Monday, April 13, 2009

தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த்தை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை எதிர்வரும் 22 ஆம் திகதி இடம் பெறவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டடைப்பு பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் தெரிவித்தார் மேலும் இப் பேச்சுவார்த்தையில் தோட்டமுதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கு பற்ற உள்ளனர் என்றும இப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கூட்டொப்பந்தம் கைச்சாத்திடும் பட்சத்தில் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் புதிய கூட்டொப்பந்தம் செல்லுபடியாகுமென்றும் என்றார் தற்போதைய வாழ்க்கைச்செலவு உயர்வக்கேற்ப தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை நாட்சம்பளமாக 500 ரூபா முதல் 600 ரூபா வரை அதிகரிக்கப்படவேண்டுமென்று மலையக தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.