Thursday, January 28, 2016

மலையக மக்களை அடையாளப்படுத்துவதற்கு தவறியதால் விளைவுகளுக்கு முகம் கொடுக்கும் நிலை

மலை­யக மக்கள் உரி­ய­வாறு அடை­யா­ளப்­ப­டுத்­த­ப்ப­டா­மையின் கார­ண­மாக பாத­க­மான விளை­வு­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் இந்­தி­ய­வம்­சா­வளி மலை­யக தமி­ழர்கள் என்ற பொது வரை­ய­றையின் மூலம் மலை­யக மக்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.
தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் நிபுணர் குழு­விலும் இவ்­வி­டயம் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது என்று மலை­யக மக்கள் முன்­ன­ணியின் செய­லாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரி­வித்தார்.
அதி­காரப் பகிர்வு மற்றும் அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்­தத்­திற்­கான தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் முத­லா­வது அமர்வு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மலை­யக புதிய கிராமம், உட்­கட்­ட­மைப்பு மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்சில் இடம்­பெற்­றது.
நிபுணர் குழுவின் தலைவர் பெ.முத்­து­லிங்கம் தலை­மையில் இடம்­பெற்ற இவ்­வ­மர்வு குறித்து கருத்து வின­வி­ய­போதே லோறன்ஸ் இவ்­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கைகள் தற்­போது இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் மலை­யக மக்கள் விழிப்­புடன் செயற்­பட தேவை காணப்­ப­டு­கின்­றது. சீர்­தி­ருத்த விட­யத்தில் எம்­ம­வர்கள் அச­மந்தப் போக்­குடன் நடந்து கொண்டால் பின்னால் வருத்­தப்­பட வேண்­டிய நிலைமை உரு­வா­வதை தவிர்க்க முடி­யாது.
அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்த விட­யத்தில் மலை­யகம் சார்ந்த பல்­வேறு கருத்­துக்­க­ளையும் முன்­வைப்­ப­தற்கு தனி­ம­னி­தர்­களும் குழுக்­களும் தயா­ராகி வரு­கின்­றன. இந்­நி­லையில் இது தொடர்பில் ஆராயும் பொருட்டு தமிழ் முற்­போக்கு கூட்­டணி நிபுணர் குழு­வினை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது. இக்­கு­ழுவின் முத­லா­வது அமர்வு செவ்­வாய்க்­கி­ழமை நிறைவு பெற்­றுள்ள நிலையில் நாங்கள் பல்­வேறு விட­யங்கள் குறித்தும் ஆராய்ந்­தி­ருக்­கின்றோம்.
மலை­யக மக்கள் இந்­நாட்டின் மிகப்­பெரும் சக்­திகள். இவர்­க­ளது அடை­யாளம் உரி­ய­வாறு உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இல்­லா­த­பட்­சத்தில் பல்­வேறு பாதக விளை­வுகள் ஏற்­ப­டு­வ­தனை தவிர்க்க முடி­யாது. மலை­யக மக்­களை அடை­யா­ளப்­ப­டுத்­து­வதில் குழப்­ப­நிலை காணப்­ப­டு­கின்­றது. மலை­யக மக்கள், இந்­திய வம்­சா­வளி தமி­ழர்கள் என்­றெல்லாம் இவர்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றார்கள். இவை மாற்­றப்­பட்டு ஒரே பெயரில் மலை­யக மக்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட வேண்டும். மலை­யக மக்­களின் உண்­மை­யான சனத்­தொகை 4.3 சத­வீதம் என்று சில ஆவ­ணங்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.
எனினும் மலை­யக மக்­களின் தொகை ஏழு சத­வீ­த­மாக உள்­ளது என்­பதே உண்­மை­யாகும். இத்­த­கைய நிலை­மைகள் குள­று­ப­டி­யினை தோற்­று­விக்கும். எனவே மலை­யக மக்­களை பொது­வான வரை­ய­றையின் கீழ் இந்­திய வம்­சா­வளி மலை­யக தமி­ழர்கள் என்­ற­வாறு அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­வது பொருத்­த­மாகும்.
இந்த அடை­யா­ளத்தின் ஊடாக நாம் எமது பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தோடு மேலும் பல நன்­மை­க­ளையும் பெற்­றுக்­கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும்.
இலங்­கையில் பல்­லின மக்கள் வாழு­கின்­றார்கள். அவர்­களின் உரி­மைகள் யாப்பு ரீதி­யாக உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். பாரா­ளு­மன்­றத்தில் மேல்­சபை, கீழ்­சபை என்று இரண்டு சபைகள் உரு­வாக்­கப்­ப­டுதல் வேண்டும் என்ற கருத்தும் நிபுணர் குழுவின் அமர்வில் முன்­வைக்­கப்­பட்­டது. இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸும் நிபு­ணர்கள் குழு ஒன்­றினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே கருத்­துகள் ஆரா­யப்­பட்டு பொது­வான இணக்­கப்­பா­டுகள் எட்டப்படுவதும் வரவேற்கத்தக்கதாகும். பல்வேறு தரப்பினரும் முன்மொழிவுகளை அரசியல் யாப்பு சீர்த்திருத்தக் குழுவிடம் முன்வைப்பது அவசியமாகும். ஒத்த கருத்துகளை முன்வைப்பதும் மிகவும் முக்கியமாகும். தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிபுணர் குழுவில் எதிர்வரும் காலங்களில் மேலும் பல விடயங்கள் இது தொடர்பில் ஆராயப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் என்றார்.

இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்

புதிய அர­சியல் யாப்பில் இந்­திய வம்­சா­வளி தமிழர் இருப்­பையும் உரி­மை­களையும் பாது­காப்­பது பற்­றிய ஆலோ­ச­னை­களை முன்­மொ­ழி­வ­தற்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் நுவ­ரெ­லியா மாவட்ட அபி­வி­ருத்தி குழுத் தலை­வரும் இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் செய­லா­ள­ரு­மான ஆறு­முகம் தொண்­டமான் தலை­மையில் நிய­மிக்­கப்பட்ட நிபுணர் குழுவின் புதிய அர­சி­ய­ல­மைப்­பு பற்­றிய குழு நிலை விவா­தங்கள் இடம்­பெற்­றன.
இந்த நிகழ்வு கடந்த திங்­கட்­கி­ழமை வெள்­ள­வத்தை குளோபல் டவர் ஹோட்­டலில் இ.தொ.கா வின் தலைவர் முத்து சிவ­லிங்கம், நுவ­ரெ­லியா மாவட்ட அபி­வி­ருத்தி குழுத் தலை­வரும் இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் செய­லா­ள­ரு­மான ஆறு­முகம் தொண்­டமான், கோபியோ அமைப்பின் ஸ்தாபகத் தலைவர், மாகாண சபை உறுப்­பினர் சதா­சிவம், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ராதா­கி­ருஷ்ணன் உள்­ளிட்­டோரின் பங்­கேற்­புடன் இடம்­பெற்­றது.
இதன்­போது உரை­யாற்­றிய கோபியோ அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் பி.பி.தேவராஜ் இந்­திய வம்­சா­வளி தமிழ் மக்­களின் இருப்­பையும் உரி­மை­களைப் பாது­காப்­ப­தற்கு மாவட்ட சுயாட்சி சபை­யொன்று அவ­சியம் என தெரி­வித்தார். இந்­திய வம்­சா­வளி தமி­ழர்­க­ளுக்­கான பிரத்­தி­யேக பொறி­மு­றை­யொன்றை உரு­வாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
அவர் மேலும் தெரி­விக்­கையில், புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திற்­கான தயார்­ப­டுத்­தல்­களை நல்­லாட்சி அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது. காலம்­கா­ல­மாக இந்­திய வம்­சா­வளி மக்கள் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க யோச­னை­களின் போது புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளனர் வர­லாற்றை நோக்கும் போது அது புரி­கி­றது.
சோல்­பரி அர­சி­ய­ல­மைப்பு முதல் 2 ஆம் குடி­ய­ரசு யாப்­பு­வரை இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ருக்­கான பிரத்­தி­யேக சொற்­பதம் கூட பாவிக்­கப்­ப­ட­வில்லை.பல்­லின மற்றும் பல் கலா­சார நாடு என அடை­யா­ளப்­ப­டுத்தும் இலங்கை தமிழ் மக்­களை மாத்­தி­ரமே சிறு­பான்­மை­யாக கருத்­திற்­கொண்­டுள்­ளது என்­பதே உண்மை. இந்­திய வம்­சா­வ­ளி­யினர் தமக்­கான தனி­யான அடை­யா­ளங்­க­ளையும் வரலாற்றுப் பாரம்­ப­ரி­யங்­க­ளையும் பேணி வந்­துள்­ளனர் சோல்­பரி யாப்பில் சிறு­பான்­மையின் காப்­பீ­டாக 29 (2) சரத்து அமைந்­துள்­ளது. இதனைத் தழுவி 1972 யாப்பில் அடிப்­படை உரி­மைகள் குறிப்­பி­டப்­பட்­டாலும் அவை இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ருக்கு எந்­த­ளவு பய­னு­டை­யது என்­பதை கடந்த கால அனு­பவங்­களில் உணர முடிந்­தது.
13 ஆம் திருத்தத்தில் மாகா­ண­சபை அதி­கா­ரங்கள் கொண்­டு­வரப்­பட்­டாலும் நுவ­ரெ­லி­யாவில் பெரும்­பான்­மை­யாக வாழும் இந்­திய வம்­சா­வளி தமி­ழர்­களின் கருத்துச் சுதந்­தி­ரத்தை பயன்­ப­டுத்த முடிந்­ததா என்­பதும் கேள்­விக்­கு­றியே. தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் மலை­யகத் தமி­ழர்கள் உள்­வாங்­கப்­பட்­டாலும் இந்­தியத் தமி­ழர்­களின் உரி­மைகள் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும் என்று பிரத்­தி­யே­க­மான வசனம் பாவிக்­கப்பட்டால் சாலச் சிறந்­தது.
தந்தை செல்­வா­வினால் வரை­ய­றுக்கப்­பட்ட வடக்­க­ு, கி­ழக்கு தமி­ழர்கள் மற்றும் சிங்­க­ள­வர்கள் என்ற இரு பிரி­வுகள் மாத்­திரம் உள்­ளதால் வடக்­கு, கி­ழக்­குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்­க­ளுக்கு எவ்­வாறு அதி­காரம் பகிர்ந்­த­ளிக்­கப்­படும் என்ற கேள்­விக்­குறி எழு­ந்­துள்­ளது. அதனால் இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என்ற தனி அடை­யாளம் இருக்­கு­மாயின் வர­வேற்­கத்­தக்­கது.
இதன்­படி 1996 ஆம் ஆண்டு தென்­னா­பி­ரிக்க புதிய அர­சி­யல­மைப்பு சிறு­பான்­மை­யி­ன­ருக்­கான மக்­களின் நல­னுக்­காக வரை­யப்­பட்ட முதன்­மை­யான யாப்­பா­கின்­றது. குறித்த யாப்பில் சிறு­பான்­மை­யி­ன­ருக்­கான சுதந்­திரம் அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் அர­சியல் உரி­மைகள் பாது­காக்கப்­ப­டு­வ­தற்­கென விட­யங்கள் உள்­ளீர்க்­கப்­பட்­டுள்­ளன.
தென்­னா­பி­ரிக்க யாப்பின் மாதி­ரியை உள்­வா­ங­்கி இலங்­கையின் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­பதே எமது கோரிக்­கை­யாகும் மேலும் அந்த அர­சியல் யாப்பில் உள்ள அடிப்­படை உரிமை பற்­றிய விட­யங்­களும் அவ­சியம் உள்­வாங்­கப்­பட வேண்டும். அதேபோல் கணி­ச­மா­ன அளவு வாழும் இந்­திய வம்­சா­வளி தமிழ் மக்­களின் எமக்கு நியாயம் தரும் வகை­யி­லான தேர்தல் முறை­மை­யொன்­றினை உரு­வாக்­கப்­பட வேண்டும்.
வட­ப­கு­தியை கருத்­திற்­கொண்டு மாத்­திரம் முன்­னெ­டுக்­கப்­படும் அதி­கா­ரப்­ப­கிர்வு இனி­வரும் காலங்­களில் இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ரையும் கருத்திற் கொண்­ட­தாக அமைய வேண்டும்.
இந்­திய வம்­சா­வளி­யி­னரின் தனிப்­பட்ட கலா­சாரப் பின்­ன­ணியும் பாது­காக்­கப்­படும் வகையில் அரசியலமைப்பு வரையப்பட வேண்டும் என்றார்.