Monday, October 26, 2009

நியமனம் பெற்ற மலையகப் பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க கோரிக்கை

கடந்த 2007 ஆம் ஆண்டு மலையகப் பாடசாலைகளுக்கு ஆசிரியர் நியமனம் பெற்ற 3000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சியின்றி தற்பொழுது பாடசாலைகளில் கடமையாற்றி வருகின்றனர். நியமனம் பெற்ற 3179 ஆசிரியர்களுள் ஒரு சிறு தொகுதியினர் மட்டும் ஆசிரியர் கலாசாலைகளுக்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் மேலும் 3000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சியின்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு வார இறுதி நாட்களில் பயிற்சி வழங்க கல்வி அமைச்சு விண்ணப்பம் கோரிய போதும் சுமார் மூன்று மாதங்கள் கடந்தும் இன்னமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமை குறித்து ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அதேவேளை பயிற்சியற்ற ஆசிரியர்கள் மூலம் முறையான கற்றல் கற்பித்தல் செயலொழுங்கினை மேற்கொள்ள முடியாதிருப்பதாக அதிபர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்வாசிரியர்களுக்கு துரிதமாக பயிற்சி வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிபர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்