Wednesday, August 27, 2014

தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பெனிக்கு சொந்தமான 4 தோட்ட பிரிவுகளை சேர்ந்த சுமார் 1000ற்கும் அதிகமாக தொழிலாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை முதல் மஸ்கெலியா தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த தோட்டங்களில் கடமையாற்றும், தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கோரிக்கைவிடுத்து, தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தோட்ட அதிகாரி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வந்தவர் எனவும் அவர் சிறந்த முறையில் தனது கடமைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அவரை இடமாற்றம் செய்வதனை ஏற்றுகொள்ள முடியாது என வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டடுள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் மேற்படி தோட்ட அதிகாரியை அவரின் தனிப்பட்ட காரணத்திற்காக இடமாற்றம் செய்துள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர்களுக்கு புதிய குடியிருப்பு

பெருந்­தோட்­டங்­களில் பணி­யாற்றும் தொழி­லா­ளர்­களின் வாழ்க்­கைத்­த­ரத்தை மேம்­ப­டுத்தும் வகையில் ஹற்றன், நுவ­ரெ­லியா, இரத்­தி­ன­புரி, கேகாலை, காலி, கண்டி மற்றும் பதுளை ஆகிய பிர­தே­சங்­களில் புதிய குடி­மனைத் தொகு­தி­களை நிர்­மா­ணிக்கும் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பெருந்­தோட்ட முத­லா­ளிமார் சம்­மே­ளனம் அறி­வித்­துள்­ளது. கால்­நடை மற்றும் கிரா­மிய அபி­வி­ருத்தி அமைச்சர் ஆறு­முகம் தொண்­டமான் மற்றும் அமைச்சின் வழி­காட்­ட­லுக்கு அமை­வாக இந்த திட்டம் பெருந்­தோட்­ட­ம­னி­த­வள அபி­வி­ருத்தி நிதி­யத்தின் மூலம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது.
 
இந்த குடி­ம­னைத்­தொ­கு­திகள் நிர்­மா­ணித்து கைய­ளிக்கும் திட்­டத்­துக்கு அமை­வாக 855 தனி வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளன. இவை இந்த ஆண்டின் இறு­தி­யினுள் பூர்த்­தி­ய­டையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. பெருந்­தோட்ட கம்­ப­னி­களின் மூலம் நிர்­வ­கிக்­கப்­படும் பெருந்­தோட்­டங்­களை சேர்ந்த தொழி­லா­ளர்­க­ளுக்­காக பழங்­கால வீடு­களில் 60 வீத­மா­னவை புதுப்­பிக்­கப்­பட்­டுள்­ளன அல்­லது கூரைகள் வேயப்­பட்டும், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு மெரு­கேற்றம் செய்­யப்­பட்­டுள்­ளன.
 
நவீன வடி­வ­மைப்பில் அமை­ய­வுள்ள இந்த குடி­ம­னைகள், ஒவ்­வொன்றும் 7 பேர்ச் காணியில் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளன. 550 சதுர அடியில் அமை­ய­வுள்ள இந்த மனைகள் ஒவ்­வொன்­றையும் நிர்­மா­ணிக்க 515,000 ரூபா வீதம் செல­வாகும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
 
2 படுக்­கை­ய­றைகள், வசிப்­பிட பகுதி, சமை­ய­லறை, குளி­ய­லறை மற்றும் குழாய் நீர் வச­தி­யுடன் இந்த புதிய வீடுகள் அமை­ய­வுள்­ளன. வீட்­டைச்­சூழ காணப்­படும் 3 பேர்ச் காணியை தோட்டச் செய்­கை­க­ளுக்கு பயன்­ப­டுத்திக் கொள்ள முடியும். மேலும், புதிய வீட்­டுத்­திட்­டத்­துக்கு மேல­தி­க­மாக, தற்­போது காணப்­படும் வீடு­களின் கூரை­களை மாற்றம் செய்­வ­தற்­காக 94 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.
 
இதற்­க­மை­வாக சுமார் 1700 அல­குகள் புதி­தாக வழங்­கப்­ப­ட­வுள்­ளன. இந்த புதிய வீடு­களின் மூலம் அனு­கூலம் பெறுவோர், அவற்றின் உரி­மை­யா­ள­ரா­வார்கள். இந்­த ­கு­டி­ம­னை­களின் நிர்­மா­ணப்­ப­ணி­களின் போதும், நிர்­மாண நட­வ­டிக்­கை­களில் ஓர­ளவு உத­வி­க­ளை­வ­ழங்­கு­வார்கள். நிர்­மா­ணப்­ப­ணி­களின் ஓர­ளவு பங்­க­ளிப்­புக்­காக கடன் வச­தி­களும் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டுள்­ளன.
 
இவை அனைத்தும் சொந்த உரி­மையை உறுதி செய்­வ­தற்கு முக்­கி­ய­பங்­க­ளிப்பை வழங்­கு­வ­தாக அமையும். மேம்­ப­டுத்­தப்­பட்ட சுகா­தாரம் மற்றும் தூய்மை, கல்­வி­செ­யற்­பா­டு­க­ளுக்­கான தனிமை போன்­றன சமூக ரீதி­யான அனு­கூ­லங்­களும் இதன் மூலம்­ கு­டும்­பத்­தா­ருக்கு கிடைக்கும்.
 
இந்த புதிய குடி­ம­னைத்­தொ­கு­திகள் கைய­ளிப்பின் மூலம் பெருந்­தோட்­டத்­து­றையை சேர்ந்த மக்­க­ளின் ­வாழ்க்கை முறையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடியும் என்­பதில் பெருந்­தோட்ட கம்­ப­னி­கள்­ நம்­பிக்­கையை கொண்­டுள்­ளன.
 
இதன் மூலம் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் மேலும் அர்ப்­ப­ணிப்­பு­டன்­ த­மது தொழில்­ந­ட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பார்கள் எனவும் எதிர்­பார்க்­கி­றது. எமது துறையை பொறுத்­த­மட்டில் மனி­த­வ­ளங்கள் என்­பது முது­கெ­லும்­பாக அமைந்­துள்­ளது.
 
வெவ்­வே­று­வீ­ட­மைப்­புத்­திட்­டங்­களின் மூலம் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­களின் வாழ்க்­கைத்­த­ரத்தை மேம்­ப­டுத்­து­வது தொடர்பில் தமது அர்ப்­ப­ணிப்பை கம்­ப­னிகள் வெ­ளிப்­ப­டுத்­தி­யுள்­ளன. பெருந்­தோட்ட கம்­ப­னி­களின் மூலம் வழங்­கப்­படும் சமூக பொறுப்­பு­ணர்வு வாய்ந்த செயற்­பா­டு­களின் மூல­மாக பெருந்­தோட்­டங்­களில் வசிக்கும் மக்­களின் வாழ்க்­கைத்­த­ரத்தில் மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­படும் என்ற நம்­பிக்­கையை நாம் கொண்­டுள்ளோம்.
 
இந்த திட்டம் மற்றும் ஏனைய நிகழ்ச்­சி­களின் மூல­மாக இந்த துறையில் சிறந்த பெறு­பே­று­களை நாம் எதிர்­பார்க்­கிறோம் என பெருந்­தோட்ட முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்தின் தலைவர் ரொஷான் ராஜ­துரை தெரிவித்தார்.
 
இலங்­கையின் பெருந்­தோட்ட கம்­ப­னிகள் எப்­போதும் பெருந்­தோட்ட மக்­களின் வாழ்க்­கைத்­த­ரத்தை மேம்­ப­டுத்­து­வதன் முக்­கி­யத்­துவம் பற்றி தொடர்ந்து வலி­யு­றுத்தி கவனம் செலுத்தி வரு­கின்­றன. 200,000க்கும் அதி­க­மான தொழி­லாளர் சனத்­தொ­கைக்கு வீடுகள் வழங்­கு­வது என்­பதன் மூலம் 1 மில்­லியன் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு அனு­கூ­லங்­களை வழங்­கு­வ­தாக அமைந்­தி­ருக்கும்.
இதில் பெரும்­பா­லா­ன­வர்கள் வெளி­யி­டங்­களில் பணி­யாற்­று­ப­வர்­க­ளாக இருப்­பார்கள். இலங்­கையின் தேசிய பொரு­ளா­தா­ரத்தின் மூன்­றா­வது மிகப்­பெ­ரிய பங்­க­ளிப்­பா­ள­ராக திகழும் தேயி­லைத்­து­றையின் பிர­தான சவா­லாக, வினைத்­திறன் வாய்ந்த தொழி­லா­ளர்­களை பேணு­வது அமைந்­துள்­ளது. இதன் கார­ண­மாக நாம் இதை உணர்ந்து, பெருந்­தோட்­டங்­களில் முன்­னெ­டுத்­துள்ள அபி­வி­ருத்தி திட்­டங்கள் பற்றி சம்பந்தப்பட்ட துறைசார்ந்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என ராஜதுரை மேலும் குறிப்பிட்டார்.