Saturday, October 31, 2015

அரசியல்வாதிகளின் அறிக்கைகள் கம்பனிகளுக்கு சாதகமாகிவிட்டன

கம்பனிகள் நட்டத்தில் இயங்கும் போது தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வினை எவ்வாறு வழங்க முடியும் என தொழிற்சங்கவாதிகளும், அரசியல்வாதிகளும் விடுத்த அறிக்கைகள், கருத்துக்கள் கம்பனிகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டதாக பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் பொதுச்செயலாளருமான எஸ் இராமநாதமன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.
 
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் தொழிற்சங்கவாதிகளினதும், அரசியல்வாதிகளினதும் கருத்துக்கள், அறிக்கைகளை முன்னிலைப்படுத்திவரும் கம்பனிகள் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடத்தில் முன்னெப்போதும் இல்லாதவாறு பிடிவாதமான முறையிலும், நியாயமற்ற முறையிலும் நடந்து கொள்கின்றன என்றார்.
 
தேயிலை உற்பத்தியில் இலாபம் நட்டம் என்பது சாதாரணமாக நிகழும் ஒரு நிகழ்வாகும். இதனையே காரணமாக வைத்துக் கொண்டு தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாதென பெருந்தோட்டக் கம்பனிகள் பிடிவாதமாக இருந்து வருவது நியாயமற்ற செயலென கம்பனிகளிடமும், முதலாளிமார் சம்மேளத்திடமும், அரசாங்கத்திடமும் தொடர்ச்சியாக வலியுறுததி வந்த காரணம் நியாயமானது என்பது தற்போது தெளிவாகியுள்ளது.
 
இலங்கையின் தேயிலை உற்பத்தி மற்றும் விற்பனை விலையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தொடர்பாகவும் அதன் எதிர்காலம் குறித்தும் இலங்கை தேயிலை சபையால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இலங்கை தேயிலையின் விலை அதிகரிப்பு காணப்படுகிறது. இலங்கை தேயிலைக்கு எதிர்காலத்தில் சர்வதேச ரீதியில் சிறந்த சந்தை வாய்ப்பும் நல்ல விலையும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுவொரு நல்ல செய்தியாகும். இதன் மூலம் நாம் கோரியுள்ள சம்பள அதிகரிப்பு நியாயமானது என கம்பனிகள் உணர்ந்து எமது கோரிக்கைக்கு இணங்கி வரவேண்டும். அதேசமயம் இச்சம்பள உயர்வினை வழங்கும்படி கம்பனிகளுக்கு அரசாங்கம் முறையான அழுத்தங்களை வழங்க வேண்டும் என்றார்.
 
கம்பனிகள் நட்டம் என்ற காரணத்தையே திரும்ப திரும்ப கூறிக்கொண்டு காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கான பிரதான காரணம் மலையகத்தில் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தொழிற்சங்கத் தலைவர்கள் மத்தியில் ஒற்றுமையில்லை என்பதும் அரசியல் ரீதியில் பிரிந்து நிற்கின்றனர் என்பதையும் கம்பனிகள் நன்கு உணர்ந்துள்ளன.
 
இன்று சில தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பல விடயங்களில் தொழிற்சங்கங்களை உதாசீனப்படுத்தி தன்னிச்சையான போக்கினைக் கடைப்பிடித்து தொழிலாளர்கள் மத்தியில் குழப்பங்களை விளை வித்து வருகின்றன. இது பெருந்தோட்ட தொழிற்றுறையில் தொழிலாளர் நிர்வாக மட்டத்தில் நிலவிவரும் உறவினை சீர்குலைக்கும் செயலாகும் குறிப்பிட்டுள்ளார் இராமநாதன்

பதுளை மாவட்டத்தில் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் குறையும் ஆபத்து

எதிர்வரும் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொகுதிவாரியாக பிரதிநிதிகளை செய்யும் போது பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் சார்பாக தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் தொகை குறைவடைவதற்கான வாய்ப்புக்களே அதிகமாக தெரிவதாக முன்னாள் பிரதியமைச்சரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உப தலைவருமான எம்.சச்சிதானந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
சச்சிதானந்தன் மேலும் இதுகுறித்துத் தெரிவிக்கையில் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறைமூலம் அதிகளவான மலையக மக்களின் பிரதிநிதித்துவம் அனைத்து உள்ளுராட்சி சபைகளிலும் தெரிவாகக்கூடிய நிலைமை காணப்பட்டது. எனினும் புதிதாக எல்லை மீள்நிர்ணம் செய்யப்பட்டு புதிய முறையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அநேகமான தொகுதிகளில் மலையக தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போவதற்கான வாய்ப்புக்களே அதிகமாக உள்ளன.
 
எதிர்காலத்தில் இந்த நிலைமையானது மலையக சுமூகத்தின் இருப்புக்கு பாதகமாக அமைந்துள்ளது என்பதை நாம் உணர வேண்டும். எல்லை மீள் நிர்ணயம் தொடர்பாக மலையக மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து தொகுதி நிர்ணயத்தின் போது மலையக மக்கள் பிரதிநிதித்துவம் பாதுகாக்கும் வகையில் தொகுதிகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Friday, October 30, 2015

எங்களுக்கும் பொது மன்னிப்பு கிடைக்குமா?

இலங்கை சிறைகளிலிருக்கும் தமிழ் கைதிகளின் விடுதலை குறித்து முதன்முறையாக ஆரோக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவர்கள் அனைவரும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழும், பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அரசியல் கைதிகள் என எவரும் கிடையாது என்றும் கூறப்பட்டது. இவர்கள் அனைவரையும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் இப்போது தீவிரம் பெற்றுள்ளன.இதை முன்வைத்து கைதிகளால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதமும் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் மலையகப்பகுதிகளில் பல்வேறு சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலையாகி நீண்டகாலமாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் இளைஞர்களின் நிலை குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24 ஆம் திகதி இடம்பெற்ற பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாம் சம்பவமும்,அதன் பின்னர் மலையகப்பகுதிகளில் ஏற்பட்ட குழப்ப நிலைகள், கலவரங்களால் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்ட இளைஞர்களின் கதை எவருக்கும் தெரியாது மறக்கடிக்கப்பட்டுள்ளது.
 
பிந்துனுவெவ சம்பவம்

பண்டாரவளையிலிருந்து பதுளை செல்லும் மார்க்கத்தில் பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட சுமார் 41 பேர் இருந்தனர். புனர்வாழ்வு பெற்று வந்தாலும் இவர்களுக்கு இங்கு சுதந்திரம் இருந்தது. பண்டாரவளை நகருக்கு சென்று வருவதற்குக்கூட இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அருகில் இருக்கும் கிராமத்தவர்களுடன் இணைந்து சமூக பணிகள் ,சிரமதானப்பணிகள் போன்றவற்றை செய்து வந்த இவர்களின் மீது அந்த பிரதேச பெரும்பான்மை இன மக்கள் நல்லபிமானம் வைத்திருந்தனர். இந்த நிலையில் ஒக்டோபர் 24 ஆம் திகதி காலை இங்கு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் முகாமில் இருந்த 41 தமிழ் கைதிகளில் 27 பேர் வெட்டிச் சிதைக்கப்பட்டனர்.அல்லது இறக்கும்வரை தாக்கப்பட்டுள்ளனர், மற்றும் எஞ்சிய 14 பேர் காயமுற்றதோடு சிலர் படுகாயமடைந்தனர். படுகொலைகள் இடம்பெற்ற காலை நேரம், 2,000 முதல் 3,000 வரையிலான குண்டர்களால் முகாம் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது. ஒரு குறிப்பிட்டளவிலான பொலிஸ் படை தன்னியக்க ஆயுதங்களுடன் நின்றிருந்த போதிலும், பொல்லுகள் மற்றும் கத்திகளுடன் ஆயுதபாணிகளாகியிருந்த குண்டர்கள் முகாமுக்குள் நுழைந்து தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களை தாக்கும்போது எதையும் செய்யவில்லை. இது ஒரு திட்டமிட்ட படுகொலைச்சம்பவம் என பலராலும் கூறப்பட்டது. மலையகமெங்கும் இச்செய்தி காட்டுத்தீ போன்று பரவியது. அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்று 5 நாட்களுக்குப்பிறகு வட்டகொடை நகரில் கலவரம் இடம்பெற்றது.

வட்டகொடை கலவரம்
 
ஒக்டோபர் 29 ஆம் திகதி காலை 10 மணியளவில் வட்டகொடை புகையிரத நிலையத்தில் திரண்ட பிரதேசவாசிகள் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச்செல்லும் உடரட்ட மெனிக்கே புகையிரதம் மற்றும் கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச்செல்லும் பொடிமெனிக்கே புகையிரதங்களை சற்று தாமதித்துச்செல்லும்படியும் இது பிந்துனுவெவ சம்பவத்திற்கு தாம் காட்டும் எதிர்ப்பு என்றும் தெரிவித்தனர். பதுளை செல்லும் இரயில் வண்டி ஒருவாறு சென்று விட்டது. எனினும் கொழும்பு செல்ல வட்டகொடை இரயில் நிலையத்தின் இரண்டாவது தண்டவாளத்தில் (Second Flatform) தரித்து நின்ற உடரட்ட மெனிக்கே இரயிலை தாமதித்துச்செல்ல பிரதேசவாசிகள் எடுத்த முயற்சி கலவரத்தில் முடிந்தது. இரயில் நிலைய பொறுப்பதிகாரி தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்க சிறிது நேரத்தில் அவ்விடத்திற்கு பொலிஸாரும் விசேட அதிரடி படையினரும் வந்து அமைதியாக இருந்த பிரதேசவாசிகள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர். இதில் துரைராஜ் முத்துகுமார் என்ற இளைஞரின் காலில் காயம் ஏற்பட்டது. எல்லோரும் கலைந்து ஓட நின்று கொண்டிருந்த இரயிலின் காட்சிகாண் கூடம் (கடைசி பயணிகள் பெட்டி) பகுதியிலிருந்து தீ கிளம்பியது. இதையடுத்து ஒன்று சேர்ந்த வட்டகொடை மேற்பிரிவு,கீழ்ப்பிரிவு மற்றும் மடக்கும்பரை தோட்ட நகர்ப்புற இளைஞர்கள் இரயிலுக்கு தீ பரவாமல் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். பயணிகளையும் பத்திரமாக இறக்கி மிகுதி பயணிகள் பெட்டிகளை இரயில் எஞ்சின் ஓட்டுனர் மூலம் தனியாக்கினர். எனினும் இரண்டு பயணிகள் பெட்டிகள் தீக்கிரையாகின. வட்டகொடை இரயில் நிலையம் கல்வீச்சுக்குள்ளானது. இரயில் நிலைய பொறுப்பதிகாரியே பொலிஸாருக்கு தவறான தகவல் கொடுத்தார் என பிரதேச வாசிகளால் கூறப்பட்டது. பயணிகள் அனைவரும் தோட்ட வெளிக்கள உத்தியோகத்தரின் வீட்டிலும்,ஏனைய இடங்களிலும் தங்க வைக்கப்பட்டனர். பெரும்பான்மை இனத்தவர்களான அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் நேர்ந்து விடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்த வட்டகொடை இளைஞர்கள் பொலிஸாருடன் இணைந்து அவர்களுக்கு காவல் இருந்தனர். உணவு சமைத்து விநியோகித்தனர். 
 
12 இளைஞர்கள் கைது
 
இந்த சம்பவம் இடம்பெற்று அமைதியான சூழல் திரும்பிக்கொண்டிருந்த வேளை நவம்பர் 8 ஆம் திகதி கலவரத்தை தூண்டி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் வட்டகொடை பிரதேச இளைஞர்கள் 12 பேர் தலவாக்கலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 12 பேரின் விபரங்கள் வருமாறு.

1)சிதம்பரம்பிள்ளை வசீகரன்
2)வடிவேல் சிவஞானம்
3)வடிவேல் சிவலிங்கம்
4)பொன்னையா வடிவேல்
5)கருப்பையா தியாகராஜ்
6) வெள்ளைச்சாமி ராமமூர்த்தி
7) பழனியாண்டி யோகேஸ்வரன்
8) ஆறுமுகன் ராஜேந்திரன்
9)சுப்ரமணியம் ரவி
10) துரைராஜ் முத்துகுமார் (காலில் துப்பாக்கிச்சூடு பட்டவர்)
11) சுப்பிரமணியம் ஜெயரட்ணம் (இறந்து விட்டார்)
12) ராஜி பாலச்சந்திரன் (இறந்து விட்டார்)

கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரின் மீதும் கலவரத்தை தூண்டி விட்டார்கள் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டு பதுளை சிறைச்சாலையில் 3 மாதகாலம் தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் பிணையின் மூலம் வெளியில் வந்த இவர்கள் மீது தற்போது வரை வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த 12 பேரில் சுப்பிரமணியம்ஜெயரட்ணம் மற்றும் ராஜி பாலச்சந்திரன்ஆகியோர்

காலமாகி விட்டனர். மிகுதி 10
 
பேரும் யாருடைய தயவும் துணையும் இன்றி கடந்த 15 வருடங்களாக நீதிமன்றுக்கு அலைந்து திரிந்து சட்டத்தரணிகளுக்கு தமது பணத்தை செலவளித்து, நிம்மதியிழந்து தவித்து வருகின்றனர். இவர்கள் மீதுள்ள வழக்கு 2005ஆம் ஆண்டு கண்டி நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது.

பின்னர் 2009 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் உயர்நீதிமன்ற பிரிவு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அங்கு மாற்றப்பட்டது. அந்த ஆண்டிலிருந்து இது வரை நுவரெலியா நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் திரட்டப்படவில்லை. ஆரம்பத்தில் இவர்கள் பிணையில் வௌியே வர அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர் சந்திரசேகரன் உறுதுணை புரிந்தார். அவர் இறந்த பிறகு எந்த ஒரு அரசியல் பிரமுகர்களும் இந்த அப்பாவி இளைஞர்களை கண்டு கொள்ளவில்லை.

இவர்கள் அங்கம் வகித்த தொழிற்சங்கம் இது வரை இவர்களை ஏறெடுத்தே பார்க்கவில்லை.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை
 
பிந்துனுவெவ சம்பவத்திற்கு காரணமாவர்கள் என கைது செய்யப்பட்ட 41 பேரில் பண்டாரவளை மற்றும் தியத்தலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளடங்கலாக 19 பேர் பொலிஸ் உத்தியோகத்தர்களாவர். விசாரணைகளின் பின்னர் 2003 ஜுலை ௧ ஆம் திகதி இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இரண்டு பெரும்பான்மையின நபர்கள் உட்பட நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது ஏனையோர் விடுதலை செய்யப்பட்டனர். . இதை எதிர்த்து இவர்கள் மேன்முறையீடு செய்தனர். அதன் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் பின் 2005 ஆம் ஆண்டு மே மாதம் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.

எமக்கு எப்போது விடுதலை?
 
வட்டகொடை கலவர சம்பவத்தில் கைதாகி பிணையிலிருக்கும் இந்த 10 பேரும் தமக்கு விடுதலையா அல்லது தண்டனையா அது எப்போது , தீர்ப்பு எப்படியாக அமையும் என காத்திருக்கின்றனர். குறித்த சம்பவத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் நாம் கலவரத்தில் ஈடுபட்டோம் என எவரும் சாட்சி கூறாத நிலையில் சந்தேகத்தின் பேரில் எவரோ எமது பெயர்களை கொடுத்துள்ளனர் எனத்தெரிவிக்கும் இவர்கள் அனைவரும் குறித்த சம்பவத்தின் விளைவாக கைது செய்யப்பட்டமை சிறையிலிருந்தமை தற்போது வழக்குக்கு அலைந்து திரிந்து கொண்டிருப்பதால் மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

சில இளைஞர்கள் தலைநகரில் தொழில் பார்த்தாலும் வழக்கு தினமன்று கட்டாயம் நீதிமன்றில் ஆஜராக வேண்டியிருப்பதால் விடுமுறை பெற்றுக்கொள்வதிலும் சிக்கல்கள் எனத்தெரிவிக்கின்றனர். இந்த வழக்கு விசாரணை காரணமாக பலரும் தம்மை சந்தேகக்கண்கொண்டு பார்ப்பதாகவும் நிரந்தரமான தொழில் ஒன்றை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

சிறையிலிருக்கும் தமிழ் அரசியல்கைதிகளின் நிலை குறித்து இப்போது அனைவரும் பேசுகின்றனர். இதில் அமைச்சர் மனோ கணேசன் போன்றோர் அக்கறையுள்ளவர்கள். அவர் தலைவராக உள்ள தமிழ் முற்போக்குக்கூட்டணி சார்பில் எமது மண்ணிலிருந்து தெரிவாகி தற்போது அமைச்சராக இருக்கும் பி.திகாம்பரம் அவர்களும் மனோ கணேசன் அவர்களும் இது குறித்து பிரதமர் ரணில் மற்றும் ஜனாதிபதி மைத்ரி ஆகியோரிடம் பேசி வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்து அல்லது பொது மன்னிப்பை பெற்றுத்தர ஆவண செய்வார்களா என கோரிக்கை விடுத்துள்ளனர். செய்வார்களா நல்லாட்சியின் தலைவர்கள்? காத்திருக்கிறார்கள் வாக்களித்த மைந்தர்கள்.


நன்றி - சிவலிங்கம் சிவகுமார்

மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கொத்மலை - இரம்பொடை, வெதமுல்ல கயிறுகட்டி தோட்ட மக்கள்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த தோட்டத்தில் 7 உயிர்களைக் காவுகொண்ட மண்சரிவு நிகழ்ந்து ஒரு மாதமும் 10 நாட்களும் நிறைவடைந்துள்ளதுடன், மீரியாபெத்தயில் மண்சரிவு ஏற்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது.

இவற்றையொட்டி அனுதாபம் தெரிவிக்கும் முகமாகவும் மழைக் காலங்களில் தொடர்ந்தும் அச்சத்துடன் வாழும் தமக்கு, அமைக்கப்படும் வீடமைப்புத் திட்டத்தில் வீடுகள் அமைத்துத் தருமாறும் கோரியே இக்கவனயீர்ப்பு போரட்டத்தை மக்கள் முன்னெடுத்தனர். 

குறித்த வீட்டுத்திட்டத்தில் இத்தோட்டத்தில் வசிக்கும் 120 குடும்பங்களில் 19 குடும்பங்களுக்கு மாத்திமே வீடமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
கொத்மலை, இரம்பொடை வெதமுல்ல கயிறுகட்டி தோட்டத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாரிய மண்சரிவில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Thursday, October 29, 2015

மீரியபெத்தையில் மண்சரிவு ஏற்பட்டு இன்றுடன் ஒருவருடம் நிறைவு


அன்று காலை 7.35 மணி­யி­ருக்கும். ஹல்­த­முல்ல பிர­தேச செய­ல­கத்­துக்குட்­பட்ட மீரி­ய­பெத்த தோட்டம் காலை நேரத்­துக்கே  உரிய பர­ப­ரப்பில் இருந்­தது. பிள்­ளைகள் பாட­சாலை சென்று இருந்­தனர். பெரி­ய­வர்கள் பணிக்கு செல்ல ஆயத்­த­மாக இருந்­தனர். அந்தோ  பரி­தாபம். பாரிய மண்­ச­ரிவு ஒன்று திடீ­ரென ஏற்­பட்டு மீரி­ய­பெத்த என்ற கிரா­மத்­தையே அழித்­தது. பிள்­ளைகள் கதறி அழு­து­கொண்டு ஓடினர். எங்­குமே மரண ஓலங்கள் கேட்­டன.  பலர் மண்ணில் புதை­யுண்­டனர்.   சிலர் கழுத்­து­வரை மண்ணில் புதை­யுண்டு மீட்­கப்­பட்­டனர்.   ஆம் 37 உயிர்­களை இந்த மண்­ச­ரிவு காவு கொண்­ட­துடன் 75 வீடு­களும் கால்­ந­டை­களும் மண்­ணோடு புதைந்து போயின. முழு உல­கத்­தையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கிய அந்த சம்­பவம்  மீரி­ய­பெத்த மண்­ச­ரிவு என்று பதி­வா­கி­யது.  2014 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 29 ஆம் திகதி இடம்­பெற்­றது இந்த அனர்த்தம். 



அர­சியல் பிர­மு­கர்கள், ஏனைய தலை­வர்கள் என பலர் சொகுசு வாக­னங்­களில் தொட­ர­ணி­யாக அவ்­வி­டத்­திற்கு சென்று பார்­வை­யிட்­டனர். பரி­தாபப் பட்­டனர். நலன் விசா­ரித்­தனர். ஆறுதல் கூறினர். ஆணித்­த­ர­மாக வாக்­கு­று­தி­களை அள்ளி வழங்­கினர். ஏட்­டிக்குப் போட்­டி­யாக அடிக்கல் நாட்­டி­னார்கள். ஆனால் அவ்­வி­டத்தில் இருந்து சென்­ற­வர்கள் தான்...  இது­வரை அங்கு மீண்டும் செல்­லவும் இல்லை. கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றவும் இல்லை. ஒன்­றுமே நடந்­தே­றவும் இல்லை. அன்­றைய சோகம் இன்­னமும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.
 
அனர்த்தம் இடம்­பெற்று ஒரு வரு­ட­மா­வ­தற்கு இன்னும் ஐந்து நாட்­களே உள்­ளன. முழு உல­கை­யுமே திரும்­பிப்­பார்க்க வைத்த அந்த இயற்­கையின் பேர­னர்த்தம் பல விட­யங்­களை வெளியில்  கொண்டு வந்­தது.  பதுளை மாவட்­டத்­தி­லுள்ள கொஸ்­லந்தை, ஹல்­தும்­முல்லை, மீரி­ய­பெத்த தேயிலைத் தோட்டத் தொழி­லா­ளர்கள் வசித்து வந்த முழுக் கிரா­மமே  மண்­ணுக்குள் புதை­யுண்டு போனது. 

மீரி­ய­பெத்தை என்ற பெயர் மாத்­தி­ரமே எஞ்­சி­யி­ருக்க அந்த இடமே இருந்­ததற்­கான அறி­கு­றியும் மண்­ச­ரிவு ஏற்­பட்­ட­தற்­கான தன்­மையும் இல்­லாமல் போயுள்­ளது.

ஆனால் மண்­ச­ரிவில் தனது உடன்­பி­றப்­புகள், உட­மைகள், சொந்­தங்­களை இழந்த அந்த உற­வு­களின் சோக வாழ்க்கை,  'முகாம்' என்ற பெயரில் உள்ள 200 வருட பழை­மை­யான நான்கு மாடி­களைக் கொண்ட காற்று உட்­பு­காத பல ஓட்­டை­களைக் கொண்ட தேயிலை தொழிற்­சா­லையில், எட்டு தர பத்­தடி ( 8 X10) அறைக்குள் ஏமாற்றம், துன்­பங்கள், துய­ரங்கள் நிறைந்த  சோகம் நிறைந்­த­தாக    தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.

2004 ஆம் ஆண்டில் ஏற்­பட்ட சுனாமி அனர்த்­தத்­திற்குப் பின்னர், இலங்­கையில் பல  உயிர்­களைக் காவு­கொண்டு பாரிய அழி­வு­களை ஏற்­ப­டுத்­தி­யது இந்த இயற்கை அனர்த்தம். இரத்­தத்தை வியர்­வை­யாக சிந்தி அவர்கள் நேசித்த மண்ணே 37 பேரை உயி­ருடன் விழுங்­கிக்கொண்­டது. 
சிலர் சட­லங்­க­ளா­கவும்   சிலர் சிதைந்த மனித உறுப்­புக்­க­ளா­கவும் மீட்­கப்­பட்­டனர்.  மரண ஓலம் மாத்­தி­ரமே மிஞ்­சி­யது. மீரி­ய­பெத்த மக்­களின் வாழ்வில் விடியல் ஏற்­பட வேண்டும் என்­ப­தற்­காக, குழந்­தைகள், இளை­ஞர்கள், யுவ­திகள் தாய் தந்­தை­யர்கள் என பலரின் ஆத்­மாக்கள் இன்­னமும் மண்­ணுக்குள் புலம்­பி­கொண்­டி­ருக்­கின்ற போதிலும்   இன்­னமும் அவர்­களின் விடிவு கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது.

காலம் மாறி­விட்­டது. ஆனால் அன்று   மீரி­ய­பெத்த மக்­க­ளுக்கு ஏற்­பட்ட துன்ப துயரத்­துக்கு இன்னும் மாற்றம் ஏற்­ப­ட­வில்லை. இந்த உலகம் விசித்­தி­ர­மா­னது.  உலகில் அடிக்­கடி இடம்­பெறும் நிகழ்­வு­களும் விசித்­தி­ர­மா­ன­தா­கவே அமைந்து விடு­கின்­றன. இதுதான் நிய­திபோல் தெரி­கின்­றது. அது­போ­லவே  ஒரு வரு­ட­மா­கியும் இந்த மக்­களின் அடிப்­படை தேவை இன்னும் நிறை­வேற்­றப்­ப­டாமல் உள்­ளது.  மீரி­ய­பெத்த மண்­ச­ரி­வினால் பாதிக்­கப்­பட்ட சுமார் 75 குடும்­பங்­க­ளுக்கும் இது­வரை வீடுகள் நிர்­மா­ணித்து கொடுக்­க­வில்லை என்­பதே இங்கு மிக முக்­கி­ய­மான விட­ய­மாக காணப்­ப­டு­கின்­றது. யாரையும் குறை கூறு­வ­தற்கு நாம் விழைய­வில்லை. ஆனால் அந்த மக்­க­ளுக்கு ஒரு வரு­ட­கா­லத்தில் 75 வீடு­களை நிர்­மா­ணித்து கொடுக்­க­வில்­லையா என்ற கேள்­வியை மட்டும் எழுப்­பு­கின்றோம்.         (முகாமில் 93 குடும்­பங்கள் இருப்­ப­தாக அங்­குள்ள மக்கள் கூறு­கின்­றனர்) 

வீடு­களை இழந்த சுமார் 93 குடும்­பங்கள் 3 மாத­கால பாட­சாலை முகாம் வாழ்க்­கைக்கு பின்னர் மாகந்த தேயிலை தொழிற்­சா­லையில் 53 அறை­களில்  தங்க வைக்­கப்­பட்­டனர்... இன்னும் அங்­கேயே உள்­ளனர். இந்­நி­லையில் அவர்­கள் எதிர்­கொள்­கின்ற துய­ரங்கள் குறித்து ஆராய்­வ­தற்கு நாம் நேர­டி­யா­கவே அந்த தொழிற்­சா­லைக்கு சென்றோம்.


தொழிற்­சா­லைக்கு உட்­பி­ர­வே­சிக்­கும்­போதே  எமக்கு அதிர்ச்­சி­தரும் பல நிகழ்­வு­களை எதிர்­கொண்டோம். தொழிற்­சா­லையின் கீழ் தளத்தில் 53 அறைகள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. 10X8 அடி பரப்­ப­ளவு கொண்ட ஒரு அறையில் எட்டு பேர், ஏழு பேர், ஐந்து பேர் என சொல்­லொணா துய­ரங்­க­ளுடன் வாழ்ந்து வரு­கின்­றனர். ஒரு அறையில் ஒன்­றுக்கு மேற்­பட்ட குடும்­பங்­களும் வாழ்­கின்­றன. முகா­முக்குள் பிர­வே­சித்­ததும் மின்­சார  வெளிச்­சத்­திலும் முகாம் இரு­ளாக காட்­சி­ய­ளித்­ததை உணர்ந்தோம். ஒரு­வேளை அங்கு தங்­கி­யுள்ள மக்­களின் மன வேத­னையால் அந்த மக்­களின் முகங்­களில் காணப்­பட்ட சோக உணர்வு எமக்கு இந்த இருள் மய­மான தோற்­றத்தை காட்­டி­யி­ருக்­கலாம். (10X8)  அறையில் எட்டு பேர் சமைத்து சாப்­பிட்டு படுத்­து­றங்­கு­வது என்­பது சாத்­தி­யமா? 

 

இளைஞர் யுவ­தி­க­ளுடன்  பிள்­ளை­க­ளுடன் புதி­தாக திரு­மணம் முடித்த தம்­ப­தி­க­ளையும் வைத்­து­கொண்டு ஒரு­சில குடும்­பங்கள் எதிர்­கொள்ளும் அசௌ­க­ரி­யங்கள் மிகவும் பரி­தா­ப­மாக இருந்­தன. எங்­க­ளு­டைய வேத­னையும் பிரச்­சி­னையும் எவ­ருக்கும் புரி­ய­வில்­லையே என்ற அந்த மக்கள் ஏக்­கத்­துடன் எம்மை பார்க்­கின்­றனர்.
 
நீங்­க­ளா­வது நாம் படும் வேத­னையை எடுத்து கூறி எமக்கு வீடு கிடைக்க ஆவன செய்­வீர்­களா என அந்த மக்கள் ஒரு­வித எதிர்­பார்ப்பு கலந்த ஏக்­கத்­துடன் எம்­முடன் கருத்து பகி­ரு­கின்­றனர்.
ஒரு இளம் பெண் எட்டு குடும்ப உறுப்­பி­னர்­க­ளுடன் (10X8) அடி பரப்­ப­ளவை கொண்ட அறையில் வாழும் போது எவ்­வாறு அசௌ­­க­ரி­யங்­களை எதிர்­கொள்வார் என்­பது நாம் இந்த கட்­டு­ரையில் எழுதி புரி­ய­வைக்க வேண்­டிய அவ­சியம் இல்லை. அவர்கள் என்ன கூறு­கி­றார்கள் என்று பார்ப்போம். 
 
பெற்­றோரை இழந்த கஜினி 

 

மீரி­ய­பெத்த அனர்த்­தத்தில் தனது தந்­தையும் தாயையும் இழந்த கஜினி தனது உணர்­வு­களை பகிர்­கையில், 
நான் ஒன்­பதாம் வகுப்பு படிக்­கிறேன். மீரி­ய­பெத்த மண்­ச­ரி­வுல அம்மா அப்பா ரெண்டு பேரும் இறந்து போய்ட்­டாங்க. இப்ப நான் தாத்தா பாட்டி கூட தான் இருக்­கிறேன். தம்­பியும் என்­னோட இருக்­கிறான். மாகந்த தெழிற்­சா­லை­யில தான் இருக்­கிறோம். எங்­க­ளுக்கு இன்னும் வீடு கட்டி கொடுக்­கல. வீட்­டுல கஷ்டம்.   அது­னால ஒழுங்கா படிக்க முடி­யல. தாத்தா பாட்­டிக்கு அடிக்­கடி வருத்தம் வரும். நான் தான் சமைக்­கனும். காலை­யில நாலரை  மணிக்கு எழும்பி சமைச்­சிட்டு தான் பாட­சா­லைக்கு போவேன். புது உடுப்­புகள் வாங்­கவும் வழி இல்ல. ஆரம்­பத்­தில நிறைய பேர் உதவி செய்­தாங்க. ஆனால் இப்ப நாங்க ரொம்ப கஷ்டப் படுறோம். எங்­கள வந்து பாக்­கு­ற­வங்க புத்­த­கங்­கள வாங்கி தரு­வாங்க. அர­சாங்கம் கொடுக்கிற கூப்­பன்ல தான் நாங்க வீட்­டுக்கு தேவை­யான பொருட்­கள வாங்­குறோம். சாப்­பாட்­டுக்கும் கஷ்டப்படுறோம். மாதம் ஐயா­யி­ரத்து இரு­நூறு ரூபா­வுக்கு தான் பொருட்கள் கிடைக்கும். அதுல நாங்க நாலு பேரும் சாப்­பு­டனும். நான் என்னா கேக்­கு­றனா எங்­க­ளுக்கு முதல்ல வீடு கட்டி தாங்க. படிக்­கு­ற­துக்கு உதவி செய்­யுங்க. சாப்­பாட்­டுக்கு உதவி செய்­யுங்க என்­கிறார் ஏக்­கங்­க­ளுடன்.. 

அத்­துடன் மீரி­ய­பெத்த அனர்த்தம் ஏற்­பட்­டதை விப­ரித்த கஜினி

மண்­ச­ரிவு நடந்த அன்­னைக்கு நான் வீட்­டுல இருந்தேன். அம்மா அப்­பாவும் வேலைக்கு போக தயா­ரா­னாங்க. தம்­பியும் நானும் அன்­னைக்கு பாட­சாலை போகல. அப்ப மண்­ச­ரிவு வரு­துனு சத்தம் கேட்­டுச்சு. நான் வெளி­யில போய் என்­னானு பாத்தேன். அப்­பறம் வெளியில் இருந்த அம்­மாவ பார்த்து, அம்மா சிலிப்பு வருது வேலைக்கு போகா­திங்­கனு சொன்னேன். அப்ப நான் வெளியில் இருந்த அம்­மாவ கூப்­புட்டேன். . எங்­கட  பிறப்பு சான்­றி­தழை  அம்மா எடுத்­து­கிட்டு இருந்த நேரத்­துல அம்­மாவும் அப்­பாவும் மண்­ணுக்­குள்ள போயிட்­டாங்க. நாங்க ரோட்­டுல இருந்து கத்­துனோம். உடனே   மண்ண தோண்­டி­யி­ருந்தா அப்பா மீட்டு இருக்­கலாம். அப்­பறம் ஏழு நாளைக்கு பிறகு இறந்து போன அப்­பாட முகத்த பார்த்தோம். அப்­புறம் அம்­மாட உடம்ப எடுக்க வேணாம்னு சொல்­லிட்டோம் என்றார் கண்ணீர் மல்க..  
 
கஜி­னியின் சகோ­தரன் 
 
கஜி­னியிள் சகோ­தரன் சுரேஸ் குமார் எம்­முடன் பேசு­கையில் எங்­க­ளுக்கு எந்த உத­வியும் இல்ல. உதவி செய்­யுறம்ணு சொன்­னாங்க. ஆனால் செய்­யல. கஷ்டப்படுறோம் என்று உருக்­க­மாக கூறினார். 

காம­தேவன் என்­பவர் குறிப்­பி­டு­கையில் 
 
இந்த முகாம்ல 93 குடும்­பங்கள் உள்­ளன .  ஆனால் 53  அறை­­களே உள்­ளன.  அவற்றை பிரித்­துக்­கொ­டுத்­துள்­ளனர். அனர்த்தம் ஏற்­பட்ட பின்னர் ஆரம்­பத்­துல  இரா­ணுவம்  சாப்­பாடு சமைச்சு கொடுத்­தார்கள். இப்ப கூப்பன் கிடைக்­கிது.   கூட்­டு­றவு நிலை­யத்­துக்கு  சென்று  பொருட்­கள வாங்­கிறோம். நானும் என்­னோட மனை­வியும் அம்­மாவும்; வீட்­டுல இருக்­கிறோம். மலை­ய­கத்தில் எத்­த­னையோ அர­சி­யல்­வா­திகள் இருக்­காங்க. கொழும்­பி­லி­ருந்து ஊவா வரை  அர­சி­யல்­வா­திகள் இருக்­காங்க. யுத்­தத்தில்   பாதிக்­கப்­பட்ட  மக்­க­ளுக்கும்  அனர்த்­தங்­களில் பாதிக்­கப்­பட்ட  மக்­க­ளுக்கும்  உத­விகள் செய்­யலாம். ஆனால் எங்­களை பொறுத்­த­வரை  மீரி­ய­பெத்த  கிரா­மமே  அழிந்­து­போ­னது. எங்­கள அநா­த­ரவா விட்­டு­விட்­டார்கள்.  எங்­கள மறந்­து­டாங்க. அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எங்கள் மீது கரி­சனை ஏற்­ப­ட­வில்லை.  இதுவே  சகோ­தர இனத்­துக்கு ஏற்­பட்­டி­ருந்தால் இந்த நிலை வந்­தி­ருக்­குமா?  37 உயிர்­களை காவு­கொ­டுத்து இந்த முகாமில் தங்­கி­யி­ருக்­கின்றோம்.  வல்­ல­ரசு நாடு­க­ளினால் வழங்­கப்­பட்ட நிதியில் எங்­க­ளுக்கு  வீடு­களை கட்­டிக்­கொ­டுத்­தி­ருக்­கலாம்.  ஆனால் எங்­களின் பிர­தி­நி­தி­களின் கண்­டு­கொள்­ளாத தன்­மை­யினால் எங்­க­ளுக்கு இன்னும் வீடு கிடைக்­க­வில்லை. உடமை உயிர்­களை  இழந்த குடும்­பங்கள் உள்­ளன.  எங்­க­ளுக்கு 125 அளவில் வீடுகள் தேவை­யாகும். இப்ப  மகல்­தெ­னி­யவில் வீடு கட்­டு­ராங்க.  ஆனால் ஒரு வரு­ட­மா­கியும் வீடு கிடைக்­கல.  கேட்டா  பொருட்கள் வர­லனு சொல்­ராங்க. அண்­மையில் தோட்­டங்­களில் சில புதிய வீடுகள்  நிர்­மா­ணிக்­கப்­பட்டு வழங்­கப்­பட்­டதை கண்டோம்.  பாரா­ளு­மன்றத் தேர்தல் காலத்தில் அர­சி­யல்­வா­திகள்  வந்து பார்த்­தாங்க.   தேர்­த­லுக்கு பின்னர்  எவரும் வர­வில்லை. வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. மலை­யக அர­சி­யல்­வா­திகள் தமி­ழி­னத்­துக்­காக சேவை­யாற்­ற­வேண்டும். பனை மரத்­தி­லி­ருந்து விழுந்­த­வனை மாடு முட்­டி­ய­தைப்­போன்று  அனர்த்தத்­துக்கு உட்­பட்ட எம்மை எல்லா அர­சி­யல்­வா­திகளும் கைவிட்­டுட்­டாங்க என்றார். 
 
வயோ­திபர் வயோ­திபர் ஒருவர் எம்­மிடம் கருத்துப் பகிர்­கையில் 
 
எங்­கட உற­வி­னர்கள் எட்டுப் பேர் மீரி­ய­பெத்த மண்­ச­ரிவில் இறந்­து­பொ­யிட்­டாங்க.   இப்ப நாங்க கஷ்­டப்­ப­டுறோம்.  அர­சாங்கம்  எங்­கள மறந்­தி­ருச்சு.    வீடு  கிடைக்­கா­த­துக்கு காரணம் அர­சாங்­கம்தான்.    900  ரூபா­வுக்கு கூப்பன் தரப்­ப­டு­கின்­றது. 900  ரூபா­வுல  என்ன வாங்­கலாம். இங்க வய­சு­போ­ன­வர்­க­ளுக்கு ரொம்ப கஷ்­டமா இருக்கு. மீன் இறைச்சி சாப்­பிட வழி இல்ல என்றார். 

சரோ­ஜினி என்ற பெண் கருத்து வெளி­யி­டு­கையில் 
 
மண்­ச­ரி­வுல பாதிக்­கப்­பட்டு   ஒரு வரு­ட­மாக இங்க இருக்­கிறோம்.  ஒரு அறையில்  ஆறு பேர் இருக்­கின்றோம்.  கணவர் இல்லை. இங்க ரொம்ப கஷ்­டமா இருக்கு. மழை பெய்­யும்­போது   தண்ணி வரும். பூனா­கல பாட­சா­லையில் 3 மாதங்கள் இருந்தோம். வீடு கட்டி தாறெனு சொன்­னாங்க. ஆனால் இன்னும்  தர­வில்லை.  இப்ப  ஒரு வரு­ட­மா­கப்­போ­குது. இன்னும் முடிவு கிடைக்­கல.  40 வீடு 50 வீடுனு    பல­வாறா  சொல்­ராங்க. எங்­களை  போட்டு வதைக்­கி­றாங்க. நாங்க எங்­கப்போய் நிக்­கி­றது?  55  அறை­களில் 93 குடும்­பங்கள் இருக்­காங்க. ஆனால் இப்ப ஏதொ 75 வீடு கட்­டு­றாங்­களாம்.  சிறிய  அறையில்  பலர் இருக்கோம். 20 வயது   மகன் உள்ளார். மரு­மகள் இருக்­காங்க.  இங்­கேயே  சமைத்து சாப்­பிட்டு  இங்­கேயே தூங்­கிறோம். இந்த மழை­யில  சமைக்க முடி­யுமா?  (எம்மை பார்த்து கேள்­வி­யெ­ழுப்­பு­கிறார்)  இன்னும் வீடு  இல்லை.  வார­வுங்க எல்லாம்  எங்­கள கொழப்­பி­வி­டு­றாங்க.  பைத்­தியம் பிடிச்சி  நோயும் வருது.  யோசிச்சு  நோய் வருது. அர­சாங்கம்  உடனே வீடு கட்டி தரனும். எல்லா அர­சாங்­கமும்  இத சொன்­னாங்க. ஆனால் வீடு கிடைக்­கல.    தய­வு­செய்து வீட்ட தாங்க  என்றார். 

வயோ­திப தாய் ஒருவர் கருத்து பகி­ரு­கையில் 
 
இங்க இந்த முகாம்ல ஒரு அறை­யில எட்டு பேர் தங்­கி­யி­ருக்­குறோம். ஒரு சின்ன ரூம்ல எட்டு பேர் சமைச்சி சாப்­புட்டு வாழ முடி­யுமா. நீங்­களே யோசித்து பாருங்க. எங்க அம்­மா­வுக்கு கண்ணு தெரி­யாது. எங்­க­ளுக்கு உள்ள பிர­தான பிரச்­சின வீடுதான். அத முதல்ல நிறை­வேற்றி தாங்க. வீட்ட கட்டி கொடுத்தா நாங்க மரக்­கறி உண்­டாக்­கி­யா­வது பொழச்­சிக்­குவோம். எங்­க­கிட்ட ஆடு மாடு எல்லாம் அதி­க­மாக இருந்­துச்சு. எல்­லாத்­தையும் இழந்­துட்டோம். எங்­க­ளுக்கு பொருள் காசு என ஒன்றும் வேணாம். வீட்ட மட்டும் கட்டி தாங்க. இப்ப நாங்க எட்டு பேர் ஒரு ரூம்ல வாழ்றோம்.  எட்டு பேருக்கும் கிழ­மைக்கு 1500 ரூபா கூப்பன் கிடைக்­குது. 1500 ரூபா­வுல வாழ முடி­யுமா. சரி­யான மாதிரி கஷ்டம் படுறோம். தம்பி ஒரு ஆள் மட்டும் தான் வேலைக்கு போறாரு. என்னா பண்­ணு­ற­துனு எங்­க­ளுக்கு புரி­யல்ல. வீட கட்டி கொடுத்­து­திட்­டிங்­கனா நாங்க எங்­க­யா­வது போயிட்டு புழச்­சிக்­குவோம் என்­கிறார் சற்று கோபத்­துடன்... 

மாரி­யாத்தா மாரி­யாத்தா என்ற பெண் தனது உள்ள குமுறலை வெளிப்­ப­டுத்­து­கையில், 
 
நாங்க எட்டு பேர் ஒரு ரூம்ல இருக்­குறோம். நான் என்ட மகன் பேர பிள்­ளைக எல்லாம் ஒன்னா தான் இருக்­கிறோம். 1500 ரூபா கூப்பன் கிடைக்­குது. அது எங்­க­ளுக்கு போதாது. சாப்­பாட்­டுக்கு கஸ்டம் படுறோம்.என்­னோட கணவர் மண்­ச­ரி­வுல இறந்­துட்­டாரு. நாங்க எல்­லாரும் கஷ்டம் படுறோம். எப்­ப­டி­யா­வது எங்­க­ளுக்கு வீட்ட தரனும் என்றார்.
 
கோகிலா கோகிலா என்ற பெண் கருத்து வெளி­யி­டு­கையில்,
 
மண்­ச­ரிவு வந்­தப்­பபோ நாங்க எல்லாம் மண்­ணுள்ள இறு­கிட்டோம். கழுத்து வரைக்கும் மண்­ணுக்­குள்ள போயிட்டோம். அப்­புறம் எங்­கள மீட்டு எடுத்து வைத்­தி­ய­சா­லையில் சேத்­தாங்க. நான் உயி­ரோட இருந்­தது அன்­டைக்கு பின்­னேரம் தான் எல்­லாத்­துக்கும் தெரியும். இப்ப நாங்க வீடு இல்­லாம இந்த முகாம்ல இருக்கோம். நாங்க ஒரு அறை­யில  ஐந்து பேர் இருக்­கிறோம். சமைக்­கு­றது சாப்­பு­டு­றது தூங்­கு­றது எல்­லாமே ஒரு ரூம்ல தான் என்றார்.
 
விஜ­ய­கு­மாரி விஜ­ய­கு­மாரி என்ற பெண் குறிப்­பி­டு­கையில், 
 
நாங்க ஏழு பேர் இந்த ரூம்ல இருக்­கிறோம். ஒரு ரூம்ல இருந்து சொல்­லொணா துன்­பங்­கள அனு­ப­விக்­கின்றோம். மழை பெய்தா உள்­ளுக்கு தண்ணி வந்­துரும். இர­வைக்கு தூங்­கவும் முடி­யாது. ரோட்­டுல போற தண்ணி எங்க ரூம்­குள்ள வந்­துரும். என்­னோட கணவர் வேலை செய்­யு­றாரு. நாங்க கூப்பன் நிவா­ர­ணத்­துல தான் வாழுறோம். மண்­ச­ரிவு வந்து ஒரு வரு­ச­மாச்சி. இன்னும் வீடு கிடைக்­கல. என்­னோட கோரிக்கை என்­ன­வென்றால் வீடு இல்­லாம நாங்க படுற கஷ்ட்­டத்த புரிஞ்­சு­கிங்க. எங்­க­ளுக்கு சீக்­கிரம் வீட்ட கட்டி தாங்க. மூன்று புள்­ளைக படிக்­கி­றாங்க. அவர்கள் சுதந்­தி­ர­மாக படிப்­ப­தற்கு வீடு ரொம்ப முக்­கியம். இந்த முகாம் 55 அறைகள் தான்  இருக்­குது. ஆனால் 93 குடும்­பங்கள் உள்­ளன என்றார்  பாரிய எதிர்­பார்ப்­புடன்... 


சாந்தி சாந்தி என்ற யுவதி கருத்து வெளி­யி­டு­கையில், 
 
இங்க ஒரு அறையில் நானும் என்­னோட அம்­மாவும் இருக்­கிறோம்;. எங்க தாத்தா பாட்டி அப்­பாவின் சகோ­தரி மண்­ச­ரி­வுல இறந்து போயிட்­டாங்க. இந்த ஒரு வரு­சமா இப்­படி நாதி­யற்ற வாழ்க்கை வாழ்­கின்றோம். மூன்று மாதத்தில் வீடு கட்டி தாரம் என்று சொன்­னாங்க. ஆனால் இன்னும் கட்டி தரல. உரிய பதிலும் கிடைக்­காம இருக்­குது. இந்த முகாம்ல அதிக நாளா இருக்­கிறோம். ஒவ்­வொரு நாளும் ஒவ்­வொரு வித­மான பிரச்­சி­னைக்கு முகம் கொடுக்­கின்றோம். இப்­படி பல்­வேறு துன்பத் துய­ரங்­களை எதிர்­கொள்­கின்ற போது அந்த மண்­ச­ரி­வுல சிக்கி செத்து போயி­ருக்­க­லா­முனு தோனுது. நாங்க அந்த மண்­ச­ரி­வுல இருந்து மீண்டு வந்­தத நினைச்சு சந்­தோசம் பட முடி­யாம இருக்கு. மண்­ணோட மண்ணா போயி­ருக்­க­லாம்னு தோனுது. காரணம் அந்­த­ள­வுக்கு நாங்க இங்க பிரச்­சி­னை­கள எதிர்­கொள்­கின்றோம்.   எனவே தயவு செய்து பாது­காப்­பான இடத்தில் வீடு­களை கட்டி தாங்க. 
 
சுபாஷினி சுபாஷினி என்ற பெண் கருத்து வெளி­யி­டு­கையில்.
 
நாங்க இங்க ஒரு ரூம்ல என்­னோட மாப்­புள கொழுந்­தனார் நாத்­தனார் மாமியார் என 7 பேர் இருக்­கின்றோம். அதுக்­குள்­ளயே சமைச்சி சாப்­புட்டு தூங்­குறோம். ஒரு அறைக்குள் இருக்கும் போது சரி­யான அசெ­ள­க­ரி­ய­மாக இருக்­குது. தூங்­கு­ற­துக்கு கூட இடம் இல்லை. சில நேரங்­களில் வேறு குடும்­பங்­களின் அறை­களில் போய் தூங்­குவோம். அர­சி­யல்­வா­திகள் வந்­தாங்க போனாங்க ஆனால் ஒன்­றுமே நடக்­கல. கூரையில் ஓட்டை. மழை பெய்யும் போது தண்ணி வருது. தயவு செய்து இங்க நாங்க படுற கஷ்­டத்த அதி­கா­ரிகள் நேர்ல வந்து பாருங்க. அர­சாங்­கத்­துல கிடைக்­கிற கூப்பன் மக­னுக்கு பால்மா வாங்­கு­ற­துக்கே போதாது. அர­சாங்­கத்­து­கிட்ட வீட்ட தான் கேக்­குறோம். மாப்­பிளை வீட்­டுக்கு வந்தா எனக்கு அவ­ருக்கு பக்­கத்­துல போய் கதைக்க கூச்­ச­மாக இருக்­கின்­றது. அந்­த­ள­வுக்கு ஒரு ரூம்­குள்ள நாங்க கஷ்டம் படுறோம். 

இத­னை­ய­டுத்து நாங்கள் மீரி­ய­பெத்­தையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதி­தாக வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­படும் மக்­கள்­தெ­னிய என்ற இடத்­திற்கு சென்றோம். அந்த இடத்தில் 57 வீடுகள் கட்­டு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. அதில் நான்கு வீடுகள் மாத்­திரம் கிட்­ட­தட்ட முழு­மை­யாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருந்­தன. மேலும் நான்கு வீடுகள் பகு­தி­ய­ளவில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருந்தன. எப்­போது தான் வீடு­களை கட்டி இந்த மக்­க­ளுக்கு வழங்­கப்­போ­கின்­றார்கள் என்ற சிந்­த­னை­யுடன் நாங்கள் அங்கு நின்று கொண்­டி­ருந்த போது, வீட்டு திட்­டத்தை நிர்­மா­ணிக்கும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு பொறுப்­பான அதி­காரி கெப்டன் குமார எம்­மிடம் வந்தார்.
 
அவ­ரிடம் பேச்சு கொடுத்தோம்.  கெப்டன் குமார பேசு­கின்றார். 
 
இங்கு 57 வீடு­களை நிர்­மா­ணிக்க திட்­ட­மிட்­டுள்ளோம். வீடு­களை கட்­டு­வ­தற்கு மூலப் பொருட்கள் வந்­து­சேறும் அடிப்­ப­டை­யி­லேயே  நிர்­மாணப் பணி­களை முன்­னெ­டுக்­கின்றோம். நிர்­மாணப் பணியில் 100க்கும்  அதி­க­மான இரா­ணுவ வீரர்கள் ஈடு­பட்­டுள்­ளனர். எமக்கு மூலப்­பொ­ருட்கள் கிடைப்­பதில் தான் தாமதம் ஏற்­பட்­டது. சில மாதங்­களில் 57 வீடு­க­ளையும் நிர்­மா­ணித்து முடிக்­கவே முயற்­சிக்­கிறோம். தற்­போது பொருட்கள் வேக­மாக வந்து கொண்­டி­ருக்­கின்­றன. எனவே விரை­வாக வீடு­களை கட்­டி­கொ­டுக்க முயற்சி செய்­கின்றோம். தற்­போது மூலப்­பொ­ருட்கள் வரு­வதில் தடை இல்லை. தொடர்ச்­சி­யாக மழை பெய்­கி­றது.  அடுத்த மாதத்தில் இதை­விட மழை பெய்ய கூடும் என்­ப­தாலும் வீடு கட்டும் பணியில் தாமதம் ஏற்­ப­டலாம்.   ஆனால் வீடு­களை விரை­வாக  நிர்­மா­ணித்து கொடுப்­பதே எமது நோக்­க­மாகும் என்றார்.  
 
ரெங்­கராஜ் மோகன்  பூனா­கலை பாட­சாலை அதிபர் ரெங்­கராஜ் மோகன் எம்­மிடம் தகவல் வெளி­யி­டு­கையில், 

மீரி­ய­பெத்தயில் பாதிக்­கப்­பட்ட சுமார் 350 பேர் மாகந்த தேயிலை தொழிற்­சா­லையில் கடந்த ஒரு வருட கால­மாக தங்­கி­யுள்­ளனர். அவர்­களில் 53 மாண­வர்கள் எமது பூனா­கலை பாட­சா­லையில் கல்வி கற்­கின்­றனர். குறிப்­பாக மீரி­ய­பெத்த மண்­ச­ரிவு அனர்த்­தத்தில் தாய் தந்தை என இரு­வ­ரையும் இழந்த மூன்று பிள்­ளைகள் எமது பாட­சா­லையில் கல்வி கற்­கின்­றனர். கஜனி, சுரேஸ் குமார், சந்­திரன் ஆகி­யோரே பெற்­றோரை இழந்த நிலையில் தற்­போது மாகந்த தொழிற்­சா­லையில் தனது தாத்தா பாட்­டி­யுடன் வாழ்­கின்­றனர்.

மேலும் பாதிக்­கப்­பட்ட 26 மாண­வர்கள் கொஸ்­லந்த கணேசா தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்­திலும் அம்­பிட்டி கந்த வித்­தி­யா­ல­யத்­திலும் கல்வி பயில்­கின்­றனர். இந்த மாண­வர்­க­ளுக்கு காலை உணவும் மதிய உணவும் பாட­சாலை நிர்­வா­கத்தால் வழங்­கப்­ப­டு­கின்­றது.

இந்த அனைத்து மாண­வர்­க­ளுக்கும் வங்கி கணக்­குகள் ஆரம்­பிக்­கப்­பட்டு அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் மற்றும் நன்­கொ­டை­யா­ளர்­களின் உத­வி­யுடன் கிடைக்­கின்ற நிதி வைப்­பி­லி­டப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக பெற்­றோரை இழந்த பிள்­ளை­களின் வங்கி கணக்­கு­களில் கணி­ச­மான அளவு பணம் வைப்பு செய்­ய­ப்பட்­டுள்­ளது. வடக்கு மற்­றும கிழக்கில் இருந்து வந்த அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் மீரி­ய­பெத்த அனர்த்­தத்தால் பாதிக்­கப்பட் பிள்­ளை­களின் வங்கி கணக்­கு­களில் பணத்தை வைப்பிலிட்டிருந்தன.

அன்று மீரி­ய­பெத்த அனர்த்தம் ஏற்­பட்ட போது அனைத்து மக்­களும் எமது பூனா­கலை பாட­சா­லைக்கு தான் ஓடி வந்­தனர். உண்­மையில் பூனா­கலை மக்கள் அன்று பாரிய உத­வியை மீரி­ய­பெத்த மக்­க­ளுக்கு வழங்­கினர். நான்கு மாதங்கள் நாங்கள் அந்த மக்­களை எமது பாட­சா­லையில் வைத்து காத்தோம் என்றார்.
 
பிர­தேச செய­லா­ளரின் விளக்கம் 
 
மக்­களிள் உள்ள குமு­றல்­களை துன்­ப துய­ரங்­களை ஆதங்­க­ங்க­ளையும் செவி­மெ­டுத்த நாம் இறு­தியில் மீரி­ய­பெத்த கிராம உள் வரு­கின்ற ஹல்­த­முல்ல பிர­தேச செய­லாளர் சிரோமி ஜீவ­மா­லாவை சந்­தித்தோம். மிகவும் சுமூ­க­மான முறையில் அலு­வ­ல­கத்­திற்கு வர­வேற்று எம்­முடன் மீரி­ய­பெத்த வீட்டு திட்டம் தொடர்­பான தற்­போ­தைய நிலை­மையை விப­ரித்தார் சிரோமி ஜீவ­மாலா. 

" மீரி­ய­பெத்த மண்­ச­ரிவு அனர்த்­தத்தில் 63 லயன் அறைகள் 6 தனி வீடுகள், 5 அலு­வ­லக வீடுகள் மற்றும் 5 வர்த்­தக நிலை­யங்கள் என 75 வீடுகள் அழிந்து போயின. இந்த மக்­க­ளுக்கு முதலில் வேறு ஒரு இடத்தில் வீடுகள் நிர்­மா­ணிக்க தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. ஆனால் மக்­க­ளுக்கு அந்த இடத்தில் விருப்பம் இருக்­க­வில்லை.. தற்­போது மகள்­தெ­னிய என்ற இடத்தில் வீடுகள் கட்­டப்­ப­டு­கின்­றன. இரா­ணு­வத்­தினர் நிர்­மாணப் பணி­களை மேற்­கொள்­கின்­றனர். விரைவில் வீடு­களை நிர்­மா­ணித்து கொடுக்­கலாம் என நம்­பு­கின்றோம். இந்த விட­யத்தில் எங்­க­ளது பணி­களை உரிய முறையில் செய்தோம். பொது­வாக இவ்­வாறு அனர்த்­தங்கள் ஏற்­படும் போது அனைத்து தரப்­பி­னரும் எம்மை குறை கூறு­கின்றனர். ஆனால் மீரி­ய­பெத்த கிரா­மத்தை பொறுத்­தவரையில் எனக்கு முன்னர் இருந்த பிர­தேச செய­லாளர்   பல அறி­வு­றுத்­தல்­களை வழங்கி இருந்தார். அதா­வது அந்த மக்­களை அந்த இடங்­களில் இருந்து வெளி­யே­று­மாறும் மாற்று இடங்­களை வழங்கி வீடு­களை நிர்­மா­ணித்­து­கொள்ள கடன் வச­தியும் செய்து கொடுக்­கப்­பட்­டது. ஆனால் துர­திர்ஷ்ட வச­மாக இந்த சம்­பவம் நடந்து விட்­டது.

கேள்வி:  இத்­தனை மாதங்கள் கடந்தும் 75 வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வில்­லையே? "
 
பதில்: அதனை ஏற்­றுக்­கொள்­கின்றோம் என்றார்.
 
தென்­னிந்­தி­யாவில் இருந்து ஏமாற்றி அழைத்து வரப்­பட்ட இந்த அப்­பாவி மக்கள் ஒரு பக்கம் இயற்­கையின் கோரப்­பி­டிக்­குள்ளும் மறு­பக்கம் அதி­க­ரித்த வாழ்க்கை சுமை, குறைந்த வருமானம், வறுமை, நோய்நொடிகள், பாதுகாப்பாற்ற குடியிருப்பு, சொந்த முகவரியற்ற வாழ்க்கை என பேராட்டத்தையே வாழ்க்கையாக கொண்டுள்ளனர்.
அடிமைகளாக அழைத்து வரப்பட்ட இம் மக்கள் பல நூற்றாண்டுகளாக இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திக்காகவும் இவர்களை கண்டுகொள்ளாத அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பதற்காகவும் மாத்திரம் பயன்படுத்தப்படுகின்றார்கள். 
 
இங்கு பல கேள்வி எழுகின்றன? 
 
மிதக்கும் நகரம், அதிவேக பாதை, விமான நிலையம் என  இலங்கையை அலங்கரிப்பதற்கான  வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்   அரசாங்கம் ஓடாய் தேய்ந்து உரமாக்கி தன்னையே அர்ப்பணிக்கும் இம் மக்கள் மீது இன்னமும் கரிசனை கொள்ளாதது ஏன்?  ஒவ்வொரு முறையும் கரிசனை கொள்வதாக  கூறிவிட்டு பின்னர் மறந்துவிடுவது ஏன்?
 
தொழிற்சாலைக்குள் முகாம் என்ற பெயரில் பத்தடி அறைக்குள் இம் மக்கள் அனுபவிக்கும் குறைகள் ஏன் இவர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் இராஜபோக வாழ்க்கை வாழும் அரசியல் வாதிகளுக்கு தென்படவில்லை?.
 
அரசாங்கம் வழங்கும் கூப்பன்களில்  சதொச நிறுவனங்களில் விற்கப்படும் பொருட்கள் ஏனைய கடைகளில் விற்கப்படும் பொருட்களின் சாதாரண விலைகளை  அதிக விலையில் விற்கப்படுவது ஏன்?
 
இவர்கள் வாங்கும் அரிசியில் புழுக்கள் காணப்படுகின்றன. பொருட்கள் தரம் குறைவாக இருக்கின்றன. ஏன்? மண்சரிவு இடம்பெற்று ஒரு வருடம் முடிவடைய உள்ள நிலையில் நான்கு வீடுகள் மாத்திரமே கட்டப்பட்டுள்ளன. இது அரசியல் தலைமைகளுக்கு தெரியுமா? தாமதம் ஏன்?
மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என கூறப்பட்டது. அமைக்கப்படவில்லை ஏன்? பாதுகாப்பான இடங்களை வழங்காமல்,  மண்சரிவு அபாய பகுதியில் இருந்து மக்களை எவ்வாறு வெளியேற்ற முடியும்? அவர்கள் எங்கு போய் தங்குவார்கள்?மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யாதவர்களுக்கு புதிதாக நிர்மாணிக்கும் வீடுகள் வழங்க மாட்டார்களாம். ஏன்? இவற்றை நாம் கேள்வி களாக கேட்டாலும் இவையனைத்தும் எமது கேள்விகள் அல்ல. பாதிக்கப்பட்ட அம் மக்க ளின் கேள்விகளே. இதற்கு யார் பதில் சொல்வார்கள். 

ஒருவேளை இவர்கள் வந்தேறிய குடிகள். பூர்வீக நாடற்றவர்கள். மலையகக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்மொழி பேசும் ஏழைகள். என்பதாலோ ஒரு வருடமாகியும் யாருக்கும் இவர்கள் மீது பரிதாபம் ஏற்படவில்லை என எண்ணத் தோன்றுகின்றது.  எது எவ்வாறு இருப்பினும் விரைவில் இந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுங்கள் என்று நாங்களும்  சம்மந்தப்பட்ட தரப்பினரை கோருகின்றோம். விரைவில் மாற்றத்தைக்கொண்டுவாருங்கள்...  கொண்டுவருவீர்களா? பார்த்துக்கொண்டிருக்கின்றோம்....
 
இந்த முகாமில அதிக நாளா இருக் கிறோம். ஒவ்­வொரு நாளும் ஒவ்­வொரு வித­மான பிரச்­சினைக்கு முகம் கொடுக்­கின்றோம்.இப்படி பல்­வேறு துன்ப துய­ரங்­களை எதிர்­ கொள்­கின்ற போது அந்த மண்­ச­ரி­வுலசிக்கி செத்து போயி­ருக்­க­லா­முனு தோனுது.

பாரா­ளு­மன்றத் தேர்தல் காலத்தில் அர­சி­யல்­வாதிகள் வந்து பார்த்­தாங்க. தேர்­தலுக்கு பின்னர் எவரும் வர­வில்லை. வழங்­கப்பட்டவாக்­கு­று­தி­களும் நிறை­ வேற்­றப்­ப­ட­வில்லை. மலை­யக அர­சி­யல்­வா­திகள் தமிழி­னத்­துக்­காக சேவை ­யாற்­ற­வேண்டும். பனை மரத்­தி­லி­ருந்து விழுந்­த­வனை மாடுமுட்டி­ய­தைப்­ போன்று  அனர்த்தத்­துக்கு உட்­பட்ட எம்மை   எல்லா அர­சியல் ­வா­திகளும் கைவிட்­டுட்டாங்க



நன்றி- வீரகேசரி


Wednesday, October 28, 2015

வெகுவிரைவில் வீடுகளை அமைத்துக் கொடுப்பேன்

மீரி­ய­பெத்தவில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான வீட­மைப்­புத்­ திட்டம் முற்­று­மு­ழு­தாக மந்­த­க­தி­யிலே இடம்பெற்று ­வ­ரு­கின்­றது. இதனைத் துரி­தப்­ப­டுத்தி வெகு­வி­ரைவில் அம் மக்­க­ளுக்­கான வீடு­களை கைய­ளிப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்பேன் என ஊவா மாகாண, தோட்ட உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி அமைச்சர் செந்தில் தொண்­டமான் குறிப்­பிட்டார்.

மாகாண அமைச்­சுக்­களைப் பொறுப்­பேற்ற அமைச்சர் செந்தில் தொண்­டமான் மீரி­ய­பெத்த மண்­ச­ரிவில் பாதிக்­கப்­பட்ட மக்­களை சந்­திக்கும் பொருட்டு அவர்­கள் தங்­கி­யி­ருக்கும் மாக்­கந்தை தேயிலைத் தொழிற்­சா­லைக்கு விஜயம் செய்து அவர்களைச் சந்­தித்து  உரை­யாற்­று­கையில், நாட்டில் ஏற்­பட்­டி­ருந்த அர­சியல் மாற்றத்தினால் எம்மால் சமூக அபி­வி­ருத்திப் பணி­களை முன்­னெ­டுக்க முடி­யாமல் போய்­விட்­டது. அக்­காலம் இருள் சூழ்ந்த கால­மா­கவே காணப்­பட்­டது. ஊவா மாகாண சபை­யிலும் இது­போன்ற நிலை­மையே காணப்­பட்­டது.

மத்­திய அரசில் எமக்கு அர­சியல் பலம் இல்­லாமல் இருந்தால் கூட ஊவா மாகாண சபை எனது பொறுப்பில் இருக்கும் அமைச்­சுக்­களைப் பயன்­ப­டுத்தி தடைப்­பட்­டி­ருந்த சமூகப் பணி­க­ளையும் வீட­மைப்­பி­லி­ருந்து வந்த மந்த கதி­யையும் நிவர்த்தி செய்ய முடியும். எனது முதற் பணி மீரி­ய­பெத்­தவில் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் மக்­க­ளுக்­கான வீட­மைப்புத் திட்­டத்­தினை துரி­த­மாக நிறைவு செய்­வ­தாகும். வெகு­வி­ரைவில் அவ்­வீ­டு­களை எமது மக்­க­ளுக்கு கைய­ளிக்கும் வேலைத்­திட்­டத்­தினை முன்­னெ­டுப்பேன். ஆகவே மக்கள் சோர்ந்து போகாமல் உற்­சா­க­மாக இருக்­கும்­படி கேட்டுக் கொள்­கின்றேன்.

ஊவா மாகா­ணத்தின் பாட­சா­லைகள், தோட்ட வைத்­தி­ய­சா­லைகள் ஆகி­ய­வற்­றுக்­கான பாதை­களை அமைக்கும் வேலைத்­திட்­டத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­வதைப் போன்று ஆகக் கூடிய முன்­னு­ரி­மையை மீரி­யாபெத்த வீட­மைப்புத் திட்டத்திற்கு வழங்குவேன்.

அரசியல் மாற்றங்கள் எதுவும் இடம்பெறாமல் இருந்திருக்குமேயானால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் புதிய வீடுகளை நாம் கையளித்திருப்போம் என்றார்.

மீரியபெத்த அனர்த்தம்-ஒரு வருட காலம் கடந்தும் மனதை விட்டகலாத துயரம்


மீரியபெத்தை பெருந்தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பலியான 37 பேரது ஒரு வருட பூர்த்தி “திவசம்” பூஜை வழிபாடுகள் இன்று 29ம் திகதி பூனாகலை தமிழ் மகா வித்தியாலய ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெறவுள் ளது.

பூனாகலை தமிழ் மகா வித்தியாலய அதிபர் ரெங்கராஜ் மோகனின் ஏற்பாட்டில் இடம் பெறும் ஒருவருட பூர்த்தி சமயக் கிரியை களை, அல்துமுல்லை கருவேற்காடுபதி ஸ்ரீதேவி கருமாரியம்மன் தேவஸ்தான பிரதம குரு பிரம்மஸ்ரீ பாலமூர்த்திஸ்வரக் குருக்கள் ஆகம விதிப்படி நடத்தி வைக்கவுள்ளார்.

அத்துடன் மண்சரிவில் பலியான 37 பேருக்குமான மலர் அஞ்சலி மற்றும் சுடர் ஒளியேற்றல், நெய் விளக்கேற்றல் ஆகியனவும் இடம்பெற்று பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்படும். அதையடுத்து, பாதிக்கப்பட்ட 75 குடும்பங்களைக் கொண்ட 349 பேருக்கும், அன்னதானம் வழங்கப்படும்.

மேலும் அல்துமுல்லை பிரதேச செயலாளர் வை.கே. சிரோமி ஜீவமாலா தலைமையில் ‘பௌத்த பிக்குகளை உள்ளடக்கிய வகையில், பலியான 37 பேருக்கான ஆத்ம சாந்தியை வேண்டி பௌத்த சமய நிகழ்வுகளும், அன்றைய தினம் இடம்பெறவுள்ளன.

பெற்றோர் இருவரும் பலியான நிலையில் கஜனி, சுரேஷ், சந்திரன் உள்ளிட்ட தாய் அல்லது, தகப்பன் இல்லாமலும் மொத்தமாக 97 சிறார்கள் இருந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் மாணவர்களாவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் மக்கள் வங்கி வைப்பீட்டு சேமிப்பு புத்தகங்கள் உள்ளன.

ஐம்பதாயிரம் ரூபா முதல் பல இலட்சம் ரூபா வரையில் வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது. இன்று 29ம் திகதி மக்கள் வங்கி கொஸ்லந்தை கிளையினர் மேற்குறிப்பிட்ட 97 மாணவர்களுக்கும், கற்கை உபகரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கவுள்ளனர்.

இம் மாணவர்களின் 53 பேர் பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் 10 பேர் கொஸ்லந்த ஸ்ரீ கணேஷா தமிழ் வித்தியாலயத்திலும் 18 பேர் அம்பிட்டிகந்த தமிழ் வித்தியாலயத்திலும், 16 பேர் பூனாகலை முன்பள்ளியிலும் கல்வி கற்று வருகின்றனர்.

பெற்றோர் இருவரையும் இழந்த கஜனி ஆண்டு 8லும், சுரேஷ் ஆண்டு 6லும், சந்திரன் ஆண்டு 7 லும் கல்வி கற்று வருகின்ற போதிலும் இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து இலட்சம் ரூபாவுக்கு மேல் வைப்பிலிடப்பட்டுள்ளது. ஏனைய 94 பேருக்கும் குறைந்த பட்சம் ஐம்பதாயிரம் ரூபாவுக்கு மேல் வங்கியில் வைப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ் வைப்பீடுகள் அனைத்தும் வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தோர், கிறிஸ்தவ ஸ்தாபனத்தினர், மலையகத்திலிருந்து தென் கொரியா நாட்டில் தொழில் செய்பவர்கள். புலம் பெயர்ந்தவர்கள் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

மேலும் மாக்கந்தை தோட்ட தொழிற்சாலை நலன்புரி நிலையத்தில் இருந்து வரும் 349 பேருக்கும் ஒரு வாரத்திற்கு ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்து அறுநூறு ரூபாவுக்கான உலர்

உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக அல்துமுல்லை பிரதேச செயலாளர் வை.கே. சிரோமி ஜீவமாலா தெரிவித்தார். தனி ஒரு நபர் இருக்கும் பட்சத்தில் அக் குடும்பத்திற்கு 700 ரூபா, இருவர் உள்ள குடும்பத்திற்கு 900 ரூபா, மூன்று பேர் உள்ள குடும்பத்திற்கு 1100 ரூபா, நான்கு பேர் எள்ள குடும் பத்திற்கு 1300 ரூபா, ஐந்து பேருள்ள குடும்ப த்திற்கு 1500 ரூபா என்ற வகையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் இதுவரையில் வழங்கப்படும் உணவுப் பொரு ட்கள் போதுமானதல்லவென்று எவரும் எனக்கு புகார் தெரிவிக்க வில்லை.

இன்னும் 3 மாதங்களில் இவர் களுக்கான தனி வீடுகள் 75 நிறைவு செய்யப்பட்டு வழங் கப்பட்டு விடு மென்று பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் தெனிய என்ற இடத்தில் வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரையில் நான்கு வீடுகள் மட்டுமே நிறைடையும் தறுவாயிலுள்ளன. இவ்வீடமைப்பு நிர்மாணிப்பு பணிகளில் ஆயிரம் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இப்பணிகள் இராணுவ கெப்டன் எம்.எஸ். குமார தலைமையில் இடம்பெற்று வருகின்றன.

அவரிடம் வினவிய போது, “இன்னும் 3, 4 மாதங்களில் 57 வீடுகள் மட்டும் பூர்த்தி செய்யப்படும். கட்டடப் பொருட்கள் கிடைக்க ஏற்படும் தாமதங்களே வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டதற்கான காரணமாகும். ஒதுக்கப்பட்டிருக்கும் இடம் 57 வீடுகளுக்கு மட்டுமே போதுமானதாகும். மேலும் 18 வீடுகள் நிர்மாணிப்பதற்கு, அயலிலுள்ள பிறிதொரு இடம் ஒதுக்கப்பட்டு எம்மிடம் ஒப்படைத்தால் மட்டுமே, ஏனைய வீடுகளை நிர்மாணிக்க முடியும் என்றார்”. புதிதாக வீடுகள் கட்டப்படும் இடமும் காட்டு யானைகள் வரக்கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதால் வீடமைப்பு காணியைச் சுற்றி வர மின்சார வேலிகளை அமைக்கவும், பிரதேச செயலாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

ஆமை வேகத்திலேயே, வீடுகள் நிர்மாணிப்பு பணிகள் இடம்பெறுவதினால் இன்னும் ஒரு வருடமாவது செல்லுமென்ற நிலை உருவாகியுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சினாலேயே, மேற்படி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
மண்சரிவு ஏற்பட்டு 37 மனித உயிர்கள் பலியாகி ஒருவருடம் பூர்த்தியாகியும் பாதிக்கப்பட்டிருக்கும் 75 குடும்பங்களுக்கும் இன்னும் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படாமையினால் அம்மக்கள் தொடர்ந்தும் நலன்புரி நிலையத்திலேயே அவல நிலையில் இருந்து வருகின்றனர்.

பூனாகலைப் பகுதியின் மாகந்தையில் கைவிடப்பட்டிருந்த தேயிலைத் தொழிற்சாலையில், மேற்படி 75 குடும்பத்தினரைக் கொண்ட 349 பேர் வாழ்ந்து வருகின்றனர். இத்தேயிலைத் தொழிற்சாலைக்குள் 12ஒ8 அடி பரப்பளவான சிறு அறைகள் 55 அமைக்கப்பட்டு, மேற்படி 349 பேரும், பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கிய நிலையில் தத்தமது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

அண்மைக்காலத்தில் இவர்களில் பலர் நோய்வாய்ப்பட்டிருந்தனர். இம்மக்களின் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகள் எதுவுமின்றி கல்வியைத் தொடரும் மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாமலும் பெரும் அவதியுறுவதை நேரடியாகவே காணக்கூடியதாக இருந்தது.

மலையக தமிழ் மக்கள் சிங்களவர்களாக மாற வேண்டும்!

மலையக தமிழ் மக்கள் தொடர்ந்தும் மலையகப் பகுதிகளில் வாழ வேண்டுமாயின் சிங்களவர்களாக மாற வேண்டுமென சிங்ஹலே மாஜன பெரமுன என்ற அமைப்பு கோரியுள்ளது.

இலங்கையில் இதுவரையில் இல்லாத ஒர் அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு என்ற பெயரில் அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் ஆட்சியாளர்களினால் விரட்டியடிக்கப்பட்ட மலையக சிங்கள மக்களின் கிராமங்கள் இந்த புதிய அமைச்சின் ஊடாக சிங்கள மக்களுக்கு இல்லாமல் போய்விடும். மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் அரச மற்றும் தனியார் தோட்டங்களுக்காக சிங்கள மக்களின் பாராம்பரிய காணிகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. அங்கு பாரம்பரியமாக கிராமங்களில் வாழ்ந்து வந்த சிங்கள மக்களை கூட்டாக கொலை செய்தும், விரட்டியடித்துமே, பெருந்தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.

சிங்கள கிராமங்களில் பிரிட்டன் ஆட்சியாளர்கள் செய்த அழிவுகள் குறித்து 1817ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதி இங்கிலாந்து அரசாங்கத்திற்கு, அப்போதைய ஆளுனர் ரொபர்ட் பிரவுன்ரீக் அனுப்பி வைத்த இரகசிய ஆணவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் 1848ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி டொரிங்டன் ஆளுனரினால் இங்கிலாந்து அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்த இரகசிய ஆவணத்தில் சிங்களவர்கள் மற்றும் சிங்கள கிராமங்களுக்கு செய்த அழிவுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

மலையக புதிய கிராமங்கள் அமைச்சு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். சிங்களவர்களின் மலையகப் பாரம்பரிய கிராமங்கள் சிங்களவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். சிங்கள இனத்தை ஒடுக்க ஆங்கிலேயரினால் அழைத்து வரப்பட்ட தமிழர்கள் தொடர்ந்தும் அந்தப் பகுதிகளில் வாழ விரும்பினால், அவர்கள் சிங்களவர்களாக மாற வேண்டும் என சிங்ஹரே மாஜன பெரமுன அமைப்பு விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கள பௌத்த மாநாயக்கர்களிடம் இந்த கோரிக்கை எழுத்து மூலம் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் தலைவராக பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திலன்த விதானகே கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பில் பல பௌத்த பிக்குகளும் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர்.

தோட்­டத்­ தொ­ழி­லா­ளரின் சம்­பள உயர்வு கேள்விக் குறி­யா­கி­யுள்­ளது

இ.தொ.கா. விடம் அதி­காரம் இருந்­தி­ருந்தால் தீர்வு கிடைத்­தி­ருக்கும் 

ஆயிரம் ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினை இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் அன்­றைய வாழ்க்கைச் செலவின் நிலை­மையை கருத்­திற்­கொண்டே முன்­வைத்­தது. இன்­றைய நிலையில் 1500 ரூபா பெற்­றுக்­கொ­டுத்­தாலும் போது­மா­ன­தாக இருக்­காது. இ.தொ.கா. விடம் போதிய அர­சியல் அதி­கா­ர­பலம் இருந்­தி­ருக்­கு­மே­யானால் தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வுப் பிரச்­சி­னைக்கு தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டி­ருக்கும். சம்­பள உயர்­வு­களும் சாத்­தி­ய­மா­கி­யி­ருக்கும். கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­டு­வதும் தாம­த­மா­கி­யி­ருக்­காது என்று ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான் தெரி­வித்­துள்ளார்.
 
ஊவா மாகாண அமைச்சர் பொறுப்­புக்­களை ஏற்­ற­பின்னர் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போது, தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு தாமதம் குறித்து விளக்­கு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
 
தொடர்ந்து அவர் பேசு­கையில்,  தற்­போது மலை­ய­கத்தின் அமைச்­சர்­க­ளாக இருப்­ப­வர்கள் இலங்கைத் தொழி­லா ளர் காங்­கி­ரஸை விமர்­சிப்­ப­தி­லேயே கால த்தை கடத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றனர். அவ் அமைச்­சர்­க­ளினால் ஏன் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வைப் பெற்­றுக் ­கொ­டுக்க முடி­ய­வில்லை என்று நாம் மட்­டு­மல்ல இன்று மக்­களும் கேள்வி கேட்கத் தொடங்­கி­விட்­டனர். அப்­ப­டி­யானால் விமர்­ச­னங்­களை மட்­டுமே முன்­வைத்­து­வரும் அவர்­களின் செயற்­பா­டுகள் கையா­லாகாத் தன்­மை­யையே காட்­டு­கின்­றன.
 
இ.தொ.கா. முன்­வைக்கும் சம்­பள அதி­க­ரிப்புத் தொகை­யை­விட அதி­க­ரித்த தொகை­ யையே ஏனைய தொழிற்­சங்­கங்கள் முன்­வைப்­பது வழக்­க­மாக இருந்து வந்­தது. எனினும் நாம் முன்­வைத்த 1000 ரூபா கோரிக்­கை­யை­விட அதி­க­ரித்த தொகையை கோராது அதிலும் குறை­வான தொகையே கோரப்­பட்­டது.
 
அன்­றைய வாழ்க்­கைச்­செ­லவின் நிலை­மையை கருத்­திற்­கொண்டே ஆயிரம் ரூபா உயர்­வினை கோரி­யி­ருந்தோம். இது தொழி­லா­ளர்கள் மட்டில் நியா­ய­மான கோரிக்­கை­யாகும். இதனை அவர்­களும் ஏற்­றுள்­ளனர். இ.தொ.கா. முன்­வைக்கும் சம்­பள உயர்­வுக்கு மேலா­கவே ஏனைய தொழிற்­சங்­கங்கள் கேட்­பது வழ­மை­யாகும். ஆனால், இ.தொ.கா.வின் ஆயிரம் ரூபா சம்­பள உயர்வு கோரிக்­கைக்கு அனைத்து தொழிற்­சங்­கங்­களும் இணங்­கி­யது புது­மை­யே­யாகும். சில தொழிற்­சங்­கங்கள் 1000 த்திலும் குறை­வான தொகையையும் முன்­வைத்து வந்­தன.
 
இன்­றைய வாழ்­க­்கைச்­செ­லவு உயர்­வுக் ­கேற்ப இந்தத் தொகையும் போது­மா­ன­தன்று. அனைத்து அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலை­களும் அதி­க­ரித்­துள்­ளன. நாம் அதி­கா­ரத்தில் இருந்­தி­ருந்தால் இவற்றை முறை­யாக நிர்­வ­கித்­தி­ருப்போம். இன்றைய நிலையில் 1500 ரூபா பெற் றுக்கொடுத்தாலும் போதுமானதாக இருக்காது. இதுவிடயத்தில் ஏனைய தொழிற்சங்கங்கள் இ.தொ.கா.வை விமர்சிப்பதை விடுத்து தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கைச்செலவை ஈடு செய்யும் வகையில் சம்பள உயர்வினைப் பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும் என்று கூறி னார்.

கூட்டு ஒப்­பந்­தத்தின் ஊடாக நியா­ய­மான சம்­பள அதி­க­ரிப்பு என்­பது கேள்­விக்­குறியே 
 
கூட்டு ஒப்­பந்­தத்தின் மூல­மாக நியா­ய­மான சம்­பள உயர்­வினை பெற்­றுக்­கொள்ள முடி­யுமா என்­பது தற்­போது கேள்­விக்­கு­றி­யாகி உள்­ளது. எனவே இது குறித்து ஆழ­மாக சிந்­தித்து உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தோடு மாற்றுத் தொழில்­துறை தொடர்­பிலும் மலை­யக மக்கள் ஆர் வம் செலுத்த வேண்டும் என்று திறந்த பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி எ.எஸ்.சந்­தி­ரபோஸ் தெரி­வித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், 1992 ஆம் ஆண்டு முதல் கூட்டு ஒப்­பந்தம் நடை­மு­றையில் உள்­ளது. கூட்டு ஒப்­பந்த நட­வ­டிக்­கை­களின் போது தொழிற்­சங்­கங்கள் தொழி­லாளர் நலன்­க­ருதி பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைக்­கின்­றன. எனினும் இக்­கோ­ரிக்­கைகள் அனைத்தும் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தில்லை. தொழிற்­சங்­கங்கள் கோரு­கின்ற சம்­பள உயர்வும் உரி­ய­வாறு தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வ­தில்லை. தொழி­லா­ளர்­களின் வரு­மான மட்­டத்தில் பாரி­ய­ளவு மாற்­றத்­தினை கூட்டு ஒப்­பந்­தத்­தினால் கொண்­டு­வர முடி­யாமல் போயுள்­ளது. கூட்டு ஒப்­பந்­தத்தில் ஏற்­க­னவே ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­வாறு வரு­டத்தில் 300 நாள் வேலை அல்­லது மாதத்தில் 25 நாள் வேலை வழங்­கு­வ­தற்கு கம்­ப­னிகள் தயா­ராக இல்லை.
 
வேலை நாட்­க­ளுக்­கேற்ப தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பளம் வழங்­கு­கின்ற நடை­மு­றை­க­ளுக்கும் கம்­ப­னிகள் இன்று ஒத்­து­வ­ரு­வ­தாக இல்லை அர­சாங்­கத்தின் அழுத்­தத்­திற்­கேற்ப கம்­ப­னி­யினர் சிறிய தொகை சம்­பள உயர்­வினை தொழி­லா­ளர்­க­ளுக்கு இம்­மு­றையும் பெற்­றுக்­கொ­டுப்­பார்கள் என்ற போது கூட்டு ஒப்­பந்­தத்தின் ஊடாக நமக்கு நியா­ய­மான சம்­பள உயர்வு கிடைக்கும் என்று தொழி­லா­ளர்கள் இனியும் எதிர்­பார்த்­தி­ருக்க முடி­யாது. கூட்டு ஒப்­பந்தம் எதிர்­கா­லத்தில் தொழி­லா­ளர்­களின் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்த எந்­த­ள­விற்கு கைகொ­டுக்கப் போகின்­றது என்­பது இப்­போது கேள்விக் குறி­யா­கி­யுள்­ளது.
 
இந்த நிலையில் பெருந்­தோட்ட மக்­களின் வாழ்­வா­தா­ரத்­திற்கு மாற்று வழி­களை காண வேண்­டிய தேவை இப்­போது மேலெ­ழுந்­துள்­ளது. தோட்டத் தொழில்­து­றையைக் காட்­டிலும் வேறு எத்­த­கைய தொழில் முயற்­சிகள் தம்­மிடம் இருக்­கின்­றன என்­ப­தனை தொழி­லா­ளர்கள் அடை­யாளம் காணுதல் வேண்டும். இளை­ஞர்கள் பலர் தோட்­டத்­துறை வரு­மா­னத்தில் அதி­ருப்தி கொண்டு தோட்­டத்­தினை விட்டும் வெளி­யேறி நகர்ப்­பு­றங்­களில் பணி­பு­ரிய சென்­றுள்­ளனர். சில இளை­ஞர்கள் வெளி­நா­டு­க­ளுக்கும் தொழில் நிமித்தம் சென்­றுள்­ளனர். இவர்­க­ளு­டைய வரு­மா­னத்தை நம்­பியே இன்று இவ்­வி­ளை­ஞர்­களின் பெற்­றோர்கள் தோட்­டத்தில் இருக்­கின்­றனர். தோட்டத் தொழில் தவிர்ந்த ஏனைய வரு­மா­னங்கள் தான் இன்று தொழி­லா­ளர்­களின் வாழ்­வா­தா­ரத்­திற்கு கைகொ­டுக்­கின்­றன.
 
கூட்டு ஒப்­பந்தம் தொடர்பில் அதி­ருப்­திகள் மேலோங்கி வருகின்றன. இதன் மீதான நம்பிக்கைத்தன்மை வலுவிழந்து வருகின்றது. இந்நிலையில் மாற்றுத் தொழில்களை இனங்கண்டு அறிமுகம் செய்வதோடு அதற்குரிய திறன்களையும் எம்மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தை இனியும் நம்பி இருப்பது சாத்தியமானதில்லை. விவேகமா னதும் இல்லை என்றார்.

பிர­தமர் தலை­மையில் நாளை சம்­பளப் பேச்­சு­
 
தோட்­டத்­தொ­ழி­லா­ளரின் சம்­பள அதி­க­ரிப்பை உறு­திப்­ப­டுத்தும் கூட்டு ஒப்­பந்தம் காலா­வ­தி­யாகி 7 மாதம் கடந்­து­விட்ட நிலையில் நாளை வியா­ழக்­கி­ழமை பிர­தமர் தலை­மையில் முத­லா­ளிமார் சம்­மே­ளனம் மற்றும் தொழிற்­சங்க பிர­தி­நி­திகள் ஆகி ­யோ­ருக்கு இடை­யி­லான பேச்­சு­வார்த்தை ஒன்று இடம்­பெ­ற­வுள்­ளது.
 
இந்தப் பேச்­சு­வார்த்­தையின் போது கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் தொழி ற்­சங்­கங்­க­ளுடன் கைச்­சாத்­தி­டாத தொழிற்­சங்கத் தலை­வர்­க­ளு­டனும் பிரதிநிதி­களும் கலந்­து­கொள்­ள­வுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. இதன்போது அமைச்­சர்­க­ளான பழனி திகாம்­பரம், மனோ ­க­ணேசன் மற்றும் வி.இரா­தா­கி­ருஷ்ணன் ஆகி­யோரும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். இவர்­க­ளுடன் தொழி­லு ­றவு அமைச்சர் ஜோன் சென­வி­ரட்னவும் இணைந்­தி­ருப்பார்.
 
மார்ச் மாதம் 31ஆம் திக­தி­யுடன் நிறை­வு க்கு வந்­துள்ள கூட்டு ஒப்­பந்­தத்தை புதுப்­பித்­துக்­கொள்ளும் பொருட்டு இடம்­பெற்­று­வந்த 6 சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­களும் தோல்வி கண்­டுள்­ளன. தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் நாளொன்­றுக்­கான சம்­ப­ளத்தை ஆயிரம் ரூபா­வாக நிர்­ண­யிக்க வேண்­டு­மென்­பதே இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் கோரிக்­கை­யாகும்.
 
இதனை முன்­வைத்த பேச்­சுக்­களே தோல்வி கண்­டுள்­ளன. 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினை பெற்­றுக்­கொள்­வ­தற்­கென பொதுத்­தேர்தல் பிர­சாரக் காலப்­ப­கு­தியில் போராட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. முத­லா­ளிமார் சம்­மே­ள­னமும் கம்­ப ­னி­களும் 1000 ரூபா சம்­பளம் வழங்­கு­வ­தற்கு முடி­யா­தென திட்­ட­வட்­ட­மாக அறி­வித்து வந்­த­துடன் அதே நிலைப்­பாட்­டி­லேயே இருந்து வரு­கின்­றன.
 
மேலும் 770 ரூபாவை அதி­க­ரித்த சம்­ப­ள­மாக வழங்­க­மு­டியும் என்­பதே கம்­ப­னி­களின் இறுதி முடி­வாக உள்­ளது. தேயி லை விலை வீழ்ச்சி, சந்தை வாய்ப்பு வீழ்ச்சி ஆகி­ய­வற்றைக் காரணம் காட்­டியே இவ்­வாறு சம்­பள அதி­க­ரிப்­புக்கு முட்­டுக்­கட்டை இடப்­பட்டு வரு­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது. 

இந்­நி­லை­யி­லேயே தேர்தல் காலங்­களில் வாக்­கு­று­தி­ய­ளித்­ததன் பிர­கா ரம் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு அதி­க­ரித்த சம்­ப­ளத்தைப் பெற்றுத் தரு­வ­தற்­கான பேச்­சு­வார்த்தை ஒன்று பிர­தமர் தலை­மையில் இடம்­பெ­ற­வுள்­ளது. இதன்­போது கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், கம்பனிகளின் பிரதானிகள், முதலாளி மார் சம்மேளத்தின் பிரதானிகள் மற்றும் மலையக அமைச்சர்கள் என பல தரப்பினரும் இணைந்து கொள்ளவுள்ளனர். இதன்போது இடம்பெறும் பேச்சுவார்தையில் இறுதி முடிவு எட்டப்படும் என்று நம் பப்படுகிறது.
 
 

Tuesday, October 27, 2015

பல்கலைகழகங்களுக்கு மலையக மாணவர்களின் எண்ணிக்கை 200 மட்டுமே. 6000 பேராவது இருக்க வேண்டும்

வருடத்திற்கு 20,000 மாணவர்களை உள்வாங்குகின்ற இலங்கை பல்கலைகழகத்தில் மலையக மாணவர்கள் 200 பேரளவிலேயே இணைகின்றனர் எனவும் குறைந்தது 6000 பேராவது இருக்க வேண்டும். இணைகின்ற மாணவர்களின் எண்ணிக்கை ஒரு சத வீதத்திலும் குறைவானதாகும் என மாலம்பே கல்வி பீடத்தின் பீடாதிபதியுமான கலாநிதி தை. னராஜ் கண்டி திருத்துவ கல்லூரியில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
 
அவர் அங்கு உரையாற்றுகையில் ஒரு காலத்தில் பாடசாலையென்பது முழு உலகமாகத் தெரிந்தது. ஆனால் இன்று நிலைமை மாறி முழு உலகமும் ஒரு சிறிய பாடசாலையாக மாறிவிட்டது. இந்த நிலை அறிவு பிரளயத்தில் இருந்து தப்பி எப்படி மலையக சமூகத்தால் தனித்து வாழ முடியும் என்றார்.
 
ஒரு காலத்தில் 50 வருடங்களுக்கொருமுறை கல்வி இரண்டு மடங்காக வளர்ந்து சென்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்படியான காலத்தில் 50 வருடத்திற்கொருமுறை கல்வித்திட்டத்தை மாற்றி அமைத்தால் அது நவீன கல்வியாகக் கொள்ள முடிந்தது. ஆனால் 50 வருடங்களுக்கு முன் அதாவது 1950 களில் 20 வருடத்திற்கு ஒரு முறை கல்வி வளர்ச்சியானது இரட்டிப்பானதாக ஆய்வுகள் கூறின. 1970 களில் ஒவ்வொரு 10 வருடத்திலும் கல்வி வளர்ச்சி இரட்டிப்பாவதாக கூறப்பட்டது. அதன் பின் 2000ம் ஆண்டளவில் ஐந்து வருடத்தில் கல்வி இரண்டு மடங்காகியது. எனவே ஆகக் குறைந்தது ஐந்து வருடத்திற்கொருமுறையாவது கல்வி மீளாய்வுக்குட்படுத்தும் காலகட்டமாக தற்போதுள்ளது.
 
ஆனல் புதிய ஆய்வொன்றின்படி இன்னும் சில வருடங்களில் ஒவ்வொரு 72 மணித்தியாலங்களிலும் அறிவு மட்டம் இரட்டிப்பாக மாறுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே 2020 பின் வரும் சகாப்தம் மிக வேகமானது. மூன்று நாளைக்கு ஒரு தரம் கல்வி இரட்டிப்பாவதென்றால் அந்த மாற்றத்திற்கு கணனி யுகம் முக்கிய காரணமாகிநது. எல்லாவற்றையும் வீட்டிலிருந்தே மாணவர்கள் தானாக தேடிப்பிடித்து தமது அறிவை பன் மடங்காக்கும் ஒரு காலமே இதுவாகும். எனவே அறிவுப் பிரவாகம் தலைக்குமேல் ஏறிக்கொண்டு போகும்போது நாம் அதற்கு ஈடுகொடுக்க என்ன செய்துள்ளோம்.

மனித வாழ்வு முற்றாக மாற்றமடைந்துள்ள ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்நோம். ஒரு நாளைக்கு முழு உலகிலும் 7 பில்லியன் குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்) பரிமாற்றப்படுகின்றன. அதாவது அறிவுப்பரிமாற்றப்படுகிறது. கூகுல் போன்ற தளங்களில் ஒரு நாளைக்கு 7.2 பில்லியன் தேடல்கள் இடம்பெறுகின்றன. அதாவது அறிவு பசிக்காக இவ்வளவு முயற்சி நடக்கிறது. 18 மாதத்திற்கொருதரம் கணனி வகைகள் ஒதுக்கப்பட்டு புதி ரகங்கள் அறிமுகமாகின்றன.
 
ஒரு நாளைக்கு முழு உலகத்திலும் இருந்து புதிய 3000 வகையான புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. பல்லூடகப் பாவனை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இன்றைய மனிதர்கள் நெட் தலைமுறையூடாக அதாவது இணையப் பரம்பரையாக வாழ்கின்றனர். ஒரு மாணவன் சாதாரணமாக ஒரு நாளைக்கு சராசரி 8 மணித்தியாலங்கள் கணனிகளில் அறிவைத் தேடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
இப்படியாக இன்று முழு உலகமுமே பாடசாலையாக மாறிக் கொண்டிருக்கும போது எம்மவர்கள் நிலை எப்படி உள்ளது என்று பார்ப்போம். 1965 இல் ஆசிரியர் போட்டிப்பரீட்சை ஒன்று நடந்தது. அதில் 15 ஆசிரியர்களே மலையகத்தில் இருந்து இணைந்து கொண்டனர். அதன் வளர்ச்சி இன்று மலையகத்தில் 10,000 ஆசிரியர்களை உருவாக்கியுள்ளது. அந்த அடிப்படையில் மலையக ஆசிரியர்களின் பணி வரவேற்கத்தக்கது. இதற்கு 1960ம் ஆண்டில் வித்திட்டவர்கள் மலையக நல்வாழ்வு மன்றம் போன்றவையாகும். குறிப்பாக சிவலிங்கம், திருச்செந்தூரன் போன்றவர்களை மலையக சமூக நினைவுகூர வேண்டும். அத்துடன் இன்று முப்பதுக்கும் மேற்பட்ட மலையக கல்வி பணிப்பாளர்கள் உள்ளனர். இது ஓரளவு சாதகமானாலும் மறுபக்கத்தில் மலையக உயர் கல்வியில் பின்னடைவு காணப்படுகிறது.
 
பல்கலை கழகங்களில் சுமார் 200 மலையக மாணவர்கள் இன்று உள்ளனர். இது ஒரு வருடத்திற்கு 20,000 மாணவர்களை கொண்ட இலங்கை பல்கலைகழகத்தில் வெறும் ஒரு சத வீதத்திலும் குறைவானதாகும். அதாவது குறைந்தது மூன்று வருடங்கள் மாணவர்கள் பல்கலையில் இருப்பதாகக் கொண்டால் மூன்று வருடத்திற்கும் 60,000 பேர் இருப்பர் ஆனால் மலையக மாணவர்கள் வெறும் 200 பேர்தான். குறைந்தது 6000 பேராவருது இருக்க வேண்டும் என்றார்.
முலையகத்தைப் பொறுத்தவரை இரண்டு கைவிரல்களால் எண்ணும் அளவுகூட மலையக பேராசிரியர்கள் இல்லை. முதலாவதாக பேராசிரியர் சின்னத்தம்பி, தொடர்ந்து பேராசிரியர்களான சந்திரசேகரன், மூக்கையாக, சிவகணேசன், தனராஜ் என்று விரல் விட்டு எண்ணக்கூட முடியாத தொகையில் உள்ளோம். இவர்கள் அனைவரும் தற்போது ஓய்வு நிலையில் உள்ளனர்.
 
பேராதனை பல்கலைகழகத்தில் 12 மலையக விரிவுரையாளர்களும் ஏனைய பல்கலைகழகங்களில் ஆறு பேருமாக மொத்தம் 18 பேர் மட்டுமே மலையகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். குறிப்பிட்ட சில அரச முகாமைத்துவத்துறை பதவிகளில் 5000 பேராவது இருக்க வேண்டிய நிலையில் 20 பேர் மட்டுமே உள்ளனர். இலங்கை நிர்வாக சேவையில் இதுவரை காலம் மாரிமுத்து மற்று முருகேசு ஆகிய இருவர் மாத்திரமே தெரிவாகினர்.
 
கல்வி இராஜாங்க அமைச்சரே நீங்கள் எத்தனையோ தேசிய மட்ட மற்றும் சர்வதேச மட்ட மகா நாடுகளை நடத்­துகிறீர்கள். ஆனால் ஒருதரம் மலையக தேசிய கல்வி மகாநாடு ஒன்றை நடத்தி எம் பிரச்சினைகளைப் பட்டியல் போட்டால் நல்லதல்லவா?
 
இன்று எமக்குக் கிடைத்திருப்பது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதனை கூட்டுவலு கோட்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்த முடியும். அதாவது கூட்டு வலு என்பது உதாரணத்திற்கு இரு நபர்களால் தனித்த­னியே 100 கிலோ சுமையை தூக்க முடியும் என்றால் அவர்கள் இருவரும் இணையும் போது 200 கிலோவல்ல அதனிலும் கூடிய அளவை சுமக்க முடியும். இதே விதம் பலர் இணையும்போது அதன் விளையுள் வினைத்திறன் கூட்டு வினைத்திறனை விட அதிகமாகிறது. எனவே சகல பேதங்களையும் மறந்து நாம் எமது பலத்தைப் பிரயோகித்து கூட்டுவலுக் கோட்பாட்டின் அடிப்படையில் மலையக சமூக மேம்பாட்டிற்குப் பாடுபடவேண்டும்.
 
பொதுவாக உலக வாழ்வில் இரண்டு விடயங்களைக் காணமுடியும். ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் ஒரு விஷன் இருக்கும். அதாவது ஒரு தரிசன நோக்கு இருக்கும். அதேநேரம் அதற்கான எக்ஷன் என்ற செயற்பாடும் இருக்க வேண்டும். செயற்பாட்டுடன் கூடிய தரிசன நோக்கு இல்லா விட்டால் அதன் மூலம் எந்தப் பயனும் இல்லை. ஆனால் செயற்பாட்டுடன் கூடிய தரிசன நோக்கு இருக்குமாயின் உலகையே வெல்லாம் என்றார்.
 
நன்றி- வீரகேசரி