Monday, December 30, 2013

மலையக மாணவர்களுக்கான பல்கலைகழக குறைபாடு உடன் நிவர்;த்தி செய்யப்பட வேண்டும்- அ. லோறன்ஸ்

இலங்கையில் பல பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன. எனினும் மலையக மாணவர்களுக்கென்று தனியான ஒரு பல்கலைகழகம் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இக்குறை உடனடியாக  நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் அ. லோறன்ஸ் தெரிவித்துள்ளாhர். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமைகள் மிகவும் முக்கியமானவையாகும். ஒருவரின் அல்லது ஒரு சமூகத்த்pன் உரிமைகள் உரியவாறு வழங்கப்படாது புறந்தள்ளப்படுவதன் காரணமாக முரண்பாட்டுச் சூழ்நிலைகள் மேலோங்குகின்றன. இதன் பாதக விளைவுகள் பல்வேறு மட்டங்களிலும் எதிரொலிக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த வகையில் மலையக மக்களின் பல்வேறு உரிமைகள் ஏட்டளவிலேயே முற்றுப் பெற்றுள்ளமையை அவதானிக்கக் சுடியதாக உள்ளது. 

மொழியுரிமை குறித்து நோக்குகையில்இலங்கையில் தமிழி; மொழி அரச கரும மொழியாக உள்ளது எனினும் தமிழுக்கு உரிய இடம் வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக சிந்திக்க வேண்டியுள்ளது. 

அரச  திணைக்களங்கள் மற்றும் கூட்டுத் தாபனங்களில் இருந்து வரும் சுற்று நிருபங்கள் மற்றும் கடிதங்கள் என்பன பெரும்பாலும் தனிச்சிங்கள மொழியிலேயே அனுப்பட்டு வருகின்றமை புதிய விடயமல்ல. பல அரச அலுவலகங்களில் தொடர்பாடல் உத்தியோகத்தர் இல்லாதுள்ளனர். இதனால் பொதுமக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் கருமமாற்றுவதில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். பல இடங்களில் பெயர் பலகைகள் தனிச்சிங்கள மொழியிலேயே காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் தமிழ் அரச கரும மொழிதானா? ஏன்ற சந்தேகம் எழுகிறது. மலையக மக்களின் கல்வி உரிமைகள் கூட எந்தளவுக்கு நியாயமாக கிடைக்கின்றது என்பதில் ஐயப்பாடுககள் மேலெழுந்து வருகின்றன. 

வளங்கள் பங்கீடு மற்றும் நிதிப்பங்கீடு தொடர்பில் பாரபட்சம் காட்டப்பட்டு வருகின்றமையை அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. வள மற்றும் நிதி பங்கீடுகளின் நியாயமற்ற பகிர்வு முறை காரணமாக மலையக தமிழ் பாடசாலைகள் பின்னடைவு காணும் அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றன. இந் நிலைமை தொடருமாமனால் மலையக கல்வியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மலையக அரசியல் தொழிற்சங்கங்கள் மலையகத்தின் கல்வி உரிமைகள் மீறப்படுவது குறித்து தெரிந்திருந்தும் வாய்மூடி மௌனியாக இருப்பது வருந்தத்தக்க விடயமாகும். இதனை கருத்திற் கொண்டு மலையக கல்வி அபிவிருத்திக்கு காத்திரமான பங்களிப்பை வழங்க அரசியல் தொழிற்சங்கவாதிகள் முன்வர வேண்டும் உரிமைகள் பறிபோகும் போது தட்டிக்கேட்காமல் வெறுமனே இருந்து விட்டு பின்னர் வருந்துவதால் பயனில்லை என்றார்.

Saturday, December 28, 2013

நீர்த்தேக்கத்தில் மூழ்கிய வழிபாட்டுத் தளங்கள்

மவுசாக்கலை நீர்தேக்கத்தால் மூடப்பட்ட மஸ்கெலியா பழைய நகரைச் சேர்ந்த பௌத்த விகாரை, இந்து கோவில், முஸ்லிம் பள்ளி ஆகியன வெளித்தோன்ற ஆரம்பித்துள்ளன. 

தற்போது மலையக பகுதிகளில் நிலவும் வெயிலுடனான காலநிலை காரணமாக ஆறுகளில் நீர் மட்டம் குறைவடைந்து காணப்படுகின்றது. இதனால் மலையகத்தில் காணப்படும் நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.

மஸ்கெலியா நகருக்கு அண்மையில் அமைந்துள்ள மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வழிந்தோடும் நிலையில் இருந்து 40 வீதமாக குறைவடைந்துள்ளதாக லக்ஷபான நீர் மின் உற்பத்தி
நிலையத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மவுசாக்கலை நீர்தேக்கத்தில் மூழ்கிய மஸ்கெலிய பழைய நகரத்தில் காணப்பட்ட கதிரேசன் கோயில் முழுமையக வெளித்தோன்றியுள்ளது. அத்துடன், அப்பகுதியிலிருந்த பௌத்த விகாரை மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல் போன்றனவும் வெளித்தோன்றியுள்ளன. 

இந்த காலநிலை தொடர்ந்து நிலவும் பட்சத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் கோயிலை சென்றடைவதற்கான பாதை முற்றாக பயன்படுத்தக்கூடிய நிலையை அடையும் போது அதிகளவானவர்கள் இந்த கோயிலை தரிசிப்பதற்கு செல்வது வழமை. 

தற்போது சிவனொளிபாதமலை யாத்திரையில் ஈடுபடும் யாத்திரர்களாலும் இந்த பழைய கோயில்  பார்வையிடப்படுவதால் இது ஓர் சுற்றுலா தளமாகவும் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையகத்திலிருந்து அரச நிர்வாக சேவையில் உள்வாங்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு – வாமதேவன்

பெருந்தோட்டத் துறையின் அபிவிருத்திக்கென ஒரு அமைச்சு ஆணை கொண்டதாக இருக்கும்போது அந்த அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அந்ததுறைக்கென செலவழிக்கப்படும். பொதுவான அமைச்சுகளின் வரவு செலவு திட்டங்களில், வேலைத்திட்டங்கள் தோட்டப்புற பள்ளிக்கூடங்கள், தோட்ட சுகா தாரம், தோட்ட வீடமைப்பு என குறிப்பிடப் பட்டு நிதி ஒதுக்கப்பட்ட வேண்டும். உதாரண மாக நீர் வழங்கல் வடிக்காலமைப்பு அமைச்சு மற்றும் தேசிய நீர் வழங்கல் சபையில் தோட்டத்துறைக்கான தனியான ஒதுக்கீடுகள் இல்லை. இதனால் அந்த அமைச்சின் நடவடிக்கைகள் தோட்டப்புறங்களை முறையாக போய்ச் சேருவதில்லை.

தோட்டத்துறையின் அபிவிருத்திக்கென ஒரு அமைச்சு இல்லாத நிலையில் ஏனைய தொடர்புடைய அமைச்சுகளின் வரவு செலவு திட்டங்களில், தோட்டத்துறைக்கென்று ஒதுக்கீடுகள் சுட்டிக்காட்டப்படவேண்டும். அப்போதுதான். தோட்டத்துறையின் சமூக அபிவிருத்திக்கு இந்த ஆண்டு இவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என மதிப்பிடமுடியும்.

அமைச்சு ஒன்று இல்லாத நிலையில் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் ஆகியன தற்போது கால்நடை அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படு கின்றன. டிரஸ்ட் நிதியமானது, தோட்டத் துறையின் வீடமைப்பு, நீர் சுத்திரிகரிப்பு வசதிகள், சிறுவர் பராமரிப்பு, சுகாதாரம் போன்ற விடயங்களில் அக்கறை செலுத்து கின்றது. தொலை நோக்காக தோட்டங்களில் வாழ்க்கைத் தரத்தினை தொடர்ச்சியாக முன்னேற்றுவதற்காக நிலைபேறான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை சிறப்பான முறையில் வழங்குவதன் மூலம் தலைமை அபிவிருத்தி தாபனமாக விளங்குகிறது. தோட்ட முகாமைத்துவ தொழிற்சங்கம் அரசாங்கம் ஆகிய முத்தரப் பினரின் பிரதிநிதிகளின் வழிகாட்டலில் நிதிப்பற்றக்குறை காரணமாக மட்டுப்படுத் தப்பட்ட சேவைகளை மேற்கொள்கின்றது.

2005ம் ஆண்டின் மறைந்த அமைச்சர் தொண்டமானின் பெயர் நிலைத்திருக்க வேண்டும் என அரசாங்கம் மற்றும் அமைச்சு, தொண்டமான் குடும்பப் பிரதிநிதிகளின் மேற்பார்வையில் பாராளுமன்ற சட்ட மூலமாக ஞாபகார்த்த மன்றம் நிறுவப்பட்டது. அட் டனில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலை யம், நோர்வூட் நகரில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம், றம்பொடையில் அமைந்துள்ள கலாசார மண்டபம், என்பவை இம்மன்றத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்தோடு அது பிரஜா சக்தி மற்றும் நவசக்தி என்ற பெயரில் செயற்றிட்டங்களை சில தோட்டங்களில் செயற்படுத்தி வருகின்றது. ஏறக்குறைய ஆண்டொன்றுக்கு 100 மில்லியன் ரூபா கால்நடை அமைச்சிலிருந்து பெறப்பட்டு, இச்செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்து கின்றன.

அத்தோடு பல்வேறு சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல்வேறு செயற்றிட்டங்களை செயற்படுத்தி வருகின்றன. அதேபோல உள்ளூர் நிறுவனங்களான பிரிடோ, முன்பள்ளிக்கூட அபிவிருத்தி, கண்டி சமூக அபிவிருத்தி நிலையம், மற்றும் மனித அபிவிருத்தி தாபனம் போன்றவை மனித உரிமைகள், சமூக அணிதிரட்டல் மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்களை வலுவூட்டல் போன்ற செயற்றிட்டங்களை நடைமுறைப் படுத்துகின்றன. இந்த வகையில் பாம் பவுண் டேசன், மொனராகலை மக்கள் அபிவிருத்தி நிலையம் போன்ற பல்வேறு தாபனங்கள், வாழ் வாதார பயிற்சி போன்ற துறைகளில் செயல் படுகின்றன. மலையக அபிவிருத்தி மன்றம் போன்ற சமூகம் சார்ந்த அமைப்புகளும், கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களால் பல்வேறு அபிவிருத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் இன்றும் இந்த மக்கள் ஏனைய இனக்குழுக்களோடு சமத்துவ நிலையில் இருக்கிறார்கள் எனக் கூறமுடியாது. அபிவிருத்தி வரலாற்றில் சுதந்திரத்திற்கு பின்னைய வரலாற்றில் கிட்டத்தட்ட 30-40வருடங்களுக்கு பிந்தியே, உள்நுழைந்த காரணத்தினால், இவர்கள் குறித்து பொதுவான அபிவிருத்தி குறிக்காட்டிகளான வறுமை நிலை, போஷாக்கு, சுகாதார, கல்வி, சிறுவர் பெண்கள், பலவீனமான முதியோர் பாதுகாப்பு என பல்வேறு அம்சங்களை ஒப்பிடுகையில் ஏனைய சமூகத்தோடு இவர்கள் சமத்துவ நிலையில் இல்லை. தேயிலை இரப்பர் தோட்டங்களில் தொழிலாளர்களை பெரும்பான்மையாக கொண்ட இச்சமூகம், நாட்டின் ஏனைய பகுதிக்கு திறனற்ற தொழிலாளர்களை வழங்குகின்ற ஒரு ஒதுக்காகவே காணப்படுகிறது.

உயர்கல்வியைப் பொறுத்தவரை பல்கலைக் கழக அனுமதி ஆண்டொன்றிற்கு 20- 25000 மாக அமைகையில், 5% அல்லது 7 கொண்ட மலையக மக்கள் 200 க்கும் குறைவான எண்ணிக்கையில் 1% வீதத்திற்கு குறைவானவதாவே அமைந்துள்ளது. இலங்கை யில் தங்களுக்கென்ற ஒரு பல்கலைக்கழகம் இல்லை என்று சமூகமாக இருப்பது, இந்த மக்களே. 10 ஆண்டு திட்டத்திலே இது குறித்து ஒரு சாத்தியவள ஆய்வு மேற்கொள்ளப் படவேண்டும் என குறிக்கப்பட்டிருந்தாலும் அந்த நடவடிக்கை இன்னும் முன்னெடுக் கப்படவில்லை.

இங்கு இலவச உயர் கல்விக்கு நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை அடைந்த இயலுமையின் குறைவு என்றே அல் லது உரிமை மறுப்பு என்ற வகையில் பார்க்க வேண்டும். இந்த மக்களுக்காக பல்கலைக்கழகம் என்ற கோரிக்கையும் ஒரு உரிமை அடிப்படை யில் அணுகப்பட வேண்டும்.
அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரித்த நிலையில், அரச நிர்வாக மட்டத்தில், இம்மக்களின் ஈடுபாடு இல்லாமலிருப்பது கவனத்திற்கும் வேதனைக்குரிய ஒன்றாகும். சில விசேட ஏற்பாடுகளின் அடிப்படையில் அரசாங்கத்துறையில் சேர்க்கப்பட்ட பெருந் தோட்ட சமூக, தொடர்பாடல் வசதிப்படுத்தும் உத்தியோகத்தர் 300 பேரும் தபால் ஊழியர் 300 பேரும் கிராம சேவை உத்தியோகத்தர் 200 பேரும் என்ற எண்ணிக்கை தவிர சாதாரணமாக, பொதுப்பரீட்சை மூலமாக அரசாங்க துறைக்கு உள்வாங்கப்படுவோர் தொகை குறைவாகவே காணப்படுகின்றது. இந்த மக்களைச் சார்ந்த உயர் அரசாங்க உத்தியோகத்தர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே. அமைச்சு செயலாளர்களாக இதுவரை இலங்கை நிர்வாக சேலையில், எத்தனை பேர் என்று தேட வேண்டிய நிலை? திட்டமிடல் சேவையில் மூன்று பேர் வெளிநாட்டு சேவையில் 3 பேர் பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில், இன அடிப்படையில் ஆட் சேர்ப்பு கொள்கை காரணமாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

அபிவிருத்தி உரிமைகளை பொறுத்தவரை முக்கியமானதும், அடிப்படையாகவும் அமைந்துள்ளமை வீட்டுரிமையும், நிலவுரிமை யுமாகும். ஏனைய மக்கள் குழுக்களோடு ஒப்பிடுகையில் வீட்டுரிமை நிலவுரிமையற்ற வர்களாக இருப்பவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிகமானோர் இவர்களே. வீட்டுரிமை, என்பது தொழில் செய்யும் வரைக்கும் அனுபவிக்கக்கூடிய ஒன்றே. ஒரு குடும்பத்தில் ஒருவரேனும் தொழில் செய்யும் வரை வீட்டை சொந்தம் கொண்டாடலாம். ஒரு வரும் வேலை செய்யாத போது உரிமை மாற்றக் கூடிய உறுதி இல்லாமையே அடிப்படைப் பிரச் சினையாக காணப்படுகின்றது. வீட்டுக்கடன் பெற்று வீடுகளை கட்டி முடித்தவர்களுக்கும் இன்னும் உறுதிகள் வழங்காமலிருப்பது, ஓர் உரிமைப் பிரச்சினையாக சுட்டிக்காட்டப்படுகின்றது. வீட்டுரிமையோடு இணைந்தவொன்று வீடுகளை ஒட்டி ஒரு சிறிய நிலப்பரப்பு வீட்டுத்தோட்டங் களாக தொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாவித்து வந்தமையாகும். இத்தகைய நிலைமை உருவாகும்போது தோட்ட மக்களுக்கு கிராம மக்களை போல சமமான நிலையில் உருவாகும்போது தோட்ட மக்களும் கிராம மக்களைப் போல சமமான நிலையில் தங்களது வாழ்வாதாரத்தை பேண முடியும் என்பதே, இந்த கோரிக்கையின் தாற்பரியமாகும்.

2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 50,000 வீட்டுத் தொகுதிகள் அமைப்பதற்கான முன்மொழிவு பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. தோட்டப்புற வீடமைப்பில் பெரும்பாலும் தனி வீடுகள் விரும்பப்பட்டன. நெரிசல் மிகுந்த லயத்து வாழ்வு முறையலிருந்து தனி வீடுகளே பெரும்பாலும் மறைந்த சந்திரசேகரன் வீடமைப்பு பிரதி அமைச்சராக இருந்த காலத்திருந்து பின்பற்றப்பட்டு வந்த ஒன்றாகும். பின்னர் கைவிடப்பட்டு மீண்டும் தனி வீடுகளே மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் மாடி வீடுகள் உள்ளடக் கியதான இந்த முன்மொழிவு நில உபயோகம் மற்றும் உரிமைகள் என்பவை குறித்த அடிப் படையில் கவனம் செலுத்த வேண்டிய வொன்றாகும். மலையக மக்களின் அபிவிருத்தி நிலையில் ஏனைய சமூகங்களோடு ஒப்பிடு கையில் சமத்துவமற்ற நிலையில் இருப்பதோடு இந்த சமூகத்திற்குள்ளேயே பல பிராந்திய ரீதியாக வேறுபாடுகள் காணப்படுகின்றன.

மத்திய மாகாணம் அதிலும் நுவரெலியா மாவட்டம் மக்களின் செறிவு அதனூடாக பெறப் படக் கூடிய அரசியல் பிரதி நிதித்துவம் காரண மாக உயர்நிலையில் இருக்கும் அதேவேளை தெற்கு மாகாணத்தில் குறிப்பாக காலி மாவட்டத்தில் வாழ்வோர் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தாழ்நிலையில் உள்ளனர். தெனியாய பகுதியிலிருந்து உயர்தர வகுப்பிற்கு செல்வதென்றால் காவத்தைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை நிலவுகின்றது.
இந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகள் இன்னும் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. சமத்துவம் எனும் போது உள்ளக சமத்துவமும் முக்கியமானவொன்று. இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் சப்ரகமுவ மாகாணம் விளங்குகின்றது.

பத்தாயிரமாண்டு அபிவிருத்தி குறிக்கோள்கள். 2015ம் ஆண்டில் முடிவடைந்த நிலையில், தோட்ட சமூக அபிவிருத்தி திட்டம் 2009-2015 நிறைவேற்றப்படாமல் மூடிவைக்கப்பட்ட நிலையில், இந்த மக்களின் சமத்துவ அபிவிருத்தி 2015ற்கு பின்னர் எத்தகையதாக இருக்கும் என்று கேள்விக்கு விடை காண வேண்டியுள்ளது.

தோட்டப்புற பாடசாலைகள், தோட்ட சுகாதார, தோட்ட வீடமைப்பு, தோட்டப்புற பாதைகள், தோட்ட நீர் விநியோகம், இப்படி தொடர்புடைய அமைச்சுக்களில் நிதி ஒதுக்குகள் குறித்து ஒரு வெளிப்படைத்தன்மை காணப்பட வேண்டும்.

அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தி முனைப்புகளை முன்னெடுத்து வருகின்றது. இவற்றில் திவிநெகும, மற்றும் கமநெகும போன்றவை அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன. மாகாண மட்டத்தில் செயற்படுகின்ற அபிவிருத்தி முன்னெடுப்புகளும் எந்தளவிற்கு தோட்டப்புறங்களுக்கு சென்றடைகின்றன என்பவை அறியப்பட வேண்டியவையாகும். இந்த முனைப்புகள் குறித்து மக்கள் பிரநிதிகள், குறித்த இடங்களில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த செயற்பாடுகளில் சிவில் சமூகம், சமூகம்சார்ந்த அமைப்புகள், அக்கறை செலுத்த வேண்டும். அது மக்கள் பிரதிநிதிகளுக்கு வலுவூட்டுவதாக அமையும்.
அரசசார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கம் செய்யும் விடயங்களையே செய்ய முனையாமல், மேலதிகமாக செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். இதில் சமூகத்தினர் தனியார் துறை, சமூகம் சார்ந்த அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் என்பவை அபிவிருத்தி சம்பந்தமாக கூடிய அக்கறை செலுத்த வேண்டும். தனியார் துறை எனும் போது பெருந்தோட்ட கம்பனிகள் இன்று நிறுவன சமூக பொறுப்பு கொண்டவையாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றன. இதில் நிச்சயம், அபிவிருத்தி அம்சம் கலந்துள்ளது.

பொருளாதார ரீதியாக தேசிய மட்டத்தில் தேயிலையின் பங்களிப்பு குறைந்து செல்கின்ற வேளை தேசிய உற்பத்தி, அந்நிய செலாவணி சம்பாதிப்பு என்ற வகையில் தேயிலையின் முக்கியத்துவம் குறைந்து செல்கின்றது. தேயிலையின் ஏற்றுமதி விலைகளை தொடர்புபடுத்தியதாக, தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் அமைந்திருப்பதால் குறைவான விலை குறைவான கூலி என்ற வகையில் தோட்டத்தொழிலை மாத்திரம் தமது வாழ்வாதாரத்திற்கு தங்கியிருக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.

உயர்கல்வி தோட்டத்தொழிலுக்கு மரபுரீதியாக இருந்த வந்த கூலி என்ற இழிவான சமூக அடையாளம் என்பவை காரணமாக கணிசமானோர் க.பொ.த சாதாரண தரத்துடன் வேறு திறனற்ற தொழில்களைத் தேடி தோட்டப்புறத்திலிருந்து அகன்று செல்கின்றனர். தோட்டத்திற்குள்ளே, தோட்டத்தொழிலில் ஈடுபடாது வாழுவோர் எண்ணிக்கை 30 சதவீதமாக அமைந்துள்ளதாக சில கணிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இவர்களை முன்னர் போல, தோட்டங்களிலிருந்து அகற்றிவிட முடியாது. தோட்டக் கம்பனிகளில் தொழிலாளர் பற்றாக்குறை ஒரு அபாயமாக கருதப்படுகின்றது. உழைப்பினை பதிலீடு செய்கின்ற தொழிற்நுட்பங்கள் குறித்து இப்போது அதிகம் அக்கறை செலுத்தப்படுகின்றது. குறைந்த உழைப்பில் உயரிய உற்பத்தியை அடைவதையே கம்பனிகள் இலக்காக கொண்டுள்ளன. இவை தோட்டங்களை சிறுபகுதிகளாக்கி வெளியார்க்கு கையளித்தல் முறைக்கு இட்டுச்செல்லும் நிலை தள்ளப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.

சமூக ரீதியாக முழுக்கமுழுக்க தொழிலாளர் குடும்பங்களாக இருந்த நிலைமாறி, தொழிலாளர் அல்லாதோரை கொண்ட சமூகமாக, மலையக சமூகம் இன்றி மாறிவருகின்றது. இந்த சமூகநிலை மாற்றம் அதிகரித்து செல்லும் போக்கு அவதானிக்க கூடியதாக உள்ளது. இதுவரை தோட்ட நிர்வாகத்தில் தங்கியிருந்த நிலைமாறி, பிரதேசசபை, போன்ற அரசாங்க நிறுவனங்களில் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் போக்கே எதிர்காலத்தில் காணப்படலாம்.

அந்தவகையில் அரசியல் ஜனநாயக முறைமையில் அதிக ஈடுபாடு காட்டக்கூடிய சூழ்நிலை உருவாகலாம். அதனுடைய பிரதிபலிப்புகள், மாகாண தேசிய மாவட்டங்களில் புதிய அரசியல் தலைமைகள் - கீழிலிருந்து உருவாகக்கூடிய சாத்தியங்கள் நிலவுகின்றன. இந்த போக்கு மக்களின் அபிவிருத்தி தேவைகளை அர்த்தமுள்ள வகையில் வெளிப்படுத்துவதாக அமையும்.
மலையக மக்களை சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஒரு தரவு தளம் இல்லாதிருப்பதாகும். அமைச்சு மட்டத்தில் இப்படியொன்று அமைக்கப்பட வேண்டுமென 10 ஆண்டு திட்டம் நடைமுறைப்படுத்திய போது முன்மொழிவு செய்யப்பட்டது.

நாம், முன்னர் குறிப்பிட்டது போல, பல்வேறு அரச நிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றன. இவை பற்றிய தரவுகள், மற்றும் தகவல்கள் ஓரிடத்தில் கிடைப்பதாயில்லை. இது ஒரு அமைச்சு மட்டத்திலே நிறுவப்படுவது பொறுத்தமான ஒன்று.

நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரை கல்வித்துறை சம்பந்தமான சீடா நிறுவனத்தின் ஊடாக தரவுத்தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. மலையகம் முழுவதையும் உள்ளடக்கி, அனைத்து துறைகளுக்குமான கல்வி- சுகாதாரம், வீடமைப்பு, பாதைகள் மற்றும் பல்கலைக்கழகம் செல்வோர், வேலை வாய்ப்பற்றோர் போன்றவிடயங்களுக்கென தரவுக்களம், ஒன்று அவசியமாகும்.

மலையக மக்கள் சமத்துவ அபிவிருத்தியை நோக்கி, எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்? அபிவிருத்தி குறித்து நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளியல் அறிஞர் அமாத்தய சென் அவர்களின் கூற்றொன்றை இச் சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது பொருத்தமானது என நினைக்கிறேன். “ஒரு தனிமனிதன் எத்தகைய அளவு உரித்துகளையும், இயலுமைகளையும் கொண்டிருக்கிறானோ அந்த அளவிற்கே அவன் அபிவிருத்தியை அடைந்து கொள்ள முடியும்” என்ற கருத்தை இச்சமூகத்திற்கும் பொருந்திப்பார்க்க முடியும்.

இங்கு சுட்டிக்காட்டப்பட்ட வரலாற்று அனுபவத்திலும் இந்த சமூகம் உரித்துக்களின் தொகுதிகளை ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகையில் காலங்கடந்தே பெற்று கொண்டது. இன்னும், இந்த உரித்துக்களின் தொகுதி பெருப்பிக்கப்பட வேண்டும். இதை முழுமையாக அனுபவிக்கவேண்டுமெனில் அதற்கான இயலுமையை இந்த சமூகம் பெற்றிருக்க வேண்டும். இயலுமை குறைவே, இந்த சமூகத்திற்குரிய மிகப்பெரும் பலவீனமாகும். இதுவும் வரலாற்று நிகழ்வுகளின் விளைவுதான். இந்த இயலுமைகளின் அபிவிருத்தி மனிதவள மேம்பாட்டில் தங்கியுள்ளது கல்வி திறன் பயிற்சி என்பவை தான் இவற்றை கொண்டு வர முடியும்.

இத்தகைய சமூக சூழ்நிலையிலே, நேரடியாக நடவடிக்கைகள் அல்லது நேர்கணிய பாரபட்ச ஏற்பாடுகள் இந்திய, மலேசியா போன்ற நாடுகளின் யாப்புகளில் காணப்படுகின்றன. இலங்கையில் இத்தகைய இடைவெளிகள் காணப்பட்டபோது அவற்றை நீக்க நேர்கணிய பாரபட்ச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்கலைக்கழக அனுமதியில் இன மற்றும் பிராந்திய தரப்படுத்தல், இனத்துவ ரீதியான ஆட்சேர்ப்பு என்பன சில உதாரணங்களை குறிப்பிடலாம்.

ஒரே மக்கள், ஒரே நாடு என்ற கோட்பாடு அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டுமெனில் ஒரே மக்கள் என்ற தொகுதிக்குள் அடங்குகின்ற இனக்குழுக்கள் சமத்துவ நிலையை அனுபவிக்க வேண்டும். இங்கு இரண்டு மேற்கோள்களை பொருத்தம் கருதி குறிப்பிடலாம். ஒன்று இந்திய பிரதம நீதிபதி ஏ. என். ரே அவர்களின் கூற்று, சமத்துவம் அற்றவர்களுக்கு, சமத்துவமான சந்தர்ப்பங்களை வழங்குதல் சமத்துவமின்மையை தீவிரப்படுத்தும் என்பதாகும் மற்றது இந்திய யாப்பை உருவாக்கிய அம்பேத்காரின் கூற்று, நாம் அரசியலில சமத்துவம் கொண்டுள்ளோம். ஆனால் சமூக, பொருளாதார வாழ்வில் சமத்துவமின்மையை காண்கின்றோம். கூடிய விரைவில் இம்முரண்பாட்டினை நீக்க வேண்டும். இல்லையெனில் சமத்துவமின்னையால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக உழைத்து கட்டியெழுப்பிய இந்த அரசியல் ஜனநாயக அமைப்பினை உடைத்து எறிவார்கள்.

மலையகத்தின் காந்தி என போற்றப்படும் அமரர் கே. இராஜலிங்கத்தின் 104 ஆவது பிறந்த தினத்தையொட்டி கடந்த 3ஆம் திகதியன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் “மலையக மக்கள் சமத்துவ அபிவிருத்தியை நோக்கி” எனும் தலைப்பில் எம். வாமதேவன் ஆற்றிய பேருரை

தொடரும்…..
நன்றி- தினகரன்

Saturday, October 26, 2013

அரசாங்கம் மலையகத்தவர்களுக்கு வழங்கப்பட்ட மாகாண தமிழ்க் கல்வி அமைச்சினை பறித்து விட்டது 

மலையக மக்களுக்கு தனித்தனி வீடுகளை கட்டிக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் மேடைகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதியளித்தார். ஆனால் தேர்தல் முடிந்ததும் மத்திய மாகாண தமிழ் கல்விக் அமைச்சு பறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் இரட்டை வேடம் தெட்டத் தெளிவாகியுள்ளது  ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கா தெரிவித்துள்ளார்.
 பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மலையக மக்களின் வாக்குகளை வெற்றிலைச் சின்னத்திற்கு திசை திருப்பிக்கொண்ட இந்த அரசாங்கம் ஐக்கிய தேசிய கட்சியினால் மலையகத்தவர்களுக்கு வழங்கப்பட்ட மாகாண தமிழ்க் கல்வி அமைச்சினை பறித்து அவர்களை அவமதித்துள்ளது. எனவே மக்கள் இந்த அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை உணர்ந்து எதிர்வரும் தேர்தல்களில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றார் அவர் 

இது தொடர்பாக ரவி கருணாநாயக்கா மேலும் கருத்து தெரிவிக்கையில், மாகாண சபை முறைமையை அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசிய கட்சி சகல இன மக்களும் பயன் பெறும் வகையில் எவ்வித பாரபட்சமும் இன்றி அதனை செயற்படுத்தியது குறிப்பாக மலையக மக்களின் நலன்களையும் அவர்களின் கோரிக்கைகளையும் செவிமடுத்து மதிப்பளித்தது. அதன் விளைவாகவே தமிழ்க் கல்வி அமைச்சென்ற ஒன்றை உருவாக்கி ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அதனை தமிழர்களுக்கு வழங்கியது.

இவ்வாறு மலையக தமிழர்களை மதித்து அவர்களுக்காக வழங்கப்பட்ட தமிழ்க் கல்வி அமைச்சின் ஊடாக அவர்கள் கணிசமான முன்னேற்றத்தினையும் அடைந்துள்ளார்கள் என்பதை யாவரும் அறிவர். ஆனால் இந்த அரசாங்கம் அந்த அமைச்சினை பறித்து தந்திரோபாயமாக தமது காய் நகர்த்தலை மேற்கொள்கிறது.

மலையக மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு அமோக ஆதரவளிப்பவர்கள். எனவே அவர்களின் மனோநிலையை நன்கு அறிந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியோரின் தேர்தல் பிரசார மேடைகளில் ஏறி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார். அதன் மூலமாக மத்திய மாகாண தமிழ் மக்களின் வாக்குகள் வெற்றிலைச் சின்னத்திற்கு திசை திருப்பப்பட்டன.

இவ்வாறு ஜனாதிபதி பல்வேறு வாக்குறுதிகளை வாரி வழங்கியமையினாலேயே இம்முறை மத்திய மாகாணத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட ஒன்பது தமிழ் உறுப்பினர்களுக்கும் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர்.

தமது நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பிலேயே இம்முறை மலையக மக்கள் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் தமிழ் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களித்தனர். ஆனால் அரசாங்கம் வெற்றி பெற்றதும் தமது சுயரூபத்தை காட்டியுள்ளது.

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவது இந்த அரசாங்கத்துக்கு புதிதான விடயமல்ல. ஆனாலும் இம்முறை மலையக மக்களை ஏமாற்றுவதற்கு ஒரு புதிய யுக்தியை கையாண்டிருக்கிறது அவ்வளவுதான். எனவே மலையக மக்கள் மீண்டும் இந்த அரசாங்கத்தை நம்பி ஏமாறக்கூடாது.

நாட்டின் தேசிய பிரச்சினை விடயத்தில் இதே விதமான செயற்பாட்டினையே இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. 13ஆம் திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வினை வழங்கத் தயார் என ஜனாதிபதி வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது 13ஆம் திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை கூட பறிப்பதற்கே முயற்சிக்கிறது.

இவ்வாறு கபடத்தனமாக செயற்பட்டு வரும் இந்த அரசாங்கம் மலையக மக்களுக்கோ வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கோ எவ்வித நன்மையும் செய்யப்போவதில்லை என தெரிவித்தார்

Wednesday, October 23, 2013

வரவு–செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் காணி, வீட்டுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் -ஆ. முத்துலிங்கம்

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2014ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி மற்றும் வீட்டுரிமை தொடர்பான முன்மொழிவை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டுமென ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ஆ. முத்துலிங்கம் தெரிவித்துள்ளார். 

அது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி, மற்றும் வீட்டுரிமை தொடர்பான விடயத்தினை அதி முக்கிய கோரிக்கையாக முன்வைத்து மலையக தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் ஜனாதிபதிக்கு அழுத்தங்கை கொடுக்க வேண்டும். இந்த விடயத்தில் எத்தகைய தயக்கத்தினை காட்டாமல் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். 

இந்த நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இந்நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு அரசும் தோட்டத் தொழிலாளர்கள் விடயத்தில் பாகுபாட்டையும் புறக்கணிப்பையுமே மேற்கொண்டு வந்திருக்கின்றது. இந்த நாட்டின் மேம்பாடுகளை கருத்திற்கொண்டு பெருமளவிலான அந்நிய செலாவணியை தோட்டத் தொழிலாளர்களே பெற்றுக்கொடுத்து வருகின்றனர். அத்தகையவர்களுக்கு உரிய இடத்தை இந்த நாட்டை ஆட்சி செய்த அரசுகள் வழங்கவில்லை. 

அண்மைக்காலமாக ஏழு பேர்ச் விஸ்தீரணமுள்ள காணியில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட போதும் அவ்வீடுகளுக்கான உரிமை தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. அப்பிரச்சினை தொடர் கதையாக நீண்டு செல்கிறது. 

கடந்த வருடம் ஜனாதிபதியினால் முன்ழொழியப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கையில் மலையகப் பெருந்தோட்டங்களின் 35 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதியினால் கூறப்பட்டது. 

இந்த விடயமாக ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஜனாதிபதியின் கவனத்திற்கு சமர்ப்பித்த மகஜரில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு அங்குல நிலம் தானும் சொந்தமாக இல்லாதுள்ளது. ஆகையினால் பகிர்ந்தளிக்கப்படும் தரிசு நிலங்களில் தோட்டத் தொழிலாளர்களையே உள்ளடக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியிருக்கின்றோம். 
கடந்த மத்திய மாமகாண சபைத் தேர்தலில் பிரச்சாரத்தின் போது ஜனாதிபதி காணி மற்றும் வீட்டுரிமை விடயத்தில் தோட்டத் தொழி;லாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென்று தனது நிலைப்பாட்டினை தெரிவித்திருந்தார். அதனை நிறைவேற்றி வைக்கும் வகையில் நுவரெலியா பெருந்தோட்ட மக்கள் தமது வாக்குகளினால் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தியுள்ளனர். 

பெருந்தோட்டங்களின் எதிர்காலம் கேள்விகுறியாக இருக்கும் இவ்வேளையில் தொழிலாளர்களின் காணி மற்றும் வீட்டுரிமை கோரிக்கையானது உறுதிப்படுத்தப்படல் வேண்டும். 
ஆகையினால் தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கவாதிகள் அனைவரும் முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு பூரண அழுத்தங்களை கொடுக்க வேண்டும். அதன் மூலம் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்ட அறிக்கையில் தொழிலாளர்களுக்கான காணி மற்றும் வீட்டுரிமை தொடர்பான விடயம் உள்ளடக்கப்படல் வேண்டும். ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கட்சியில் பங்காளிகளாக இருக்கும் மலையக தொழிற்சங்க அரசியல்வாதிகள் மேற்படி விடயங்கள் தொடர்பாக கூடிய அக்கறை காட்ட வேண்டும். இது தொடர்பாக தொழிலாளர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதும் அவசியமாகும் என்றார்.

Monday, October 21, 2013

திட்டமிடப்பட்ட கருத்தடைகளை தடுப்பதற்கு குரல் கொடுக்க வேண்டும் - லோரன்ஸ்

மலையகத்தில் சனத்தொகை அதிகரிப்பு அண்மை காலமாக குறைவடைந்து காணப்படுகின்றது. தேசிய ரீதியில் சனத்தொகை அதிகரிப்பு வீதம் 1.7ஆக உள்ள நிலையில் மலையகத்தில் இது 0.7 வீதமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. மலையகத்தின் சனத்தொகையைக் குறைப்பதற்கும் அம்மக்களின் இருப்பினை சீர்குலைப்பதற்கும் கடந்த காலத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அபிவிருத்தி எனும் பெயரில் மக்களை இடம்மாற்றுதல் திட்டமிட்ட குடியேற்றங்களை தாபித்தல் என்பன அவற்றுள் சிலவாகும். இதனடிப்படையில் கட்டாய கருத்தடை திட்டமும் குறிப்பிடத்தக்கதாகும்.

மலையக பெண்களின் விருப்பமின்றி சில இடங்களில் கட்டாய கருத்தடை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமையை அறிய முடிகின்றது. சில அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நடவடிக்கைக்கு துணை போகின்றமையானது வருந்தத்தக்க விடயமாகும். ஆசை வார்த்தைகளைக் கூறி அற்ப சொற்ப சலுகைகளை வழங்கி மலையக பெண்களை கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கி வரும் செயல் ஒரு மனித உரிமை மீறலாகும். அதிகமானோர் கருத்தடை செய்து கொள்வார்களானால் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு சன்மானமும் வழங்கப்படுவதாக செய்திகள் அடிபடுகின்றன. சொந்த நலன்களுக்காக ஒரு சமூகத்தை காட்டிக்கொடுக்கும் அல்லது சமூகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இத்தகைய செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவையாகும்.

கட்டாய கருத்தடையின் காரணமாக பல்வேறு பாதக விளைவுகள் ஏற்படுகின்றன. எனினும் இவ்விடயம் தொடர்பாக மலையக அரசியல்வாதிகள் அலட்சிய போக்கினையே கடைப்பிடித்து வருகின்றனர். பிரச்சினையின் உக்கிர தன்மையை அரசியல்வாதிகள் விளங்கிக்கொள்ள வேண்டும். கட்டாயக் கருத்தடையின் பாதக விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.





Sunday, October 20, 2013

தோட்டத் தொழிலாளர்களுக்கு 10,000 ; ரூபா பெருநாள் முற்பணம் வழங்க வேண்டும்- ஆர். யோகராஜன்

சம்பள உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றுக்கு ஏற்ப பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளிப் பண்டிகைக்காக பத்தாயிரம் ரூபாய் பெருநாள் முற்பணம் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார். 

2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் பெருந் தோட்ட தொழிலாளி ஒருவருக்கு நாட் சம்பளமாக 405 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் தொழிலாளர்களுக்கு பெருநாள் முற்பணமாக 4500 ரூபாய் வழங்க தீர்மானிக்கப்பட்டது. இன்று தோட்டத் தொழிலாளி ஒருவர் 620 ரூபாய் நாட் சம்பளம் பெறுகிறார்கள். எனவே, அவர்களுக்கு ஏன் பத்தாயிரம் ரூபாய் முற்பணம் வழங்க முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரமே பெருந்தோட்டத் தொழிலாளிகளின் சம்பள உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு 405 ரூபாவாக இருந்த நாட் சம்பளம் 2011 ஆம் ஆண்டு 515 ரூபாவாகவும் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி 620 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டது. எனவே 2009 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 53 சதவீத சம்பள உயர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளிகளின் 53 சதவீத சம்பள அதிகரிப்பிற்கேற்ப 7500 ரூபாய் பெருநாள் முற்பணத்தினை வழங்கலாம். ஆனால், அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கமையவே பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டுமென நான் வலியுறுத்துகின்றேன்.

கடந்த ஏப்ரல் மாதம் அவசர அவசரமாக கூட்டு ஒப்பந்தத்தினை மேற்கொண்டவர்கள் இந்த தீபாவளி முற்பணத்தினை தற்போதைய கால சூழலுக்கேற்ப பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏனென புரியவில்லை.

மலையகத்தில் பல பகுதிகளில் கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் பெய்த கடும் மழையினால் வேலை நாட்கள் குறைக்கப்பட்டன. இதனால், தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்தையே அந்த மாதங்களில் பெற்றனர். ஆகையால், அப்போது அவர்கள் கடன்களைப் பெற்று தமது செலவுகளை சமாளித்தனர். இவ்வாறான நிலையில் பெருநாள் முற்பணமும் குறைவாக கிடைத்தால் அவர்களால் தீபாவளியை கொண்டாட முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

நன்றி- வீரகேசரி

Thursday, October 17, 2013

தொழிலாளர்களுக்குரிய 100 கோடி ரூபா கோரி சட்ட நடவடிக்கை

அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் கண்டி, மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய சுமார் 100 கோடி ரூபாவை கோரி சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி துணை அமைச்சருமான முத்துசிவலிங்கம் பி.பிசிக்கு தெரிவித்துள்ளார். 

இவ்வாறு அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களில் தொழிலாளர்களிடமிருந்து அறவிடப்பட்ட சேமலாபநிதி, மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி, ஓய்வூதிய கொடுப்பனவுகள் என்பன கடந்த 10 முதல் 15 வருடத்துக்கு மேலாக கொடுக்கப்படாமல் இருந்து வந்துள்ளன. 

அரசின் கீழ் உள்ள 3 நிறுவனங்களின் கீழ் இயங்கும் இந்தத் 15 தோட்டங்களும் முறையாக இயங்காதபடியாலேயே தொழிலாளர்களின் கொடுப்பனவுகள் உரிய முறையில் வைப்பிலிடப்படாமல் இருந்துள்ளதாக முத்து சிவலிங்கம் குறிப்பிடுகிறார். 

கண்டி, ஹந்தானை தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் அண்மையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளை மீளச் செலுத்துமாறு நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை முன்மாதிரியாகக் கொண்டு, ஏனைய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சார்பிலும் வழக்குகள் தாக்கல் செய்து சுமார் 100 கோடி ரூபா அளவான தொழிலாளர்களின் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிக்கிறது

இதேவேளை, அரச நிர்வாகங்களின் கீழுள்ள தோட்டங்களிலுள்ள பழமையான, பெறுமதி மிக்க மரங்களை வெட்டி விற்று தொழிலாளர்களின் ஓய்வுகால கொடுப்பனவுகளை செலுத்த அரசாங்கம் முன்வந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் முத்து சிவலிங்கம்  அவ்வாறு இல்லாவிட்டால் அரச திறைசேரியிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு நீதிமன்றம் ஊடாக அரசாங்கத்தைக் கோரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மலையகத்தில் பெரும்பான்மை தொழிலாளர்களை சந்தாதாரர்களாகக் கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கக் கூட்டணியில் நீண்டகாலமாக பங்காளிக் கட்சியாக இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெரிய மட்டுக்கலை மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்

நுவரெலியா மாவட்டம் லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரிய மட்டுக்கலை தோட்டத்தில் 600 மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று (15) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பாவனைக்கு உகந்ததாக இல்லாத தோட்டத்திலுள்ள விளையாட்டு மைதானத்தை புனரமைத்துத்து தருமாறு மக்களால் கோரிக்கை மனுவொன்று நுவரெலிய பிரதேச சபை தலைவருக்கு வழங்கப்பட்டதனடிப்படையில் 

நுவரெலியா பிரதான வீதியை புனரமைப்பு செய்யும் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் மைதான புனரமைப்புக்கு மண் நிரப்பப்பட்டது. 

அத்தோடு, மைதானத்தில் வடிகால் அமைப்பதற்காக தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக 10 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு பணி முற்றுபெற்றுள்ளது. 

வீதி அதிகார சபை மூலம் மைதானத்தில் நிரப்பப்பட்ட மண் சரியான முறையில் பரப்பப்படாத காரணத்தால் இரண்டு வருடமாக தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த புனரமைப்பு பணியை மேற்கொள்ளுமாறு  நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு ககடிதம் வழங்கப்பட்டதையடுத்து விளையாட்டு மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டு கடந்த 13-10-2013 அன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. 

புனரமைக்கப்பட்ட மைதானத்திற்கு 15,80000 ரூபா செலவிட்டதாக கூறி நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காசோலை பெற முயற்சி செய்துள்ளதாக மக்களுக்கு தகவல் பரவியதையடுத்து  20 பேர் கொண்ட தோட்ட இளைஞர் குழு நேரடியாக நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு சென்று செயலாளரை சந்தித்து குறித்த உறுப்பினருக்கு காசோலை வழங்க வேண்டாம் என கோரப்பட்டதால் காசோலை வழங்கப்படவில்லை. இந்த மோசடி செயலை கண்டித்தே தோட்டத் தொழிலாளாகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து கருத்து வெளியிட்ட நுவரெலிய பிரதேச சபை உறுப்பினர் நாகராஜ், 02 வருடங்களுக்கு முன்பு மைதானம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும் இதனை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்ததால் 05 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். 

இதனையே பொறுப்பேற்று வேறு ஒரு நபருக்கு வழங்கியதாகவும் 15,80000 இலட்சம் ரூபா என்ற குற்றச்சாட்டு பொய்யானது எனவும் தனக்கும் இதற்கும் எதுவித தொடர்பும் இல்லையென குறிப்பிட்டார்.

Tuesday, October 15, 2013

சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளான பெண் தொழிலாளி வைத்தியசாலையில்

ஹட்டன் வட்டவளை பொலிஸ் பிரிவுட்பட்ட குயில்வத்தை கீழ் பிரிவு தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த கணகேஸ்வரி என்ற பெண் தொழிலாளி  சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளான இவர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்கா நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 
இந்த பெண்மணி மூன்று பிள்ளைகளின் தாயுமாவார். இச் சம்பவம் நேற்றுக்காலை(15-10-2013) காலை 9.00 மணிக்கு நிகழ்ந்துள்ளது. 
இது தவிர இரவு நேரங்களில் இப்பிரதேச தோட்டப்பகுதிகளுக்குள் செல்லும் சிறுத்தை அங்குள்ள நாய்களை பிடித்துச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

Friday, May 31, 2013

25,000 ஏக்கர்பெருந்தோட்ட காணிகளை பகிர்ந்தளிக்க தீர்மானித்தமை தெரியாது- லலித் ஒபயசேகர



பயன்படுத்தாது இருக்கும் தேயிலை பெருந்தோட்ட 25,000 ஏக்கர் நிலப்பரப்பை வேலையற்ற 12,500 இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்க திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகவும், இதற்கான தீர்மானமொன்றை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, திறைச்சேரி செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர மற்றும் பல மூத்த அதிகாரிகளுடனாள கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

எனினும் இது குறித்து தமக்கு எதுவும் தெரியாதென இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத் தலைவர் லலித் ஒபயசேகர தெரிவித்துள்ளார். 
இந்த வரடத்திற்கான வரவு செலவு திட்ட முன்மொழிவின் கீழ் பயன்படுத்தப்படாதுள்ள 25,000 ஏக்கர் பெருந்தோட்ட நிலப்பரப்பை சுவீகரித்து பயன்தரக்மூடிய நோக்கங்களுக்காக இளைஞர்களிடையே பகிர்ந்தளிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இளைஞர் ஒருமவருக்கு தலா இரண்டு ஏக்கர் காணியை வழங்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் லலித் ஒபயசேகர தெரிவிக்கையில் அரசாங்கத்துடனான பெருந்தோட்டக் கம்பனிகள் பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்கப்பட்டடிருந்த போதிலும் காணி பகிர்ந்தளிக்கும் திட்டம் பற்றி குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது, பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் நடைபெற்றிருந்த கூட்டங்களில் கம்பனிகள் சார்பில் கலந்து கொண்ட போதிலும் கூட இதுபற்றி கலந்துரையாடப்படவில்லை என்றார். 

குறித்த காணிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 100 மில்லியன் ரூபாவை கடனாக வழங்குவதற்கு திறைசேரி இணங்கியுள்ளதுடன் மேற்படி காணிகள் 30 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுமுள்ளன.
இந்த விடயம் குறித்து இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன் வைக்கப்பட்டபோது பெருந்தோட்டக் காணிகளை சுவீகரிப்பது தொடர்பான நடைமுறைகள் குறித்து பெருந்தோட்டக் கம்பனிகள் பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சிடமிருந்து தெளிவுபடுத்துகையைக் கோரியிருந்ததாகவும் ஒபயசேகர கூறினார்.
இது பற்றி பெருந்தோட்டக் கைத்தொழில் நிபுணரொருவர் பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கையில்,

இத்தகைய நிகழ்ச்சித் திட்டம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதால் அரசின் இந்த நடவடிக்கை உரிய பலனை அளிக்கப் போவதில்லை. பெருந்தோட்டக் கைத்தொழில் பற்றி அடிப்படை அறிவற்ற கட்சி ஆதரவாளர்களுக்கு இந்தக் காணிகள் வழங்கப்படவுள்ளதால் அவை உரிய பலனைத் தராதெனவும் தெரிவிக்கிறார்.

இதேவேளை தங்கள் பெருந்தோட்ட நிலங்களில் தேயிலைக் செடியை மீள நடுகைக்கான காணியைப் பெற்றுக்கொள்வதில் மிகப் பெரிய பிரச்சினையாக தொழிலாளர் பற்றாக்குறையே இருந்து வருவதாக பல்வேறு பெருந்தோட்டக் கம்பனிகள் முறையிட்டுள்ளன. 

Tuesday, May 14, 2013

பெரும் வெள்ளத்தினால் மத்திய மாகாணத்தில் 6 பேர் பலி மூவரை காணவில்லை


மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த இரு நாட்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் காரணமாக 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மூவரை காணவில்லை எனவும் சுமார் 1099 குடும்பங்களைச் சேர்ந்த 4000 பேர் 32 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் தெரிவிக்கிறது.

1361 குடும்பங்களைச் சேர்ந்த 4667 பேர் இந்த மத்திய மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் . மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கிய நான்கு இம் மாகாணத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
 

துற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் குமாரசிறி தெரிவித்துள்ளார்
 

இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, நிவித்திகலை, எலபாத்த, குருவிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட 299 குடும்பங்களைச் சேர்ந்த 1571 பேர் பாதிக்கப்பட்டு ஆறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
 

முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களில் இரத்தினபுரியில் 121 குடும்பங்கள் 755 பேர், எஹலியகொடையில் ஒரு குடும்பம் 4 பேர், பெல்மதுளையில் 117 குடும்பங்கள் 580 பேர், எலபாத்தையில் 38 குடும்பங்கள் 151 பேர் அடங்குவர்
இதேவேளை கண்டி அங்கும்புரை பல்லேகம பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த அனுர ஜயசிங்க(45) முச்சக்கர வண்டியுடன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார் சாரதி படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. காணாமல் போனவரை தேடுவதற்காக கடற் படையினரின் உதவியை நாடியுள்ளனர்.

Monday, May 13, 2013

இடி தாக்கியதில் தொழிலாளர் இருவர் காயம்

கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் இன்று 13 ஆம் திகதி முற்பகல் வேளையில இடியுடன் கூடிய அடைமழை பெய்து கொண்டிருந்த போது கைகளில் இயந்திரங்களுடன் வேலை செய்து கொண்டிருந்த ஆண் தொழிலாளர்கள் இருவர் மீது இடி வீழ்ந்ததில் படுகாயமடைந்த இருவர் கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இந்தச்சம்பவத்தில் கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஸ்ரீதரன் , பெருமாள் புனிதகுமார் ஆகிய இரண்டு தொழிலாளர்களே காயமடைந்தவர்களாவர்

Thursday, May 9, 2013

மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு




கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற இரவு தபால் ரயில் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று அதிகாலை909-05-2013) தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ரயில் எஞ்சின் தண்டவாளத்தை விட்டு விலகியதால் ரயில் தண்டவாளத்திற்கும் ரயிலுக்கு நீர் நிரப்பும் குழாய் கட்டமைப்புக்கும் சேதமேற்பட்டுள்ளதாக நானுஓயா கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.
இதனால் பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. பயணிகள் நானுஓயா ரயில் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை தெரிவித்தது.

Sunday, May 5, 2013

இ.தொ.கா.வுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நுவரெலியா மாநகரசபையில் தோல்வி


   
தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் மூலம் சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுத்த தொழிற்சங்கமான இ.தொ.கா.விற்கு நன்றி தெரிவித்து நுவரெலியா மாநகரசபையின் மாதாந்த கூட்டத்தில் ஆளும் ஐக்கிய முன்னணி சார்பில் நுவரெலியா மாநகர சபையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் எம் சந்திரன் சமர்பித்த தீர்மானம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.

இந்த தீர்மானத்தை எதிர்த்து மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஆர்.ராஜராம், எதிர்கட்சியான ஐ.தே.க.வை சேர்ந்த உறுப்பினர்களான எல்.நேருஜி, கே. சந்திரசேகரன். சந்தன லால் கருணாரட்ன, ஐக்கிய இலங்கை ஜனநாயக முன்னணி உறுப்பினர் ஆர்.கேதீஸ் ஆகியோர் வாக்களித்தனர். அத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பு போதாதென்று தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றியதோடு இத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென வாக்கெடுப்பிற்கு விட வேண்டும் என எதிர்க்கட்சியினர் கேட்டுக்கொண்டனர்.
கூட்டத்தை தலைமை தாங்கிய மாநகர முதல்வர் டி.ஜி.மஹிந்தகுமார இத் தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு விட்டார். தீர்மானத்திற்கு எதிராக 5 வாக்குகளும், ஆதரவாக 1 வாக்கும், 4 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் நடுநிலை வகித்தனர்.
இந்த வாக்கெடுப்பின் போது மாநகர முதல்வர் டி.ஜி.மஹிந்தகுமார, பிரதி முதல்வர் திஸ்ஸ செனவிரட்ன, மாநகரசபை உறுப்பினர் குமாரதேசபிரிய தீர்மானத்தை வழிமொழிந்த உறுப்பினர் எம்.பஸில் ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thursday, May 2, 2013

உழைக்கும் வர்க்கத்துக்கு ஏமாற்றம் கொடுத்த கூட்டு ஒப்பந்தம்


பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் வெறும் 70 ரூபாவால் மாத்திரம் அதிகரிக்கப்பட்டு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை மலையக மக்களின் வாழ்க்கைச் சுமையை தாங்கும் சக்தி குறித்து ஆழமாக சிந்திக்க வைத்துள்ளது.

நாளுக்கு நாள் வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்லும் தற்போதைய நடைமுறையில் இரு வருடங்களுக்கு இந்தச் சிறுதொகையை வழங்குவதற்கு ஒப்பந்தமாகியுள்ளது.

நாளாந்த தேயிலை விலைபங்கீட்டுக் கொடுப்பனவு 30 ரூபாவாகவும் வரவுக் கொடுப்பனவு 140 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மொத்தமாக 620 ரூபா சம்பளம் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெறுவதாக கூறப்படுகின்ற போதிலும் சில நியமங்களின் அடிப்படையிலேயே அவை வழங்கப்படுகின்றன.

மலையக மக்களின் வாழ்க்கைப் பயணம் ஆரம்பம் முதலே போராட்டமாகத்தான் இருந்துவருகிறது. மலைகளில் கொழுந்துக்கூடையும் மண்வெட்டியும் சுமக்கும் இவர்கள் மனதில் அதற்கும் மேலான சுமைகளைத் தாங்கியவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களின் வாழ்க்கை ஜீவனத்தையும் நாளாந்த நடைமுறையினையும் ஒரு மூன்றாவது மனிதனின் பார்வையிலன்றி அவர்களுக்குள் ஒருவராக இருந்து பார்த்தால் பிரதிபலன் நிச்சயம் கண்ணீராகத்தான் இருக்க முடியும்.

ஏனென்றால் அந்தளவுக்கு வலிகள் நிறைந்த வாழ்க்கை அவர்களுடையது.
"தங்க இடமும் தங்கக் காசும் இலவசமாம், தேயிலைக்கடியில் மாசியும் தேங்காயும் கிடைக்குமாம்.." என நம்பிவந்து ஏமாற்றப்பட்டவர்கள் என நாட்டார் பாடல்களில் கேலிக்கையாகக் கூறுவதுண்டு.

அப்படியென்றால் இவர்களின் ஆரம்பமே ஏமாற்றம் என்பது தெளிவாகிறது. இதன் தொடக்கமோ தெரியவில்லை அவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக யாரோ ஒருவரால் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

வறுமை என்னும் தீயின் அணல் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்க அரசியல் இலாபம் தேடும் சில தொழிற்சங்கங்களும் அரசியல்தலைவர்களும் மாற்றுப்புறத்தில் குளிர்காய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

எந்தவொரு தொழிற்சங்கமாயினும் சரி அரசியல் கட்சியாயினும் சரி மக்களின் நன்மைகருதி ஆரம்பிக்கப்பட்டதென்றால், அது இறுதிவரை நிறைவேற்றப்பட வேண்டும். தாமே ஒட்டுமொத்த மலையக மக்களின் பிரதிநிதிகள், சேவைக்கு முன்னுதாரணமானவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் தமது வாழ்நாள் காலத்தில் பேச்சில்போன்று செயலிலும் தீரத்தை காட்டுவார்களாயின் வரலாற்றில் அவர்களுடைய பெயர் நிச்சயமாக எழுதப்படும்.

ஆனால் அதற்கு மாறான சம்பவங்களே இங்கு நடைபெற்று வருகின்றன.
அப்பாவி தமிழர்களின் வாழ்க்கையை திறந்த மேடையாக்கிக்கொள்ள முனையும் பலர் அதில் நாடகமாடி வெளித்தோற்றத்தில் சிறந்தவர்கள் என காட்ட முற்படுகிறார்கள்.

மலையகத்தில் இயங்கும் தொழிற்சங்கங்களுக்கு அவற்றுக்கென்று தனிக்கொள்கை, தனிச்செயற்பாடு, தனிநோக்கங்கள் உண்டு. அந்த நோக்கங்களை அவை எந்தளவுக்கு அடைந்துள்ளன என்பதை சுயமதிப்பீடு செய்தல் அவசியமாகும்.

குறிப்பாக மலையக தொழிலாளர்களின் சம்பள விவகாரத்துக்கு பிற்போக்குடைய கொள்கைகள் பின்பற்றப்பட்டமைக்கான காரணத்தை பொறுப்புக்கூறவேண்டிய அனைத்து தொழிற்சங்கங்களும் பதிலளிக்க முன்வரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

பாதைசெப்பனிடுவதும்,கூரைத் தகடுகள் கொடுப்பதும் மட்டுமே மலையக அபிவிருத்தியும் மக்களுக்கான சேவையும் என்ற பிரதான எண்ணத்தினை அரசியல்தலைவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை தீர்த்துவைப்பதன் மூலம் மலையகத்தில் பலகாலமாக இருந்துவரும் நிரந்தரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.

மலையகத்தில் கல்வியில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. சிறுபராயத்தில் குழந்தைகளுக்கு போஷாக்கான உணவு கிடைக்காததனால் அவர்களின் கல்வி வளர்ச்சியும் குன்றுகிறது. தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படுமானால் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாமல்லவா?

அதேபோன்று 'சிறுவர் தொழிலாளர்கள்" என்ற கொடுமை மலையகமெங்கும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு பெற்றோர் விழிப்புணர்ச்சி கொள்ளாதது முக்கியமான காரணம் எனினும் வறுமையே தூண்டுகோலாக அமைகிறது. இங்கு சம்பள அதிகரிப்பின் தேவை உள்ளதை நம் தலைவர்கள் உணர்வார்களா?

மலையக தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கைச்சாத்திடப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

எனினும் ஐந்து வருடங்கள் கடந்த பின்னரும் அடிப்படைச் சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்கப்படவில்லை.

தொழிலாளர்களின் சம்பளத்தை 105 ரூபாவாக அதிகரித்துள்ளோம் என கூட்டு ஒப்பந்தத்துடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் மார்தட்டிக்கொள்கின்ற போதிலும் அதில் 75 வீத வரவுக் கொடுப்பனவு குறித்த உடன்படிக்கை குறித்து கரிசனை கொள்ளவில்லை என்றே கூறமுடியும்.

அத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்திடம் தாம் முன்வைக்கும் சம்பளக் கோரிக்கை எதுவென்பதை இறுதி வரை மக்களுக்கு தெளிவுபடுத்தாததையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

தொழிலாளர்களின் வரவுக் கொடுப்பனவை விட அடிப்படைச் சம்பளத் தொகையை அதிகரிக்கும் நோக்கம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் இறுதி வரை கருத்து தெரிவிக்கவில்லை.

கூட்டு ஒப்பந்த விதிமுறைகளுக்கு அப்பால் பல்வேறு தோட்டங்களில் அளவுக்கு அதிகமான வேலை நேரம் நிர்வாகத்தினரால் வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஆயினும் இது குறித்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.
அதேபோன்று வெளிப்படைத் தன்மையில்லாமல் பேச்சுவார்த்தைகள் தொடர்பான விடயங்கள் இரகசியமாகப் பேணப்பட்டதையும் இங்கு மறுக்க முடியாது.

நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியிலும் அந்நிய செலாவணி இலாபமீட்டலிலும் காத்திரமான பங்களிப்பை வழங்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்குவதன் மூலமே அவர்களின் எதிர்கால இருப்பினை தக்க வைத்துக்கொள்ள முடியும்.
வேதனையோடு தொடரும் மக்களின் வாழ்க்கையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்தலைவர்கள் வரலாற்றுக்கு கட்டாயம் பதில்சொல்லியாக வேண்டும். அல்லது கறைபடிந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு கறுப்புப் புள்ளியாக அவர்களின் பெயர் என்றும் அவமானத்தை குறித்துக்காட்டிக்கொண்டிருக்கும்.

அரசியல், தொழிற்சங்க பேதங்கள் தேவையில்லை, யார் பெரியவர் என்ற நிலையும் அவசியமில்லை, மக்களுக்காக ஒன்றிணைந்தால் நிச்சயமாக சாதிக்க முடியும். அது எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வாக அமைவதுடன் ஆரோக்கியமான, காத்திரமான எதிர்காலத்துக்கு நல்ல அடித்தளமாகவும் அமையும்.

மக்களால் மக்களுக்காக தெரிவுசெய்யப்பட்ட தலைவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும். வலிமை மிக்க மனித உணர்வுகளை சுயலாபத்துக்காக கிள்ளிக் கொலைசெய்யாது அரசியலின் உண்மையான சேவையை வழங்க முன்வருதலே காலத்தின் தேவையாகும்.

-இராமானுஜம் நிர்ஷன்

Monday, January 21, 2013

நுவரெலியாவில் தமிழரின் சனத்தொகை 11 வீதத்தால் உயர்வு: சிங்களவரின் சனத்தொகையில் வீழ்ச்சி





நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மக்களின் சனத்தொகை 11 வீதத்தால் உயர்வடைந்துள்ளதோடு சிங்கள இனத்தவரின் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இலங்கை குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தினால், 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின் மூலம் மேற்படி தகவல் தெரியவந்துள்ளது.
2007ம் ஆண்டில் சிங்கள் மக்களின் சனத்தொகை 46.2 வீதமாகவும், தமிழ் மக்களின் சனத்தொகை 46.6 ஆகக் காணப்பட்டது.
ஆனால் தற்போது சிங்கள் மக்களின் சனத்தொகை 39.59 வீதமாக காணப்படுவதாகவும், தமிழ் மக்களின் சனத்தொகை 57.69 காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சிங்கள மக்கள் சனத்தொகையில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும்,
காணிப் பிரச்சினை, தொழில் பிரச்சினை, அரசியல் கலாசார ரீதியில் உதாசீனமான நிலைமை போன்ற காரணிகளினாலே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி- வீரகேசரி இணையம்

தேயிலை ஏற்றுமதி நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பு


ITPF என்ற பெயரில் சர்வதேச தேயிலை உற்பத்தி நாடுகளின் அமைப்பொன்று இன்று திங்கட்கிழமை இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளது. கறுப்புத் தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் இலங்கை, இந்தியா, கென்யா ஆகிய முன்னணி நாடுகளும் இந்தோனேஷியா, மலாவி மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளும் இந்த சர்வதேச அமைப்பில் பங்கெடுத்துள்ளன.

சீனாவும் இரானும் அதன் தூதுவர்களை இன்றைய தொடக்கவிழாவுக்கு அனுப்பிவைத்திருந்ததாக இந்த சர்வதேச சங்கத்தை உருவாக்குவதில் முன்னின்ற இலங்கைத் தேயிலைச் சபையின் வர்த்தக ஊக்குவிப்புத்துறை இயக்குநர் ஹசித்த டி அல்விஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

1933 முதல் இப்படியான அமைப்பொன்றை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் 1979 இல் இறுதியாக உருவாக்கப்பட்ட ஐடிபிஏ என்ற அமைப்பு 5 ஆண்டுகளில் தோல்வியடைந்ததாகவும் அவர் கூறினார்.
பின்னர் 2006-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட முயற்சியே 2013-ம் ஆண்டில் செயல்வடிவம் அடைந்திருப்பதாகவும் ஹசித்த டி அல்விஸ் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் தேயிலையின் விலையை நிர்ணயிப்பது, தேயிலை நுகர்வு நாடுகளுடன் தரக்கட்டுப்பாடுகள் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பது மற்றும் உற்பத்திச் செலவைக் குறைப்பது போன்ற நோக்கங்களுக்காகவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

தேயிலைத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம்

இதேவேளை, இலங்கையில் தேயிலைத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமை மிகமோசமாக இருப்பதாக எழுப்பப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் பற்றி வினவியபோது, அந்தக் குற்றச்சாட்டை ஏற்கமுடியாது என்று இலங்கைத் தேயிலைச் சபையின் வர்த்தக ஊக்குவிப்புத்துறை இயக்குநர் ஹசித்த டி அல்விஸ் கூறினார்.
தேயிலைத் தொழிலாளர்களின் அடிப்படை மருத்துவ, சுகாதார, போக்குவரத்து, வீட்டு வசதிகள் மற்றும் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட வசதிகள் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது முன்னேறிய நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இலங்கை தேயிலை சபையின் கருத்துக்கள் தவறானது என்று மூத்த தொழிற்சங்கத் தலைவரும் செங்கொடிச் சங்கத்தின் பொதுச்செயலாளருமான ஓ.ஏ.ராமையா பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார். நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து பணவீக்கமும் அதிகரித்துவருகின்ற சூழ்நிலையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பளத்தொகை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானது என்று அவர் விபரித்தார்.
இந்தியாவைப் போல தோட்டத் தொழிலாளர்களுக்கு மானியவிலையில் அடிப்படை உணவுப் பொருட்கள் இலங்கையில் வழங்கப்படுவது இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல இலங்கையில் இன்று உருவாகியுள்ள தேயிலை ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பின் மூலம் சாதாரண தொழிலாளர்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.

சர்வதேச வர்த்தகர்களுக்கும், உள்நாட்டு இடைத்தரகர்களுக்கும் விற்பனையாளர்களுக்குமே அதன்மூலம் வருமானம் ஈட்டமுடியும் என்றும் அவர்களும் கூடுதல் வருமானம் ஈட்டும்போது அரசாங்கத்துக்கு செலுத்தும் வரியும் அதிகரிக்கும் என்றும் அதனால் தொழிலாளர்களின் நலன்களுக்கு ஏதும் நன்மை ஏற்படாது என்றும் ஓ.ஏ.ராமையா சுட்டிக்காட்டினார்.
நன்றி- பி.பி.சி தமிழ்

Thursday, January 17, 2013

தேயிலை ஏல விற்பனையில் அதியுயர் பெறுமதி பதிவு



கொழும்பில் நடைபெறும் தேயிலை ஏல விற்பனையின் போது, கரோலினா எஸ்டேட்டை சேர்ந்த Pகு1 தரத்திலான தேயிலைக்கு வரலாற்றில் அதியுயர் விற்பனை பெறுமதி பெறப்பட்டுள்ளது. வட்டவளை பெருந்தோட்ட கம்பனியின் மூலம் பராமரிக்கப்படும் கரோலினா எஸ்டேட்டை சேர்ந்த தேயிலை, கடந்த வாரங்களில் இடம்பெற்ற ஏல விற்பனைகளின் போதும் தொடர்ச்சியாக உயர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. 

முன்னர் சாதனை பெறுமதியாக பதிவாகியிருந்த 500ரூபா எனும் பெறுமதியை கடந்து, 510ரூபா எனும் பெறுமதிக்கு ஒருகிலோ தேயிலை விற்பனையாகியிருந்ததாக கம்பனி அறிவித்துள்ளது. இந்த கொள்வனவை ரீஜின்சி டீஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளதுடன், இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் தேயிலை ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி- தமிழ் மிரர்

பெருந்தோட்ட துறையின் வர்த்தக கட்டமைப்பில் மாற்றம் அவசியம்: சுஜீவ கொடகே



பெருந்தோட்ட கம்பனிகளின் மூலம் நிர்வகிக்கப்படும் இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் துறைகளில் ஒன்றான தேயிலை உற்பத்தி துறையில் பின்தொடரப்படும் வர்த்தக கட்டமைப்பில் (டீரளiநௌள ஆழனநட) மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளதாக பல முன்னணி வர்த்தக ஆலோசகர்கள் தமது கருத்துக்களை முன்வைத்த வண்ணமுள்ளனர். எதிர்வரும் மார்ச் மாதத்துடன் தற்போது அமுலிலுள்ள பெருந்தோட்ட கம்பனி நிர்வாகங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகவுள்ள நிலையில், தற்போது பெருந்தோட்ட கம்பனிகள் எதிர்கொண்டுள்ள சவால்கள் நிறைந்த சூழ்நிலையில் மற்றுமொரு சம்பள அதிகரிப்பு என்பதை தம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஓர் இக்கட்டான சூழ்நிலையில் தாம் காணப்படுவதாக பெருந்தோட்ட கம்பனி நிர்வாகங்கள் அறிவித்தவண்ணமுள்ளன. 

இந்நிலையில் இந்த பெருந்தோட்டத்துறையின் நீண்டகால செயற்பாட்டுக்காகவும், பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் இந்த துறையில் தமது ஜீவனோபாயத்தை கொண்டு நடத்தும் மக்களின் நலனுக்காகவும் தற்போது அமுலிலுள்ள பெருந்தோட்ட வர்;த்தக முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய ஓர்; அவசியம் எழுந்துள்ளது. 

எந்த தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், ஊழியர்களுக்கு அதிகளவு வருமானத்தை உறுதி செய்யும் அதேவேளை, கம்பனிகளின் வருமானத்தை உயர்த்தி அவற்றின் உறுதியான செயற்பாட்டை கொண்டு நடத்தும் வகையில் அமைந்த ஒரு வர்த்தக கட்டமைப்பின் தேவை எழுந்துள்ளது. இது போன்றதொரு புதிய கட்டமைப்பு கஹவத்தை பிளான்டேஷன் கம்பனியை சேர்ந்த எந்தான பெருந்தோட்ட பகுதியில் பின்பற்றப்படுகிறது.

இந்த பெருந்தோட்டத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், அப்பகுதிக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்கான வாய்ப்பு எமக்கு கடந்த வாரம் கிட்டியது. இந்த விஜயத்தின் போது, எந்தான பெருந்தோட்ட பகுதியில் கைக்கொள்ளப்படும் புதுவகையான வர்த்தக கட்டமைப்பு குறித்து அறிந்துகொள்ள முடிந்தது. 

எந்தான பெருந்தோட்டம் குறித்து தோட்ட அதிகாரி சுஜீவ கொடகே எமக்கு கருத்து தெரிவிக்கையில், 'எந்தான என்பது கீழ்மட்ட தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் ஒரு பெருந்தோட்டமாகும். எமது பெருந்தோட்டம் சுமார் 400 ஹெக்டயர் பரப்பில் தேயிலை பயிர்ச்செய்கையை கொண்டுள்ளது. எமது பெருந்தோட்டத்தில் காணப்படும் பெரும் சவாலாக ஊழியர்கள் பற்றாக்குறை அமைந்துள்ளது. எமது மொத்த தேயிலை பரப்பில் பணியாற்ற சுமார் 1000 தொழிலாளர்கள் வரை தேவை. ஆயினும் எமது தோட்டத்தில் மொத்தமாக 500 தொழிலாளர்கள் வரையிலேயே காணப்படுகின்றனர். இதன் காரணமாக நாம் எமது தேயிலை பயிரிடக்கூடிய பெருமளவான நிலங்களை கைவிட வேண்டிய ஒரு நிலையை எதிர்நோக்கியிருந்தோம்.

'இந்த நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு எமக்கு ஒரு புதிய சிந்தனை உதித்தது. தோட்டத்தில் தொழிலாளர்கள் பணியாற்றும் நேரம்போக, எஞ்சிய காலப்பகுதியில் அவர்களை கொண்டு, கைவிடப்படவேண்டிய அபாய நிலையை எதிர்நோக்கியிருந்த காணிகளை சுத்தம் செய்து, அவற்றில் தேயிலை செய்கையை மேற்கொள்ள தீர்மானித்தோம். இதற்கு ஊழியர்களும் தமது ஒத்துழைப்பை வழங்க முன்வந்திருந்தனர். எனவே இந்த நடவடிக்கை 2000ஆம் ஆண்டு முதல் மிகவும் சிறிய அளவில் ஆரம்பமானது. காலப்போக்கில் 2002ஆம் ஆண்டளவில் இந்த திட்டத்துக்கு முறையாக பெர்; வழங்கி, ஊழியர்களுக்கும் அனுகூலம் கிடைக்கக்கூடிய விதத்தில் ஒரு சட்ட ரீதியான உடன்படிக்கையை மேற்கொள்ள தீர்மானித்தோம்'. 

'நான்கு பக்கங்களில் நிபந்தனைகள் உள்ளடங்கிய உடன்படிக்கை தயார்ப்படுத்தப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட ஊழிர்;களுடன் சுமார் 6 மாத காலப்பகுதிக்கு அமுலில் இருக்கும் வகையில் (புதுப்பிக்கக்கூடியது) உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது”.

'இந்த திட்டத்துக்கு நாம் 'ஒப்பந்த அடிப்படையிலான கொழுந்து பறித்தல்” என பெயரையும் வழங்கினோம். இந்த திட்டத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் ஊழியர் ஒருவருக்கு சுமார் 1000 செடிகளை கொண்ட தேயிலை காணியை பராமரித்து, கொழுந்து பறிப்பதற்கான அனுமதி வழங்கப்படும். இது 6 மாத காலப்பகுதிக்கு செல்லுபடியாகும். திங்கள் முதல் வெள்ளி வரையிலான நாட்களில் தோட்டத்தில் நியம சம்பள முறைக்கமைய தொழில்புரியும் இந்த ஊழியர்கள், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் தமக்காக ஒதுக்கப்பட்ட காணிகளில் தேயிலை பயிர்ச்செய்கையை மேற்கொண்டு தேயிலை கொழுந்து பறித்து, சந்தை விலையில் எந்தான பெருந்தோட்ட கம்பனிக்கு விற்பனை செய்வர். கம்பனியும் சந்தை விலையில் தேயிலை கொழுந்தை ஊழியர்களிடமிருந்து கொள்வனவு செய்கிறது. ஆயினும் இந்த முழுப்பெறுமதியையும் ஊழியர்களுக்கு செலுத்தாமல், சுமார் 64 வீதமான பெறுமதியை மட்டுமே செலுத்துகிறது. இதர 36 வீத பெறுமதிக்கு கிருமிநாசினிகள், ஆலோசனைகளை வழங்குதல் போன்றவற்றுக்கான செலவீனமாக கம்பனி பெற்றுக்கொள்கிறது. இது குறித்த சகல விடயங்களும் எளிய தமிழ் மொழியில் நிபந்தனை குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன'.

'இவ்வாறு தமக்கென ஒதுக்கப்பட்ட காணியில் பணியாற்றி மாதமொன்றுக்கு சுமார் 900 ௲ 1000 கிலோ தேயிலை கொழுந்து வரையில் ஊழியர்கள் பறிக்கின்றனர். இதன் காரணமாக மாதமொன்றுக்கு தமது சாதாரண சம்பளத்தை விட மேலதிகமாக 8000 ௲ 12000 ரூபா வரை மேலதிக சம்பளமாக பெற்றுக்கொள்கின்றனர்'.

'ஊழியர்களுக்கென ஒப்படைக்கப்பட்ட காணிகளில் வேறு நபர்களையும் வேலைக்கமர்த்தும் சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அச்சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான ஊதியத்தையும் குறிப்பிட்ட ஊழியரே செலுத்த வேண்டியிருக்கும். தமது ஜீவனோபாயத்தை கொண்டு நடத்த இது ஒரு சிறந்த முறையாக அவர்கள் தெரிந்துள்ளனர். எமது மொத்த தேயிலை காணியின் 58 வீதமான பகுதி அதாவது, சுமார் 238 ஹெக்டெயர் இந்த திட்டத்துக்கு அமைய தோட்ட ஊழியர்கள் மத்தியில் பகிர்ந்தளித்துள்ளோம். இதில் சிறந்த அறுவடையை வழங்கும் காணி, சாதாரண அறுவடையை வழங்கும் காணி, குறைந்த அறுவடையை வழங்கும் காணி என அனைத்து விதமான காணிகளும் உள்ளடங்குகின்றன. சுழற்சி முறையில் இவை பகிரப்படுவதால் எந்தவொரு ஊழியரும் பாதகமான சூழ்நிலையை எதிர்நோக்குவதில்லை. அவர்களுக்கு தெரியும், இது அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதி, தாம் அதிகம் பணியாற்றினால், அதிகளவு ஊதியத்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதில் தெளிவாக உள்ளனர்'. 

'இந்த நிலை காரணமாக எமது தோட்டத்தின் உற்பத்தி செலவு 22 வீதத்தால் குறைந்துள்ளது. அத்துடன் உற்பத்தி திறனும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தோட்டமும் கடந்த ஆண்டு சிறந்த நிதி பெறுபேறுகளை வெளிக்காட்டியிருந்தது. இந்த துறையின் தொடர்ந்த செயற்பாட்டுக்கு இது போன்றதொரு கட்டமைப்பின் தேவை நிலவுகிறது' என குறிப்பிட்டார்.

இவ்வாறு தோட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் தமது காணிகளை பணியாற்றும் இரு ஊழியர்களான எம்.பொன்னுசாமி மற்றும் எஸ்.விஜயகுமார் ஆகியோருடன் கருத்துக்களை கேட்ட போது, 'இந்த திட்டத்தின் மூலம் நாம் மாதாந்தம் மேலதிக ஒரு வருமானத்தை திரட்டிக்கொள்ள முடிகிறது. எமக்கு விடுமுறை கிடைக்கும் காலப்பகுதியில் பணியாற்ற மேலதிக வருமானத்தை தேடிக்கொள்ள நாம் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. தோட்டத்திலே வேலை செய்யும் வசதியுள்ளதால், எமக்கு போக்குவரத்து செலவும் இல்லை. இந்த திட்டத்தை நாம் வரவேற்கிறோம்' என்றனர்.

ஆயினும் இதுபோன்றதொரு திட்டம் எதிர்வரும் மார்ச் மாதத்தின் கூட்டு உடன்படிக்கையின் பின்னர், முற்று முழுதாக அமுல்படுத்தப்படுமாயின் அதை எவ்வாறு நீங்கள் பார்க்கிறீர்கள் என இருவரிடமும் கேட்டபோது, 'அது குறித்த தீர்மானத்தை எமது தொழிற்சங்கங்களே மேற்கொள்ள வேண்டும். இந்த திட்டத்தில் எமக்கு அதிகளவு வருமானம் பெற்றுக்கொள்ள முடிந்தாலும், ஊழியர் சேமலாப நிதி கொடுப்பனவு, மரணச்சடங்கு கொடுப்பனவு, மகப்பேற்று கொடுப்பனவு போன்ற இதர கொடுப்பனவுகள் எமக்கு கிடைக்குமா என்பது குறித்த ஒரு நிலை காணப்படுகிறது' என்றனர். 

இதே கேள்வியை நாம் தோட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, 'இந்த நிலை வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், முழு தேயிலை பரப்பையும் இவ்வாறு பகிர்ந்தளிப்பதன் மூலம் ஒரு சில சிக்கல்கள் காணப்படுகின்றன. கொழுந்துகள் கொள்ளையிடப்படல், காணிகளின் தரம் பேணப்படல் போன்ற சிக்கல்கள் நிலவுகின்றன. முறையாக திட்டமிடப்பட்டு, படிப்படியாக இந்த திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்' என்றனர்.

தாழ்நில தேயிலை நில பகுதிகளில் பெரும் சவாலாக ஊழியர் பற்றாக்குறை காணப்படுகிறது. எனவே இதுபோன்றதொரு வர்த்தக கட்டமைப்பு தாழ்நில பகுதிகளுக்கு பொருந்திய போதிலும், உயர் நில தேயிலை நில பகுதிகளான நுவரெலியா, ஹற்றன், மஸ்கெலியா போன்ற பகுதிகளில் முற்றிலும் மாறுபட்ட நிலையே காணப்படுகிறது. எனவே அந்த பகுதிகளுக்கு பொறுத்தமான ஒரு புதிய மாற்று வர்த்தக கட்டமைப்பின் தேவை எழுந்துள்ளது. 

உரிய அதிகாரிகள், இது குறித்து கவனம் செலுத்தி, தேயிலை பெருந்தோட்டத்துறைக்கும், இத்துறைசார்ந்தவர்களுக்கும் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது எம் அவர்.
-ச.சேகர்.
நன்றி- தமிழ்மிரர்

Thursday, January 10, 2013

நான்கு மாவட்டங்களுக்கு 24 மணிநேர அனர்த்த அபாய எச்சரிக்கை!






நிலவும் சீரற்ற காலநிலையால் நான்கு மாவட்டங்களில் உள்ள சில பிரதேசங்களுக்கு 24 மணிநேர அனர்த்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நுவரெலியா, மாத்தளை, கண்டி மற்றும் பதுளை ஆகிய நான்கு மாவட்டங்களில் சில பகுதிகளுக்கே இவ்வாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை, கொத்மலை மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர் பகுதிகளுக்கும் கண்டியில் மெதும்பர, பாதஹேவாகெட்ட, கங்கவடகொறள ஆகிய பகுதிகளுக்கும் 24 மணிநேர அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பதுளையில் மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவு தவிர்ந்த ஏனைய அனைத்து செயலகப் பிரிவுகளுக்கும் 24 மணிநேர அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மாத்தளையில் இரத்தோட்டை, உக்குவெல, மாத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 24 மணிநேர அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tuesday, January 8, 2013

கண்டி, மாத்தளையில் தொழிற்சங்க செயற்பாடுகளை விரிவு படுத்த இ.தொ.கா. நடவடிக்கை

கண்டி,மாத்தளை மாவட்டத்தின் தொழிற்சங்க மற்றும் அரசியல் செயற்பாடுகளை விரிவுபடுத்தி செயற்படுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் கால்நடை வள,கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமாகிய ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கண்டி வை.எம்.பி.ஏ.பிரதான மண்டபத்தில் மாநில கமிட்டிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் மாத்தளை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டு தீர்வுகள் வழங்கப்பட்டன.அரச பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள், கொடுப்பனவுகள் சம்பந்தமாகவும் வருகை தந்திருந்தோர் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

புரியாத புதிர் : மலையகத் தமிழர்களின் சனத்தொகை எண்ணிக்கையில் குறைவடைந்து காணப்படுவது ஏன்?

புரியாத புதிர் : மலையகத் தமிழர்களின் சனத்தொகை எண்ணிக்கையில் குறைவடைந்து காணப்படுவது ஏன்?                                                               என்.சத்தியமூர்த்திஇன்னமும் தெளிவற்ற ஒரு விடயமாக இருப்பது, வன்னிப் பகுதியில் நடந்து முடிந்த நான்காம் ஈழப் போரில், வன்னியில் மீள்குடியேறிய எத்தனை மலையகத் தமிழர்கள் தங்கள் இன்னுயிர்களை இழந்தார்கள் என்பதுதான். அவர்கள் தங்கள் உண்மையான அடையாளங்களை அல்லது இழப்புகளின் எண்ணிக்கையை ஏற்க வெட்கப்பட்டு விலகிச் செல்வதாக தெரிகிறது. ஸ்ரீலங்காத் தமிழர்கள்கூட இதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றுதான் தோன்றுகிறது.
பொய்கள், மட்டமான பொய்கள், இவைதான் புள்ளி விபரங்கள் - என்று ஒரு பழமொழி உண்டு. ஸ்ரீலங்காவில் குடிசன மதிப்பை மேற்கொண்ட அலுவலர்கள், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை தேசிய மக்கள் தொகையை கணக்கிடும் மிகவும் கடினமான பணியை, அதுவும் குறிப்பாக யுத்தத்துக்கு பிந்திய காலப்பகுதியில் மிகவும் சிறப்பாக மேற்கொண்டதுக்காக பாராட்டப்பட வேண்டியவர்கள். ஆனால் இந்த நடவடிக்கையில் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் புள்ளிவிபரங்கள்,பதில்களை விட அதிகம் கேள்விகளையே எழுப்புகின்றன. அல்லது அப்படித் தோற்றமளிக்கிறது.
2011 ம் ஆண்டின் குடிசன மதிப்பு புள்ளிவிபரங்கள் ஒரு காரணத்துக்காக மட்டுமன்றி பல காரணங்களுக்காக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. 1981க்கு பின்னர் முதல் தடவையாக நடத்தப்பட்ட தலைகளின் கணக்கெடுப்பு நாடளாவிய ஒரு விவகாரமாக கருதப்பட்டது, ஏனெனில் போரின் தலையீடுகள் உள்ள வருடங்களில் அதன்விளைவாக ஏற்பட்ட மரணங்கள் மற்றும் உள்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலும் ஏற்பட்ட புலம் பெயர்வுகள், அதற்கான முக்கிய காரணம். இன்று, குறிப்பிட்ட சமூகங்கள் மற்றும் தனித்துவமான இனங்கள்,போன்றவற்றுக்கு அரசாங்கம் நடத்தும் அபிவிருத்தி திட்டங்கள் சம அடிப்படையில் சென்று சேரவில்லை, என்பதை அரசாங்கம் குறித்துக் கொள்ளவேண்டும் என்று சனத்தொகை எண்ணிக்கையும் மற்றும் அதன் வளர்ச்சி விகிதமும் பெருமளவில் உறுதிப்படுத்தியுள்ளன.
போருக்கு பிந்தைய காலத்தில் வாக்களிப்பு பற்றிய கருத்துக் கணிப்புகள், குறிப்பாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பெரும்பான்மை தமிழ் மக்கள் வாழும் வடமாகாணத்தில், பழைய சனத்தொகையின் எண்ணிக்கை மற்றும் வாக்காளர் பட்டியல் என்பனவற்றின் அடிப்படையில் கணக்கிடும்போது, வாக்களித்தவர்களின் விகிதாசாரம் பற்றி திரிபுபட்ட ஒரு எண்ணிக்கையையே வழங்கியுள்ளன. தேர்தல் ஆணையகம் இதிலிருந்து அதன் புள்ளிவிபரங்களை மீளாய்வு செய்ய ஆரம்பித்துள்ளது. 2011 சனத்தொகை மதிப்பீட்டின்படி இப்போது அந்த எண்ணிக்கைகள் மனித சக்திக்கு உட்பட்டு முடிந்தவரை நெருக்கமாக உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளன. எனவே தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதித்துவம்,அதைப்பற்றி பெருமிதமடைவதற்கு  சனத்தொகை தொடர்பான ஒரு பின்னகர்வையும்கூட கொண்டிருக்க வேண்டும். இந்தப் பின்னணியில் அந்த எண்ணிக்கைகள் அது வழங்கியுள்ள விடைகளைவிட அதிக கேள்விகளையே எழுப்பியுள்ளன. அவற்றை கருத்தில் கொள்ளும்போது, அவை ஒரு பாரம்பரியமான 30வருட தலைமுறை இடைவெளியையும், மற்றும் போருக்கு பிந்தைய சனத்தொகை மற்றும் புலம்பெயர்வு என்பனவற்றின் நிலைபேறுகள் பற்றிய குறிகாட்டிகளின் முதல் அறிகுறிகளுடனும் தொடர்புள்ளதாக உள்ளன. அவை சில கதைகளைச் சொல்கின்றன,அவை என்ன சொல்ல விரும்புகின்றன,எதைச் சொல்ல விரும்பவில்லை என்பதை குறித்துக் கொள்ளவேண்டியது அவசியம்.
இதன்படி சனத்தொகை கணக்கெடுப்பை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள ஊடக அறிக்கைகள், சில வெளிப்படுத்தல்களை வெளிக் கொணர்ந்துள்ளன. கடந்த தசாப்தங்கள் மற்றும் வருடங்கள் முழுவதிலும், நாட்டிலுள்ள முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி, சிங்களவர்கள், ஸ்ரீலங்காத் தமிழர்கள், மற்றும் மலையகத் தமிழர்களின் வளர்ச்சி நிலையைக் காட்டிலும் மிகமிக உயர்வாக உள்ளது, என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய போக்கு, பல மத,மற்றும் பல் இன சனத்தொகை கொண்ட நாடுகளில் ஏனைய சமூகத்தவர்களிடையேயும் அடிக்கடி அவதானிக்கப்பட்டு வந்துள்ளது. எனவே ஸ்ரீலங்கா இதற்கு விதிவிலக்கு என்று சொல்ல முடியாது.
வரும் வருடங்களில் மற்றும் தசாப்தங்களில்,கணிப்புகள்; மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம்களின் சனத்தொகை  பல வருடங்களுக்கு அல்லது தசாப்தங்களுக்குப் பிறகு தற்போதுள்ள பெரும்பான்மை சிங்களவர்களின் சனத்தொகையிலும் அதிகமாக இருக்கும் என விவாதிப்பது சாத்தியமான ஒன்றல்ல. இந்தியாவை போன்ற பல்லின சமூகங்கள் உள்ள நாடுகளில் அப்படி நடந்துள்ளன. அது எதையும் கருதவோ சொல்லவோ இல்லை. ஸ்ரீலங்கா அத்தகைய அபத்தத்துக்களில் விழுந்துவிடக் கூடாது, அது அதன் வருங்கால சந்ததியினருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
உத்தியோகபூர்வ புள்ளி விபரங்களின் படி போவதானால் 1981 மற்றும் 2011 க்கு இடைப்பட்ட 30 வருடங்களுக்கு மேலான காலத்தில், நாட்டில் உள்ள முஸ்லிம்களின் சனத்தொகையின் வளர்ச்சி விகிதம் மிகவும் உயர்வான எண்ணிக்கையான 76.4 விகிதமாகும் - 1,046,900 என்கிற எண்ணிக்கையிலிருந்து 1,869,800 ஆக உயர்ந்துள்ளது. இது 38 விகித அதிகரிப்பான சிங்களவர்களின் சனத்தொகையுடன் ஒப்பிடும்போது, அது 10,979,400 என்கிற எண்ணிக்கையிலிருந்து 15,873,800 என்கிற எண்ணிக்கையிலேயே உயாந்துள்ளது. ஒரு தற்செயல் சம்பவமாக, நாட்டிலுள்ள முஸ்லிம்களின் சனத்தொகை வளாச்சிவிகிதம் பெரும்பான்மை சிங்களவர்களின் சனத்தொகை வளர்ச்சி விகிதத்திலும் இரு மடங்காக உள்ளது.
நாட்டின் தேசிய தலைநகரமாகிய கொழும்பை நகரமயப்படுத்தும் எந்த திட்டமும்  முஸ்லிம்களின் சனத்தொகை வளாச்சி விகித்தத்தை பாதித்ததாகத் தெரியவில்லை. இந்த இடத்தில்தான் அரசாங்கம் மற்றும் சிங்கள பௌத்த பெரும்பான்மை அரசியல்வாதிகள், அடிக்கடி உலகத்தின் எந்த நாட்டின் தலைநகரத்திலும் பல்லின சிறுபான்மையினர் எண்ணிக்கையில் அதிக அளவில் உள்ளார்கள் என வாதம் செய்கிறார்கள். அது முற்றாக உண்மையாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை ஆனால் அதில் ஒரு சிறு உண்மையும் இருக்கலாம்.
மற்றவைகளைப் போலவே இதற்கும் பல காரணங்கள் உண்டு. ஸ்ரீலங்கா மற்றும் கொழும்பு ஆகிய விடயங்களில்,கொழும்பானது நாட்டின் பிரதானமான வேலை வழங்கியாக உள்ளது. எனவே இதில் திறமையாக வாதிக்க கூடியதாக உள்ளது, சிங்கள - பௌத்த பெரும்பான்மையினர் தங்கள் உடனடி சுற்றுப்புறங்களில் மிகவும் நன்றாகவே வாழ்கிறார்கள், நாட்டிலுள்ள ஏனைய மூவின சிறுபான்மையினரும் பெருமளவில் செய்து வருவதைப்போன்ற ,சிறந்த கல்வி,மற்றும் தொழில் தேடி உள்ளக புலம்பெயர்வுக்கு ஆளாகவேண்டிய அழுத்தம் அவர்களுக்கு இல்லை என்பதையே.
கடந்த 30 வருடங்களில் கொழும்பில் சனத்தொகை பெருக்கம். முறையே சிங்களவர்கள் 34.3 விகிதமாக உயர்ந்துள்ள அதேவேளை அதற்கு எதிராக முஸ்லிம்களின் சனத்தொகை விகிதம் அதி உயர்ந்ததாக 73.7 விகிதத்தால் உயர்ந்து உள்ளது, ஸ்ரீலங்கா தமிழர்களின் சனத்தொகை அதிகரிப்பு (வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள யுத்த நெருக்கடியின் அவசியம் காரணமாக), 35.5 விகிதத்தால் அதிகரித்து உள்ளது, மற்றும் மலையகத் தமிழர்களின் அல்லது இந்திய வம்சாவளித் தமிழர்களின் சனத்தொகை 37.7 விகிதத்தால் உயர்ந்துள்ளது. இதில் மற்றொரு விடயமாக அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு சம்பந்தமான சனத்தொகை அடிப்படையான விவாதங்களில் எவ்வாறு ஸ்ரீலங்காத் தமிழர்கள் ஒருகாலத்தில் யுத்த வலயமாக இருந்த இடத்தைக்காட்டிலும் அதற்கு வெளியே அதிக அளவில் வாழ்ந்து வருகிறார்கள் எனச் சுட்டிக்காட்டி வருகிறது.
முஸ்லிம்களுக்கம் மற்றும் சிங்களவர்களுக்கும் அப்பால் ஸ்ரீலங்கா தமிழர்களின் சனத்தொகை, மரணங்கள், வெளிநாட்டு புலம் பெயர்தல் உட்பட்ட நிரந்தர இடப்பெயர்வுகள் காரணமாக பெரிதும் பாதிப்படைந்துள்ளது, மற்றவைகளுடன் ஒப்பிடும்போது கணிசமான அளவில் 20.3 விகிதமே அதிகரித்துள்ளது. இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை கணக்கெடுப்பு நடத்தியதில் கடந்த 30 வருடங்களில் 1,886,900 என்பதிலிருந்து 2,270,900 ஆகவே உயர்ந்துள்ளது. சனத்தொகை வளர்ச்சி விகிதத்தை போர் பெரிதும் பாதித்திருக்கலாம், ஆனால் உண்மையான எண்ணிக்கையை அது பெரிதும் பாதிக்கவில்லை, ஸ்ரீலங்கா  தமிழ் கலாச்சாரத்தின் கோட்டையாக திகழ்வதும் மற்றும் சமூகம் சார்ந்த அரசியலை இயக்குவதுமான, யாழ்ப்பாணத்தை பார்த்தால்,அது தொடர்ந்தும் நாட்டில் சனத்தொகை அதிகம் செறிந்து வாழும் இடங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது (1981 ல் கொழும்புக்கு அடுத்து இருந்த இரண்டாம் இடத்தை அது தவற விட்டிருந்த போதும்கூட). போரினால் சீரழிந்த வடமாகாகணத்தில் உள்ள ஏனைய மாவட்டங்கள்,மிகவும் குறைந்த சனத்தொகை அடர்த்தியுள்ளனவற்றில் சிலவாகவே உள்ளன. இதேபோல அவை இன்னமும் பல தசாப்தங்களுக்கு அல்லது வரும் நூற்றாண்டு வரும்வரையில் இருந்துகொண்டே இருக்கும்.
இன்னமும் மலையகத் தமிழர்களைப் பொறுத்தமட்டில் அதில் ஒரு ஆழ்ந்த மர்மம் சூழ்ந்துள்ளது, ஒரு 30 வருடகாலத்தில் அவர்களது சனத்தொகை பெருக்கம் மிகவும் வருந்த தக்க அளவில் மிகவும் சிறிய அளவான 2.8 விகிதத்தாலேயே அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது சகல வழிகளினாலும் போரினால் பாதிக்கப்பட்டு, குறிப்பாக சனப்பெருக்கத்துக்கு காரணமான வயதுள்ள, ஆண்களும் மற்றும் பெண்களும் மரணத்தையும் இடப்பெயர்வையும் (வெளி நாடுகளுக்கும்கூட) சந்தித்த ஸ்ரீலங்கா தமிழர்களைக் காட்டிலும் 10 மடங்கு சிறியது.
இதன்படி மலையகத் தமிழர்களின் சனத்தொகை 812,700 இலிருந்து 842,300 ஆக கடந்த முப்பது வருடங்களில் உயாந்துள்ளது. உண்மையில், இந்த சமூகம் அநேக எண்ணிக்கையிலானவர்களை, 1964ம் ஆண்டு இருநாட்டு பிரதமர்களினதும் பெயர்களினால் மேற்கொள்ளப்பட்ட சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தப்படி மேற்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ குடிபெயர்வு காரணமாக இந்தியாவுக்கு அனுப்பியதன்மூலம் இழந்திருக்கிறது. இன்னும் அநேகமானவாகள் ஸ்ரீலங்கா சுதந்திரம் அடைந்த நாற்பதுகளின் பிற்பகுதியில்  உருவான சட்டத்தின் பிரகாரம் அன்று முதல் பல தசாப்தங்களாக பிரஜா உரிமையற்றவர்களாகவே இருந்து வந்தார்கள். இருந்தாலும் ஜனாதிபதி  சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரின் அரசாங்கங்கள் அந்த நாதியற்றவர்களுக்கு பிரஜா உரிமைகள் வழங்கி மேலும் அனைத்தையும் உள்ளடக்கிய சமூகமாக அவர்களை உள்வாங்கும் முயற்சிகளை ஆரம்பித்து வைத்தன.
ஆனால் எழுப்பப்படும் கேள்வி என்னவென்றால்,  இந்திய தமிழர்களின்( சனத்தொகை படிவத்தில் குறிபிட்டுள்ளபடி) சனத்தொகையின் எண்ணிக்கை, இன்னமும் யதார்த்த கள நிலைமையில் உள்ளதைத்தான் பிரதிபலிக்கிறதா? என்பதுதான். அது அப்படியானால்? அது ஏன்? கேள்விகள் இலகுவாக இருந்தாலும் அவற்றுக்கான பதில்கள் சிக்கலானவை. இங்கு புள்ளிவிபரங்கள் இதற்கான பதிலை வழங்கக்கூடிய நிலையில் இல்லை. இங்கு கல்வி, மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றுக்காக குறிப்பிடத்தக்க அளவிலானவர்கள் குடிபெயர்ந்துள்ளார்கள்,அந்த எண்ணிக்கை நியாயமாகவும் மற்றும் சரியாகவும் பரிசீலிக்கப்பட வேண்டும். இங்கு குடிசன மதிப்பு புள்ளி விபரங்கள் தயாராக உள்ள விடைகளை வழங்க முடியாது, இதற்கு சமூகவியல் கற்கைகள் மட்டுமே உதவ முடியும். அவைகள் பின்பற்றப்பட வேண்டும்.
இல்லையேல் ஐம்பதுகளில் நாடற்ற நிலையிலிருந்த இந்தியத் தமிழர்கள் தற்பொழுது தங்களை ஸ்ரீலங்காத் தமிழர்கள் என்று பதிவு செய்திருக்க வேண்டும் என்று நம்பப்;படுகிறது, ஏனென்றால் தாங்கள,; தங்கள் முன்னோர்;களின் தாய் நாடானதும், ஆனால் தற்போது இங்கு இருக்கும் அந்த நாளைய இளைய தலைமுறையினருக்கு  இன்னமும் ஒரு அன்னிய தேசமாக உள்ள இந்தியாவுக்கு நாடுகடத்தப் படுவதை  தவிர்ப்பதற்காகவும் அவர்கள் அவ்வாறு செய்திருக்கலாம்.
மலையகத் தமிழர்களின் அடையாளமாக பிரதானமாக,  சாதி மற்றும் கல்வித் தரங்கள் என்பன இங்கு செல்வாக்கு செலுத்தி, குறிப்பாக அநேகரை தங்களை வெளிப்படுத்தவைத்து அவர்களை  சமூக உணர்வுகளுடன இணைக்கின்றன. கொழும்பு மற்றும் தமிழ் பகுதிகளில் வழக்கமாக ஸ்ரீலங்காத் தமிழரின் அடையாளங்களை கடன் வாங்க வைக்கின்றன. இதன்படி இது சிறிய எண்ணிக்கையாக இருந்தாலும் ஒரு சிங்கள பௌத்த அடையாளம் கூட மாறியிருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக நம்பப்படுகிறது. திருமணங்கள் மற்றும் குடியேற்றங்கள் கூட குறிப்பாக இறுதியில் கூறப்பட்ட விடயத்துக்கு உதவியாக அல்லது வசதியாக இருந்துள்ளது.
இருந்தாலும் அது இத்துடன் முடிந்துவிடவில்லை. இந்திய தமிழர்களை ஆரம்பத்திலிருந்தே நாடற்றவர்கள் மற்றும் வாக்குரிமையற்றவர்கள் என்ற நிலைக்குத் தள்ள, சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே அரசாங்கங்;கள் திட்டமிட்டு செயற்பட்டதால், சிலர்  தாங்கள் பிரதானமாக வாழ்ந்த மலைப் பிரதேசமான மத்திய மாகாணத்தை விட்டு, ஒரு காலத்தில் சன அடர்த்தி குறைவாக இருந்த வட மாகாணத்தின் வன்னிப் பகுதியில் குடியேறினார்கள். தமிழர் எதிர்ப்பு கலவரங்கள், மலையகத் தமிழர்களையும் விட்டு வைக்காதபடியால், வன்னிப்பகுதியை நோக்கி இடைப்பட்ட தசாப்தங்களில் அவர்கள் பெருமளவில் குடிபெயர அதுவே முக்கிய காரணமாயிற்று.
இன்னமும் தெளிவற்ற ஒரு விடயமாக இருப்பது, வன்னிப் பகுதியில் நடந்து முடிந்த நான்காம் ஈழப் போரில், வன்னியில் மீள்குடியேறிய எத்தனை மலையகத் தமிழர்கள் தங்கள் இன்னுயிர்களை இழந்தார்கள் என்பதுதான். அவர்கள் தங்கள் உண்மையான அடையாளங்களை அல்லது இழப்புகளின் எண்ணிக்கையை ஏற்க வெட்கப்பட்டு விலகிச் செல்வதாக தெரிகிறது. ஸ்ரீலங்காத் தமிழர்கள்கூட இதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றுதான் தோன்றுகிறது. அரசாங்கம் தெரிவிக்கும் எண்ணிக்கையின்படி ஒருவர் செல்வதாக இருந்தால் போரில் இழப்பு பூஜ்ஜியம். தொண்டு நிறுவனங்களின் ஆதாரமற்ற எண்ணிக்கைகளின்படிதான் செல்ல வேண்டும், ஆனால் மொத்த இழப்பை வெளியிடுவதில் அவர்கள் தமக்குள்யேயே ஒரு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கிறார்கள், இனப்பிரிவுகளை வெளிப்படுத்தும் புள்ளிவிபரங்கள் எதுவும் இல்லை.
ஸ்ரீலங்காத் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக மேலும் மேலும் போராட்டம் நடத்தினார்கள், அதன் பெயரால் போராடிய அவர்களில் பலருக்கு அதன் அர்த்தம், வழிகள், அல்லது முதற்கட்டமாக  அந்த உரிமைகளை பயிற்சி செய்து பார்ப்பதற்கான சாத்தியமான தேவைகள், பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ஆனால் இந்தியத் தமிழர்களோ தாங்கள் உயிhவாழ்வதற்காக போராடினார்கள். முதலில் ஒரு மனிதப் பிறவியாகவும், பின்னர் ஒரு ஸ்ரீலங்கா  பிரஜையாகவும் மதிக்கப்பட வேண்டி அவர்கள் போராடினார்கள். இன்னும் சொல்வதானால் அவர்கள் இன்னமும் அதை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதை இன்னமும் கைவிட்டு விடவில்லை, ஆனால் அவர்கள் தங்கள் கல்வி விடயங்களிலோ மற்றும் சமயப்பணிவகையான ஞான மார்க்கங்களிலோ தவறிவிட்டார்கள் என்று அதன் அர்த்தமாகாது. நாடுகளில் மற்றும் சமூகங்களில் ஒரு சிறிய குடும்ப நெறிமுறைகளை பின்பற்றுவதற்கு கல்வி மற்றும் அதன் விளைவாக பெறப்படும் அறிவு என்பவைதான் சக்திமிக்க காரணிகளாக இருப்பின் பின்னர் ஸ்ரீலங்காவில் வாழும் இந்தியத் தமிழரிடம் அவை அனைத்தும் உள்ளன. அல்லது அந்த நெறிமுறைகள்;தான் அரசாங்கங்களை நம்ப வைக்க பயன்படுகின்றனவா. அதனால்தான் அரசாங்கங்கள் தங்கள் மக்கள் அவற்றை நம்பும்படி செய்ய முயல்கின்றனவா. மற்றும் அதைத்தான் 2012 சனத்தொகை கணக்கீடும் நம்மிடம் சொல்கிறது.
ஆனால் மலையகத் தமிழர்களின் கல்வித் தரங்கள் என்று வரும்போது யதார்த்தம் வேறுவிதமானது. இப்போது அவர்களிடையே அநேக அறிவுள்ள இளைஞர்கள், பட்டதாரி ஆண்கள் மற்றும் பெண்கள் என்று பலர் உள்ளனர். அது கருதுவது அல்லது சொல்வது எதுவுமில்லை. ஒரு காலத்தில் ஒற்றைக்கல் சிறபத்தை போல தனியொரு இயக்கமாக அரசியலிலும் மற்றும் சமூகத்திலும் மலையகத் தமிழர்களை பிரதிநிதிப்படுத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், வடக்கிலும் தனது அலுவலகங்களை வைத்திருந்தது, ஆனால் இன்றோ அது ஒரு காலத்தில் இருந்ததைபோல ஒற்றைக் கல் சிற்பமும் அல்ல, தனிப் பிரதிநிதியும் அல்ல.
ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கூட அவர்களையும் அவர்களின் தேவைகளையும் நல்ல திறமையான ஆட்சியமைப்பதற்காக தீவிரமாக பயன்படுத்தவில்லை. நாட்டின் ஏனைய பாகங்களைவிட பயண வசதிகள் மற்றும் வெளியிடங்களுடனான தொடர்பாடல் வசதிகள் குறைவானதுமான, கடினமான மலையகத் தமிழ் பிரதேசங்களில் மாவட்ட செயலக மட்டத்தில் உள்ள சில அலுவலகங்கள் மட்டும்; உள்ளன, அங்கு அவர்களுக்கு சேவையாற்றுவதற்கு மும் மடங்கிலும் அதிகமான தலைவர்கள் உள்ளார்கள். அவர்களின் அரசியல் கூட குறிப்பாக காலம் சென்ற தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் மரணத்துக்குப் பின்னர் தங்களது தனிப்பட்ட  கர்வம்,பணம்,மற்றும் பதவி நிலைகளுக்கு வேண்டி சற்று அதிகமாக நடத்தப்படும் போராட்டமாகவே உள்ளது.
இந்த புள்ளி விபரங்கள் இதன்படி,இன்னமும் எங்களுக்கு ஒரு கதையைத்தான் சொல்கிறது, அவை சொல்லவேண்டியதைவிட அதிகமானவற்றை மறைக்கிறது. அவை மறைப்பதைவிட அதிகமானவற்றை வெளியே சொல்கின்றன.
(இந்த எழுத்தாளர்,புது தில்லியை தலைமையிடமாக கொண்ட பன்முக இந்திய பொது கொள்கை ஆலோசனை மையமான, ஒப்சேவர் றிசேச் பவுண்டேசனின்(ஓ.ஆர்.எப்) பணிப்பாளரும் மற்றும் மூத்த சக ஆராய்ச்சியாளருமாவார்)
நன்றி தேனீ மொழிபெயர்ப்பு:; எஸ்..குமார்