Saturday, July 4, 2009

தீர்க்கமான முடிவு இன்றேல் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு விடயத்தில் தீர்க்கமான முடிவு கிடைக்காததால் தொழிலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராகிவருதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை பொறுமை காத்து வந்த தொழிலாளர்கள் பெருந்தோட்டக் கம்பனிகளினதும், கூட்டு ஒப்பந்த தொழிற் சங்கங்களினதும் அலட்சியப் போக்கை கண்டித்து பல்வேறு வகையான தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமீளாய்வு பேச்சுவார்த்தையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு கோரி தோட்டத் தொழிலாளர்களை அணிதிரட்டி தோட்டக் கம்பனிகளுக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்லாமல் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களை அம்பலப்படுத்த வேண்டிய நிலைக்கும் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி தள்ளப்பட்டுள்ளது என்றார்

No comments: