Wednesday, March 9, 2016

வடக்கின் தேசியவாத வளர்ச்சி மலையகத்தில் தாக்கம்

வட­ப­குதி தேசிய வாதத்தின் வளர்ச்­சி­யா­னது மலை­ய­கத்­திலும் கணி­ச­மானளவு தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது. மலை­யக தேசிய வாதத்­திற்கு இந்­நி­லைமை வித்­திட்­டி­ருக்­கின்­றது. இதனை எவரும் மறுத்­து­விட முடி­யாது என்று பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரம் தெரி­வித்தார்.

மலை­யக தேசி­ய­வா­தத்தின் மேலெ­ழும்­புகை தொடர்பில் கருத்து வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், மலை­யக தேசி­ய­வாதம் குறித்த கருத்­துக்கள் தற்­போது அதி­க­மாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றன. புத்­தி­ஜீ­விகள் அர­சி­யல்­வா­திகள், சிவில் அமைப்­புகள் உள்­ளிட்ட பல தரப்­பி­னரும் மலை­யக தேசி­ய­வாதம் தொடர்பில் தனது கருத்­து­க்களை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர். தமிழ் முற்­போக்கு கூட்­டணி மலை­யக தேசிய வாதம் தொடர்பில் கூடு­த­லான கவனம் செலுத்­தி­வ­ரு­வத­னையும் அறி­யக்­கூ­டி­ய­தாக உள்­ளது. கடந்த காலத்தில் கூட அமரர் பெ.சந்­தி­ர­சே­கரன் மலை­யக மக்கள் முன்­ன­ணியை ஏற்­ப­டுத்தி தேசிய வாதத்தின் அடிப்­ப­டையில் இம்­மக்­களை ஒன்­று­ப­டுத்­து­வ­தனை பெரு நோக்­காகக் கொண்டு செயற்­பட்டார் என்­பதே உண்­மை­யாகும். மலை­ய­கத்தில் தேசி­ய­வா­தத்தை தீவி­ர­மாக அறி­முகம் செய்­தவர் என்ற ரீதியில் அமரர் சந்­தி­ர­சே­க­ரனை குறிப்­பிட்டுக் கூற­மு­டியும். 

வட­ப­குதி தேசிய வாதத்தின் வளர்ச்­சி­யா­னது மலை­ய­கத்­திலும் கூட ஒரு காத்­தி­ர­மான தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்­தி­யது என்­ப­தனை எவரும் மறுத்­து­வி­ட­மு­டி­யாது. மலை­யகம் வட­ப­கு­தியில் இருந்து தொலைவில் இருந்­தாலும் வட­ப­கு­தியில் இடம்­பெற்ற சத்­தி­யாக்­கி­ர­கங்கள் போராட்­டங்கள், அர­சியல் முன்­னெ­டுப்­புகள் என்­ப­வற்றில் மலை­ய­கத்­த­வர்­க­ளுக்கும் பங்­கி­ருக்­கின்­றது. மலை­யக இளை­ஞர்கள் இப்­போ­ராட்­டங்­களில் பங்­கு­கொண்டு இறந்தும் போயுள்­ளனர். 1956,1958,1981,1983 என்று பல்­வேறு கால­கட்­டங்­களில் மலை­யக மக்கள் மீது பல்­வேறு தாக்­கு­தல்கள், கல­வ­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இதற்கு மலை­யக மக்கள் கார­ண­மல்ல. வட­ப­குதி நிலை­மை­களின் எதி­ரொ­லி­யாக தமிழ் மக்­க­ளுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்­கி­லேயே இத்­த­கைய தாக்­கு­தல்­களும் கல­வ­ரங்­களும் ஏவி­வி­டப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும். எனவே வட­ப­கு­தியின் நிலை­மைகள் மலை­ய­கத்தில் எது­வி­த­மான தாக்­கமும் செலுத்­த­வில்லை என்று கூறி­வி­ட­மு­டி­யாது.

மலை­ய­கத்தை பொறுத்­த­வ­ரையில் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் தொழிற்­சங்க ரீதி­யான முன்­னெ­டுப்­புக்­களை மேற்­கொண்­டது. தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்­வினை பெற்­றுக்­கொ­டுத்தல் தொழில் பிணக்­கு­களை தீர்த்து வைத்தல் என்று இ.தொ.கா. பல்­வே­று­பட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தது.

தொழி­லா­ளர்கள் பல்­வேறு உரி­மை­க­ளையும் பெற்­றுக்­கொள்­வ­தற்கு அமரர் தொண்­டமான் உந்­து­சக்­தி­யாகத் திகழ்ந்தார். எனினும் தேசி­ய­வாத தலை­வ­ராக தொண்­டமான் பரி­ண­மிக்­க­வில்லை. எனினும் பின்­வந்த தலை­வர்கள் தேசிய வாதத்தின் ஊடாக மலை­யக மக்­களை ஒன்­று­ப­டுத்த முனைந்­த­தையும் எம்மால் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. கடந்த காலங்களில் திரா­விட முன்­னேற்ற கழ­கத்தின் செல்­வாக்கும் மலை­ய­கத்தில் பிர­தி­ப­லித்­தி­ருந்­தது. அத­னைக்­காட்­டிலும் வட­ப­குதி நிலை­மைகள் அதி­க­ளவில் மலை­ய­கத்தில் பிர­தி­ப­லித்­தன என்பதே உண்மையாகும். இதேவேளை வடபகுதி போராட்டமானது தமிழகத்தில் தமிழ் எழுச்சியை உண்டு பண்ணுவதற்கும் உந்து சக்தியாக அமைந்தது என்பதனை சகலரும் ஏற்றுக்கொள்வர். இலங்கையில் பல அமைப்புகள் ஏற்படவும் இப்போராட்டமே வழிவகுத்தது. இந்த நிலையில் மலையக தேசியவாதம், கிழக்கு தேசிய வாதம் ,முஸ்லிம் தேசிய வாதம் என்று எல்லாவற்றுக்கும் வடபகுதி தேசியவாதமே முக்கிய காரணமாக அமைந்தது என்றார்.