட ஆசிரியர்களுக்கான மாற்யடு செய்யப்பட்டுள்ளதா? பாடசாலை இணைப்பாட விதானச் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன? மாணவர் மன்றங்கள், வாசிகசாலை, கணனி நிலையம் போன்றன எந்தளவு மட்டத்தில் செய்யப்பட்டுள்ளது? குறிப்பாக மணவர் வரவு போன்றவற்றில் மிக மிக அதிகமான கண்காணிப்புக்களை அதிபர் தொடக்கம், கல்வி அதிகாரி, கல்வி அமைச்சர் வரை ஒழுங்காக செய்தால் மட்டுமே மலையகத்தின் பெறுபேறுகளை அதிகரிக்க முடியும்.
சிவமணம்

Saturday, July 4, 2009

சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் இணக்கமில்லை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக தொழிற் சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்குமிடையில் 03-07-2009 முதலாளிமார் சம்மேளன கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் எதுவும் எட்டப்படவில்லை.
இப் பேச்சுவார்த்தையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்,தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியன கலந்துகொண்டன. இப் பேச்சுவார்த்தையின் போது இன்றைய வாழ்க்கை சுமைக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் 500 ரூபா நாட்சம்பளம் வழங்கப்பட வேண்டுமென தொழிற்சங்கங்கள் கூட்டாக முதலாளிமார் சம்மேளனத்திடம் வலியுறுத்தின. எனினும், இதற்கு இணங்க மறுத்த முதலாளிமார் சம்மேளனம், வருடத்திற்கு பன்னிரண்டரை வீத சம்பள அதிகரிப்பு வழங்க முன்வைத்த யோசனையை முழுமையாக நிராகரித்த தொழிற்சங்கங்கள், இது சம்பந்தமாக தத்தமது தொழிற்சங்கங்களோடு கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஒரு பொது கூட்டு நடவடிக்கையொன்றை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
முகாம்களிலுள்ள மலையக மக்கள் உறவினர்களிடம் செல்ல அனுமதிக்க கோரிக்கை


வடக்கில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வாழுகின்ற இந்திய வம்சாவளி மக்களை மலையகத்திலுள்ள அவர்களது உறவினர்களின் இருப்பிடங்களுக்குச் செல்ல அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டுமென மலையக மக்கள் முன்னணி சர்வ கட்சிகளின் பிரதிநிதிகளின் சந்திப்பின் போது முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் ஜனாதிபதியை சந்தித்த போது கோரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் 25 வருடங்களுக்கு முன்பு மலையகத்திலிருந்து வடக்கிற்கு இடம்பெயர்ந்த இந்திய வம்சாவளித் தமிழ் மக்களும் இன்று அகதிகளாக உள்ளனர். இவர்கள் விரும்பும் பட்சத்தில் இவர்களை மலையகப் பகுதிகளில் குடியமர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன், வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கும் நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை காணுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதியை கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீர்க்கமான முடிவு இன்றேல் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு விடயத்தில் தீர்க்கமான முடிவு கிடைக்காததால் தொழிலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராகிவருதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை பொறுமை காத்து வந்த தொழிலாளர்கள் பெருந்தோட்டக் கம்பனிகளினதும், கூட்டு ஒப்பந்த தொழிற் சங்கங்களினதும் அலட்சியப் போக்கை கண்டித்து பல்வேறு வகையான தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமீளாய்வு பேச்சுவார்த்தையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு கோரி தோட்டத் தொழிலாளர்களை அணிதிரட்டி தோட்டக் கம்பனிகளுக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்லாமல் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களை அம்பலப்படுத்த வேண்டிய நிலைக்கும் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி தள்ளப்பட்டுள்ளது என்றார்
சம்பள மீளாய்வு தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பாக இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்களை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்ற தரப்புகள் வெளியிட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் விஜயகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுவரை தோட்ட முதலாளிமார் சம்மேளனங்களும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களும் இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் விபரங்கள் குறித்து முறையாக அறிவிக்காமையானது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களுக்கிடையில் பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, ஊவா மாகாணசபைத் தேர்தலைக் காரணம் காட்டி சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் காலதாமதமாக்கப்படுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தோட்டத் தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர் சார்பாக செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

Thursday, July 2, 2009

மவுசாகலை நீர்த்தேக்கம் திறக்கப்படும் நிலை

கடந்த சில தினங்களாகத் தொடராகப் பெய்துவரும் மழை காரணமாக மவுசாகலை நீர்த்தேக்கம் எந்தவேளையிலும் நிரம்பி வழியக் கூடிய கட்டத்தை அடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கே. டி. ஏக்கநாயக்கா தெரிவித்தார். இதனால் இந்நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் எந்த வேளையும் திறந்து விடப்படலாம். அதனால் களனி கங்கைக்கு இரு மருங்கிலும் அமைந்திருக்கும் கித்துல்கல, யட்டியந்தொட்டை, அவிசாவளை, ஹங்வெல்ல போன்ற பிரதேசங்களில் வாழும் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும் என குறிப்பிட்டார்.
மலையகத்தில் 24 மணி நேர எச்சரிக்கை

மலையத்தில் இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய நான்கு நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிலவுவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவுத் தலைவர் ஆர். எம். எஸ். பண்டார தெரிவித்தார். நேற்று இரண்டாவது நாளாகவும் 24 மணி நேர முன்னெச்சரிக்கையை விடுத்தது. இந்த நான்கு மாவட்டங்களிலும் 100மி.மீட்டருக்கும் மேலாகத் தொடராக மழை பெய்திருப்பதுடன் தொடர்ந்தும் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் அறிவித்திருக்கிறது. மணிசரிவு அச்சுறுத்தல்மிக்க இடங்களாக ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்கள் இந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத்த, பெல்மடுல்ல, இரத்தினபுரி, எஹலியகொட, கலவான, கஹவத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை, புளத்ஹோபிட்டிய, தெரணியாகல ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளிலும்,நுவரெலிய மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலகப் பகுதியிலும், கினிக்கத்தேன, நோட்டன் பிரிட்ஜ், கெனியன், லக்ஷபான, மஸ்கெலியா பிரதேசங்களிலும், களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, அகலவத்த, மத்துகம பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாயம் மிக்க பல இடங்கள் உள்ளன.அவை ஏற்கனவே மணிசரிவு அச்சுறுத்தல்மிக்க இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
லயன்கள் எரிந்து நாசம்

வலப்பனை ‘பெப் ஸ்பேல்’ தோட்டத்தின் தியனில்ல கீழ் பிரிவிலுள்ள பவம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் தியனில்ல கீழ் பிரிவிலுள்ள 17ம் இலக்க லயனில் ஏற்பட்ட தீ விபத்தினால் லயன் அறைகள் எரிந்து சாம்பராகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன தெரிவித்தார். இச்சம்பவத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் நிர்க்கதியான நிலையில் அங்குள்ள விகாரையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள போதிலும்,இச் சம்பவம் காரணமாக உயிரிழப்புக்களோ காயங்களோ ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குச் சமைத்த உணவு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இச் சம்பவத்திற்கு லயன் அறையொன்றில் எரிந்து கொண்டிருந்த விளக்கிலிருந்து தீ பரவியதே காரணம் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.