Tuesday, November 17, 2015

தொழிற்­சங்க பலமும் பேரம் பேசும் சக்­தி­யுமே போதுமானது

பெருந்­தோட்ட மக்­க­ளுக்கு உரிய சம்­பள உயர்­வினை பெற்றுக் கொடுப்­ப­தற்கு அர­சியல் பலம் அவ­சி­ய­மில்லை. தொழிற்­சங்க பலமும் பேரம் பேசும் சக்­தி­யுமே தேவை. அமரர் சௌமிய மூர்த்தி தொண்­டமான் இத­னையே கையாண்டு சாதனை படைத்தார் என்று சௌமிய இளைஞர் நிதி­யத்தின் தலைவர் எஸ்.பி. அந்­தோ­னி­முத்து தெரி­வித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், கூட்டு ஒப்­பந்த நவ­டிக்­கைகள் தற்­போது இழு­ப­றி­யான தன்­மை­யினை அடைந்­தி­ருக்­கின்­றன. தொழி­லா­ளர்கள் பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு முகம் கொடுத்து வரு­கின்ற நிலையில் உட­ன­டி­யாக சம்­பள உயர்­வினை பெற்றுக் கொடுக்க வேண்­டிய தேவை மேலெ­ழுந்­துள்­ளது. எனினும் இது சாத்­தி­யப்­ப­டாமல் போயி­ருக்­கி­றது. 1970 முதல் 77 வரை­யான கால­கட்­டத்தில் அமரர் தொண்­டமான் எவ்­வி­த­மான அர­சியல் பலமோ அந்­தஸ்தோ இல்­லாது பல்­வேறு தொழிற்­சங்க போராட்­டங்­க­ளையும் நடத்தி மலை­யக மக்­களின் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுத்தார். துன்ப துய­ரங்­களை தன­தாக்கிக் கொண்டு துணி­வுடன் செயற்­பட்டார். அக்­கா­லப்­ப­கு­தியில் பெருந்­தோட்ட மக்கள் சொல்­லொணா துன்­பங்­களை அனு­ப­வித்துக் கொண்­டி­ருந்த நிலையில் முழு மலை­ய­கமும் ஸ்தம்­பிக்கும் வகையில் ஒரு பாரிய வேலை நிறுத்தப் போராட்­டத்தை தலை­மை­யேற்று நடத்­தினார்.
 
சாத்­வீக போராட்­டங்­களை நடத்­திய அவ­ருக்கு 1977இல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராகும் வாய்ப்பு கிடைத்­தது. அமரர் தொண்­டமான் அர­சி­யலில் கிங் மேற்­க­ராக திகழ்ந்தார். அவர் நடத்­திய பிரார்த்­தனை ரீதி­யி­லான தொழிற்­சங்க போராட்­டமே பெருந்­தோட்ட மக்­க­ளது பிரஜா உரி­மைக்கும் சம்­பள உயர்வு மற்றும் சம­சம்­ப­ளத்­திற்கும் வித்­திட்­டது எனலாம்.
 
உரிமை இல்­லா­தி­ருந்த மலை­யக சமூ­கத்­திற்கு உரி­மை­க­ளையும், முக­வ­ரி­யையும் தொண்­ட­மானே பெற்றுக் கொடுத்தார் என்றால் மிகையா­காது. மலை­யக மக்கள் தலை­நி­மிர்ந்து வாழ்­வ­தற்கு அவரே உந்து சக்­தி­யாக இருந்தார் என்­பதே உண்­மை­யாகும்.
 
அர­சியல் பலம் இல்­லாத போதும் தொழிற்­சங்க பலம், பேரம் பேசும் சக்தி என்­பன மலை­யக மக்கள் பல்­வேறு உரி­மை­க­ளையும் பெற்றுக் கொள்ள வழி­வ­குத்­தது. இத்­த­கைய செயற்­பா­டுகள் ஒரு முன்­னு­தா­ர­ண­மா­கவும் அமைந்­தது. தொழி­லாளர் சம்­பள உயர்வு விட­யத்­திலும் அமரர் தொண்­ட­மானின் காய் நகர்த்­தல்­களை முன்­னி­றுத்தி செயற்­பா­டு­களை மேற்­கொள்ள வேண்டும்.
 
இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு தடவை கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் கம்­ப­னிகள் நட்டம் ஏற்­பட்டு விட்டதாக கூக்குரல் இடுவதனை விடுத்து இலாபம் தரும் நோக்கில் கம்பனிகளின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். மேல்மட்ட செலவுகளை கட்டுப்படுத்தினால் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வினை பெற்றுக்கொடுப்பது ஒன்றும் கம்பனிகளுக்கு கடினமான விடயமல்ல என்றார்.

இ.தொ.கா வை விமர்சிப்பதிலேயே காலம் கழிகிறது

அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ரா­கிய பின்னர் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு அதிக சம்­ப­ளத்தை பெற்­றுத்­த­ரு­வ­தாக சிலர் கூறினர். அவ்­வாறு கூறி­ய­வர்­களே தற்­போது காணாமல் போயுள்­ள­தாக ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான் தெரி­வித்­துள்ளார். அமைச்சு அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு பேசு­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் தொடர்ந்து பேசு­கையில்.
 
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு நாட்­சம்­ப­ளத்தை ஆயிரம் ரூபா­வாக அதி­க­ரித்துக் கேட்­ட­வர்கள் நாமே­. நாம் மக்­க­ளுடன் தான் இருக்­கின்­றோ­மே­யன்றி எங்கும் காணாமல் போய்­வி­ட­வில்லை. ஆனால் தேர்தல் காலத்தில் தனக்கு வாக்­க­ளித்து வெற்றி பெற­வைத்து தான் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ரானால் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளி­னது நாட்­சம்­ப­ளத்­தை அதி­க­ரித்து பெற்­றுக்­கொ­டுப்­பே­னென்று மலை­யக அமைச்சர் ஒருவர் கூறி­யி­ருந்தார்.
 
அவர் பொய்­யான வாக்­கு­று­தி­களை வழங்கி மக்­களை ஏமாற்­றி­யுள்ளார். அவர் அமைச்­ச­ரா­கிய பின்னர். தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள அதி­க­ரிப்பு குறித்து பேசு­வதே கிடை­யாது. அவர் தான் தற்­போது காணாமல் போயுள்ளார். தோட்டத் தொழி­லா­ளர்க­ளுக்கு எவ்­வ­ளவு, சம்­பள உயர்­வென்­றா­வது குறிப்­பிட்ட அமைச்­ச­ருக்கு அறி­விக்க முடி­கின்­றதா?
 
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­பள உயர்வு கேட்­டது இ.தொ.கா. வேயாகும். ற்­போ­தைய வாழ்­க்கைச்­செ­லவு உயர்­வுக்கு அமைய கோரப்­பட்ட ஆயிரம் ரூபா சம்­பள உயர்வும் போதாத நிலையே காணப்­ப­டு­கின்­றது. மா மற்றும் பருப்பு உள்­ளிட்ட பொருட்­களின் விலை உயர்­வையும் இங்கு குறிப்­பி­டலாம்.
 
அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ரா­கி­யதும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாகக் கூறிய கூற்று தற்­போது என்­ன­வா­யிற்று? ஒரு வரு­டத்தில் இரு­பது வீடு­களை மட்டும் கட்­டி­விட்டு, இரு­பத்து மூவா­யிரம் வீடு­களை, மலை­ய­கத்தில் நிரு­மா­ணித்த இ.தொ.கா. வை குறை­கூறி விமர்­சிப்­ப­தற்கு எவ­ருக்கும் அரு­கதை கிடை­யாது.
 
மலை­ய­கத்தில் அமைச்­சர்­க­ளா­கியும் கூட, மலை­யக மக்­களின் மேம்­பா­டுகள் குறித்து செயற்­ப­டாமல், எதற்­கெ­டுத்­தாலும் இ.தொ.கா. வை விமர்­சிப்­ப­தி­லேயே அவர்கள் காலத்தை கழித்து வரு­கின்­றனர்.
 
இ.தொ.கா. சார்பில் மத்­திய அரசில் அமைச்­சர்­க­ளாக இல்­லாத போதிலும் தோட்டத் தொழி­லா­ளர்களின் மேம்­பாடு விட­யத்தில், இயன்­ற­வ­ரை­யி­லான சேவை­களை மேற்­கொண்டு வரு­கி­ன­்றது. இந்­நி­லையில் மலை­ய­கத்தில் அமைச்­சர்­க­ளாக இருப்­ப­வர்கள் தமது இய­லா­மையை உணர்ந்து வெட்­கப்­படல் வேண்டும்.
 
மலை­யக அமைச்­சர்­க­ளாக இருக்கும் இவர்கள் தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்­கான சம்­பள உயர்வு தொடர்­பாக எத்­தனை போராட்­டங்­களை நடத்­தி­னார்கள் என்­பது கேள்வி குறி­ய­தாகும். இத்தகைய நிலையை கைவிட்டு தோட்டத்தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களை அவர்கள் முன்னெடுக்க பழகிக்கொள்ளல் வேண்டும்.
 
மக்களுக்கு சேவை செய்ய இந்த அமைச்சர்களுக்கு திராணியில்லாவிட்டால் அந்த அமைச்சர் பதவியினால் எத்தகைய பயனும் கிடையாது என்பதனையும் உணர வேண்டும் என்றார்.

நேபாளத்தைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்துக

மோடி அரசாங்கம், நேபாளத்துடன் மேற்கொண்டுள்ள மோதல் போக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய - நேபாள உறவில் விரிசலை ஏற் படுத்தி இருக்கிறது. பாஜக அரசாங்கம், செப்டம்பர் 20ஆம் தேதி, நேபாளத்தில் பிரகடனம் செய்யப்பட்ட அரசமைப்புச் சட்டத் திற்கு எதிர்மறையான அணுகுமுறையைப் பின்பற்றத் தொடங்கியபின், மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது அதிகரித்திருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக, இந்தியாவிலிருந்து நேபாளம் செல்லும் அனைத்துப் பாதைகளும் அடைக்கப்பட்டிருக் கின்றன. நேபாளம், தன்னுடைய அனைத்து அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் வர்த்தகத்தையும் இந்தியா வழியாகத்தான் செய்து வந்தது. மோடி அரசாங்கத்தால் தூக்கிப்பிடிக்கப்பட்டுள்ள மாதேசி கிளர்ச்சி காரணமாக, ராக்சால் - பிர்குஞ்ச் குறுக்குச்சாலையும் மற்றும் பல பாதைகளும் அடைக்கப்பட்டுவிட்டன. இது அத்தியாவசியப் பொருள்கள் மற் றும் எரிபொருள் பற்றாக்குறையை கடுமையாக ஏற்படுத்தி இருக்கிறது.

நேபா ளம் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டபின், அப்பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் புனர்நிர் மாண வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். சாலைகள் அடைக்கப்பட்டதால் புனர்நிர் மாண வேலைகளில் ஈடுபட்ட மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குளிர்காலம் வருவதற்குள்ளாகவே ரெடிமேட் வீடுகளைக் கட்டிட வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மலைப்பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்துவந்த ஹெலிகாப்டர் களுக்குப் போதிய எரிபொருள் கிடைக்காத தால் அவற்றின் இயக்கமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் சமையலுக்கான எரிபொருள் கிடைக் காததால், காட்டு மரங்களை வெட்டி விறகுகளாகப் பயன்படுத்துகிறார்கள். இது வனத்தையே அழிக்கக்கூடிய அளவிற்கு இட்டுச்சென்று கொண்டிருக்கிறது. மாதேசி கிளர்ச்சியால்தான் சாலைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன என்றும், அவ்வாறு சாலைகள் அடைக்கப் பட்டிருப்பதற்கும், இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்கிற இந்திய அரசாங்கத்தின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே யான எல்லைப் பகுதிகளில் போக்கு வரத்து இயல்பாக நடந்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று இந்திய அரசின் சார்பில் இதுவரை ஓர் அறிக்கை கூட வெளியிடப்படவில்லை. இருநாடுகளுக்கும் இடையே போக்கு வரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளப்பட்டதாகவும் தெரியவில்லை. உண்மையில், கிளர்ச்சிகள் எதுவும் நடைபெறாத கிழக்கு நேபாள எல்லையில்கூட சாலைகளை அடைத்திட இந்திய அரசுஅதிகாரப்பூர்வமற்ற முறையில் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்ப தாகக் கூறப்படுகிறது.நேபாளத்தில் அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்ததற்குப்பின்னர், கே. பி. சர்மா ஒலி பிரதமராகப் பொறுப்பேற்றதை அடுத்து, புதிய அரசாங்கம் நேபாளத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, நேபாளத் துணைப் பிரதமர்தில்லிக்கு விஜயம் செய்தார். இந்திய அயல்விவகாரங்கள் துறை அமைச்சருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியபோது, கிழக்குப் பகுதியில் சில குறுக்குச் சாலை கள் போக்குவரத்திற்காக, திறந்துவிடப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் இவரது வேண்டுகோளுக்கு இந்தியாவின் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித பதிலும் இல்லை. மாதேசி கிளர்ச்சியை ஆதரிப்பதில் இந்திய அரசாங்கம் எவ்விதத் தயக்கமும் காட்டவில்லை. மாதேசி கிளர்ச்சிக் குழுவினர் நரேந்திர மோடி மற்றும் இந்தியஅரசாங்கத்தின் ஆதரவினை வெளிப் படையாகவே கோரி வருகின்றனர்.

அக்டோபரின் கடைசி வாரத்தில், மாதேசி தலைவர்களின் தூதுக்குழுவினர் தில் லிக்கு விஜயம் செய்திருந்தனர். இது, நேபாளத்தின் உள் விவகாரங்களில் பகிரங்க மாகவே தலையிடும் விஷயமாகும். பிர்குஞ்ச் பகுதியிலிருந்து கிளர்ச்சியா ளர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று நேபாள அதிகாரிகள் கோரியபோது, .இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, போலீஸ் துப்பாக்கிச்சூடு நடைபெறுவதற்கு இட்டுச்சென்றது. இதில்இந்திய சிறுவன் ஒருவன் இறந்தான். கிளர்ச்சியில் ஈடுபட்ட சில இந்தியர்களைக் கைது செய்திருப்பதாக, நேபாள அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இந்திய அரசாங்கத்தின் மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை இந்திய அயல்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கைஅம்பலப் படுத்திவிட்டது. அவர் அந்தஅறிக்கையில், “நேபாளத்தை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் அரசியல் முக்கியத்துவம் உடையவைகளாகும். அவற்றை வலுக்கட்டாயமாகத் தீர்த்திட முடியாது. தற்போதைய மோதலுக்குக் கார ணங்களாக அமைந்துள்ளவை குறித்து, நேபாள அர சாங்கம் உண்மையாகவும், வலுவாகவும் தீர்மானிக்க வேண்டியது அவசியமாகும்.’’ இந்தியா ஆதரிக்கும் மாதேசிகளின் கோரிக்கையை நேபாளம் அங்கீகரிக்க வேண்டியது அவசியம் என்று இந்தியா நேபாளத்தின் நெற்றியில் துப்பாக் கியை வைத்து மிரட்டும் செயலே இது வன்றி வேறல்ல. இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அனைத்து சாலைகளையும் அடைத்து வைத்திருப்பது, நேபாள மக்களின் மத்தியில் கடும் எரிச்சலை ஏற் படுத்தி இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராகமக்களில் பெரும்பான்மையோர் ஆத்திரப் படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேபாள அரசாங்கத்தையும் அதன் அரசி யல் நிறுவனத்தையும் மிரட்டி அடக்க மோடி அரசாங்கம் முரட்டுத்தனமாக மேற் கொண்டுள்ள முயற்சிகளுக்கு எதிராக நேபாளத்தில் இயங்கும் அனைத்துக் கட்சிகளும் கட்சி வித்தியாசமின்றி ஒன்று பட்டுள்ளன. இதனால் நேபாளம் சீனாவைஅணுக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி யுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஓர்ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, திபெத்திலிருந்து தரைமார்க்கம் வழியாக சீனா 1000 மெட்ரிக் டன் பெட்ரோல் வழங்க ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்தியாஅனைத்து சாலைகளையும் அடைத்து வைத்திருப்பது குறித்து, நேபாள அயல்துறை அமைச்சர் ஐ.நா.அமைப்பிடம் முறையிட்டிருக்கிறார். நேபாள மக்கள் சாலைகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதன் காரண மாக எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து சார்க் நாடுகள் அனைத்தும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன. நேபாளம் குறித்த மோடி அரசாங்கத்தின் அணுகுமுறை ஓர் அரைவேக்காட் டுத் தனமான ஒன்று என்று சொல்வதற் கில்லை. இந்தப் பிராந்தியத்தில் தான் ஒரு தேசிய வெறி கொண்ட பெரிய வல்லரசு நாடு என்று காட்டிக்கொள்வதற்காக, மோடி அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள் கிறது. மேலும் நேபாள அரசியல் நிர்ணயசபை, நேபாளத்தை ஓர் மதச்சார்பற்ற குடியரசு என்று பிரகடனம் செய்ததற் காக, ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரங்கள் நேபாள அரசை பகிரங்கமாகவே அவமதித்துக் கொண்டிருக்கின்றன. நரேந்திர மோடி யும், பாஜக அரசாங்கமும் மாதேசிகளின் ஆதரவினைப் பெறுவதற்காக நேபாள அர சைப் பகைத்துக்கொள்ளவும் தயாராகவே இருக்கின்றன. இதன்மூலம் பீகாரில் வாழும் மாதேசிகளின் ஆதரவினைப் பெற்று தேர்தலில் வென்றுவிடலாம் என் பது பாஜகவின் எண்ணம். ஆனால் அது நடக்கவில்லை.தெற்கு ஆசியாவில் மோடி அரசாங்கத்தின் அயல்துறைக் கொள்கையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித்ஜோவல், வடிவமைத்துக் கொண்டிருக் கிறார். இவரது நடவடிக்கைகளின் காரண மாக பாகிஸ்தானுடனான உறவுகள் ஏற்க னவே சிதிலமடைந்துவிட்டன. இப்போது, மிக நீண்ட காலம் கலாச்சார ரீதியாகவும், நாகரிக உறவுகளிலும் மிகவும் நெருக்க மாக இருந்த நேபாளத்தையும் எதிரி நாடாகமாற்றிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, நேபாளம் பாதுகாப்புக் கோரி, சர்வ தேச அமைப்புகளை அணுக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறது. இதனால்சர்வதேச அளவில் இந்தியாவின் சித்திரம்மிகவேகமாக சிதைந்து கொண்டிருக்கிறது.நேபாளத்தைக் கொடுமைப்படுத்தும் இக்கொடூரமான கொள்கையை மோடி அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண் டும். நேபாள அரசாங்கத்துடன் கலந்துபேசி எல்லையில் சாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடைகளை அகற்றிட வேண் டும். மாதேசிகள் மற்றும் ஜன்ஜாதிகள் பிரச்சனைகள் நேபாளத்திற்குள் அரசியல் நடவடிக்கைகள் மூலமாக சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இந்தத் திசை வழியில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு மாதேசி குழுக்களிடம் இந்திய அரசு தன் செல்வாக்கினைப் பயன்படுத்திட வேண்டும்.

(தமிழில்: ச. வீரமணி)

நன்றி- தேனீ இணையம்

ஸ்ரீலங்காவுக்கு வருகை தரவிருந்த தமிழ்நாட்டு தீவிரவாத இஸ்லாமியத் தலைவர் ஜெய்னுல் ஆப்தீனின் முயற்சி ஸ்ரீலங்காவிலுள்ள மிதவாத முஸ்லிம் தலைவர்களால் முறியடிக்கப்பட்டது

தீவிரவாத இஸ்லாத்தின் தமிழ் முகம் அவருடையது. மௌலவி பி ஜெய்னுல் ஆப்தீன், பிஜே, என்று பிரபலமாக அறியப்படுபவர், மற்றும் அடிப்படைவாதிகளான தமிழ்நாடு தௌகீத் ஜமாத்தினது (ரிஎன்ரிஜே) நட்சத்திரப் பேச்சாளர், ஸ்ரீலங்காவில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு இஸ்லாமிய மாநாட்டில் “உண்மையான இஸ்லாம்” என்ற தலைப்பில் அவர் போதிப்பதாக இருந்த பேச்சை நடத்துவதற்காக அவருக்கு ஸ்ரீலங்காவுக்கு வருவதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் உள்ள முஸ்லிம் சமூகம், பௌத்த கடும்போக்காளர்கள் மற்றும் தமிழ் புலிகள் ஆகிய இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட அநேக கலவரங்கள் மற்றும் தாக்குதல்களினாலும் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைத் தாங்கியுள்ளது, இல்லையெனில் அதைப்பற்றி சிந்தித்தும் உள்ளது. பிஜே யினை ஸ்ரீலங்கா தொளவீத் ஜமாத் (எஸ்எல்ரிஜே) நவம்பர் 8ல் குரானின் சிங்கள மொழிபெயர்ப்பை வெளியிடுவதற்காக  ஸ்ரீலங்காவுக்கு அழைத்திருந்தது.

அகில இலங்கை ஜமய்த்து உலாம மற்றும் ஏனைய மிதவாத முஸ்லிம் அமைப்புக்கள் இந்த வரவை எதிர்த்திருந்தன, மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கம் அதற்கு இணங்கவேண்டியதாயிற்று. இஸ்லாம் பற்றிய பிஜே யின் வகாபி கருத்துக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தலாம் என இந்த மிதவாத முஸ்லிம் குழுக்கள் உணர்ந்தன. முன்னர் 2005லும் பிஜே இதே காரணங்களுக்காக இங்கிருந்து வெளியேற்றப்பட்டார். தான் இஸ்லாம் அல்லாதது எனக் கருதும் பிரபலமான இல்லாமிய நடவடிக்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதற்கும் மக்களின் மத நம்பிக்கைகளை மாற்றுவதற்கும் ஏற்ற இடமாக ஸ்ரீலங்காவை அவர் இலக்கு வைத்துள்ளார்.

பி.ஜே .யிற்கு மிதமான நிலைப்பாடு கிடையாது
தமிழ் நாட்டை சேர்ந்த தீவிரமான அடிப்படைவாதியான ஒரு மௌலவி, குரான் மற்றும் சுன்னாவினை அடிப்படையாகக் கொண்ட தூய இஸ்லாத்தை கூட்டலோ அல்லது குறைத்தலோ இன்றி பரப்பும் பணியினை மேற்கொள்வதற்காக தன்னை ஒப்படைத்துள்ளார், என்பதை அவரது இணையத்தளம் தெரிவிக்கிறது. ஜெய்னுல் ஆப்தீன் தனது அரசியல் செயற்பாட்டை தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை (ரிஎன்எம்எம்கே) 1995 ல் நிறுவியதன் மூலம் ஆரம்பித்தார். எனினும் 2004ல் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் ஒரு பிளவு உருவானதால் பிஜே தமிழ்நாடு தௌகீத் ஜமாத்தினை, மதம் மற்றும் அரசியல் கலந்த ஒரு அமைப்பாக உருவாக்கினார்.
.
நீதிபதி ரங்கநாதன் மிஸ்ரா ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டுக்காக போராடுவதைக் காட்டிலும், இஸ்லாம் ஒரு அமைதியான மதம் அதன் கலாச்சாரம் இன நல்லிணக்கம் என்பதையே, அந்த அமைப்பு சித்தரித்து வந்தது. இது ஒரு சாமர்த்தியமான உத்தி, ஏனென்றால் உள் வகுப்புவாத நல்லிணக்கத்தை பரப்பும் அதேவேளை, அவர் வெளிப்படையாகவே சிகாக்கள், போராக்கள் மற்றும் அகமதியாக்கள் அல்லது காடிவானிகள் போன்ற பல்வேறு அடிப்படைவாதமற்ற இஸ்லாமிய அமைப்புக்களின் இருப்பினை எதிர்த்து வந்தார்.
பின்னணி
ஸ்ரீலங்காவில் உள்ள முஸ்லிம்கள் இப்போது 21 மில்லியனான தீவின் மொத்த சனத்தொகையில் 9.5 விகிதமாவார்கள், கிமு 7ம் நூற்றாணடில் ஏற்பட்ட அவர்களது வருகையிலிருந்து சமாதானத்தை நேசிக்கும் ஒரு சமூகமாகவே அவர்கள் இருந்து வருகிறார்கள். எனினும் அவர்களது தொழில் முனைப்பும் மற்றும் அமைதியான இருப்பும் காலத்துக்கு காலம் பயங்கரமான சவால்களை எதிர்கொள்ளவேண்டியதாக உள்ளது. 1980 களில் தமிழர்கள் சுதந்திரத் தமிழீழத்தை அடைவதற்காக ஆயுதப் போராட்டத்தை அணுகியபோதும், முஸ்லிம்கள் தங்களை அதில் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. வியாபாரிகள் என்கிற வகையில் அவர்கள் சமாதானத்தையே விரும்பினார்கள் மற்றும் இதனால் எரிச்சலடைந்த புலிகள் 75,000 முஸ்லிம்களை அவர்களின் இருப்பிடத்திலிருந்து துரத்தியடித்தார்கள்.
பின்னர் சிங்கள குடிமக்களும் கூட அவ்வப்போது முஸ்லிம்கள்மீது தாக்குதலை மேற்கொண்டார்கள். மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் (2005 – 2014)  புதிய அமைப்பான பொதுபலசேன, ஹிஜாப் மற்றும் ஹலால் சான்றிதழ்களுக்கு தடை ஏற்படுத்தவேண்டும் என்று அழைப்பு விடுத்ததுக்கும் மற்றும் மசூதிகளைத் தாக்குவதற்கும் ஊக்கம் வழங்கியது.

ஜூன் 2014ல் பொதுபலசேனாவினால் ஏவப்பட்ட சிங்களவர்களால் ஒரு கலகம் தொடங்கப்பட்டது. முஸ்லிம்களின் பொருளாதார பின்புலத்தை தகர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியினால் அந்தச் சமூகம் ராஜபக்ஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு எதிராக பாராளுமன்றத் தேர்தலில்  வாக்களிப்பதற்கு வழிசெய்தது, அதன் காரணமாக அவரது வெளியேற்றத்தையும் காணமுடிந்தது. கடந்த பல வருடங்களாக வகாபிக்கள், சுபிக்கள், சுன்னிகள், ஷிகாக்கள், போராக்கள், மலேயர்கள், இந்திய மற்றும் இலங்கை வம்சாவழியை சேர்ந்த முஸ்லிம்கள் ஆகிய அனைவரும் ஒன்றுசேர்ந்து குறைந்தது சமூக மற்றும் அரசியல் நலன்களுக்காக ஒரு ஒற்றை முஸ்லிம் சமூகமாக மாறியுள்ளார்கள்.

நிலவரம்
1.2012 குடிசன மதிப்பீட்டின்படி ஸ்ரீலங்கா கொண்டுள்ள முஸ்லிம் சனத்தொகையானது 1,967,227 ஆகும், அது மொத்த சனத்தொகையின் 9.5 விகிதமாகும்.
2.நாட்டிலுள்ள முஸ்லிம் சனத்தொகையில் அதிகளவு எண்ணிக்கையானவர்கள் வர்த்தகர்கள். அவர்கள் நாட்டுக்கு வந்தது முதல் இதையே செய்து வருகிறார்கள்.

1990 படுகொலைகள்
தமிழ் புலிகள், ஓகஸ்ட் 3,1990ல் காத்தான்குடி ஜூம்மா பள்ளிவாசலில் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த முஸ்லிம்களை படுகொலை செய்தார்கள். அடுத்த சில மாதங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள், வட மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம்கள்  ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு உளவு பார்ப்பதாக குற்றம் சுமத்தி கிட்டத்தட்ட 75,000 முஸ்லிம்களை அங்கிருந்து விரட்டியடித்தார்கள்.
2009ல் ஏற்பட்ட குழப்பங்கள்

சிங்களவர்களுக்கும் மற்றும் முஸ்லிம்களுக்கும் இடையிலான ஒற்றுமை, எல்.ரீ.ரீ.ஈயின் அழிவு மற்றும் 2006 – 2009ல் நடந்த ஈழப்போர் 4 ன் போது தமிழர்கள் அவமானப் படுத்தப் பட்டதின் பின்னர் தளர்வடைய ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து சிங்கள வர்க்கம் முஸ்லிம்களை அடக்கியாள தொடங்கியது. மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் ஒரு புதிய அமைப்பான பொது பல சேனா என்கிற அமைப்பு ஹிஜாப், மற்றும் ஹலால் சான்றிதழ்களுக்கு தடை ஏற்படுத்த வேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்கும்  மற்றும் பள்ளிவாசல்களைத் தாக்கும் செயல்களுக்கும் கூட ஊக்கம் அளித்தது.

2014 கலவரங்கள்
ஜூன் 2014ல், நாட்டின் தென் மேற்கு பகுதிகளில் மத மற்றும் இன கலவரங்கள் ஏற்படுவதற்கு ஸ்ரீலங்கா சாட்சியானது. முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் என்பன களுத்துறை மாவட்டத்தின் மூன்று நகரங்களில் சிங்கள பௌத்தர்களால் தாக்குதலுக்கு உள்ளாகின. அவர்கள் குறைந்தது மூன்று பேரைக் கொன்றதுடன் 80 பேருக்கு காயம் விளைவித்தார்கள். 8,000 முஸ்லிம்கள் மற்றும் 2,000 சிங்களவர்கள் இந்தக் கலவரத்தால் இடம்பெயர்ந்தார்கள், வீடுகள், வாத்தக நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் வீடற்றவர்களானார்கள். கடும்போக்கு பௌத்த குழுவான பொது பல சேனா ஊhவலம் நடத்தியதின் விளைவாகவே கலவரங்கள் ஏற்பட்டதாக கருதப்படுகிறது, ஆனால் அந்தக் குழுவினர் அதற்கான பொறுப்பை நிராகரிக்கின்றனர்.

தீவிரவாதிகளின் தாக்குதல்
2013ல் பௌத்த கடும்போக்காளர்களினால் முஸ்லிம்கள்மீது ஒரு சில தாக்குதல்கள் மேற்கொள்ளப் பட்டன. அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொழும்புக்கு அருகில் உள்ள முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். ஒரு முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான ஆடைக் களஞ்சியத்தை அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.




பி.கே. பாலச்சந்திரன்

 தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
(நன்றி: நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்)