Saturday, May 16, 2009

சம்பளப் பிரச்சினை இழுபறிநிலையானால் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கெதிராக செயற்படும் நிலை ஏற்படும் -சுரேஷ் வடிவேல்

தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் தொழிற்சங்க கூட்டமைப்பு- முதலாளிமார் சம்மேளனம் என்ற தன்னிச்சையான முடிவாலுதட செயற்பாட்டினாலும் முழுமையான இணக்கப்பாடு காணப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகிறது.தொழிலாளர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கூட்டு ஒப்பந்தம் முடிவுற்று இரண்டு மாதங்களாகின்றன. சம்பள அதிகரிப்பு குறித்து எந்தவொரு இணக்கப்பாடும் காணப்படவில்லை.தொழிற்சங்க கூட்டமைப்புக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறுமுன்னர் அதன் விபரங்களை தொழிற்சங்கங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தமிழ் மொழியில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தில் கைழுத்திட்டுபவர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாவதில்லை.அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் தொழிலாளர்களே.
உள்ளுராட்சி திருத்தச் சட்டமூலம் குறித்து மலையகத் தலைவர்கள் பேச வேண்டும்

உத்தேசிக்கப்பட்ட உள்ளுராட்சி தேர்தல் சட்டமூலத்தினால் மலையகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட போகும் பாதிப்புக்கள் குறித்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற மலையகத் தலைமைகள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென மத்திய மாகாணசபை உறுப்பினர் பிரகாஷ் கணேசன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் நலனுக்காகவே அரசுடன் சேர்ந்து செயற்படுவதாக கூறிக் கொள்கின்ற மலையகத் தலைமைகள் உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் நடைமுறைக்கு வரும் போது சிறுபான்மை மக்கள் வாழ்கின்ற மலையகத் தமிழ் மக்களின் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடிய சாத்தியமே அதிகமாக உள்ளது இவ்வாறானதொரு நிலைமையினை ஜனாதிபதி வாபஸ் பெற்றுக்கொண்ட நிலையில் மத்திய மாகாணசபை யில் ஆதரவு திரட்டப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். இந்தச் சட்டமூலம் அமுலுக்கு வரும் பட்சத்தில் மலையகத் தமிழ் மக்களே பெரிதும் பாதிப்படையவார்கள் என்பது நிச்சயமாகும்.