Tuesday, February 26, 2019

தமிழ் முற்போக்குக் கூட்டணியும் ஏமாற்றத்தையே பெற்றுக்கொடுத்துள்ளது - அத்தாவுட செனிவிரட்ன

வரவு செலவு திட்டத்தினூடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாவை பெற்றுக்கொடுத்துள்ளோம் என அமைச்சர் திகாம்பரம் கூறியிருப்பதானது தொழிலாளர்களுக்கு அவர்கள் ஏமாற்றத்தையே பெற்றுக்கொடுத்துள்ளார் என முன்னார் அமைச்சர் அத்தாவுட செனிவிரட்ன தெரிவித்துள்ளார். 

அவர் இது குறித்துத் தெரிவிக்கையில் தோட்த் தொழிலாளர்களுக்கு இதுவரை காலமும கிடைத்து வந்த உற்பத்தித்திறன் கொடுப்பனவு 160 ரூபாய், வருகைக்கான கொடுப்பனவு 60 ரூபாவும் இம் முறை அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ரணில் விக்கிரமசிங்கா பணக்கார வர்க்கத்தினரை பாதுகாக்க முற்படுவது தொழிலாளர்களுக்கு செய்யும் துரோகமாகும். இனிமேலாவது மலையக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  

பெருந்தோட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீடமைப்புத்திட்டம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான ஆட்சியில் நான் பெருந்தோட்டத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு 07 பேர்ச் காணியில் வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்த்தைதான் இன்றைய அரசாங்கமும்முன்னெடுத்துச் செல்கிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில்தான் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக திகாம்பரம் கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை என்றார். 

தொழிலாளர்களுக்கு 50 ரூபா பெற்றுக் கொடுத்தது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சாதனை என கூறுகின்றவர்கள் சார்பில் பாராளுமன்றத்தில் 06 உறுப்பினர்கள் இருந்த போதிலும் கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உற்பத்தித்திறன் கொடுப்பனவு 160 ரூபா, வருகைக்கான கொடுப்பனவு 60 ரூபா இல்லாமல் செய்யப்பட்டன. தொழிலாளர்களுக்கு 200 ரூபா வழங்காவிட்டால் அரசுக்கு வழங்கிவரும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும் எனவும், அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்யப்போவதாகவும் தெரிவித்தனர். வரவு செலவுத்திட்டத்தில் அமைச்சர் நவின் திசாநாயக்கா 50 ரூபா  வழங்கப்படும் என தெரிவித்ததும் அமைச்சர் பதவி குறித்து மௌனம் காத்தனர். இவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறினாலும் அதனால் அரசுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்பதும் இவர்கள் ஒருநாளும் அரசை விட்டு வெளியேறமாட்டார்கள் என்பது பிரதமர் ரணிலுக்கு நன்றாகவே தெரியும். அமைச்சின் சுகபோக வாழ்க்கையை இவர்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பது அப்பட்டமான உண்மை என குறிப்பிட்டார்