Tuesday, December 15, 2015

தொழிற்சாலையை திறக்கக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நானு­ஓயா எடின்­புரோ தோட்­டத்தில் 300 இற்கு மேற்­பட்ட தொழி­லா­ளர்கள் நேற்றுக் காலை 08 மணி­முதல் 10 மணி வரை தேயிலை தொழிற்­சா­லைக்கு முன்­பாக ஆர்­ப்பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். தோட்­டத்தில் இயங்­கி­வந்த தேயிலைத் தொழிற்­சாலை 03 மாதங்­க­ளுக்கு முன்பு தோட்ட நிர்­வா­கத்தால் இயந்­தி­ரங்­களை திருத்­து­வ­தாக கூறி தற்­கா­லி­க­மாக மூடப்­படும் என தொழி­லா­ளர்­க­ளுக்கு தெரி­விக்கப்பட்டுள்­ளது. ஆனால் 03 மாதங்கள் கடந்த போதி­லும்  ­இ­து­வரை எவ்­வித நட­வ­டிக்கையை எடுக்­க­ப்ப­ட­வில்லை எனவும் தற்­போது தோட்ட நிர்­வாக அதி­கா­ரி­க­ளிடம் தொழி­லா­ளர்கள் கேட்­ட­போது அதற்கு பணம் இல்­லை­யென தெரி­விப்­ப­தாக ஆர்­ப்பாட்­டத்தில் ஈடு­பட்ட தொழி­லா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர். 
 
தோட்­டத்தில் நல்ல வரு­மா­னத்­தினை தரக்­கூ­டிய தேயிலை மலைகள் தோட்ட நிர்­வா­கத்தால் முறை­யாக பரா­ம­ரிக்­கப்­ப­டாமல் கைவிடப்­பட்டுள்­ள­தா­கவும் இத்­தே­யிலை மலை­களை துப்­பு­ரவு செய்­வ­தற்கு கம்­ப­னி­யிடம் பணம் இல்லை. இதன் கார­ண­மா­கவே துப்­பு­ரவு செய்­ய­மு­டி­யாத நிலை இருப்­ப­தாக தோட்ட நிர்­வாகம் தெரி­விப்­ப­தாக தொழி­லா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர். தோட்ட நிர்­வா­கத்தால் தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்க வேண்­டிய சலு­கை வழங்­க­ப்ப­டு­வ­தில்லை. தோட்­டத்தில் உள்ள பொது­மக்­களின் சுகா­தார விட­யங்­களை முறை­யாக செய்து கொடுப்­ப­தில்­லை­யென தெரி­வித்தே இவர்கள் ஆர்­ப்பாட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கின்­றனர். தொழிற்­சா­லை ­உ­ட­ன­டி­யாக திறக்­கப்­ப­டா­விட்டால் தொடர்ச்­சி­யாக போராட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் தொழி­லா­ளர்கள் தெரி­வித்­தனர். இவ் ஆர்ப்­பாட்­டத்தில் அதி­க­மான பெண்கள் கலந்­து­கொண்­டமை ொண்டமை குறிப்பிடத்தக்கது.

சம்பள பேச்சுவார்த்தை எதிர்வரும் 18ம் திகதி வரை ஒத்திவைப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை  தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தலைமையில் கொழும்பிலுள்ள தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று காலை(15) நடைபெற்றது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனைக்கு இறுதித்தீர்வு பெற்றுகொடுக்கும் நோக்கில் இன்று காலை ஆரம்பமான ஒன்பதாம் கட்டப் பேச்சுவார்த்தை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படாமல் எதிர்வரும் 18ம் திகதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

சுமார் 3 மணி நேரமாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்கங்களினால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் முதலாளிமார் சம்மேளனத்தின் தரப்பினர்கள் எவ்வித பதில்களும் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பேச்சுவார்த்தையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், தலைவர் முத்து சிவலிங்கம், உபதலைவர் மாரிமுத்து, ஜோதிகண்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பாக விஜயகுமார், உரூத்திரதீபன், தொழிற்சங்க கூட்டு கமிட்டி சார்பாக இராமநாதன், முருகையா மற்றும் பொருந்தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகள் சார்பாக 22 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.