Thursday, August 13, 2009

மலையக பெண்களுக்கும் சம உரிமை அவசியம்

மலையகத்தில் இன்று பெண்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் பெருந்தோட்டப் பெண்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முதல் படி அவர்களுக்கு சமூக அந்தஸ்த்தை பெற்றுக் கொடுப்பதே. மக்கள் தொகையின் அரைவாசி ஏன் அதற்கும் மேலாக பெண்கள் குறித்து தொட்டப்ப பகுதிகளில் அதிகம் பேசப்படாமைக்கு காரணம் அவர்களுக்கு சமூக அந்தஸ்து இல்லாமையே என்ற உண்மை பலருக்கு புரிவதில்லை. ஒரு சமூகத்துக்கு சமூக அந்தஸ்த்து கிடைத்து விட்டால் அவர்களை சகல விடயங்களிலும் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் என்ற நிலை உருவாகிவிடும். பெருந்தோட்ட மக்களுக்கு பிரஜா உரிமையும், வாக்குரிமையும் இல்லாத போது அவர்கள் எவராலும் கணக்கில் எடுக்கப்படவில்லை.இவைகள் கிடைத்தவுடன் அவர்களின் முக்கியத்துவம் அதிகரித்து வந்தது. இதன் மூலமும் அவர்களுக்கு சமூக அந்தஸ்து கிடைத்தது.
தற்போது பெருந்தோட்டப் பெண்களை எடுத்துக் கொண்டால் பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் பெண்கள், பெருந்தோட்டங்களை வதிவிடமாக கொண்டு வெளியிடங்களில் வேலை செய்யும் பெண்கள், ஆடைத் தொழிற்சாலை, கடைகள், போன்ற வேறு துறைகளில் வேலை செய்யும் பெண்கள் என பல வகைப்படுத்தலாம். பெருந்தோட்டப் பெண்கள் பல தொழில்களை செய்யும் போதும், அவர்கள் குடும்ப சுமைகளை ஏற்று பொருளாதார ரீதியிலும் அதனை சரி செய்து குடும்பத்திற்கு முதுகெலும்பாகவும் இருந்தாலும் அவர்களுக்கு சமூக அந்தஸ்து கிடைத்தாக வேண்டும். வெளியிடங்களில் வேலை செய்யும் பெண்கள் இந்தளவிற்கு பங்களிப்பு செய்யாவிட்டாலும் அவர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. இந்த இரு தரப்பினருக்கும் நியாயமாகவே கிடைக்க வேண்டிய அந்தஸ்து கிடைக்காமல் இருப்பதற்கு பெண்கள் உரிமைகள், சமூக அந்தஸ்து போன்ற விடயங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாமையே.
பெண்களுக்கான சம்பளம் அவர்களுக்கே வழங்கப்பட்டாலும் இன்னும் பல தோட்டங்களில் நம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கு விடுமுறை வழங்கப்படாததால் பெண்களாலும் அதனை பெற்றுக்கொள்ள முடிவதில்லை. பெண்கள் மீது வேலைத் தளங்களில் பாலியல் ரீதியான நேரடியானதும், மறைமுகமானதும் வன்முறைகள். இதனை நாம் அதிகமான தோட்டங்களில் காண்கிறோம். பெண்கள் பெருந்தோட்டப் பகுதிகளில் கீழ்மட்ட அதிகார அமைப்புக்களுக்கு நியமிக்கப்படுவதும் அவசியம். பொதுவாக கோயில் பரிபாலன சபை, பாடசாலை அபிவிருத்தி சபைகள், பெருந்தோட்ட மின்சார கூட்டுறவு, மரண உதவி போன்ற பல அமைப்புக்களுக்கு ஆண்களை போலவே பெண்களுக்கும் சம உரிமை கிடைப்பது பாராட்டக் கூடியவிடயமாக இருந்தாலும் மேலும் முக்கியமான வியடங்களில் சம உரிமை வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.
கூட்டு ஒப்பந்தம் பற்றி தொழிற்சங்கங்கள் கூடி ஆராய முடிவு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அது இன்னமும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது தொடர்பாக அடுத்த வாரமளவில் தொழிற்சங்கங்கள் கூடி ஆராயுவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து அதில் கைச்சாத்திடும் சங்கங்கள் சம்மேளனத்துடன் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. அதன்போது தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை ஐநூறு ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென சங்கங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன. எனினும், இதனை நிராகரித்த முதலாளிமார் சம்மேளனம், நாளொன்றுக்கு 200 ரூபாவை வழங்க முடியுமெனத் தெரிவித்துவிட்டது. இது குறித்து தொழிற் சங்கங்கள் மீண்டும் அடுத்த வாரம் கூடி ஆராய்ந்து சம்மேளனத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென்று காங்கிரஸ் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.