Saturday, July 4, 2009

முகாம்களிலுள்ள மலையக மக்கள் உறவினர்களிடம் செல்ல அனுமதிக்க கோரிக்கை


வடக்கில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வாழுகின்ற இந்திய வம்சாவளி மக்களை மலையகத்திலுள்ள அவர்களது உறவினர்களின் இருப்பிடங்களுக்குச் செல்ல அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டுமென மலையக மக்கள் முன்னணி சர்வ கட்சிகளின் பிரதிநிதிகளின் சந்திப்பின் போது முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் ஜனாதிபதியை சந்தித்த போது கோரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் 25 வருடங்களுக்கு முன்பு மலையகத்திலிருந்து வடக்கிற்கு இடம்பெயர்ந்த இந்திய வம்சாவளித் தமிழ் மக்களும் இன்று அகதிகளாக உள்ளனர். இவர்கள் விரும்பும் பட்சத்தில் இவர்களை மலையகப் பகுதிகளில் குடியமர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன், வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கும் நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை காணுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதியை கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: