Thursday, April 16, 2009

மொனராகலை பகுதி தமிழ் தொழிலாளர்கள் மீது காடையர்கள் அட்டகாசம்

மொனராகல மாவட்டம் புத்தள, இக்கம்பிட்டிய பகுதிகளில் அப்பாவி சிங்கள மக்கள் 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்ற பெரும்பான்மையின காடையர்கள் தொழிலாளர்களை தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக காடுகளுக்குள் சென்று தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர்கள் வெள்ளச்சிட தோட்டம், போகாலயின் றப்பர் தோட்ட மக்களே. கிராமங்களிலிருந்து இளைஞர்கள் பலர் ஆயுதங்களுடன் சென்று தாக்கியுள்ளதாகவும், தோட்டங்களுக்குள் புகுந்தவர்கள் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டதனால் 11 தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் மொனராகலை அரசினர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெருந்தோட்ட மக்களுக்கும் நிவாரணங்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும் - சுரேஷ் வடிவேல்

அரசாங்கத்தினால் வழங்கப்படும் வரட்சி மற்றும் வெள்ளநிவாரணம், தர்மசம்பளம், அங்கவீனர்களுக்கான நிவாரண உதவிகள், விதவைகளுக்கான மேம்பாட்டு உதவி ஆகியன இதுவரை காலமும் பெரும்பான்மையின மக்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த இச் உதவிகள்;, நிவாரணங்களை பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்களுக்கும் கிடைக்கும் வகையிலானவேலை திட்டங்களை முன்னெடுத்து வருவதாக பிரதி சுகாதார அமைச்சர் சுரேஷ் வடிவேல் பசறை பலநோக்கு கூட்டுறவுச் சங்கக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பயன்தரும் மரக்கன்றுகளை இலவசமாக பகிர்ந்தளிக்கும் விசேட நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்தார்.