Wednesday, July 28, 2010

தோண்டியெடுக்கப்பட்ட சடலம் கொழும்புக்கு அனுப்பி வைப்பு

கடந்த 12ம் திகதி வைத்தியசாலையில் தூக்கில்தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட வேலணை குடும்பநல மருத்துவ உத்தியோகத்தரான தர்ஷிகாவின் சடலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி இரா. வசந்தசேனன், சாவக்கச்சேரி, ஊhகாவற்துறை யாழ்ப்பாணம், ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, கைதடி கிராம அலுவலர் ஆகியோர் முன்னிலையில் இச் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

இப் பெண்ணின் மரணத்திற்கு இதே வைத்தியசாலையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவரே காரணம் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

லயன் தொகுதி இடிந்து விழுந்ததில் 14 குடும்பங்கள் வெளியேற்றம்


நுவரெலியா, நானுஒயா, டெஸ்போட் தோட்டத்தில் நான்கு லயன் வீட்டுத்தொகுதிக் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதில் ஒரு லயன் வீட்டுத்தொகுதியில் உள்ள 14 வீடுகள் முற்றாக சேதமாகியுள்ளதோடு இவ் வீடுகளில் உள்ள அனைவரும் உடனடியாக அகற்றப்பட்டு தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் நுவரெலியா பிரதேச அனர்த்த நிவாரண முகாமைத்துவத்தின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுடன் உரையாடினர். இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நாளை பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் இடம்பெற இருப்பதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

நன்றி- தமிழ் மிரர்