Thursday, October 2, 2008

அரசியல் ரீதியாக மலையக மக்களை பலவீனபடுத்தும் முயற்சிக்கு மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்

இந் நாட்டில் ஏற்பட்டுள்ள இன நெருக்கடி, யுத்தம், விலைவாசி உயர்வு என்பன தோட்டத் தொழிலாளர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதித்துள்ளன. நாட்டின் துன்பகரமான வாழ்க்கையை வாழ்பவர்கள் தோட்டத் தொழிலாளர்களே சமூக அபிவிருத்தி சமுதாய அநீதி ஒழிப்பு அமைச்சர் சந்திரசேகரன் கொட்டக்கலை பொரஸ்கீப் தோட்டத்தில் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில் அரசியல் ரீதியாக மலையக மக்களை பலவீனப்படுத்த பல சூழ்ச்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இம் மக்களை தோல்வியுறச் செய்வதன் மூலம் அவர்கள் சார்ந்த கட்சிகளை பலமிழக்கச் செய்ய நினைக்கிறது. சதா காலமும் சம்பள பிரச்சினையைப் பற்றி பேசிக் கொண்டிருக்காமல் அதற்கப்பால் மலைய மக்களின் இருப்பை நிலைநாட்டுகவதற்கு அரசியல் ரீதியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டங்களுக்கு சக்தியையும் தைரியத்தையும் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.