Sunday, February 28, 2010

தொடரும் வீட்டு வேலைக்கு சிறுவரை அனுப்பும் அவலம்: பெற்றோர் விழிப்பு பெறுவது எப்போது?

பாடசாலை செல்லும் வயதில் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படும் சிறுமியரின் எதிர்காலம் இன்னமும் கேள்விக்குறியா கவே இருக்கிறது. வேலை செய்யும் இடங்களில் அவர்கள் பாலியல் துஷ்பிரயோகம், துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர்.

இவ்வாறான செயல்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதும் சில காலத்தின் பின்னர் மறந்து விடுவதாகவே போக்குகள் அமைந்துள்ளன.

கடந்தாண்டு செப்டம்பரில் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள கழிவுநீர்க் கால்வாய் ஒன்றில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட மஸ்கெலியா முள்ளுகாமம் மேற்பிரிவைச் சேர்ந்த சுமதி ஜீவராணி ஆகிய இருவரினது மரணத்துடன் சிறுமியரை வீட்டு வேலைக்கு அமர்த்தப்படும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாகவே நாம் கருதினோம்.

அப்போது அவர்களின் மரணம் பெருந்தோட்டப் பகுதி மக்களை அந்தளவிற்கு அதிர்ச்சிக்குள்ளாக்கி யிருந்தது. தம் பிள்ளைகளை வீட்டு வேலைகளுக்காக அனுப்பிய பல பெற்றோருக்கு ஒரு படிப்பினையை தந்த அவ்விடயம் அப்போது எல்லோராலும் மறக்கப்பட்ட ஒரு விடயமாகவே இருக்கிறது. அந்த சம்பவத்துடன் கொழும்பில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த பிள்ளைகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்கள்.

இனி கொழும்புக்கு வேலைக்கு அனுப்புவதில்லை என்ற உறுதிமொழியையும் வழங்கினார்கள். தொழிற்சங்கவாதிகள் மற்றும் சமூக நல அமைப்புக்கள் வீட்டு வேலைகளுக்கு அனுப்பும் பிள்ளைகளின் பெற்றோருக்கு அவர்களின் எதிர்காலம் தொடர்பாகவும் கல்வி கற்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்ற உறுதிமொழியையும் தந்தனர்.

அது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்கள் மலையகம் முழுவதும் பல தொண்டர் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டன. வீட்டு வேலைகளுக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்லும் தரகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இப்போது நிலைமை மீண்டும் பழைய பூஜ்ஜியத்துக்கே மாறியிருப்பதாக தோன்றுகிறது. பெற்றோர் தம் பிள்ளைகளை கொழும்பு நகர்ப்புறங்களுக்கு வீட்டு வேலைகளுக்கு அனுப்பவது இப்போதும் தொடர்கிறது.

குடும்ப வறுமை, பொருளாதார பிரச்சினை காரணமாக பிள்ளைகளை படிக்க வைப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகக் நொண்டிச்சாட்டுக்களைக் கூறி ஒருசில பெற்றோர் மிகவும் இரகசியமாக தம் பிள்ளைகளை தரகர்களின் உதவியுடன் மீண்டும் வேலைக்கு அனுப்பி வைப்பதாக தெரியவந்துள்ளது.

மர்மமான முறையில் மரணமான சுமதி, ஜீவராணி ஆகிய சிறுமிகளின் விடயத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் ஆஜரான சட்டத்தரணிகள் இலவசமாகவே பெற்றோர் தரப்பில் வாதாடினர்.

பெற்றோர் தரப்பில் தவறுகள் இருந்தும் இவ்வாறான அவல நிலை வேறெந்த பெற்றோருக்கும் வந்துவிடக்கூடாது எனக் கருதிய பல தொண்டர் அமைப்புகள் பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு பல்வேறு வகைகளில் உதவிகளைச் செய்தன.

வேள்ட்விஷன் அமைப்பு 19 இலட்ச ரூபா செலவில் பாலர் பாடசாலையை அத்தோட்டத்தில் கட்டிக்கொடுத்திருக்கிறது. தற்போது அதில் 24ற்கு மேற்பட்ட சிறுவர்கள் அப்பாடசாலையில் கற்று வருகிறார்கள்.

முதலாம் தரத்திற்குச் செல்லும் மாணவர்களுக்கு அந்நிறுவனம் தேவையான பாடப் புத்தகங்கள், உடைகள், பாதணி உட்பட பல பாடசாலை உபகரணங்களை கொடுத்து உதவி வருகிறது.

இவ்வாறு பல உதவிகள் செய்து கொடுத்த போதிலும் பெற்றோர் தம் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைப்பதாகத் தெரியவில்லை. பாடசாலை செல்லாத சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.

அத்தோட்டத்திலுள்ள இளமொட்டு இளைஞர் கழகத்தின் செயலாளர் என்.ராஜ்குமார் கருத்து தெரிவிக்கையில், சிவனொளிபாத மலைக்கு அண்மித்ததாக உள்ள மலைப்பகுதியில் இத்தோட்டம் அமைந்துள்ளது. 6000 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் இருக்கும் இத்தோட்டத்தில் மாணவர்கள் கற்பதற்கான எந்தவிதமான வசதிகளோ? சூழலோ இல்லையென்றே கூறுகிறார்.

சிறுவர்களை தரம் ஒன்றில் சேர்க்க வேண்டுமானால் மூன்றரை கி.மீ. தொலைவிலுள்ள நல்லதண்ணி தமிழ் மகா வித்தியாலயத்திற்கே செல்ல வேண்டியிருக்கிறது. இந்நிலையில் அச்சிறார்கள் காலை உணவை சரியாக உட்கொள்ளாது பகல் வேளையில் வீடு திரும்பும் வழியில் பாதியில் மயக்கமுற்ற சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

சிறுவர்கள் மூன்றரை கிலோ மீற்றர் தூரம் மலையேறி தினமும் செல்வதென்பது இயலாத காரியமாகும். இந்த சிறார்களுக்கு போஷாக்கான உணவை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.

மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் பகல் உணவு வழங்கப் படுகிறது. அவ்வாறான ஒரு திட்டத்தை மலையகத்திலுள்ள மிகவும் பின்தங்கிய தோட்டப்பகுதிகளுக்கு வழங்கினால் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார்.

இளைஞர் கழகத் தலைவர் எம்.ரஞ்சன்குமார் கருத்து தெரிவிக்கையில், என்னதான் தொண்டு நிறுவனங்கள் உதவிகளைச் செய்தாலும் பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்பு இல்லாமல் பிள்ளைகளை வளர்த்தெடுக்க முடியாது என்றார். இத் தோட்டத்தில் சுமார் 50ற்கு மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல் இருக்கின்றனர்.

அவர்கள் அனைவரையும் எப்படியாவது பாடசாலைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை கழகம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு பெற்றோர் ஒத்துழைப்பு தர வேண்டும்.

குறைந்த காலத்தில் பாடசாலைக் கல்வியை முடித்த 60 பேருக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருக்கின்றனர்.

அவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது மலையக அரசியல் தொழிற்சங்கத் தலைமைகளின் கடமையாகும் என்கிறார் ரஞ்சன்குமார்.

தோட்டத்தில் சரியாக வேலை கொடுப்பதில்லை. வேலை நாள் 21 நாள் என்றால் சம்பளமும் குறைவாக கிடைக்கும். பல்வேறு சிரமங்களின் மத்தியிலேயே குடும்பத்தை கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.

தற்போது கடுமையான குளிரும் வெப்பமும் நிலவுவதால் தோட்ட நிர்வாகம் கேட்கும் கிலோ கொழுந்தை பறிக்க முடியாதிருக்கிறது. மழைக்காலங்களில் அட்டை எமது இரத்தத்தை உறிஞ்சுகிறது. அட்டை இரத்தத்தை உறிஞ்சினால் பரவாயில்லை.

ஆனால் அதனால் சரும நோய்க்கு ஆளாகிறோம். இந்நிலையில் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை எப்படி வரும் என கேள்வியெழுப்புகிறார் தொழிலாளியொருவர்.

பெருந்தோட்டப் பகுதிகளில் இயங்கும் சமூக நல நிறுவனங்கள், தொண்டர் அமைப்புகள் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுவது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டு வந்த போதிலும் அதனை முழுமையாக இல்லாதொழிப்பதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பெற்றோரின் பங்களிப்பில்லாமல் எதனையும் செய்ய முடியாதென்பதற்கு மஸ்கெலியா முள்ளுகாமம் மேற்பிரிவு சிறந்த உதாரணமாகும். எனவே மிகவும் பின்தங்கிய பெருந்தோட்டப் பகுதிகள் மீது மலையகத் தொழிற்சங்கத் தலைமைகள் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். எதிர்காலச் சந்ததியினர் ஒரு கல்வியறிவுள்ள சமுதாயமாக மாற வேண்டுமானால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.


மஸ்கெலிய - தி. சரண்யா

கூட்டு ஒப்பந்தம் அவசியமானாலும் சரத்துக்களில் மாற்றம் தேவை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு, அவர்களின் சேமநலன்கள் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கக் கூட்டு அமைப்புக்குமிடையே இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது.

இரு தரப்பிற்குமிடையே பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்று இறுதி முடிவை எட்டுவதற்குள் பல மாதங்கள் சென்று விடுகின்றன. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும், ஏனைய தொழிற்சங்கங்களும் கூட கடந்த காலங்களில் ஒப்பந்த காலத்தில் மட்டும் பேசுவதும் பின்னர் அது பற்றி எவரும் பேசுவது கிடையாது.

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமான வேளையிலும், அதனைத் தொடர்ந்து ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னரும், பெருந்தோட்டத் தொழிலாளர்களிடையே பல்வேறு விதமான சலசலப்புக்கள், ஒப்பந்த கைச்சாத்திடலுக்குப் பின்னர் இனிபேசி என்ன பயன் என்ற நிலையில் படிப்படியாக அனைத்து தரப்பினரும் மறந்து விடுகின்றனர்.

கூட்டு ஒப்பந்தம் சரியோ, பிழையோ தோட்டத் தொழிலாளர்களுக்கான அதிகரித்த சம்பளம் நிலுவைக் கொடுப்பனவு என்பன வழங்கப்பட்டதால் பெருந்தொகைப் பணம் கையில் கிடைத்த மகிழ்ச்சிப் பிரவாகத்தில் திளைத்திருந்தனர்.

ஆனால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினால் போல் விடுமுறைக் கொடுப்பனவு வழங்குவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதே மீண்டும் சலசலப்பும் முணுமுணுப்பும் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

தோட்டத்திற்குத் தோட்டம், மாவட்டத்திற்கு மாவட்டம், கம்பனிக்கு கம்பனி மாறுபட்ட நிர்வாக முறைகள் காணப்படுகின்றன. முறையற்ற கொடுப்பனவினை எதிர்த்து ஆங்காங்கே தொழிலாளர்களின் பணிப் பகிஷ்கரிப்பும் போராட்ட நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளன.

துரை நல்லவர், பிரம்பு பொல்லாதது என்பது போல் கூட்டு ஒப்பந்தம் நல்லதாகக் கணிக்கப்பட்டாலும் அதன் சரத்துக்கள் தொழிலாளர்களை பல்வேறு வகையில் பாதிப்படையச் செய்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்பு வாய்ந்த தொழிற் சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழிலாளர் நல அமைப்புக்கள் இது விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

இதற்கமைவாக பெருந்தோட்டத் துறை சமூக மாமன்றம் சில கால தாமதத்திற்குப் பின்னர் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக தோட்டத் தொழிலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்றினை கடந்த 16ம் திகதி செவ்வாய்க்கிழமை ஹட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் மண்டபத்தில் நடாத்தியது. இச்செயலமர்வில் பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள கூட்டு ஒப்பந்தத்தின் பின்னர் எழுந்துள்ள நிலைமைகள் பற்றி ஆராயப்பட்டது.

இலங்கை செங்கொடிச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஓ. ஏ. இராமையா தலைமையில் தொழிற்சங்க பிரமுகர்களான எஸ். முருகையா, ஐயாத்துரை, ஆ. முத்துலிங்கம், ஆர். எம். கிருஷ்ணசாமி, அரச சார்பற்ற நிறுவனங்களின் சார்பாக ஏ. சி. ஆர். ஜோன், கே. சந்திரசேகரன், கே. யோகேஸ்வரி, வி. அந்தனிஸ், கே. அன்ன லெட்சுமி ஆகியோர் பங்கு கொண்ட னர். பெருமளவிலான தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துக் கொண்ட இவ்அமர்வில் வளப்பகிர்வாளராக ஹட்டன் தொழிற் திணைக்கள சிரேஷ்ட தொழில் அதிகாரி வி. மருதடியான் கூட்டு ஒப்பந்தத்தின் தன்மைகள் விடுமுறைக் கொடுப்பனவு போன்ற பல்வேறு விடயங்கள் சார்ந்த விளக்கங்களை அளித்ததோடு பங்குபற்றுனரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.


சிரேஷ்ட தொழில் அதிகாரி

வி. மருதடியான்

கூட்டு ஒப்பந்தமென்பது சட்டமுறையான ஒரு சாசனமாகும். இதில் கிடைக்கப் பெறும் அதிகூடிய நன்மையை தடுக்க முடியாது. இதனூடான பயனாளிகள் கூடுதலாக இருந்தால் தான் அதனை தொழில் ஆணையாளர் அனுமதிப்பார். சுமார். 500 வருடங்க ளுக்கு முன்பதாகவே கூட்டு ஒப்பந்த முறைமை கைத்தொழில் புரட்சியினூ டாக அமுலுக்கு வந்தது.

ஊழியர் சேமலாப நிதித் திட்டமும் கூட்டு ஒப்பந்த முறைமையின் வெளிப்பாடாக 1958 இல் நடைமுறைக்கு வந்தது எனலாம். கூட்டு ஒப்பந்தத்தை விமர்சிப்பதைவிட அதன் சரத்துக்களையே விமர்சிக்க முடியும். அதன் அபிலாஷைகள் ஒருவரால் மீறப்படலாம்.

அப்படி மீறுமிடத்து தொழில் ஆணையாளரால் வழக்குத் தாக்கல் செய்ய முடியும். சம்பள நிர்ணய சபையின் மூலமாகத் தான் முன்னர் தோட்டத் தொழிலாளரின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. சம்பள நிர்ணய சபையில் 42க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. இச்சபை ஆகக் கூடுதலாக 6000ஃ- ரூபாய் வரை சம்பளமாக நிர்ணயம் செய்ய தகுதி பெற்றுள்ளது.

கூட்டு ஒப்பந்தமானது இதற்கும் மேலான தொகையை பெற்றுக் கொடுக்க வாய்ப்பளிக்கிறது. எனினும் இதன் நடைமுறைகளின் போது பல்வேறு மீறல்கள் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் சரியான முறையில் எமது திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யலாம்.

விடுமுறை சம்பளக் கொடுப்பனவானது தனியான சட்டவரைவுகளை கொண்டிருக்கிறது. இது தொடர்பாக பிரச்சினைகள் எழுமாயின் தொழிற் திணைக்களத்திற்கு முறையிட முடியும்.

விடுமுறை தினங்களில் வேலை செய்யுமிடத்து வழமை போலவே வேலை செய்தாலும் தொழிலாளளிக்கு ஒன்றரை பெயர் வழங்கப்பட வேண்டும். விடுமுறைத் தினம் என்பதால் கூடுதல் வேலைவாங்க முடியாது என்றார்.


தொழிலாளர் விடுதலை

முன்னணியின் தலைவர்

ரி. ஐயாத்துரை

கூட்டு ஒப்பந்தத்தை நியாயமானது என பேசுவோர் அதனை எதிர்ப்போர், அதனைப் பற்றி பேசி பயனடையும் அரசியல் வாதிகள் என மூன்று வகையில் பார்க்க வேண்டும்.

1987 இல் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இ. தொ. கா.விற்கும் கூட்டு ஒப்பந்தம் இடம்பெற்றது. ஆரம்பத்தில் மாதாமாதம் சேவையடிப்படையில் பென்சன் வழங்கப்பட்டது.

இலவச வீடு, மருத்துவம் கிடைத்தது. பின்னர் மாத பென்சன் மாறி 35 வருடம் சேவை செய்த 60 வயதுடைய ஆண்களுக்கு 900ஃ- ரூபாவும் பெண்களுக்கு 750ஃ-, இந்தியா போவோருக்கு 1500ஃ- ரூபாவும் வழங்கப்பட்டு அதில் ஈ.பி.எப். உம் கழிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பல பேச்சுக்கள் நடைபெற்று நீதியான தீர்ப்பும் கிட்டியது.

முன்னர் 12 இறாத்தல் கொழுந்து பறித்த நிலையில் இப்பொழுது அது 23 இறாத்தலாக கூடியுள்ளது. 1942 இல் பொகவந்தலாவை எட்டியாகல தொழிலாளர்கள் 12 இறாத்தலே எடுக்க முடியுமென போராடினர்.

அதில் வெற்றியும் கண்டனர். கொட்டியாகல தோட்டத்தின் 8 டிவிசன்களும் இன்றும் 12 கிலோ தான் எடுக்கின்றன. ஆகவே, விமர்சனத்திற்கு உள்ளாகிய கூட்டு ஒப்பந்தத்தின் சரத்துக்கள் மீளாய்வு செய்யப்படல் வேண்டும் என்றார்.


ஆ. முத்துலிங்கம்,

பொதுச் செயலாளர், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம்,

கூட்டு ஒப்பந்தம் பல நன்மைகளை பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாக முன்னர் தோட்ட வைத்தியசாலையில் பிரசவம் நடந்தால் அதற்கான வைத்திய செலவுத் தொகை கழிக்கப்படும். கூட்டு ஒப்பந்தம் அதைத் தடுத்துள்ளது. ஆரம்பத்தில் இ. தொ. கா. மாத்திரம் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டது.

பின்னர் இ. தே. தோ. தொ. ச. சேர்ந்து கொண்டது. இச்சந்தர்ப்பத்தில் அமரர் எஸ். நடேசன் அவர்களினது பெரும் முயற்சியால் உருவான கூட்டுக் கமிட்டியும் ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் வாய்ப்பை பெற்று நன்மை தரக் கூடிய விடயங்களில் கூடிய கவனம் செலுத்தி ஆலோசனை களை முன்வைத்தது.

2 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்டுள்ள இலங்கையில் 80 இலட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இவர்களில் 22மூ தோட்டத் தொழிலாளர்கள். புதிய சங்கங்களின் அதிகரிப்பும் பழைய சங்கங்களின் மறைவும் அரசியலுக்காக வருகின்ற தொழிற்சங்கங்களும் அதிகரிப்பதாலேயே பிரச்சினைகள் தீராமலிருக்கின்றன.

தொழிற்சங்கம் பலமாக இருந்தால்தான் பிரச்சினைகள் தீருமேயொழிய அது பலவீனப்பட்டால் ஒற்றுமை பறிபோகும். வங்கித் தொழிலாளர்க்கு ஒரு சங்கமென்றால் நம்மில் ஏன் பல சங்கம் உருவாக வேண்டும்? சீர்தூக்கி பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


ஆர். எம். கிருஷ்ணசாமி

- தலைவர் விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ்,

கூட்டு ஒப்பந்தமானது பெருந்தோட்ட மக்கள் மத்தியில் பல்வேறு விதமான சலசலப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. கூட்டுத் தொழிற் சங்கமானது சம்பள உயர்வு தொடர்பாக அன்று பல்வேறு விதத்தில் கூடிப்பேசி ஆராய்ந்து வந்தது.

எனினும் காலப் போக்கில் அதன் நிலைப்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் எமை அதிலிருந்து ஒதுங்கியிருக்கத் தூண்டியது. இச்சம்பள உயர்வு பேச்சுவார்த்தைக்கு முன்னர் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே..வேலாயுதம் சகல தொழிற்சங்கங்களையும் கூட்டி ஆராய்ந்தார்.

எனினும் சிலர் எடுத்த தனிப்பட்ட தீர்மானங்களால் அதன் பின்விளைவுகள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. மடுல்சீமை ஊவாகலை தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள போனஸ் கொடுப்பனவு பழைய கொடுப்பனவு முறையிலேயே கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தொழிலாளர்களிடையே அமைதியற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.

தோட்டத்திற்கு தோட்டம் நடைமுறைகள் மாறியுள்ளன. ஊழியர் சேமலாப நிதியினை பிணையாக வைத்து கடன் வாங்கியவர்கள் பலர் பாதிப்படைந்துள்ளனர். புரோக்கர்கள் நன்மையடைகின்றனர். எனவே, இச்சம்பள விடயமானது மீளாய்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.

பல சம்பளத் துண்டுகளை காட்டியும் அவரால் விளக்கமளிக்கப்பட்டது என்றார்.


கே. யோகேஸ்வரி

- சமூக அபிவிருத்தி நிறுவனம் கண்டி,

1992 ஆம் ஆண்டிற்கு பின்னர் பெருந்தோட்டங்களில் ஆண் தொழிலாளர்களின் விகிதாசாரம் குறைக்கப்படுகிறது. அதிகமான பெண் தொழிலாளர்களே நிரந்தர வதிவிடத் தொழிலாளர்களாக உள்ளனர்.

ஆண்கள் தட்டிக் கேட்பார்கள் என்ற பயத்தில் பெண் தொழிலாளர்களை மௌனிகளாக்கி இலாபம் தீட்டும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. தோட்டக் கமிட்டிகள் தற்போது இயங்குவதில்லை.

மினிட் புத்தகம் சமர்ப்பிக்கப்படுவதுமில்லை. இது நிர்வாகத்தி ற்கு வாய்ப்பாக அமைகிறது. கூட்டு ஒப்பந்தம் குறைபாடு களை கொண்டிருக்கிறது. கூட்டு ஒப்பந்தத்தை எதிர்க்க கூட்டு முயற்சி தேவை.

கே. சந்திரசேகரன் -

இணைப்பாளர், பிரிடோ.

மக்களுக்கு தெளிவில்லாத கூட்டு ஒப்பந்தம் அவர்களை சுரண்டி சுகங்காணுகிறது.

10ஃ- விலை உயர்த்தி மறுபக்கத்தில் 21 கிலோ அதிக கொழுந்தை உயர்த்தியுள்ளனர்.

மக்களின் உடல் உழைப்பு சுரண்டப்படுகிறது. வைத்தியசாலை செலவு அதிகரிக்கப்படுகிறது.

முண்டியடித்துக் கொண்டு கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள தவறிவிட்டனர்.

வரட்சிக் காலத்தில் பெயருக்காக வரண்ட தேயிலை நிலங்களில் அதிகம் கொழுந்து பறிக்க முனைவதால் இளம் பெண் தொழிலாளர்கள் தமது அழகை இழந்து வருகின்றனர்.

தொழிலாளர்களுக்குரிய நல்ல விடயங்களை கொள்ளாத இவ்வொப்பந்தம் மொத்தத்தில் அடிமைச் சுரண்டலுக்கு அத்திவாரமிடுகிறது எனலாம். கைச்சாத்திட்டவர்கள் தமது கடமையை மறந்து விட்டார்கள் எனத் தெரிவித்தார்.


வி. அந்தனிஸ்

- ஊவா தொழிலாளர் அபிவிருத்தி நிலைய இணைப்பாளர்

கருத்துத் தெரிவிக்கையில்,

கூட்டு ஒப்பந்தம் ஒரு தொழில் ஒப்பந்தம். சமூக நிலை சார்ந்து செயற்பட வேண்டிய தொழிற்சங்கங்கள் சுயநலத்துடன் செயற்படுகின்றன.

தொழில் பாதுகாப்பு இதில் உறுதிப்படுத்தப்படவில்லை. தகவலின்றி பேசுகின்ற தொழிற்சங்க பிரதிநிதிகள் தம்மை மீளாய்வு செய்ய வேண்டும்.

ஓ. ஏ. இராமையா, இணைப்பாளர், எஸ். முருகையா ஆகியோர் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு விடயங்களை தெளிவுபடுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கந்தையா வேலாயுதம்

நன்றி-தினகரன் வாரமஞ்சரி

Sunday, February 7, 2010

nghJeyd; fUjp midtUk; xd;wpiztJ fhyj;jpd; NjitahFk;

ele;J Kbe;j [dhjpgjpj; Nju;jypy; MSk; If;fpa kf;fs; Rje;jpu Kd;dzp Ntl;ghsu; [dhjpgjp k`pe;j uh[gf;\ tuyhW fhzhj ngUk;ghd;ik thf;Ffshy; ntw;wp ngw;Ws;shu;. ngUk;ghd;ik rpq;fs thf;fhsu;fspd; ghupa gq;Fk; rpWghd;ik thf;fhsu;fshd tl fpof;F jkpo;> K];ypk; kw;Wk; kiyaf thf;fhsu;fspd; ngUk;gq;Fk; ,tupd; ntw;wpf;F NgUjtpahf mike;jpUe;jJ.

,jid %bkiwf;f rpy gpw;Nghf;Fr; rf;jpfs; Kidg;NghL nray;gLtij mtjhdpf;f $bajhf cs;sJ. mj;Jld; ghuhSkd;wj;jpd; MAs; epiwTngWk; jWthapy; cs;sijAk; ftdj;jpy; nfhs;Sjy; mtrpakhFk;.

,t;thwhd ntw;wp Kfj;JlNd ghuhSkd;w Nju;jiy re;jpf;f If;fpa kf;fs; Rje;jpu Kd;dzp jahuhfp tUfpd;wJ. kf;fs; nry;thf;Fs;s re;ju;g;gj;jpy; ghuhSkd;w Nju;jiy re;jpj;jhy; ngUk;ghd;ikahd Mrdq;fis ifg;gw;w KbAk; vd;w ek;gpf;ifapUf;fpwJ. ,e;epiyapy; kiyaf thf;fhsu;fs; jq;fspd; gpujpepjpj;Jtj;ij epiyepWj;jpf;nfhs;s rpe;jpf;f Ntz;ba jUzk; ,JthFk;.

ele;J Kbe;j [dhjpgjp Nju;jypd; NghJ kiyafj;jpy; ngUk;ghd;ik thf;fhsu;fs; ele;J nfhz;l Kiw tpj;jpahrkhf mike;jpUe;jJ. ,e;epiy ePbf;Fkhdhy; jq;fspd; gpujpepjpj;Jtj;ij ,og;gNjhL jq;fspd; mbg;gil Njitfisf; $l epiwNtw;wpf;nfhs;s Kbahj epiyf;F js;sg;gLthu;fs;.

Njrpa murpaypy; mjpfhuj;Jf;fhd Nghl;bfs; Kd; vg;NghJkpy;yhj tifapy; cf;fpukile;J tUk; mNjNtisapy; gpuhe;jpa uPjpahfTk; jq;fspd; ,Ug;ig jf;f itj;Jf;nfhs;s mjPj gpuaj;jdq;fs; Nkw;nfhs;sg;gl;L tUtijAk; fhzf; $bajhf ,Uf;fpd;wJ. mNj Nghd;wnjhU epiyikjhd; kiyafj;jpYk;> murpay;> njhopw;rq;f Nghl;bfs; $u;ikaile;J tUtNjhL td;Kiwf; fyhrhuKk; jiyJ}f;Ffpd;w Nghf;F fhzg;gLfpd;wJ.

,j;jifa R+o;epiyia jkf;F rhjfkhfg; gad;gLj;jpf;nfhs;s Kaw;rpf;Fk; rpy gpw;Nghf;F re;ju;g;gthj rf;jpfs; ghuhSkd;w nghJj; Nju;jiy ,yf;F itj;J kiyafj;jpy; gpuNtrpf;f Kaw;rp nra;fpd;wd. ,t;thW tUNthUf;F ve;j murpay; r%f gpd;dzpAk; ,y;yhJ tpsk;gu mwpKfj;Jld; murpay; gpuNtrk; nra;a Kidfpd;wd. ,tu;fs; ahu;? ,tu;fspd; gpd; Gynkd;d? vjw;fhf murpay; gpu Ntrk;? Nghd;w Nfs;tpfs; kiyaf kf;fs; kj;jpapy; vohky; ,y;iy.

,tu;fspd; grg;G> ghrhq;F thu;j;ij [hyq;fspy; kaq;fp jkJ kf;fs; jq;fspd; vjpu;fhy murpaiy njhiyj;J murpay; mehijfshf khwptplf;$lhJ. vdNt ,d;iwa epiyapy; ajhu;j;j murpaiy Gupe;Jnfhz;L mjw;F ,irthf ehKk; ekJ murpay; fha; efu;j;jiy Kd;itf;f Ntz;Lk;.

epiwNtw;W mjpfhuKila [dhjpgjp ,d;Dk; 7 Mz;Lfs; mjpfhuj;jpy; ,Uf;f Nghfpd;whu;. mtiu mjpfhuj;jpy; ,Ue;J mfw;w ,d;iwa murpay; ahg;gpd;gb vtuhYk; KbahJ. ,tupd; Ml;rpapd; fPo; ehKk; ekJ gpujpepjpj;Jtj;ij cWjpnra;tjd; Clhf ekJ Njitfis epiwNtw;wpf;nfhs;s KbAk;. ,J Nghd;wnjhU neUf;fbahd fhyfl;lk; 1999 Mk; Mz;il ghu;f;fyhk;. mg;NghJ ekJ kf;fspd; ed;ik fUjp kiwe;j mikr;rUk; ,. njh. fh. jiytUkhd nrskpa %u;j;jp njhz;lkhd; kiyafj;jpd; kf;fspd; eyd; rhu;e;J nray;gLk; murpay; fl;rpfs;> njhopw;rq;fq;fs;> mur rhu;gw;w mikg;Gf;fs;> rptpy; r%f mikg;Gfs; kw;Wk; Gj;jp[Ptpfis cs;slf;fpa ,e;jpa tk;rhtsp kf;fs; Nguzp vd;W ekf;fhf $l;Lj; jiyikapy; Xu; mikg;G cUthf;fg;gl;lJ. xU khfhz rigj; Nju;jiyAk; mf;fhy fl;lj;jpy; re;jpj;Njhk;. mg;NghJ fzprkhd Mrdq;fisAk; ngwf;$bajhf ,Ue;jJ. mNj Nghd;wnjhU epiyikjhd; ,g;NghJ Njhd;wpAs;sJ.

vdNt murhq;fj;Jld; ,ize;Js;s murhq;fj;Jld; Kuz;glhky; ,ize;J nray;gLk; ,af;fq;fs; ahTk; xU nghJ Ntiyj;jpl;lj;jpd; fPo; ,iza Ntz;Lk;. jkJ nrhe;j tpUg;G ntWg;GfSf;F mg;ghy; r%f eyd; rhu;e;j tplaq;fSf;F Kd;Dupik toq;fp gpsTgl;bUf;Fk; ehk; midtUk; Xu; $l;likg;ghf ,ize;J tpl;Lf;nfhLg;Gld; nray;gl;lhy; vkJ gpujpepjpj;Jtj;ij fhf;f KbAk;. ,y;iyNay; MSf;F nfhQ;r thf;Ffis gq;F Nghl;Lf;nfhz;L ekJ gpujpepjpj;Jtj;ij ,of;f NeupLk;.

,d;iwa R+o;epiyapy; muRld; ,Ug;gtu;fSk; mjd; Ner rf;jpfSk; Kjw;fl;lkhf nghJ Ntiyj;jpl;lj;jpd; fPo; xd;wpiza Ntz;Lk;. mjd; gpd; gue;Jgl;l kf;fs; ,af;fq;fis xd;wpizj;J $l;likg;nghd;iw cUthf;f KbAk;. mg;NghJjhd; ,d;W eilngWk; td;Kiw murpay; fyhrhuj;ij khw;w KbAk;. gopthq;Fk; murpaiy ,y;yhky; xopj;J fdthd; murpaiyAk; ey;yhl;rpiaAk; Vw;gLj;j KbAk;. ,y;iyNay; murpay; cupik ,oe;J mtjpg;gl NeupLk;. xd;Wgl;lhy; cz;L tho;T vd;w KJnkhopf;Nfw;g nrhe;j murpay; eyd;fis xJf;fp nghJeyd; fUjp midtUk; xd;wpiztJ fhyj;jpd; NjitahFk;.

gp. Nkhfd; Rg;gpukzpak;

`l;ld;

மலையக பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்வது எப்படி?

‘நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ’ என்ற பாரதியின் வரிகள் தான் மலையக அரசியல் தொழிற்சங்க நிலைப்பாடுகளை நினைக்கும் போது ஞாபகத்திற்கு வருகிறது.

போராடி பெற்றுக் கொண்ட வாக்குரிமையை கூறுபோட்டு பகிர்ந்து கொள்கின்ற பரிதாப நிலையையும், இருக்கும் பிரதிநிதித்துவங்களையும் இழந்து விடுகின்ற நிலையை எண்ணும் போது இந்த சரிவிலிருந்து விடுபடுவதற்கு உடனடியான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய தன் அவசியத்தை உணர்த்துகிறது.
நூற்றாண்டு காலமாக உழைப்பை மட்டுமே ஒப்புவித்த மலையக தொழிலாளர் சமூகம் இலங்கை பிரித்தானியரிடமிருந்து பெற்ற உரிமை தமக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் 1948 ஆம் ஆண்டின் பிரஜாவுரிமைச் சட்டமும் 1949ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தேர்தல் சட்டமும் இவர்களுக்கு பிரஜாவுரிமையும், வாக்குரிமை மறுப்பையுமே தந்த வரலாற்றை எம்மால் மறந்துவிட முடியாது.

அண்மைக்கால இந்திய வம்சாவளியினர் என்ற முத்திரைக் குத்தலோடு நாடற்றவர்களாக இருந்த மலையகத்தில் காணப்பட்ட ஒற்றுமையின் வெளிப்பாடு, உரிமைப் போராட்டத்தின் உத்வேகம், தொழிற்சங்கத்தின் எழுச்சிப்போராட்டம், போராட்டச் சிந்தனைகள் அனைத்தும் மலையகத்தில் வாக்குரிமை கிடைத்த பின்னர் இந்த சமூகம் வந்த வழியை மறந்து நிற்பது வேதனை தரும் விடயமாகும்.

இன்று நாம் பெற்றுள்ள வாக்குரிமைக்கு பின்னால் பெரியதொரு பின்னணியிருப்பது அதற்காக இயற்றப்பட்ட சட்டங்களின் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.

(1) 1949இல் 3ஆம் இலக்கத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய பாகிஸ்தானின் வதிவிட (பிராஜவுரிமை) சட்டம்
(2) 1964 ஆம் ஆண்டு கொண்டுவரப் பட்ட (03.10.1964) ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தம்.
(3) 1974 ஆம் ஆண்டு ஜனவரி 27இல் கொண்டுவரப்பட்ட ஸ்ரீமா - இந்திரா ஒப்பந்தம்.
(4) 1987 ஆம் ஆண்டு இலக்கம் 5இல் கொண்டுவரப்பட்ட நாடற்றவர் களுக்கு பிரஜாவுரிமை வழங்கும் சட்டம்.
(5) 1988 ஆம் ஆண்டின் இல. 39 இன் படி கொண்டுவரப்பட்ட நாடற்றவர் களுக்கு பிரஜாவுரி¨மை வழங்கும் (விசேட சரத்துக்கள்) சட்டம்.
(6) இல. 35 இன் படி 2008 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலங்கை வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை வழங்கும் சட்டம்

என இந்தச் சட்டங்களின் பின்னணியில் எத்தனை போராட்டங்கள் இடம்பெற்றன என்பதை காலம்தான் பதில் சொல்லும். இத்தனை சட்டங்கள் வந்து நாம் வாக்களிக்கின்ற தகைமை பெற்றாலும் அடிப்படையில் இன்னும் இரண்டாந்தர பிரஜைகளாகவே கணிக்கப்படும் நிலைதான் காணப்படுகிறது.

ஆங்கிலேயர் காலத்திலும் அதற்குப் பின்னரும் 1930 களில் இருந்து இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வரும் தொழிலாளர்கள் தேசிய அரசியலமைப்பில் பொருத்தமான பிரதிநிதித்துவத்தை இன்னும் பெற்றுக்கொள்ளா திருக்கின்றனர் என்றே கூறவேண்டும்.

குறிப்பாக 1931இல் இடம்பெற்ற முதல் கிராம சபைத் தேர்தலில் மலையக சமூகம் அனுமதிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டமை ஒரு வரலாற்று நிகழ்வாகும். சுதந்திரத்திற்கு பின்னர் நடந்த முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் 95 பேர் இருந்த இடத்தில் 08 பிரதிநிதிகள் மட்டுமே இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டனர். வாக்குரிமை பறிக்கப்பட்டதன் பின்னர் 1952 இலிருந்து 1977 வரை பிரதிநிதிகளை தெரிவு செய்யும் உரிமை எமக்கில்லாமல் போனது.

1977இற்குப் பின்னர் படிப்படியாக தேசிய அரசியலுக்குள் பிரவேசிக்க முடிந்ததெனினும் இந்திய வம்சாவளி மக்களின் சனத்தொகைக்கு ஏற்ப பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியாமல் போய்விட்டது. மலையக மக்கள் முன்னணி கூறியுள்ளது போல 16 பிரதிநிதிகள் இருக்க வேண்டிய இடத்தில் அதில் பத்தாக குறைந்து அதிலும் ஒருவர் வேறொரு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு நிலைமையைத்தான் மலையக அரசியல் நிலைப்பாட்டில் காண்கின்றோம்.

மலையகத்தை பொறுத்தவரையின் அரசியலும் தொழிற் சங்கமும் இணைந்தே காணப்படுவதால் இலக்கை எட்டமுடியாமல் இருப்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. அரசியல் தொழிற்சங்கப் போட்டா போட்டிகள் காரணமாக அறுபதுக்கும் மேற்பட்ட அரசியல் தொழிற்சங்கங்களையும் பத்துக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகளையும் வைத்துக்கொண்டு சிதறுண்டு தேசிய கட்சிகளிலே இன்னமும் தங்கியிருக்க வேண்டிய பரிதாப நிலை தொடர்கிறது.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பெற்றுக்கொண்ட உரிமையை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு மலையக இந்திய வம்சாவளி மக்கள் ஒவ்வொருவருக்கும் உரித்துடையதாக இருக்கிறது. ஆகவே மலையக பிரதிநிதிகள் முழுமையாக தேசியக் கட்சிகளில் பிணைத்துக் கொண்டோ அல்லது தனித்தனி குழுமங்களாக பிரிந்து நின்றோ போட்டியிட வேண்டும் என்பதற்காக தனிக் குழுக்களாக செயற்படுவார்களேயானால் இருக்கும் தமிழ் பிரதிநிதித்துவங்களையும் எதிர்காலங்களில் இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
ஒன்பது தொகுதிகளை கொண்டிருக்கும் பதுளை மாவட்டத்தில் 2008 ஆம் ஆண்டில் வாக்காளர் பதிவின் அடிப்படையில் 5,74,814 வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்களில் கணிசமான தொகையினர் இந்திய வம்சாவளியினராவர். மொத்த எண்ணிக்கையில் 16.44 வீதத்தினர் தேசிய அடையாள அட்டையைக் கூட பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றனர். பதுளை மாவட்ட வாக்குகளை தொகுதிவாரியாக பார்க்கும் போது மஹியங்கனை 85,562, வியலுவ 48,231, பசறை 60,002, பதுளை 51,468, ஹாலி-எல 63,124, ஊவா பரணகம 59,472, வெளிமடை 68,937, பண்டாரவளை 77,312, அப்புத்தளை 60,706 ஆகும். இந்நிலையில் பெருந்தோட்ட வாக்காளர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு பயன்படுத்தப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதனூடே பசறை, நமுனுகுல பகுதிக்கு அண்மித்த தென்னக்கும்புர, கந்தவேரன போன்ற தோட்டங்கள் மொனராகலை மாவட்டத்திற்குள் உள்ளடங்குவதும் குறிப்பிடத்தக்கது. நுவரெலியா மாவட்டத்தில் 4,57,137 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருப்பதோடு இவர்களிலும் பெரும்பான்மையினர் இந்திய வம்சாவளி தமிழ் மக்களே. நுவரெலியா மாவட்ட தேர்தல் வாக்காளர் பதிவின் அடிப்படையில் நுவரெலியா மஸ்கெலியா 2,47,069, கொத்மலை 70,730, ஹங்குராங்கெத்த 65,969, வலப்பனை 73,369 என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகியன ஆளுங் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மலையக மக்கள் முன்னணியின் இன்னொரு பிரிவினர் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட தயாராகி வருவதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகியவற்றுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பன ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலின் போது இ. தொ. காவிலிருந்து வெளியேறிய எம். சச்சிதானந்தன் ஐக்கிய தேசியக் கட்சியிலும், சுகாதார பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆளுங்கட்சியிலும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. நுவரெலியா மாவட்டத்திலும் இவ்வாறான நிலையே காணப்படுகின் றது. எது எப்படியிருப்பினும் அகலமாக காலை வைக்க நினைக்காமல் ஆழமாக வைத்தால் மட்டுமே மலையகம் இருக்கும் பிரதிநிதித்துவத்தையாவது பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதே மலையக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

பசறையூர் க. வேலாயுதம்

Saturday, February 6, 2010


தோழர் இளங்கோ மறைவு

கடந்து வந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் இன சமூகங்களின் ஐக்கியத்திற்காகவும் சமூக சமத்துவத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்தவர் தோழர் இளங்கோ

சாவக்கச்சேரி நுணாவிலை பிறப்பிடமாகக் கொண்ட தோழர் இளங்கோ (கணபதிபிள்ளை ரவீந்திரன்) தனது சமூகப் பணிகளுக்காக தனது பல்கலைகழக கல்வியைகூட துறந்தவர். யாழ் பல்கலைகழகத்தில் வர்த்தகத்துறை மாணவர் அவர்.

மக்களை விழிப்படையச் செய்வதற்கான கலை வடிவங்களின் ஊடான பிரச்சாரங்களை தனது சக தோழர்களுடன் சேர்ந்து முன்னெடுத்தவர். வீதி நாடகங்களை நடாத்தியவர். தனது நெஞ்சுக்கு நீதியாக அவர் வாழ்ந்தவர். எமது சமூகத்தின் சராசரி மனிதர்கள் போல் உலகத்தின் ஏதோவொரு மூலைக்குச் சென்று அவர் மிக சௌகரியமாக வாழ்ந்திருக்க முடியும்.

பல்வேறு உடல் உபாதைகள் மத்தியில் துன்ப துயரங்களின் மத்தியில் அவர் நாட்டில் சக தோழர்களுடன் தோழராக வாழ்ந்தவர். 1986 புலிகள் இயக்கம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை தொடுத்த போது தோழர் இளங்கோவும் புலிகளால் கைது செய்யப்பட்டார். அவர் அனுபவித்த சித்திரவதைகளும், அவர் காண நேர்ந்த கொடுமைகளும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.

அந்த அனுபவங்களை பல தடவை தனது சக தோழர்களுடன் பகிர்ந்திருக்கிறார்.

மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்டவர் அவர்.

அவரது தோழர்கள் நண்பர்கள் மத்தியில் தோழர் இளங்கோ மிகவும் இனிமையான, பண்புள்ள மனிதராகவே காணப்பட்டார். தோழர் இளங்கோ இருக்குமிடம் எப்போதும் கலகலப்பானதாக இருக்கும். அவருடைய சமூகப் பார்வையில் ஆழமான பொருள் பொதிந்த இயல்பு காணப்படும். ஒரு வசீகரமான மனிதர் அவர். எப்போதும் அவரை சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டிருக்கும்.

ஜனநாயக இடைவெளியை உருவாக்குவது பற்றியும் மக்களின் சுதந்திரமான வாழ்வு பற்றியும் அக்கறை கொண்டிருந்தார்.

அவருடைய மனைவியார் சிவசக்தி அவர்களும் அவருடைய சமூக அரசியல் வாழ்வில் இணைந்திருந்தார். தனது சமூக அரசியல் அக்கறைகளுக்கு மத்தியில் தமது பி;ள்ளைகளின் கல்வி மற்றும் இதர செயற்பாடுகளிலும் அவர் அக்கறை செலுத்தினார்.

எப்போதும் சோம்பிக் கிடப்பவரல்ல அவர். உழைப்பின் மகத்துவத்தை அவர் உணர்ந்தவர். சங்கீதம், பாடல்கள், இசை பற்றிய ஞானம் அவருக்கு இருந்தது. இவற்றை இவற்றை நேர்த்தியாக தொகுப்பதிலும் அவர் ஆற்றல் பெற்றிருந்தார்.

அவரது தந்தையார் கணபதிப்பிள்ளை ஒரு கவிஞர். கலைஞர்,அவருடைய இரு சகோதரர்கள் சமூக விடுதலை இயக்கத்தில் பங்குபற்றியவர்கள்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாணசபையில் அவர் அங்கத்தவராக இருந்தவர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் பிரச்சார பணிகளில் முக்கிய பங்காற்றியவர்.

இடர்மிகுந்த காலங்களில் எல்லாம் அவர் எம்மோடு நின்றிருந்தார். கட்சியின் திசைவழி அன்றாட அரசியல் நிகழ்வுகள் நீண்டகால இலக்குகள் தொடர்பான கூர்மையான அவதானமும் கரிசனையும் அவருக்கிருந்தது.

உள்ளுரிலும், சர்வதேச அளவிலும் வாழும் தோழர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர். தோழமைக்கும், நட்புக்கும் இலக்கணமாக திகழ்ந்தவர்.

51 வயது என்பது ஒரு குறுகியகால பகுதியே. அடிக்கடி நோய்வாய்படுதல், பல்வேறு உடல் அசௌகரியங்களுக்கு மத்தியில் வன்னி முகாம்களில் வாழ்ந்த மக்கள் மீள் குடியேற்றப்படும் இடங்களுக்கு சக தோழர்களுடன் சென்று அவர்களை பார்வையிட்டவர். தோழர்களின் இன்ப துன்பங்களில் பங்குபற்றினார். கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் கூட தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். எப்போதும் அவர் சோர்வடைந்ததில்லை. யாழ், மட்டுநகர், வன்னி , திருமலை தமிழகம் என பல இடங்களிலும் மனிதர்களுடன் உறவாடிய அனுபவம் அவருக்கு இருந்தது. எப்போதும் தனக்கென பாதுகாப்பான வாழ்க்கையொன்றை தேடிக்கொண்டவரல்ல அவர். நெருக்கடிகள் மத்தியில் மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளில் அவர் பெரும்பாலான காலம் வாழ்ந்திருக்கிறார்.

ஒரு மனிதன் வாழும் போது எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர். எமது சமூகத்தில் நிலவிய அராஜகம் அவரை பெரும் கொந்தளிப்பும் புயலுமாக இருந்த சூழ்நிலையில் வாழ நிர்ப்பந்தித்தது. அவர் மெலிதானதும், மனிதாபிமான ஈரமும் ஜனநாயக உணர்வும் கொண்ட மனிதராகத்தான் வாழ்ந்தார். பெப்ரவரி 06ம் திகதி அதிகாலை பொழுதில் அவர் நிரந்தரமாக உறங்கிவிட்ட செய்தி எம்மை வந்தடைந்தது.

தோழர் இளங்கோ அவர்களுக்கு எம் இதய அஞ்சலிகள்


பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

Monday, February 1, 2010


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலையகத்தில் பெருவெற்றி பெற்றுள்ளார் - ஆறுமுகன் தொண்டமான்


இலங்கை வாழ் ஒட்டுமொத்த தமிழர்களும், வடகிழக்கு மக்களும் எதிரணி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவினை ஆதரிக்க மலையகத்தின் பலம் பெரும் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மட்டும் குறிப்பாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் வெற்றி பெறுவார் என உறுதியாக கூறிவந்தார்.

இந்நிலையில் இவரது கூற்றினை ஏற்றுக் கொள்ளாத அக்கட்சி உறுப்பினர்கள் சிலர் அக்கட்சியை விட்டு விலகி சென்ற போதிலும், அமைச்சர் தொண்டமான் அந்த உறுதியுடன் செயற்பட்டார். இவரது ஆதரவுடன் ஏற்கனவே இவர் கூறியது போல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 18 இலட்சம் மேலதிக வாக்குளால் வெற்றி பெற்றுள்ளார்.

இது குறித்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் நேர்காணல்



கேள்வி: நீங்கள் ஏற்கனவே கூறியதுபோல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றுவிட்டாரே?

பதில்: உண்மைதான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலையக மக்களுக்குமட்டுமல்ல நாட்டிலுள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டுள்ளார்.

அதனால் அவரது வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. இது தெரியாத அரசியல் ஞானமற்றவர்கள்தான்,

ஜனாதிபதி தோல்வி அடைவார் என கூறி, அவருக்கெதிராக செயற்பட்டு தங்களையும் இழந்து வருகின்றனர். ஜனாதிபதியின் வெற்றிக்கு மலையக மக்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.


கேள்வி: நுவரெலியா மாவட்டம் எதிரணி வசமானதே?

பதில்: நுவரெலியா மாவட்டத்தை மட்டும் கவனத்தின் கொள்ளக் கூடாது. மலையக மக்கள் பரந்து வாழும் பகுதிகளிலும் ஜனாதிபதி அமோக வெற்றி பெற்றுள்ளார். மலையக மக்களின் ஆதரவு இல்லாமல் அவரால் அமோக வெற்றி பெற்றிருக் முடியாது.

2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், இ.தொ.கா. எதிர்க்கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவினை ஆதரித்தது. இதன்போது நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மிடையிலான வாக்கு வித்தியாசம் ஒரு இலட்சத்திற்கு மேலதிகமாக காணப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகவும் குறைந்த எண்ணிக்கையான வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். ஆனால் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி ஒரு இலட்சத்து 51 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளதுடன், எதிரணி வேட்பாளருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 29 ஆயிரமாகும். இதனை ஒப்பிடுகையில் நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி அமோக வெற்றி பெற்றுள்ளார் என்றே கூறவேண்டும்.

அதுமட்டுமல்ல மலையக மக்கள் உள்ள சகல மாவட்டங்களிலும் இம்முறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூடுதலான வாக்குகளை பெற்றுள்ளார். இதற்கு இ.தொ.கா பெரும் பங்களிப்புச் செய்துள்ளது.


கேள்வி: அனைத்து தமிழ் பிரிவினரும், எதிரணி வேட்பாளரை ஆதரிக்க நீங்கள் மட்டும் எவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினை ஆதரித்தீர்கள்?

பதில்: என்ன சொல்கியர்கள்? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலையக மக்களை ஏனைய சமூகங்களுடன் சமமாக மதித்து அவர்களுக்கு கடந்த 4 வருடங்களாக பல்வேறு அபிவிருத்திப் பணிகள் அரச மற்றும் ஆசிரியர் நியமனங்களை வழங்கியுள்ளார். இதற்கு நன்றி செலுத்தப்படவேண்டும் என்பதற்காகவே நாம் அவருக்கு ஆதரவு அளித்தோம். எமது வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மலையக மக்கள் நன்றியுணர்வுடன் வாக்களித்துள்ளனர். அத்துடன் அவர்களின் பாதுகாப்பினையும் கடந்த காலங்களில் ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளதுடன் விசாரணையின்றி சிறையில் வாடிய மலையக இளைஞர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர் இதற்கு நாம் நன்றி செலுத்த வேண்டாமா?


கேள்வி: இ.தொ.கா தேசிய அமைப்பாளர் ஆர். யோகராஜன் உள்ளிட்ட பலர் அக்கட்சியிலிருந்து விலகிவிட்டனரே? அவர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வீர்களா?

பதில்: 3 பேர் கட்சியிலிருந்து விலகிவிட்டதற்காக எமது கட்சி பலமிழக்கவில்லை. பலம் கூடியுள்ளது. அவர்கள் தனிப்பட்ட சுயலாபத்திற்காக சென்றுள்ளனர் அவர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள நாம் விரும்பவில்லை. அதனை எமது தொண்டர்களும் விரும்பவில்லை. அரசியல் ஞான மற்றவர்களால் எமது சமூகத்திற்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை.


கேள்வி: கட்சியைவிட்டு விலகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரி. வி. சென்னன், ஏ. எம். டி. இராஜன் போன்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்துகொண்டுள்ளனரே?

பதில்: இவர்கள் ஐயா (அமரர் தொண்டமான்) காலத்திலிருந்து கட்சியை கட்டி காத்ததுடன், கட்சிக்காக பாடுபட்டவர்கள். தற்போது விலகியவர்கள் கட்சியினை பயன்படுத்தி தம்மை வளப்படுத்திக் கொண்டவர்கள். இவர்களால் மலையக சமூகத்திற்கு எவ்வித நன்மையும் ஏற்பட போவதில்லை.

இந்த விமர்சனங்களினால் அவர்களே அவர்களுக்கு குழிதோண்டிக் கொள்கின்றனர் என்பதனை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.


கேள்வி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியின் பின்னர் அவரை போய் சந்தித்தீர்களா? மலையகத்தின் எதிர்கால திட்டம் குறித்து அவருடன் கலந்துரையாடினீர்களா?

பதில்: சந்தித்தேன், வாழ்த்துக் கூறினேன். மலையக மக்களின் அபிவிருத்திற்கு நாம் 10 ஆண்டு திட்டம் +றிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அவர் ஏற்கனவே ஏற்றுக்கொண்டு, பல பதவிகளையும் நிதிகளையும் வழங்கினார். இத்திட்டம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல உறுதியளித்துள்ளார்.

இதன் காரணமாகவே தான் நாம் நிபந்தனையற்ற ஆதரவினை இத்தேர்தலில் ஜனாதிபதிக்கு வழங்கினோம். மலையக சமூகத்திற்கு என்னென்ன தேவை என்பதனை நாம் திட்டமிட்டு காலத்திற்கு ஏற்றால் போல் செயற்படுவோம். எங்களை விமர்சனம் செய்பவர்களுக்கும் நாம் உதவி செய்துள்ளோம். அத்துடன், மலையக மக்கள் இரண்டாந்தர பிரஜையல்ல என்பதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு ஏனைய சமூகத்துடன் சமமான முறையில் அவர்களின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றார்.

அத்துடன் இ.தொ.கா. தனிப்பட்ட எவருக்கும் எதனையும் செய்ய விழையாது. மலையக சமூகத்திற்கு தான் செய்யும் இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது உண்மையாகும்.


கேள்வி: எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவீர்களா? அல்லது வேறு கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுவீர்களா?

பதில்: பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானவுடன், இது குறித்து எமது கட்சி கூடி தீர்மானம் மேற்கொள்ளும்.


கேள்வி: சபரகமுவ மாகாண தமிழ் கல்விப் பணிப்பாளர்கள் பலர் பல்வேறு காரணங்களினால் பதவி இழந்துள்ளனர். இந்நிலையில் இம்மாகாண தமிழ் கல்வி அபிவிருத்தி கேள்விக்குறியாகும் நிலை காணப்படுகின்றது? இது குறித்து,

பதில்: இவ்வாறானதொரு நிலை முதற்தடவையாக எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ணுர்கள், அங்குள்ள மக்கள் தமது தேவைகுறித்து என்னிடம், தொடர்பு கொள்ளும் பொருட்டு இது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும்.

எமது சேவை மலையக மக்களுக்கு எப்போதும் கிடைக்கும்.


கேள்வி: இறுதியாக மலையக மக்களுக்கு என்ன கூற விரும்புகியர்கள்?

பதில்: மலையக மக்கள் ஒற்றுமையாக எம்முடன் இணைந்து தமது தேவைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை பெற்றுக் கொள்ள முடியும். வீண், விமர்சனங்கள் செய்து மக்களையும் ஏமாற்றாமல், தம்மையும் ஏமாற்றிக்கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். விமர்சனம் செய்வதனால் இ.தொ.கா.விற்கோ அதன் தலைமைக்கோ எவ்வித பாதிப்புமில்லை. விமர்சனம் செய்பவர்களுக்கு தான் என்பதனை புரிந்துக்கொள்ள வேண்டும்.

நேர்கண்டவர்: எஸ். ஆர். இரவீந்திரன்

நன்றி – தினகரன் வாரமஞ்சரி