Tuesday, August 30, 2016

அமரர் சௌமி­ய­மூர்த்தி தொண்­டமான் - 103ஆவது ஜனன தினம்

மலை­யக மக்­களின் பெரும் சொத்­தா­கவும், தொழிற்­சங்­கங்­க­ளுக்கு மூலா­தா­ர­மாக விளங்­கி­ய­வரும் ஒடுக்­கப்­பட்ட மக்­களின் நல்­வாழ்­வுக்கும் தன்­னையே அர்ப்­ப­ணித்த இ.தொ.கா ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமி­ய­மூர்த்தி தொண்­டமான் 103ஆவது ஜனன தின­மான இன்று அவரை மலை­ய­கமும், மலை­யக மக்­களும் நினைவு கூரும் நன்­னா­ளாகும்.
அன்னார் தமது 26 வய­தி­னி­லேயே இலங்கை இந்­திய காங்­கி­ர­சிலும், இலங்கை இந்­திய காங்­கிரஸ் தொழி­லாளர் சங்­கத்­திலும் இணைந்து பணி­யாற்றத் தொடங்­கினார். இதைத் தொடர்ந்து அவ­ரது தொழிற்­சங்கப் பய­ணமும் அதன் பின் அர­சியல் வாழ்வும் கரடு முர­டா­கவும், சோத­னை­களும், வேத­னை­களும், உள்­ள­டங்­கி­ய­தா­கவே இருந்­தது.
ஆனால் இவை ஒவ்­வொன்றும் இந்­திய வம்­சா­வளி மக்­களின் தொழிற்­சங்க, சமூக, அர­சியல், பொரு­ளா­தார மறு­ம­லர்ச்­சிக்கும், வெற்­றிக்கும் கார­ணி­களாய் அமைந்­தன. இவைகள் அனைத்தும் சரித்­திரம் படைக்­கப்­பட்­டவை.
முதற்கண் அமரர் தொண்­டமானை நாம் அனை­வரும் மிக மரி­யா­தை­யுடன் ஐயா என்று தான் அழைப்போம். எனவே அவர் பிறந்த தின நினை­வு­களை வெளிப்­ப­டுத்தும் பொழுது அவர் எமது சமூ­கத்­திற்கு செய்து ஈட்­டிய அரும்­பெரும் காரி­யங்­களை உங்­க­ளுடன் பகிர்ந்து கொள்­வதில் மிக்க மகிழ்ச்சி அடை­கின்றேன்.
அமரர் தொண்­டமான் தொழிற்­சங்­க­வா­தி­யாக ஆற்­றிய சேவைகள், போராட்­டங்கள் பல. இவரின் தொழிற்­சங்க நட­வ­டிக்­கை­களே அர­சியல் பிர­வே­சத்­திற்கு ஏது­வாக இருந்­தது. இவை­களில் வர­லாறு காணும் போராட்­ட­மாக உரு­ள­வள்ளி போராட்­ட­மாகும். மற்றும் முல்­லோயா, கந்­த­ஹேன, ஹைபொரஸ்ட், வன­ராஜா, கலா­பொக்க, மொண்­டி­கி­றஸ்டோ, கடி­யேன்­லேன போன்­றவை. தொழி­லா­ளர்­களின் உரி­மை­களை பெறு­வ­தற்­கான நடாத்­திய போராட்­டங்­க­ளாகும்.
அமரர் தோட்­டப்­புற மக்­களின் தொழிற்­சங்க, அர­சியல் போராட்­டங்­க­ளோடு நிற்­க­வில்லை. தோட்­டப்­புறக் கல்­வியை மேம்­ப­டுத்த பல முயற்­சி­களை எடுத்­தி­ருந்தார். அதன் பய­னா­கவே தோட்­டப்­புற பாட­சா­லைகள் அனைத்தும் இன்று அர­சாங்க பாட­சா­லை­க­ளாக ஆகி உள்­ளன. தோட்­டப்­புற சந்­த­திகள் இன்று அர­சாங்க உத்­தி­யோ­கங்­க­ளிலும், மருத்­துவ, பொறி­யியல் ஏனைய துறை­க­ளிலும் நுழைய வாய்ப்பு ஏற்­பட்டு இருக்­கி­றது.
விசே­ட­மாக கூறினால் இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரை நாடற்­றவர் என்ற கூற்­றி­லி­ருந்து விடு­வித்­தவர் அமரர் தொன்­ட­மானே! அவரின் விடா­மு­யற்­சி­யினால் தான். நாடற்­ற­வர்­க­ளுக்கு பிரஜா உரிமை வழங்கும் விசேட சட்டம். 1988 நவம்பர் 9ம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டது. இந்­திய வம்­சா­வ­ளி­யினர் இந்த நாட்டின் பிர­ஜைகள் ஆனார்கள். நாற்­பது வரு­டங்­க­ளாக அர­சியல் இழு­ப­றி­களால் தீர்வு காணாத பாரிய பிரச்­சினை தீர்ந்­தது. இவரின் சாணக்­கிய அணுகு முறை­யி­னாலும் இவர் தலைமை தாங்­கிய இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் பலத்­தி­னாலும், இது சாத்­தி­ய­மா­னது. இது இல ங்கை சரித்­தி­ரத்­திலும், சட்­ட­வாக்­க­த்திலும் தொண்­டமான் செய்த பெரிய சாத­னை­யாக விளங்­கு­கி­றது.
இவர் வெற்றி கண்ட சாத­னைதான் 1989 ஏப்ரல் 26ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட வாக்­கு­ரிமை வழங்­கு­வ­தற்­கான திருத்­தச்­சட்டம். இந்த சட்டம் புதி­தாக பிர­ஜா­வு­ரிமை பெற்ற இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரை தம்மை வாக்­கா­ள­ராக பதிவு செய்த ஏற்­பா­டாகும். இந்த இரண்டு சாத­னை­க­ளினால் தான் இன்று இந்­திய வம்­சா­வளி மக்கள் தலை­நி­மிர்ந்து, ஏனைய சமூ­கத்­த­வர்­க­ளோடு சரி­ச­மமாய் உரிமை பெற்று அர­சியல், பொரு­ளா­தார, சமூக, கல்வி மற்றும் அனைத்து துறை­க­ளிலும் பங்கு கொள்ள வாய்ப்பு பெற்­றி­ருக்­கி­றார்கள். இவர் கல்­வித்­து­றையில் ஈட்­டிய சேவைகள் பல. தோட்டப் பாட­சா­லை­களை அர­சாங்கம் பொறுப்­பேற்று நடத்த அய­ராது பாடு­பட்டார். தோட்டப் பாட­சா­லைகள் அபி­வி­ருத்­தியில் மிக அக்­கறை கொண்டார். சிறி­பாத கல்­வியியல் கல்­லூ­ரியில் தொழி­லா­ளர்­களின் பிள்­ளை­க­ளுக்கு 75 வீதம் இட ஒதுக்­கீட்­டுக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் கோரி வெற்றி பெற்­ற­வரும் அமைச்சர் சௌமி­ய­மூர்த்தி தொண்­ட­மானே. இந்த அங்­கீ­காரம் பெற அமைச்­ச­ரவை விஞ்­ஞா­ப­னத்தை வரை­வ­தற்கு நான் கிரா­மிய கைத்­தொழில், உல்­லா­சத்­துறை அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செய­லா­ள­ராக இருக்கும் பொழுது அமைச்சர் தொண்­ட­மானால் பணிக்­கப்­பட்­டி­ருந்­தமை எனது பாக்­கி­யமாய் கரு­து­கிறேன்.
அன்­னாரின் நாமத்தை எதிர்­கால சந்­த­தி­யினர் எடுத்துச் செல்ல வேண்டும். அவரால் ஸ்தாபிக்­க­ப்பட்ட இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் இன்று ஒரு பொிய ஆல­ம­ரமாய் எமக்கு அர­சியல், பலத்­தையும், சமூக, பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு உந்து சக்­தி­யா­கவும் விளங்­கு­கின்­றது. நக­ர­ச­பைகள், மாந­க­ர­ச­பைகள், பிர­தே­ச­ச­பைகள், மாகா­ண­ச­பைகள், பாரா­ளு­மன்றம் அனைத்­திலும் எமக்கு அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் இருக்­கி­றது. இந்த பலத்தை நாம் இப்­பொ­ழுது விசே­ட­மாக மத்­திய மாகா­ணத்­திலும், ஊவா மாகா­ணத்­திலும், சப்­ப­ர­க­முவ மாகா­ணத்­திலும் நிரூ­பித்­துள்ளோம். இதை நாம் விரி­வு­ப­டுத்தி இந்­திய வம்­சா­வளி மக்கள் வாழும் ஏனைய மாகா­ணங் களிலும் அர­சியல் பலத்தை நிலை­நாட்ட வேண்டும். அமரர் தொண்­டனைத் தொடர்ந்து இன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு தலைமை தாங்கும் அவரின் பேரனாரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான கௌரவ ஆறுமுகன் தொண்டமானின் பணி இந்நாட்டு மக் களுக்கு விசேடமாக இந்திய வம்சாவளி மக்களுக்கு மென்மேலும் போய்ச்சேர அனைவரும் ஒன்றுபடல் வேண்டும். அவ ரின் கைகளைப் பலப்படுத்த வேண்டும்.
ஆகவே, இன்றைய நாளில் அமரர் விட்டுச் சென்ற பணிகளை கௌரவமாக நினைவு கூர்ந்து எமது அஞ்சலியை அவர் பாதங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
கா.மாரிமுத்து
உப தலைவர்