Friday, February 19, 2016

ஊவா மாகாண தமிழ்க் கல்விக்கு தனியான அலகு

ஊவா மாகா­ணத்தில் தமிழ் கல்­விக்­கென்று தனி­யா­ன­தொரு அலகு ஆரம்­பிக்­கப்­பட வேண்டும். அப்­போ­துதான் தமிழ்க் கல்­வித்­து­றையில் முன்­னேற்­ற­க­ர­மான மாற்­றங்­களை எதிர்­கொள்ள முடி­யு­மென்று, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசு­கையில், “ஊவா மாகாண தமிழ்க் கல்­வித்­து­றை­யினை அபி­வி­ருத்தி செய்யும் நோக்கில், கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை மேற்­கொண்டு, அத­ன­டிப்­ப­டையில் செயல்­பா­டு­களை முன்­னெ­டுக்க திட்­ட­மிட்டேன். கடந்த ஒரு மாத­கா­ல­மாக எடுத்த முயற்சி, தற்­போது பய­ன­ளித்­துள்­ளது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் கல்­வித்­து­றைசார் சக­லரும் பங்கு கொண்­டி­ருப்­பது கண்டு பெரு­ம­கிழ்ச்­சி­ய­டை­கின்றேன்.

மாகா­ணத்தின் தமிழ் மொழி மூல­மான பாட­சா­லை­க­ளுக்கு அனுப்­பப்­படும் கடி­தங்கள் மற்றும் சுற்­ற­றிக்­கைகள் அனைத்தும் தமிழ் மொழி­யி­லேயே அமைய வேண்­டு­மென்று, எம்மால் விடுக்­கப்­படும் கோரிக்­கை­க­ளுக்கு, தற்­கா­லிகத் தீர்­வு­களே கிடைக்­கின்­ற­தே­யன்றி, நிரந்­தரத் தீர்­வுகள் கிடைப்­ப­தில்லை. ஒரு சில கடி­தங்கள் தமிழ் மொழியில் அனுப்­பப்­பட்­டாலும், காலப் போக்கில் அது செயல்­ப­டு­வ­தில்லை.

மாகாண தமிழ்க் கல்­வியில் ஏற்­படும் பின்­ன­டைவே, ஊவா மாகாணம் நான்காம் இடத்­திற்கு தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­ற­தற்கு காரணம். தமிழ்க் கல்­வித்­து­றையும் வளர்ச்சி பெற்­றி­ருக்­கு­மே­யானால், நாட்டின் இரண்டாம் இடத்­திற்கு, ஊவா மாகாணம் வந்­தி­ருக்கும் என்றார்.

அடுத்து, ஊவா மாகாண சபை உறுப்­பி­னரும், ஊவா மாகாண தமிழ் கல்­வித்­து­றைக்கு பொறுப்­பா­ள­ரு­மான ஆ.கணே­ச­மூர்த்தி தம­து­ரையில், பல்­க­லைக்­க­ழகம் பிர­வே­சிக்கும் மாணவர் தொகையில் அதி­க­ரிப்பு இடம்­பெ­ற­வேண்­டி­யது அதி­முக்­கி­ய­மாகும். அந்­நி­லை­யினை ஏற்­ப­டுத்த அதிபர், ஆசி­ரி­யர்கள் மிகுந்த அர்ப்­ப­ணிப்­புக்­க­ளுடன் செயல்­படல் வேண்டும்.

தமிழ்­மொழி மூலம் கற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தொழில்­நுட்பக் கல்­லூ­ரி­யொன்று அமைய வேண்­டி­யதும் அவசியமாகும். பாடசாலைகளில் இடைவிலகும் மாணவர்கள் விடயத்தில் கூடிய கவனம் எடுத்து, இடைவிலகலை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். அத்துடன், முன்பள்ளிகளின் தரம் அதிகரிக்கப்படல் வேண்டும் என்றார்.

அபிவிருத்தி பணிகளுக்காக தோட்ட நிர்வாகங்களை நம்பியிருக்க வேண்டியதில்லை

பிரித்தானிய கம்பனிகள் நிர்வகித்த காலம் முதல் இன்றைய கம்பனிகள் நிர்வகிக்கும் காலம் வரை மலையக பெருந்தோட்டங்களின் உள்ளக பாதைகளை அமைக்கும் பொறுப்பினை தோட்ட நிர்வாகங்களே மேற்கொண்டு வந்தன. ஆனால் தற்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபை தோட்டப்பகுதிகளில் வீதிகளை அமைக்கும் பணியை செய்கின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் திலகராஸ் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறுகையில் 

முன்பு அபிவிருத்திக்கு பொறுப்பான அரச நிறுவனங்கள் தோட்டப்பகுதிகளில் பணியாற்றுவதில்லை.  புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்பு நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு வீதிகள் கார்பட் வீதிகளாக மாற்றியமைக்கும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படவிருக்கிறது என்றார். அபிவிருத்தி பணிகளுக்கு தோட்ட நிர்வாகங்களை தங்கியிருக்கும் நிலை தற்போது இல்லை. 

பிரதேச சபைகள் சட்டத்திருத்தத்தை நாம் வேண்டி நின்றதும் அதேபோல்அரச நிதியினை பயன்படுத்தி தோட்டப்பகுதிகளுக்கு அரச சேவையை பெற்றுக்கொடுப்பதற்காக பிரதேச செயலகங்களை அதிகரிக்கும் யோசனையையும் முன்வைத்துள்ளோம் என்றார். மஸ்கெலிய பிரதேசமக்கள் தங்களது அரச தேவைகளுக்காக கினிகத்தேன வரை செல்வதற்கு பதிலாக அதனை நோர்வூட் நகர பகுதியில் பெற்றுக்கொள்ளக்கூடியதான வேலைகளை முன்னெடுத்து  வருகிறோம். 

சம்பள சட்டத்தில் வீட்டுப் பணியாளர்களையும் சேர்க்க வேண்டும்

இலங்கையில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் தொடர்பான புதிய சட்டத்தில் வீட்டுப் பணியாளர்களையும் சேர்க்குமாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முறையாக தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பள கொடுப்பனவுச் சட்டம் பொதுச் சட்டமாகக் கொண்டு வரப்படவுள்ள நிலையில், அதில் வீட்டுப் பணியாளர்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று கோரி அந்தத் தொழிலாளர்களுக்கான சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

இந்த புதிய சட்டம் தொடர்பில் அரச வர்த்தமானியில் விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
அதில் நியாயமற்ற விதத்தில் வீட்டுப் பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்தில் தொழிலாளர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சட்டம் சரியான முறையில் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு போதுமானதல்ல என்ற காரணத்தினாலேயே புதிய சட்டம் கொண்டுவரப்படுவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனினும், வீட்டுப் பணியாளர்களை ஏனைய தொழிலாளர்களை போன்று அரசாங்கம் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கென தனியான தொழிற்சங்கம் ஒன்று செயற்படுவதையும் அதிகாரபூர்வமாக அங்கீகரித்திருக்கின்றது. தொழிலாளர்கள் தொடர்பிலான சர்வதேச சட்ட நியமங்களையும் அரசு ஏற்றுக் கொண்டிருக்கின்றது என்று வீட்டுப் பணியாளர்களின் தொழிற்சங்கம் கூறுகின்றது.

'உள்நாட்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீட்டுவேலைத் தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றார்கள். அவர்களின் சம்பளம் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கென சட்ட ரீதியான குறைந்தபட்ச சம்பளச் சட்டம் இல்லாத காரணத்தினால் அவர்களின் குடும்பங்கள் இதனால் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கியிருக்கின்றன' என்றார் வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான மேனகா கந்தசாமி.

'அவர்களுக்கு நியாயம் கிடைக்கத்தக்க வகையில், வீட்டுவேலைத் தொழிலாளர்களையும் இந்தச் சட்டத்தில் உள்வாங்க வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம்' என்றார் மேனகா கந்தசாமி.இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதாகவும் மேனகா கந்தசாமி கூறினார்.