Tuesday, September 1, 2009

சம்பள உயர்வை வலியுறுத்தி ஒத்துழையாமைப் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக 31-09-2009 அன்று தொழிற் சங்களுக்கும்,முதலாளிமார் சம்மேளத்திற்குமிடையே இடம் பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து இ.தொ.கா தலைமையில் 01-10-2009 அன்று முற்பகல் 11.00 மணி தொடக்கம் பி.ப 1.00 மணிவரை கொட்டக்கலை காங்கிரஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்வரும் 02-10-2009 தொடக்கம் ஒத்துழையாமை போராட்டத்தினை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் தோட்டத் தொழிலா ளர்களுக்கு எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு முன் 500 ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதெனவும் இதனை வலியுறுத்தும் வகையில் நாடு தழுவிய ரீதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகங்களுக்கு ஒத்துழையாமை போராட்டங்களை முன்பெடுப்பதற்கும் திர்மானிக்கப்பட்டது. இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பான மற்றுமொரு பேச்சுவார்த்தைக்கு எதிர்வரும் 07-10-2009 ஆம் திகதி வருமாறு பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கூட்டு ஒப்பந்தத் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.