Tuesday, May 31, 2016

அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து சம்­ப­ளத்தை பெறுவது சாத்­தி­ய­மற்­றது



கடந்த 18 வரு­டங்­க­ளாக கூட்டு ஒப்­பந்தம் மூலமே தோட்டத் தொழி­லா­ளரின் சம்­பளம் அதி­க­ரிக்­கப்­பட்டு வந்­துள்­ளது. தொழி­லா­ளரின் சம்­ப­ளத்தை அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து சுல­ப­மாகப் பெற்றுக் கொள்­ளலாம் என்றும் கூட்டு ஒப்­பந்த முறை­மையை மிக மோச­மாக விமர்­சனம் செய்தும் வந்­த­வர்கள், தற்­போது அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து சம்­பள உயர்வைப் பெற்றுக் கொள்­வது எந்­த­ளவு கடி­ன­மா­னது என்­ப­தையும் சாத்­தி­ய­மற்­றது என்­ப­தையும் அனு­பவ ரீதி­யாக உணர்ந்­தி­ருப்­பார்கள் என்று பெருந்­தோட்டத் தொழிற்­சங்க கூட்டுக் கமிட்­டியின் செய­லாளர் நாய­கமும் லங்கா தோட்டத் தொழி­லாளர் யூனியன் பொதுச்­செ­ய­லா­ள­ரு­மான எஸ். இரா­ம­நாதன் தெரி­வித்தார்.

கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் தொழிற்­சங்­கங்கள், தோட்டக் கம்ப­னி­களின் பிர­தி­நி­திகள் அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள், ஆகி­யோ­ருக்கு இடையே இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் விப­ரங்­களை கூட்டுக் கமிட்­டியின் தோழமைச் சங்க தலை­வர்­க­ளுக்கு விளக்­கு­வ­தற்­காக கண்டி இலங்கை தொழி­லாளர் செங்­கொடிச் சங்கக் காரி­யா­ல­யத்தில் நடத்­தப்­பட்ட கூட்­டத்தில் பேசி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். செங்­கோடிச் சங்­கத்தின் தலைவி மேனகா கந்­த­சாமி தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில் கே.எம். கிருஷ்­ண­மூர்த்தி, எஸ். முரு­கையா, ஏ. முத்­து­லிங்கம், எஸ். ஆனந்தி, எஸ். கந்­தையா, ஆர். சிரில் ஆகிய முக்­கி­யஸ்­தர்கள் கலந்து கொண்­டி­ருந்த இக்­கூட்­டத்தில் திரு இரா­ம­நாதன் தொடர்ந்து கருத்து தெரி­வித்­த­போது;

கூட்டு ஒப்­பந்­தத்தில் யார் கையொப்­ப­மி­டு­வது என்­பது முக்­கி­ய­மல்ல. யார் கையொப்­ப­மிட்­டாலும் தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்கு கூட்டு ஒப்­பந்த முறை­மையே சிறந்­த­தாகும் என்­பதும் தொழி­லா­ளர்­களின் பலத்தின் மூலம் பேரம்­பேசி சம்­பள உயர்­வையும் ஏனைய உரி­மை­க­ளையும் பெற்றுக் கொள்ள முடி­யுமே தவிர சந்­தர்ப்­ப­வாத அர­சி­யல்­வா­தி­களை நம்பி தொழி­லா­ளரின் உரி­மை­களை வென்­றெ­டுக்க முடி­யாது.

இன்று முத­லா­ளித்­துவ தோட்டக் கம்­ப­னி­களும் முத­லா­ளித்­துவ அர­சி­யல்­வா­தி­களும் ஒன்­று­பட்டு செயற்­ப­டு­கின்­றனர். தொழி­லா­ளரின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாமல் இழுத்­த­டிக்­கப்­ப­டு­வ­தற்கு கார­ணம் அர­சி­லுள்ள பெரும் புள்­ளி­களின் ஆத­ரவும் அனு­ச­ர­ணையும் தோட்டக் கம்ப­னி­க­ளுக்கு இருக்­கின்றமையே­யா­கும். இதனால் தான் என்­று­மில்­லா­த­வாறு தோட்டக் கம்­ப­னிகள் முரட்டுப் பிடி­வா­த­மாக நடந்து கொள்­கின்­றன. தோட்டக் கம்­ப­னிகள் தமது இறு­மாப்பைக் கைவிட்டு தொழி­லா­ளரின் சம்­பள உயர்வுக் கோரிக்­கையில் நியா­ய­மான தீர்­வினை மேற்­கொள்ள முன்­வர வேண்டும். தொழி­லா­ளர்­க­ளது அடிப்­படை சம்­பள உயர்வு, வரவு போனஸ், விலை­யேற்ற அல வன்ஸ், மேல­திக தேயிலை இறப்­ப­ருக்­கான கொடுப்­ப­ன­வு­களின் அதிகரிப்பையே நாம் முன்வைத்துள்ளோம்.

இக் கோரிக்கையினையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறோம். இக் கோரிக்கையினை வென்றெடுப்பதற்காக எதிர்வரும் நாட்களில் தோட்டக் கம்பனிகளுக்கும் அரசாங்கத்துக்கும் அழுத் தங்களைப் பிரயோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானிக்கப் பட்டிருப்பதாக வும் கூறினார்.

Monday, May 30, 2016

மலையக தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு இல்லை - அங்கலாய்க்கும் மக்கள்

மலையக பகுதியில் உள்ள தோட்டங்களில் தேயிலை செடிகளின் கொழுந்து விளைச்சல் அதிகமாக காணப்படுகின்றது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேயிலை மலைகளில் கொழுந்தின் விளைச்சல் குறைந்து வரட்சியான நிலைமை காணப்பட்டதால் தோட்ட தொழிலாளர்கள் தொழில் இல்லாமல் கஷ்டத்தை எதிர்நோக்கியதோடு வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் மாத்திரமே தோட்ட நிர்வாகத்தினால் தொழில் வழங்கப்பட்டது.
இதன் காரணமாக தொழிலாளர்கள் பொருளதார ரீதியில் பாரிய கஷ்டங்களை எதிர்நோக்கி வந்ததோடு குடும்பத்தில் ஏற்படும் செலவுகளை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கடன் சுமைக்கு தள்ளப்பட்டார்கள்.
தற்போது கொழுந்து விளைச்சலின் காரணமாக தொழிலாளர்கள் குடும்ப வருமானத்தை கருத்தில் கொண்டு நாளுக்கு அதிகமான கிலோ கிராம் கொழுந்தினை பறித்து வருவதோடு அதிகாலை 6 மணிக்கு தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்கள் மாலை 6 மணி வரை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலநிலை சீர்கேட்டினால் இத் தொழிலாளர்கள் தங்களுடைய தொழிலை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்பட்ட போதிலும் ஏதோ ஒரு வகையில் குடும்ப வருமானத்தை கருத்தில் கொண்டு மழை, குளிர் பாராமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருமானத்திற்காக போராடுகின்றனர்.
இத் தோட்ட தொழிலாளர்கள் படும் கஷ்டங்களையும், வேதனைகளையும் அறிந்த தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு பகல் உணவு வழங்குவதோடு மாலை நேரத்தில் கொழுந்து மடுவங்களில் வைத்து கோப்பி தேநீர் வழங்கி வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் மாலை நேரத்தில் அதிக நேரம் வேலை செய்வதாக தோட்ட அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சில தோட்டங்களில் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தில் தண்ணீர் இருப்பதற்காகவும், கொமிஷன் என்ற அடிப்படையில் ஒரு நேர நிறுவைக்கு 3 கிலோ தொடக்கம் 5 கிலோ வரை தங்களுடைய கொழுந்து இறாத்தலில் கழிக்கப்படுவதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இன்னும் சில தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு எவ்வித வசதிகளும் செய்து கொடுக்காமல் வருமானத்தை நோக்கி நிர்வாகம் கெடுபிடியாக நடந்து கொள்வதாகவும், கடுமையான மழை நேரத்தின் போது விடுமுறை கூட தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான கடும் கஷ்டத்தில் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் தொழிலாளர்களுக்கு இன்னும் சம்பள உயர்வு கிடைக்கப்படவில்லை என தொழிலாளர்கள் அரசியல்வாதிகள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.
கூட்டு ஒப்பந்தம் முடிவுவடைந்து ஒரு வருடமும் 2 மாதங்களும் கடந்த போதிலும் சம்பள உயர்வை பெற்று தருவதாக கோரிய மலையக அரசியல்வாதிகள் போராட்டங்களை மேற்கொண்டு விட்டு அமைதியாக மௌனம் சாதியப்பதாக தொழிலாளர்கள் அங்கலாயிகின்றனர்.
கடந்த வருடங்கள் பல போராட்டங்களை சம்பள உயர்வுக்காக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்ததாகவும், தொடர்ச்சியாக செய்யப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் சில மாதங்களுக்கு மாத்திரமே தேயிலை செடிகளில் கொழுந்து விளைச்சல் இருக்கும் எனவும், அதன்பின் கொழுந்து விளைச்சல் படிப்படியாக குறையும் என தொழிலாளர்கள் தெரிவிப்பதோடு மீண்டும் வரட்சி ஏற்படும். அப்போது மீண்டும் கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதாகவும், இதனை கருத்தில் கொண்டு சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் தொழிற்சங்கங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்று தருமாறு தோட்ட தொழிலாளர்கள் அரசியல்வாதிகளிடம் ஞாபகப்படுத்துகின்றனர்.

Saturday, May 28, 2016

ஹட்டனில் மண்சரிவு- சாமிமலையில் 200 பேர் இடம்பெயர்வு

ஹட்டனில் மண்சரிவு

ஹட்டன், சமலனகம பகுதியில் ஏற்பட்ட மன்சரிவினால் மூன்று குடும்பங்களை சேர்ந்த 15 பேர்   இடம்பெயர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை ஹட்டன் பொலிஸாரும் நகரசபையினரும் இணைந்து பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளனர். மேலும் மண்சரிவு பாதிப்புக்குள்ளான குடியிருப்புகளின்  வெடிப்புகள் எற்பட்டுள்ளதுடன் கீழ் பகுதியில் வர்த்தக நிலைய கட்டிடமொன்று நிர்மாண பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடதக்கது.

சாமிமலையில் 200 பேர் இடம்பெயர்வு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்ட சாமிமலையில்  இன்று (28) காலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, 41 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர்  இடம்பெயர்ந்துள்ளனர். மேற்படி பகுதிகளிலுள்ள வீடுகளிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இடம்பெயர்ந்த 200 பேரும் தோட்ட ஆலயம் மற்றும் சிறுவர் நிலையத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கக்கலையில் மண்சரிவு

லிந்துலை, தங்கக்கலை தோட்டம் கிம்ரு மேற் பிரிவில் இன்று (28-05-2016) காலை ஏற்பட்ட மண்சரிவினால் 2 வீடுகள் சேதமடைந்துள்ளன. இம்மண்சரிவினால் 2 வீடுகளில் வசித்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த லயன் தொகுதியில் 20 வீடுகள் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ளதாகவும் இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால் 100 பேர் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.


கினிகத்தேனை பிரதான வீதியில் வெடிப்புகள்

ஹட்டன், கினிகத்தேனை நகரின் பிரதான வீதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், இவ்வீதியூடான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். இவ்வீதியூடான போக்குவரத்து வியாழக்கிழமை (26) முதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதெனவும் கடந்த இரண்டு தினங்களாக கினிகத்தேனை நகரின் பிரதான வீதியில் பாரிய நில வெடிப்பு ஏற்பட்டுள்ளதெனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில் கினிகத்தேனை பொலிஸாரினால் கட்டட ஆராய்ச்சி திணைக்களத்துக்கு அறிவித்ததையடுத்து, வெடிப்பு ஏற்பட்ட இடத்தை   வியாழக்கிழமை பார்வையிட்ட அதிகாரிகள் குறித்த வீதியினை பயன்படுத்துவதை தடைசெய்யமாறு உத்தரவிட்டுள்ளனர். வீதியில் ஏற்பட்டுள்ள வெடிப்பு அனர்த்ததிற்குள்ளாகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் மேலதிக நில ஆய்வு சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்தனர். மேலும், இப்பகுதியில் உள்ள சில கடைகளிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மஸ்கெலியாவில் மண்சரிவு - 200 பேர் பாதிப்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்டம் புரோக்மோர் பிரிவில்  28.05.2016 அன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் 200 பேர் இடபெயர்ந்துள்ளனர். 

குடியிருப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் குடியிருப்பு சுவர்களிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. 

மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியிலுள்ள 41 குடும்பங்களை சேர்ந்த 200 பேரை உடனடியாக வெளியேற்றி தோட்ட ஆலயம் மற்றும் சிறுவர் நிலையங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். 

லிந்துலை மவுசல்ல தோட்டங்களில் மண்சரிவு அபாயம்

நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட லிந்துலை மவுசல்ல கீழ்ப்பிரிவு, கொணன் ஆகிய தோட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மவுசல்ல கீழ்ப்பிரிவு தோட்டத்திலுள்ள இரண்டு லயன் குடியிருப்பு பகுதிகளில் நிலம் தாழ்ந்துள்ளதால் இந்தக் குடியிருப்புக்களைச் சேர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தோட்ட நிருவாகத்தினரும் பிரதேச கிராம சேவகர்களும் அறிவித்துள்ளனர். 

இதே வேளை கொணன் தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்புப் பகுதியிலும் நிலம் தாழ் இறங்கியுள்ளதோடு சுவர்களில் வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளன. 

இதேவேளை நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 03 ஹோல்புறூக் நு.ஹோம்மூட் தமிழ் வித்தியால கட்டிடத்தின் சுவர்கள் மற்றும் வெளிபுர பகுதிகள் பாரிய அளவில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. 

தற்போது இப்பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதால் எந்த நேரத்திலும் கட்டிடம் சரிந்து விழ கூடிய ஆபாத்தான நிலை காணப்படுகின்றது. 


மரம் முறிந்து விழுந்தில் 07 வீடுகள் சேதம் 35 போ் இடம்பெயர்வு

தெல்தோட்டை நாரங்கன் தோட்டப் பகுதியில் இன்று விடியற்காலை 07.00 மணி அளவில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் 07வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெல்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்த விபத்தில் 07 குடும்பங்களை சோ்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சம்பவத்தின் போது 03 வீடுகள் முழுமையாகவும் ஏனைய 04 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. 

இது குறித்து கிராம உத்தியோகத்தர் ஊடாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனா். 




Friday, May 27, 2016

அணுகுமுறைகள் முரண்பட்டு காணப்படுவதாலேயே பேச்சுக்கள், போராட்டங்கள் தோல்வியடைகின்றன

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வைப் பெற்­றுக் ­கொ­டுக்க வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டி­லேயே தொழிற்­சங்­கங்கள் இருந்து வரு­கின்­றன. ஆனாலும் தொழிற்­சங்­கங்­களின் அணு­கு­மு­றைகள் முரண்­பட்­ட­தாகக் காணப்­ப­டு­கின்­றன. அதி­கா­ரப்­போட்டி, மாறு­பட்ட கொள்கைத் திட்டம், மலை­யகத் தலை­மை­க­ளி­டத்தில் இருந்­து ­வ­ரு­கின்ற வரட்டு கௌர­வங்கள் ஆகி­ய­வற்றின் கார­ண­மாக பேச்­சு­வார்த்­தைகள், போராட்­டங்கள் மாத்­தி­ர­மின்றி அப்­பாவித் தொழி­லா­ளர்­களும் ஏமாற்­றப்­பட்டு, தோல்­வி­ய­டைந்து, சோர்ந்து போகின்­றனர் என்று ஐக்­கிய தோட்டத் தொழி­லாளர் சங்கப் பொதுச்­செ­ய­லாளர் முத்­து­லிங்கம் தெரி­வித்­துள்ளார்.
பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு விட­ய­மாக அவர் கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் மேலும் கூறு­கையில், தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வைப் பெற்­றுக் ­கொ­டுக்க வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டி­லேயே, தொழிற்­சங்­கங்கள் இருந்து வரு­கின்­றன. ஆனாலும் அத் தொழிற்­சங்­கங்­களின் அணு­கு­மு­றைகள் முரண்­பட்ட வகை­யி­லேயே அமைந்­துள்­ளன. தமக்கே அனைத்து ஆக்கற் சக்­தி­களும் இருப்­ப­தாக நி­னைத்தே தற்­போது மலை­யகத் தலை­மைகள் செயற்­பட்டு வரு­வதைக் காண முடி­கி­றது. அதி­கா­ரப்­போட்டி, மாறு­பட்ட கொள்கைத் திட்டம், மலை­யகத் தலை­மை­க­ளி­டத்தில் இருந்­து­வ­ரு­கின்ற வரட்டு கௌர­வங்கள் ஆகி­ய­வற்றின் கார­ண­மாக பேச்­சு­வார்த்­தைகள், போராட்­டங்கள் மாத்­தி­ர­மின்றி அப்­பாவித் தொழி­லா­ளர்­களும் ஏமாற்­றப்­பட்டு, தோல்­வி­ய­டைந்து, சோர்ந்து போகின்­றனர்.
தோட்டத் தொழி­லாளர் சமூகம் என்ற ரீதியில் முரண்­பா­டு­களை ஒதுக்கி வைத்து அனைத்து மலை­யக சிறிய, பெரிய தொழிற்­சங்­கங்­களும் ஒன்­றி­ணைந்து தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்­வினை முன்­னி­லைப்­ப­டுத்தி ஒன்­றி­ணைந்த போராட்­டங்­க­ளையும் ஒன்­றி­ணைந்த ஆக்கற் காரி­யங்­க­ளையும் முன்­னெ­டுக்க வேண்டும். இப்­போ­ராட்­டங்கள் அர­சையும், தோட்­டங்­களை பொறுப்­பேற்­றி­ருக்கும் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­தையும் வலி­யு­றுத்தி, அழுத்­தங்­களைக் கொடுக்­கக்­கூ­டி­ய­தா­கவே அமைய வேண்டும். அவ்­வாறு அமைந்தால் மாத்­தி­ரமே பிர­தி­ப­லனைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்கும்.
மலை­யக தொழிற்­சங்­கங்கள் தனித்­த­னி­யாக பிரிந்து நின்று போராட்­டங்­களை மேற்­கொள்­வதன் மூலம் போராட்டம் பல­வீ­ன­ம­டை­யவே செய்யும். அனைத்து தொழிற்­சங்­கங்­களின் இலக்கு சம்­பள உயர்வு விட­யத்தில் ஒன்­றா­ன­தாக இருக்கும் போது அத்­தொ­ழிற்­சங்­கங்கள் ஒன்­றி­ணைந்து போராட்­ட­மாக முன்­னெ­டுக்­கப்­படும் பட்­சத்தில் அதன் பயனை தோட்டத் தொழி­லா­ளர்கள் அனு­ப­விக்க கூடி­ய­தாக இருக்கும். அர­சாங்­கத்­தினால் தனியார் துறை­யி­ன­ருக்கும் வரவு செலவுத் திட்­டத்தின் மூலம் அறி­விக்­கப்­பட்ட 2500 ரூபா சம்­பள உயர்வு தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு மட்டும் கிடைக்­காமை அடிப்­படை உரிமை மீற­லாகும். இதனை அனை­வரும் புரிந்­து­கொண்டு செயற்­படல் வேண்டும். முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ஷ தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வு வழங்­கப்­படல் வேண்­டு­மென்று அடிக்­கடி கூறி வந்த போதிலும் அக்­கூற்று இது­வ­ரையில் போலித்­த­ன­மா­ன­தான அமைந்து விட்­டமை வேத­னைக்­கு­ரி­ய­தாகும்.
தற்­போ­தைய வாழ்க்கைச் செலவு உயர்­வினை தோட்டத் தொழி­லா­ளர்­க­ளினால் எதிர்­கொள்ள முடி­யாது அவர்கள் சொல்­லொணாத் துய­ரங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர். வாழ்க்கைச் செல­வினை ஈடு­செய்ய முடி­யா­மை­யினால் அவர்கள் தோட்டத் தொழில் துறை­யி­லி­ருந்து வில­கிச்­சென்று கொண்­டி­ருக்­கின்­றனர். இந்­நிலை தொடரும் பட்­சத்தில் தொழி­லா­ளர்கள் இன்றி தோட்டத் தொழில் துறை­யி­னையே மூட­வேண்­டிய அவலம் ஏற்படும். உழைப்பிற்கேற்ற சம்பளமின்மை, இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றினால் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்தும் நீடிக்க அனு­ம­திக்க முடி­யாது. இந்­நிலை நீடித்து பெருந்­தோட்­டங்கள் மூட வேண்­டிய சூழல் ஏற்­ப­டு­மே­யானால் அத் தோட்­டங்­களை நம்­பி­யி­ருக்கும் தொழி­லா­ளர்­களின் சாபங்­க­ளுக்கு அனைத்து மலை­யக தலை­மை­களும் உட்­ப­ட­வேண்­டி­வரும் என்றார்.

தோட்­டத்­திற்கு எக்­கா­ரணம் கொண்டும் செல்ல மாட்டோம் வேறு எங்­கா­வது வீடு­களை அமைத்து தாருங்கள்

மண்­ச­ரிவு ஏற்­பட்டு 16 உயிர்­களை காவு கொண்ட புளத்கொ­ஹு­பிட்­டிய களு­பான தோட்­டத்­திற்கு இனிமேல் எக் காரணம் கொண்டும் நாங்கள் செல்ல மாட்டோம். எங்­களுக்கு வேறு எங்­கா­வது வீடு­களை அமைத்து தரு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இதனை மன்­றாட்­ட­மாக கோரு­கின்றோம் என்று புளத்­கோ­ஹு­பிட்­டிய மண்­ச­ரிவில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தெரி­வித்­தனர். தயவு செய்து களு­பான தோட்­டத்­திற்கு செல்­லு­மாறு எங்­களை வற்­பு­றுத்த வேண்டாம். அதனை ஒரு பாவப்­பட்ட இட­மா­கவே பார்க்­கின்றோம். எங்­களால் இனிமேல் புளத்­கோ­ஹு­பிட்­டிய களுப்­பான தோட்­டத்தில் நிம்­ம­தி­யாக வாழவே முடி­யாது என்றும் அந்த மக்கள் குமு­று­கின்­றனர்.

புளத்­கோ­ஹு­பிட்­டிய களு­பான தோட்­டத்தில் ஏற்­பட்ட மண்­ச­ரி­வை­ய­டுத்து, அங்­கி­ருந்து இடம்­பெ­யர்ந்து யக்­கல மகா­வித்­தி­யா­ல­யத்தில் 57 குடும்­பங்கள் தற்­கா­லி­க­மாக தஞ்­ச­ம­டைந்­துள்­ள அந்த மக்­கள் இந்த உருக்­க­மான கோரிக்­கையை முன்­வைத்­தனர். பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ந்தும் துய­ரத்தை வெளி­யி­டு­கையில்,

உங்­க­ளிடம் ஒரு­வி­ட­யத்தை மன்­றாடிக் கோரு­கின்றோம். நாங்கள் கோரு­கின்ற இந்த விட­யத்தை தயவு செய்து அர­சாங்­கத்­திடம் எடுத்துக் கூறுங்கள். புளத்­கோ­ஹு­பிட்­டிய களு­பான தோட்­டத்தில் நாம் இது­வரை காலமும் வசித்தோம். ஆனால் அங்கு ஏற்­பட்ட மண்­ச­ரி­வினால் எமது உற­வுகள் 16 பேரை இழந்­து­விட்டோம். அந்த 16 பேரும் மண்­னோடு மண்­ணாக புதைந்து போகி­னர்.

அந்த வகையில் பார்க்­கும்­போது புளத்­கோ­ஹு­பிட்­டிய களு­பான தோட்டம் வாழ்­வ­தற்கு ஆபத்­தான இட­மென்­பது நிரு­ப­ன­மா­கி­விட்­டது. எனவே எக்­கா­ரணம் கொண்டும் இதன்­பின்னர் புளத்­கோ­ஹு­பிட்­டிய களு­பான தோட்­டத்­திற்கு நாங்கள் செல்­லவே மாட்டோம். அங்கு சென்று எம்மால் ஒரு­போதும் நிம்­மி­யாக வாழ முடி­யாது.இதனை புரிந்து கொள்­ளுங்கள். எமது நிலை­மையை உண­ருங்கள். எமது 16 உற­வு­களை பரித்­தே­டுத்த அந்த தோட்­டத்தில் எம்மால் இனி வாழ முடி­யாது.
எனவே எமக்கு வேறு ஒரு பாது­காப்­பான இடத்தில் வீடு­களை அமைத்து தாருங்கள் நாங்கள் அங்­கி­ருந்து கொண்டு வேண்­டு­மானால் களு­பான தோட்­டத்­திற்கு தொழி­லுக்­காக சென்று வர­மு­டியும். ஆனால் களு­பான தோட்­டத்தில் வாழ மாட்டோம்.

மண்­ச­ரிவு ஏற்­பட்­டதன் பின்னர் எமது பகு­திக்கு வருகை தந்த அமைச்சர் திகாம்­பரம் புதிய வீடு­களை அமைத்து தரு­வ­தாக உறு­தி­ய­ளித்தார். ஆனால் களு­பான தோட்­டத்தில் எமக்கு வீடு­களை அமைக்க வேண்டாம். மாறாக வேறு ஓர் இடத்தில் எமக்கு வீடு­களை அமைத்து தர வேண்டுமென அமைச்சர் திகாம்பரத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இந்த விடயத்தில் அமைச்சர் மனோகணேசனும் எமக்கு ஆதரவு வழங்குவார் என நம்புகிறோம். தயவு செய்து எம்மை கைவிட்டு விட வேண்டாம். இந்த விடயத்தை அரசாங்கத்திடம் எடுத்து செல்லுங்கள் என்றனர்.

Tuesday, May 24, 2016

நிம்மதியாக வாழ ஒரு காணி துண்டைத் தாருங்கள்

நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையினால் மலையகத்தின் பல்வேறு இடங்களில் மண்சரிவு மற்றும் அனர்த்த அபாயங்கள் ஏற்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தின் தெல்தோட்டை பிரதேச செயலகத்திற்குட்பட்ட டுனாலி, அப்பர் கலஹா, கலஹா குரூப், பட்டியகம, கிதுல் முல்ல, தெல்தோட்டை குரூப் ஆகிய பெருந்தோட்டப் பகுதிகள் இதனால் பெரிதும் பாதிப்பப்பட்டுள்ளன. பொதுவாக இத்தோட்டங்களைச் சேர்ந்த 10 இற்கு மேற்பட்ட லயக்குடியிருப்புக்களின் 162 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
இம்மக்கள் வாழும் லயக்குடியிருப்புக்களுக்கு அருகாமையில் நிலப்பிளவுகளும் நிலம் தாழ்ந்தும் வீடுகளில் ஏற்பட்ட வெடிப்புகள் காணப்படுவதால் இம்மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இம்மக்களின் குடியிருப்புக்கள் ஆபத்தானவை என பிரதேச செயலகத்தினால் எவ்வித அறிவித்தலும் விடுக்கப்படவில்லையென மக்கள் ​தெரிவிக்கின்றனர்.
மனித அபிவிருத்தித்தாபனத்தின் விசேட இணைப்பாளர், கண்டியை மையமாகக்கொண்டு கேகாலை உள்ளிட்ட இலங்கையின் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் மனித அபிவிருத்தித்தாபனத்தின் விசேட இணைப்பாளர் பொன்னையா ஸ்ரீகாந்த்
தெல்தோட்டைப்பிரதேசத்திற்குச் சென்று அவர் அங்கு மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் கலந்துரையாடினார். அதன்போது சிலர் வழங்கிய கருத்துக்களே இவை.
எஸ்.ஜெயந்தி கருத்து தெரிவிக்கையில் :
நான் ஒரு கால்நடை விவசாயி. தனது குடும்ப வாழ்வாதாரத்தை கால் நடைகளிலிருந்து கிடைக்கப்பெறும் வருமானத்தைக் கொண்டு சீவியம் நடாத்தி வருவதாக தெரிவித்தார். கால்நடை வளர்ப்புக்கு உகந்த பிரதேசமாக டுனாலி பிரதேசம் காணப்படுகின்றது. தற்போது டுனாலிப் பிரதேசம் அனர்த்தப் பிரதேசமாக காணப்படுகின்றது. இவ்வனர்த்தத்தினால் என்னைப் போன்ற பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எமது பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தி எமது குடியிருப்புக்களை உருவாக்க வேண்டும் என அரசிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம். எமக்குத் தேவை பாதுகாப்பான காணித்துண்டொன்று. அடுத்து ஜீவாதாரத்திற்கான தொழில். என்றார்.
எல். காஞ்சனா (பாடசாலை மாணவி):
நாம் மலையக மாணவர்கள் என்ற பகுதிக்குள் வருகின்றோம். அதனால் பல இன்னல்களை அவ்வப்போது சந்தித்துவருகின்றோம். பல வசதியீனங்களுக்கு மத்தியில் நாம் கற்றுவருகின்றோம். மின்னொழுக்கு ஒழுங்கீனத்தினால் மலையகத்தின் பல லயக்குடியிருப்புக்கள் எரிந்து சாம்பலாகியுள்ளமையை நாம் அன்றாடம் ஊடகங்கள் வாயிலாக அவதானிக்கின்றோம். அதற்கு நாமும்விதிவிலக்கல்ல.
அதேபோல், மழை காலங்களில் எமது குடியிருப்புக்கள் அவ்வப்போது அழிந்து சேதமடைகின்றன. இந்நிலை தொடருமாயின் எமது கல்வி பாதிக்கப்படுவதோடு மலையக மக்களின் அபிவிருத்தியில் பின்னடைவும் ஏற்படும்.
இவற்றை கருத்திற்கொண்டு எம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் நிர்வாகத்துறையினரும் எமக்கு பாதுகாப்பான நிலத்தை வழங்கி கல்வியுரிமையை உறுதிப்படுத்தி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாம் கல்வியைத்தடையின்றிப்பெற கல்வியமைச்சர் எமது இராஜாங்க கல்வியமைச்சர் உள்ளிட்டோர் உதவவேண்டும்.என்றார்.
ஆர். வேலு (ஓய்வுபெற்ற தோட்டத்தொழிலாளி):
தோட்டத்தொழிலாளிகள் ஏமாறவே பிறந்தவர்கள் என்பது போல தொழிற்சங்கங்களும் அரசியல்வாதிகளும் ஏன் இயற்கையும் நடந்துகொள்கின்றன.
காலங்காலமாக தோட்ட முகாமைத்துவமும் தொழிற்சங்கங்களும் அரசியல் வாதிகளும் எம்மை ஏமாற்றி வருகின்றனர்.இதனை யாவரும் அறிவர். தேர்தல் காலத்தில் மாத்திரம் எமது பகுதிக்கெல்லாம் வருவார்கள். தொண்டை கிழியக்கத்துவார்கள். அது செய்வோம் இது செய்வோம் என்பார்கள். ஆனால் எமக்கு கிடைப்பது ஏமாற்றமே.எங்களை ஏமாற்றி பிழைப்போர் எமது இன்றைய நிலையை நன்கு அவதானித்து எமக்கு நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இது பிராயச்சித்தமாகும்.
நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடைகளை எங்களால் தேடிக்கொள்ள முடியும். நாம் பீதியின்றி நிம்மதியாக வாழ எமக்கு ஒரு காணித்துண்டை தாருங்கள்.
இதுவே எமது விருப்பம்.எனத்தெரிவித்தார்.
நன்றி- தினகரன்

தோட்டத் தொழிலாளர்கள் 2500 ரூபாவுக்கு உரித்துடையவர்கள் அல்ல

கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ் கூட்டு உடன்படிக்கை இருக்குமானால் தொழிலாளர்கள் 2500 ரூபாய் சம்பள உயர்வுக்கு உரி;த்துடையவர்களாக மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான பி. இராஜதுரை இது பற்றி தெரிந்திருந்தும் தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது ஏமாற்று வித்தையாகும் என்று தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் தோட்த் தொழிலாளர்களின் பொருளாதார நெருக்கடி நாளுக்குநாள் வலுவடைந்து வருகின்றது. இதனால் சொல்லொணா துன்ப துயரங்களை தொழிலார்கள் அனுபவித்து வருகின்றார்கள் இந்நிலையில் இவர்களுக்குரிய சம்பள உயர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசியல் தொழிற்சங்கவாதிகளின் கடமையாகும். 

தொழிலாளர்களின் நலன்கருதி அரசியல் தொழிற்சங்க பேதம் பாராது இவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும். எனினும் இங்கு சில அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொள்கின்றனர். மக்களுக்கு சம்பள உயர்வினை பெற்றுக்கொடுப்பது இவர்களின் நோக்கமாக இருக்கவில்லை. 

2016ம் ஆண்டின் கைத்தொழில் பிணக்குகள் சட்டம் மிகவும் முக்கியமானது. இச்சட்டத்தின் கீழ் கூட்டு உடன்படிக்கை ஒன்று இருக்குமானால் தொழிலாளர்கள் 2500 ரூபா சம்பள உயர்வுக்கு உரித்துடையவர்களாக இருக்கமாட்டார்கள் என்று இச்சட்டம் வலியுறுத்துகிறது. 

எனவே வரவு செலவுத் திட்டத்தினூடாக முன்மொழியப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வினை கூட்டு ஒப்பந்த நடவடிக்கை காரணமாக தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தெரிந்திருந்தும் ஒப்பந்தம் இல்லாமல் போக வேண்டுமென்றால் இரு சாராரில் ஒரு சாரார் ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். எனினும் நிலைமை இன்னும் அவ்வாறு அமையவில்லை. கூட்டு ஒப்பந்தம் இன்னும் நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே ஒரு வருடத்துக்கும் மேலாக காலாவதியான கூட்டு ஒப்பந்தத்துக்கு பதிலாக கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடும் நடவடிக்கைகள் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் மற்றும் பிரதான கட்சிகளும் இவ்விடயம் தொடர்பாக கலந்தாலோசித்து வருகின்றன. இதனடிப்படையில் விரைவில் புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர் கூட்டு ஒப்பந்தம் நடைமுறை இல்லையென்று கூறிவிட முடியாது 

இதேவேளை குறைந்தபட்ச வேதன சட்டத்திற்கமைய தொழிலாளர்களுக்கு தொழில் தருநர்களால் வழங்கக்கூடிய குறைந்தபட்ச வேதனத் தொகை உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இதனடிப்படையில் குறைந்த பட்ச மாதாந்த வேதனம் பத்தாயிரம் ரூபாய் எனவும் நாள் ஒன்றுக்கான அடிப்படை சம்பளம் 400 ரூபா எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . இச்சட்டமும் கூட தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இது குறித்து நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டி இருக்கின்றது. 

கூட்டு ஒப்பந்தம் அவசியம் என்ற கருத்தினை பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இதுவே உண்மையுமாகும்.

எனவே கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக காலத்துக்குக் காலம் உரிய சம்பள உயர்வினை பெற்றுக்­கொ­டுக்க வேண்டியது அரசியல்வாதிகளின் கடமையும் பொறுப்புமாகும் என்பதை மறந்து விடக்கூடாது. கூட்டு ஒப்பந்தத்தினை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.
தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைப்பதனை விடுத்து நமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் ஊடாகவும் அமைச்சு பதவிகளின் ஆளுமையின் ஊடாகவும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வினையும் விசேட கொடுப்பனவுகளையும் ஏதேனும் ஒரு வகையில் பெற்றுக்கொடுப்பதற்கு அரசுடன் இணைந்து செயற்படும் அரசியல்வாதிகள் முனைதல் வேண்டும். அதைவிடுத்து அப்பாவி மக்களை ஏமாற்ற முனைவது தவறான விடயமாகும் என்றார். 

மண் சரிவு அபாயம் - 390 பேர் வெளியேற்றம்

கொத்மலை, பெல்மதுளை மற்றும் கிரிந்திவெல ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக, 390 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பூண்டுலோயா சீன் தோட்டத்தில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக, 29 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர், கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண உதவிகள், தோட்ட நிர்வாகம் மற்றும் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது. இத்தோட்டத்தில் 6, 7, 8ஆம் ஆகிய இலக்க லயன் தொகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, குடியிருப்புப் பின்பகுதியில் மண்மேடுகள் மற்றும் கற்பாறைகள் சரிந்து விழக் கூடிய நிலை காணப்படுகின்றது. இதனால், 6ஆம் இலக்க லயன்தொகுதியில் 10 குடும்பங்களும், 7ஆம் இலக்க லயன்தொகுதியில் 7 குடும்பங்களும், 8ஆம் இலக்க லயன் தொகுதியில் 10 குடும்பங்களும், தற்காலிகக் கூடாரங்கள் இரண்டில் வாழ்ந்த இரண்டு குடும்பங்கள் அடங்கலாக, 29 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 35 சிறுவர்களும் 6 மாத சிசுக்கள் இருவரும் அடங்குகின்றனர். மேலும், அதிகமான பெண்கள் தங்கியிருப்பதனால், போதியளவான மலசலக்கூட வசதிகள் இன்மையால் அவர்கள், பல்வேறான அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை, 2015ஆம் ஆண்டு பெய்த கடும் மழையினால்,  இந்தக் குடியிருப்புகளில் வாழ்ந்த மக்களை, பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு,  அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவுறுத்தியிருந்தது. அறிவிப்பு விடுக்கப்பட்டு ஒருவருட காலமாக எவ்விதமாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத காரணத்தினாலேயே, தங்களுடைய உயிர்களைக் கையில் பிடித்துக்கொண்டு, இக்குடியிருப்பிலேயே வாழ்ந்து வந்ததாகவும் இம்முறை, அனர்த்த அபாயம் அதிகரித்துவிட்டதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை, பெல்மதுளை பொரோணுவ தோட்ட மேற்பிரிவு இலக்கம் - 03 லயன் அறைகளில் வசித்துவந்த 35 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மண்சரிவு அபாயம் காரணமாகவே இவர்கள், இடம்பெயர்ந்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. இப்பகுதியில், 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட கட்டட ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையின் போது, இவ்விடம் மண்சரிவுக்கு முகங்கொடுக்கக்கூடிய இடமென்று இனங்காணப்பட்டது. அப்பகுதியிலிருந்து வெளியேறியோர், பொரோணுவ தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குருநாகல் கிரிந்திவெல, உடவெல கல்உடகந்தையில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கிருந்து சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது,

இருப்பிடத்தை விட்டு வெளியேற மாட்டோம்

மத்துகம வோகன் தோட்டம் கீழ்ப்பிரிவில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள 14 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் தங்கள் குடியிருப்புக்களைவிட்டு வெளியேறி தோட்ட வைத்தியசாலையில் சென்று தங்கியிருக்குமாறு கேட்டுக்கொண்டபோது “மண்சரிவு ஏற்பட்டு மண்ணோடு மண்ணாக புதையுண்டு போனாலும் குடியிருப்புக்களை விட்டு வெளியேறமாட்டோம்” என தோட்டக்குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

2012, 2013, 2014 ஆகிய காலப்பகுதிகளில் இங்கு ஏற்பட்ட மண்சரிவையடுத்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்து இப்பகுதியில் மேலும் மண்சரிவு அபாயம் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டு இங்கு வசித்துவரும் குடும்பங்களை வேறு இடத்துக்கு சென்று குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு 2014ம் ஆண்டு ஜீன் மாதம் கடிதம் மூலம் தோட்ட நிர்வாகத்துக்கு கடிதம் மூலம் ஆலோசனை வழங்கியிருந்தது.  

இதற்கி­ணங்க 100 நாள் ஆட்சியில் காணி ஒதுக்கப்பட்டு வீட்டுத் திட்டம் ஆரம்பித்து வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் குடியிருப்பாளர்கள் சுட்டிக்காட்டிய பாதுகாப்பான வசதியான இடத்துக்கு மாறாக தோட்ட நிர்வாகம் தெரிவு செய்திருந்த காணியை விரும்பாத குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து வீட்டுத்திட்டம் கைவிடப்பட்டது.

இதனையடுத்து இது தொடர்பாக அமைச்சர்களான பி. திகாம்பரம், மனோகணேசன், வீ.ராதாகிருஷ்ணன் மற்றும் ட்ரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி ஆகியோரின் கவனத்துக்கு கடிதம் மூலமும் தொலைபேசி மூலமும் பல தடவைகள் கொண்டு வந்தும் நேரில் சந்தித்து எடுத்துக் கூறிய போதிலும் இதுவரை எந்த ஒரு பலனும் கிட்டாது கைவிடப்பட்டு விட்டது.

மீரியபெத்த சம்பவத்தையடுத்து விழிப்படைந்த தோட்ட நிர்வாகம் இங்கு வசித்து வந்த குடும்பங்களை வெளியேற்றி பின்னர் மீண்டும் லயன் குடியிருப்புகளுக்கு திருப்பி அனுப்பியது. தற்பொழுது நிலவி வரும் காலநிலை காரணமாக அச்சமடைந்துள்ள தோட்ட நிர்வாகம் மீண்டும் வெளியேறுமாறு கேட்டுள்ளது.

காலநிலை மோசமடையும் போது வெளியேறு என்று கூறுவதும் காலநிலை வழமைக்குத் திரும்பியதும் மீண்டும் பழைய இடத்துக்கே போ என்று கூறுவதும் வாடிக்கையாகி விட்டது.
எங்களுக்கான வீட்டுத் திட்டத்தை அமைத்துக் கொடுத்தால் வெளியேறுவோம். அல்லாவிடின் மண்சரிவு ஏற்பட்டு மண்ணோடு மண்ணாக புதையுண்டு மடிந்து போனாலும் பரவாயில்லை. நாங்கள் வெளியேறப் போவதில்லை. மண்சரிவு ஏற்­பட்டு புதையுண்டு போகும் நிலை ஏற்படுமேயானால் அதற்கான முழுப் பொறுப்பையும் தோட்ட நிர்வாகம், தொழிற்சங்கங்கள், ட்ரஸ்ட் நிறுவனம், பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் மலையக தலைவர்களுமே ஏற்க வேண்டும்.

எனவே அத்தகையதொரு துரதிர்ஷ்ட நிலை ஏற்படும் முன்னர் மலையக புதிய கிராமம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி.திகாம்பரம் இது குறித்து விசேட கவனம் செலுத்தி வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைக்க துரித நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என ஆபத்தை எதிர்நோக்கியுள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Friday, May 20, 2016

இயற்கையின் பேரழிவினால் மக்களின் துயரம்

கேகாலை மாவட்டம் புளத்ஹோபிட்டிய களுபான தோட்டத்தில் மண்சரிவு அனர்த்தத்தில் சிக்குண்டு பலியானவர்கள் விபரம்

எஸ்.சிவராம் (40), ஜீ.நவின் (12), ஜீ.வினோஜ், எஸ்.பிரேமளாதேவி (23), சுஜந்தினி (19), கலைச்செல்வன் (27), டபிள்யூ. கதிரேசன் (53), செல்வராணி (56), ஆர். ராஜன் புஸ்பவதி (48), ஆர்.தீபா (19), அனுதராஜா தரணி (04), பார்வதி (68), பெரியசாமி (72), நிரஞ்சலா உள்ளிட்ட 14 பேரே புதையுண்டவர்களாவர்

இவர்களில் நேற்று முன்தினம் ஆறுமாதக் குழந்தையொன்றும் அக்குழந்தையின் தந்தையான கலைச்செல்வனும் மீட்கப்பட்டதுடன் மேலும் 12 சடலங்கள் மீட்கப்பட்டன
பாதிப்புக்குள்ளான 300 இற்கும்  அதிகமானோர் யக்கல வித்தியாலயத்திலும், லெவல தமிழ் மகாவித்தியாலயத்திலும், உந்துகொட சிங்க வித்தியாலத்திலும் , தன்னிமலை விகாரையிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டம் லிந்துலைசென்கூம்ஸ் nலிமிலியர் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 36 பேர் இடம்பெயர்ந்து அத்தோட்டத்தில் கொழுந்து மடுவத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2015ம் ஆண்டு பெய்த கடும் மழையினால் தொழிலாளர்களின் குடியிருப்புக்களில் ஏற்பட்ட வெடிப்புக்களால் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தோட்ட நிர்வாகமோ இத் தொழிலாளர்களின் பாதுகாப்புத் தொடர்பில் எந்தவித அக்கறை கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

மாவத்தகம பிரதேசத்தில் கண்டி குருனாகல் பிரதேசத்தில் மலையொன்று தாழிறங்கும் அபாயம் உள்ளதால் (மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருப்பதால); 35 குடும்பங்களைச் சேர்ந்தோர் அப்புறப்படுத்தப்பட்டு மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்திற்குட்பட்ட தெல்கன, ரங்கல பெரிய டிவிசனை சேர்ந்த 75 குடும்பங்கள் மண்சரிவு அனர்த்தம் காரணமாக நேற்றைய தினம் அப்பிரதேச வேன்சைட் தமிழ் மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இயற்கைப் பேரனர்த்தத்தினால் இலட்சக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளதுடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரிக்துள்ளது. இதேவேளை, ஆகக்குறைந்தது 173 பேர் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனால் 414,627 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.

அரநாயக்க, சாமசர மலை சரிந்து வருவதால்,  மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த படைவீரர்கள் மற்றும் பொலிஸாரும், பாதுகாப்பான பிரதேசங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அரநாயக்கவிலுள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த 135 வீடுகள் புதையுண்டுள்ளனவெனவும், அவ்வீடுகளில் வசித்தோரது 19 சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளனவெனவும் கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஜகத் மகேந்திர கூறினார்.

குறித்த கிராமங்களில் வசித்த 220 பேர் தொடர்பில் இதுவரை தகவல் இல்லை என்றும் குறித்த கிராமங்களைச் சேர்ந்தவர்களும் அயல் கிராமங்களைச் சேர்ந்தவர்களுமென சுமார் 1,700பேர், 9 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஜகத் மகேந்திர கூறினார். 

அரநாயக்க, போடாபே மலை மற்றும் ஜனபத மலை ஆகியனவும் மணிசரிவுக்கு உள்ளாகும் அபாயம்; உள்ளதாகவும் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்களைத் தொடர்ந்து அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகளை முன்னெடுத்து வருவதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். 

இரத்தோட்டை, பம்ரபகலவத்தையில் லயன் குடியிருப்பின் மீது, நேற்றுமாலை மரம் முறிந்து விழுந்ததில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென இரத்தோட்டை பிரதேச செயலாளர் ஜீ.பீ.விஜேபண்டார தெரிவித்துள்ளார்.

கம்பளை தொலஸ்பாகையில் பேரவில மலைவீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையால், அந்த பிரதேசத்தைச் ரேச்ந்த 195 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர், அங்கிருந்து வெளியேறமுடியாமல் சிக்கிக்கொண்டுள்ளதாக இஹலகோரள பிரதேசசெயலாளர் மங்கள விக்ரமராச்சி தெரிவிக்கின்றார். சுமார் 5 ஏக்கர் பிரதேசத்திலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளது என்றும், கிராமத்தில் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கு மாற்று வீதிகளை பயன்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

Thursday, May 19, 2016

மண்ணில் புதையுண்ட தொழிலாளர் வாழ்ந்த லயன் குடியிருப்புக்கள்

மாவனல்ல அரநாயக்க பகுதியில் நேற்றுமுன்தினம் 17-05-2016 அன்று மாலை சாமபுர என்ற மலை இடிந்து ஏற்பட்ட மண்சரிவினால் சிரிபுர, எலங்கபிட்டிய, பல்லேபாகே மூன்று கிராமங்கள் மண்ணில் புதையுண்டுள்ளன. ஏலங்கபிட்டிய மலை உச்சியில் அமைக்கப்பட்டிருந்த பௌத்த விகாரையே முதன்முதலில் மலை மேட்டுடன் சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால்  220 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாரிய மண்சரிவில் 66 வீடுகள் முற்றாக புதையுண்டுள்ளன. காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் சுமார் 150 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மண்ணில் புதையுண்டு சிக்கி மரணத்தவர்களின் 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 134 இற்கு மேற்பட்டோர் இதுவரை காணவில்லையென தெரிவிக்கப்படுகிறது. 
கேகாலை மாவட்டம் புளத்ஹோபிட்டிய பகுதியில் களுபஹனவத்த தோட்டத்தில்   ஏற்பட்ட மண்சரிவினால் தொழிலாளர்கள் ஆறு லயன் குடியிருப்புக்கள் மண்சரிவில்; மூழ்கியுள்ளதால் 17 பேர் புதையுண்டுள்ளனர். இவர்களில் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய 14 பேர் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மண் சரிவினால் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாகவும் நேற்றைய தினமும் கடும் மழையினால் மீட்பு பணியாளர்கள் தங்கள் பணியை தொடர முடியாதிருந்ததாக இடர் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. மீட்பு பணியாளர்கள் அப்பிரதேசங்களுக்கு செல்வதிலேயே சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மீட்பு பணியில் ஈடுபட்டிருந்திருந்தவேளை அம்மலையிலிருந்து நீர் மற்றும் கற்பாறைகள், மண்திட்டுக்கள் வந்துகொண்டிருப்பதால் மீட்பு பணிகளை முன்னெடுக்க முடியவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலைமைகள் குறையவில்லை என தெரிவித்துள்ள என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்கள் இன்னும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.


நாட்டின் ஏனைய பகுதிகளை விடவும் நேற்றைய தினம் மலையகத்தில் கடும் மழை பெய்தது. இதன்காரணமாக பல பிரசேதங்கள் நாரில் மூழ்கியதுடன் மண்சரிவு அனர்த்தம் பல இடங்களுக்கு ஏற்பட்டிருந்தது. குறிப்பாக நேற்று முன் தினம் கண்டி மாவட்டத்தில் கடுகண்ணாவ பிரதேத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு அனர்த்தத்தினால்  ஆறு பேர் மண்சரிவில் சிக்குண்டுள்ளனர். அதேபோன்று தெல்தோட்ட, நாவலப்பிட்டிய, கலகெதர போன்ற பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் 25 குடும்பங்களை சேர்ந்த 2800 பேர் மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர். 

கடுகண்ணாவ இலுக்குவத்தை மண்சரிவில் சிக்குண்டு புதையுண்ட இரண்டு வீடுகளில் இருந்த ஆறு பேரில் ஐந்து பேரின் சடலங்கள்; மீட்கப்படடுள்ளன. இந்நி­லையில் இருபது வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் சடலம்; மீட்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது. சிக்குண்டவர்களில் இரு பெண்களும் சிறுவர்கள் மூவரும் இளைஞர் ஒருவர் எனத் தெரிகிறது.

களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, டெல்கீத் தோட்டம், இலுப்புவத்த டிவிசனைத் சேர்ந்த 15 குடும்பங்கள், மத்துகம வோகன் தோட்ட கீழ்ப்பிரிவை சேர்ந்த 15 குடும்பங்களும் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். தோட்ட நிர்வாகம் இவர்களை அக் குடியிருப்புக்களில் இருந்து வெளியேறி தோட்ட ஆலயங்களிலும், தோட்ட வைத்தியசாலைகளிலும் தங்குமாறு கேட்டுக்கொண்டதையடுத்து அவர்கள் அங்கு தங்கியுள்ளனர்.

புசல்லாவ பிரதேசத்தில் கடுமையான மழையினால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது கம்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட தெல்பிட்டிய கலஹா பிரதேசத்தில் மண்சரிவினால் 05 வீடுகள் பாதிப்படைந்துள்ளன. புசல்லாவ சோகம தோட்ட கீழ்ப்பிரிவில் நில வெடிப்பு காரணமாக வவுஹபிட்டிய, பிட்டகந்த பிரதேசத்தில் மண்சரிவு, வெள்ளம் அபாயம் காரணமாக பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து கலஹா சனசமூக நிலையத்திலும் புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியிலும் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறான நிலைமையில் கம்பளைக்கும் நுவரெலியாவுக்கும் இடையில் பிரதான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. தெல்பிட்டிய அட்டபாகே, சங்குவாரி, இரட்டைபாதை, பிட்டகந்த, புசல்லாவ, ஹெல்பொட, ரம்பொட ஆகிய பகுதிகளில் மண் திட்டுக்கள் சரிந்து வீழ்ந்திருந்ததையும் கற்பாறைகள் வீழ்ந்திருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. 

Tuesday, May 17, 2016

தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைக்கும் நடவடிக்கை தற்கொலைக்கு ஒப்பானது

1000 ரூபா சம்பள உயர்வுக்காக தொழிலாளர்களை போராட அழைப்பது வேடிக்கையானது மட்டுமல்ல அது கம்பனிகளுக்கு துணை போகும் செயலாகும் என மக்கள் தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.  

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது கூட்டு ஒப்பந்தம் சட்டப்படி இரத்துச் செய்யப்படாலம் இருக்கும் இந்நிலையில் நாளாந்த சம்பளமாக 1000 ரூபா வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதாகும். 

இந்தப்பின்னணியில் கூட்டு ஒப்பந்தத்துக்கு வெளியில் நாளாந்த 100 ரூபா மாதாந்தம் 2500 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைத்திருப்பது வேடிக்கையானது என்பதுடன் 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கையை காட்டிக்கொடுத்து பெருந்தோட்ட கம்பனிக்கு துணை போகும் நடவடிக்கையாகும். 

1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கையை இ.தொ.கா முன்மொழிந்திருந்தாலும் அது அனைத்துப் பெருந்தோட்டக் தொழிலாளர்களின் கோரிக்கையாகியுள்ளது. நியாயமான அக்கோரிக்கையை நாளாந்தம் ரூபா 100 என்ற கோரிக்கைக்கு தாத்துவது நேர்மையான அணுகுமுறையாகாது. 

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்ட நிலையில் தனியார் ஊழியர்களுக்கு 2,500 ரூபா வழங்கும்படி தனி;யார் துறையை கட்டாயப்படுத்துவதற்காக 2016ம் ஆண்டு 4ம் இல நிவாரணப்படி சட்டம் அமுலில் உள்ளது. அதன் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென தொழில் அமைச்சர் ஜோன் செனிவிரத்ன கூற காரணம் தோட்டத் தொழிலாளிகளுக்கு கூட்டு ஒப்பந்த அடிப்படையில் சம்பள உயர்வு தொடர்பில் இணக்கம் காணப்படாமைகும். 

நாளாந்தம் 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கப் போவதாக தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைப்பது வேடிக்கையானது. இதுவொரு வகையில் தொழிலாளர்களின் 1000 ரூபா கோரிக்கையை காட்டிக்கொடுத்துவ்pட்டு பெருந்தோட்டக் கம்பனிக்கு துணைபோவதாகும். இது வாழ்க்கை செலவு படியாக ரூ 17.50 வேண்டும் என போராடிய போது வெறும் 10 சதம் போதும் இணங்கிய காட்டிக்கொடுப்பு வரலாற்றை நினைவுப்படுத்துகிறது. 

ரூபா 1000 நாளாந்த சம்பளமாக இ.தொ.கா உட்பட கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்காது வாய் சவாடல்களை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

ஒரு கட்டத்தில் ரூபாய் 800 அதிகமாக வழங்க கம்பனிகளுக்கு உடன்பாடு இருந்த நிலையில் 2014ம் சட்டத்தின் படியான நாளாந்தம் ரூபா 100 சம்பள உயர்வுக்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் போராடப் போவதுடன் அதற்கு தொழிலாளர்களை அழைப்பது வேடிக்கையானது என்பதுடன் அவர்களை தற்கொலைக்கு தள்ளுவதற்கு ஒப்பானதாகும் என்று கூறியுள்ளார். 

நன்றி- தமிழ் மிரர்

சீரற்ற காலநிலை தோட்டத்தொழிலாளர் குடியிருப்புக்கள் மண்ணில் புதையுண்டன

சீரற்ற காலநிலையால் மலையகத்தில் மண்சரிவும், போக்குவரத்து துண்டிப்பும் வெள்ளப்பெருக்கும் காணப்படுகின்றன.  17-05-2016 செவ்வாய்கிழமை மாலைவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி மலையகத்தில் கடுகண்ணாவ பிரதேசத்தில் 06 பேர் மண்ணில் புதையுண்டுள்ளனர். இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 16-05-2016 அன்று காலையில் தெஹியோவிட்ட பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேர் புதையுண்டநிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.  

புளத்ஹோபிட்டிய களுபஹனவத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் 17 பேர் காணாமற் போயுள்ளதாகவும் இப்பெருந்தோட்ட மக்கள் குடியிருப்புக்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக கேகாலை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

அதேபோல் இரத்தினபுரி பிரதேசத்தில் இம்புல்பே என்னும் இடத்தில் மண்சரிவினால் ஒருவர் உயரிழந்துள்ளார். மேலும் ஒருவர் எஹலியகொட  பிரதேசத்தில் மண்ணில் புதையுண்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கம்பளை அட்டபாகை மொரகொல்ல தனியார் தோட்டத்தில் நான்கு வீடுகளைக் கொண்ட லயன் குடியிருப்பு மண்ணில் புதையுண்டுள்ளதாகவும் இக்குடியிருப்புக்களில் குடியிருந்த நான்கு குடும்பங்களைச்சேர்ந்த 25 பேர் கம்பளை கலத்த சனசமூக நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இதேபோன்று கண்டி தெல்தோட்ட பகுதியில்17-05-2016 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் லயன் அறைக்குள் வெடிப்பு ஏற்பட்டதால் ஊற்று நீர் அதிகமாக வரத் தொடங்கியுள்ளது 13 குடும்பங்களைச் சேர்ந்த 59 பேர் பாடசாலை கட்;டிடம் ஒன்றில் தங்கியுள்ளனர். தெல்தோட்ட கலஹா பிரதான வீதியில் தோட்ட பிரதேசமொன்றின் வீதியில் பெரும் மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா பிரதேச சபையின் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிப்பகலை தோட்டத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தினால் லிப்பகலை தோட்ட 10 குடும்பங்களைச் சார்ந்த லயன் குடியிருப்பில் மக்கள் அச்சமடைந்த நிலையில் மாற்று இடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாகத் தெரியவருகிறது. 

தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்களது சிறு வருமானத்திற்காக மேற்கொண்டு வந்த காய்கறி செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் விவசாய பயிர்கள் வெள்ளத்தால் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் அக்கரப்பத்தனை, டயகம, ஹோல்புரூக் போன்ற பகுதிகளில் ஆற்றோரங்களில் விவசாயம் செய்தவர்களுக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளனர். 

ஹட்டன் ரொத்தஸ் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அப்பிரதேசத்தில் ஐந்து குடியிருப்பாளர்களை உடனடியாக அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு கட்டிட அகழ்வாராய்ச்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
நாவலப்பிட்டி கினிகத்தேன பிரதான வீதியில் பாதை சரிந்து வீழ்ந்துள்ளது. அப்பகுதியில் ஒரு வழிபாதையாக ஏற்படுத்தப்பட்டு சாரதிகள் மிகக் கவனவாக வாகனத்தை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது. 

கோலை மாவட்டத்தில் ரூவான்வெல, அங்குருவெல, கரவனெல்ல, தல்துவ ஆகிய பகுதிகளில் வெள்ளம் இன்னமும் தேங்கிய நிலையில் காணப்படுகின்றது. 

இதேவேளை அரநாயக்கா மாவனெல்ல எரங்கபிட்டிய, எனும் பகுதியில் கிராமமொன்றில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சுமார் 200 இற்கு மேற்பட்ட வீடுகள் பாhதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. பாதுகாப்புக்கருதி அப்பிரதேசத்துக்கு உதவியாளர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அறியகிடைக்கிறது.  

Friday, May 13, 2016

ரூ.2,500 இம்முறையும் இல்லை

அரசாங்கமானது, தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம், 2,500 ரூபாயை பெற்றுத்தருவதாகவும் அது இம்மாத சம்பளத்துடன் இணைத்துகொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டப்போதிலும் அத்தொகையானது இம்மாத சம்பள பட்டியலிலும் சேர்க்கப்படவில்லை என தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

விலைவாசி அதிகரிப்பு மற்றும் வரிச்சுமை காரணமாக தாம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்கள்,   'ஹட்டன் டன்பார் மைதானத்தில் இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் தமிழ் முற்போக்கு கூட்டணியில்; அங்கம்வகிக்கும் மலையக தலைவர்கள் 2,500 ரூபாய் சம்பள உயர்வை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளதாகவும் இதற்கு தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ண இணக்கம் தெரிவித்ததாகவும் கூறினர். அவர்கள் இதனைக் கூறி இன்று 5 மாதங்களாகிவிட்டன. ஆனால், தொழிலாளர்களின் சம்பளப் பட்டியலில் அந்த 2,500 ரூபாய் இதுவரை சேர்கப்படவில்லை' என மேலும் கூறினர். '

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது பங்குக்கு 1,000 ரூபாயை பெற்று கொடுப்பதாக கூறியது. அந்த 1,000 ரூபாயும் இதுவரை கிடைக்கவில்லை. உலக சந்தையில் தேயிலையின் விலை குறைந்ததால்தான் சம்பள பேச்சு இழுத்தடிக்கப்படுவதாக ஒருசாரார் கூறுகின்றனர். இந்நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஒவ்வொருதரப்பினரும் ஒவ்வொரு கருத்தை கூறிவருகின்றனர். ஊடகங்களில் அறிக்கை விடுகின்றனர். எனவே, மலையக தலைமைகள்  அறிக்கை அரசியலை விடுத்து  தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தை பெற்றுகொடுக்க முன்வர வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர் 

மலையகத்தில் விழிப்புணர்வு செயற்திட்டம்


ஜனாதிபதி மதுபான நிவாரணப் பிரிவின் கீழ் மதுபானம், சிகரட் உட்பட மது பாவனையிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு செயற்திட்டம், கொத்மலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அனைத்து அரச ஊழியர்களுக்கும் தெளிவுபடுத்தி அவர்களூடாக மக்களுக்கு அறிவுறுத்தும் செயற்திட்டம் 11-05-2016 கொத்மலை நகர மைதானத்தில் நடைபெற்றது. 

இதற்கு ஜனாதிபதி செயலகத்தின் மதுபான நிவாரணப் பிரிவின் அதிகாரிகள், கொத்மலை பிரதேச செயலாளர், மதுவரி திணைக்களம், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை, பொலிஸ் அதிகாரிகள், மதத் தலைவர்கள், கல்வி அதிகாரிகள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். 

மதுபானம், புகைப்பிடித்தல் காரணமாக ஏற்படும் தீங்குகள் குறித்து அதிதிகளின் உரையும் வீதி நாடகமும் நடைபெற்றது. 

தொடர்ந்து அரச ஊழியர்களினால் கொத்மலை சந்தைத் தொகுதி வர்த்தக நிலையங்களில் மது ஒழிப்பு தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன், பொது மக்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றும் நடைபெற்றது. 

இந்த ஊர்வலம் கொத்மலை நகரில் ஆரம்பித்து தவலந்தன்ன நகரம் வரை சென்றது. 

இச் செயற்திட்டம் போதை தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலக மக்கள் தொடர்பு அதிகாரி நளின் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. 

சம்பளத்தை அதிகரிக்க கோரி ஹட்டனில் கையெழுத்து பெறும் நடவடிக்கை


பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளத்தை அதிகரித்து தருமாறு கோரி ஹட்டனில் கையெழுத்து பெறும் நடவடிக்கை ஒன்று இடம்பெறவுள்ளது. 

இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 

பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு விரைவில் தீர்மானமொன்றை பெற்றுத் தருமாறு கோரியே இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்புச் செயலாளர் பெரியசாமி பிரதீபன் தலைமையில் எதிர்வரும் 15ம் திகதி காலை 10.00 மணிக்கு ஹட்டன் பஸ் நிலையத்தில் இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது. 

இதேவேளை, தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட கூட்டு உடன்படிக்கை நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்த போதிலும் இதுவரையில் தொழிலாளர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பும் வழங்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எனவே பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளத்தை அதிகரிக்கும் நோக்குடன் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலார்களிடம் இருந்து கையொப்பங்களை சேகரிக்குமுகமாக இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.