Saturday, July 4, 2009

சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் இணக்கமில்லை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக தொழிற் சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்குமிடையில் 03-07-2009 முதலாளிமார் சம்மேளன கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் எதுவும் எட்டப்படவில்லை.
இப் பேச்சுவார்த்தையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்,தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியன கலந்துகொண்டன. இப் பேச்சுவார்த்தையின் போது இன்றைய வாழ்க்கை சுமைக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் 500 ரூபா நாட்சம்பளம் வழங்கப்பட வேண்டுமென தொழிற்சங்கங்கள் கூட்டாக முதலாளிமார் சம்மேளனத்திடம் வலியுறுத்தின. எனினும், இதற்கு இணங்க மறுத்த முதலாளிமார் சம்மேளனம், வருடத்திற்கு பன்னிரண்டரை வீத சம்பள அதிகரிப்பு வழங்க முன்வைத்த யோசனையை முழுமையாக நிராகரித்த தொழிற்சங்கங்கள், இது சம்பந்தமாக தத்தமது தொழிற்சங்கங்களோடு கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஒரு பொது கூட்டு நடவடிக்கையொன்றை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

No comments: