Friday, September 30, 2016

தொடரும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டம்


சம்­பள உயர்வு போராட்­டத்தில் குதித்­துள்ள தோட்டத் தொழி­லா­ளர்கள் வீதி­களை மறித்தும், டயர்­களை எரித்தும் பேர­ணி­களை நடத்­தியும் தமது எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்தி வந்த நிலையில் நேற்று நான்­கா­வது நாளா­கவும் போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தனர்.


நேற்­றைய தினமும் டயர்­களை எரித்து வீதி­களை மறித்­த­துடன் உருவப் பொம்­மையை எரித்தும் தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தினர்.  

17 மாதங்­க­ளாக தமக்கு சம்­பள அதி­க­ரிப்­பினை வழங்­காது முத­லா­ளிமார் சம்­மே­ளனம் தம்மை ஏமாற்றி வரு­வ­தா­கவும் தமது வாழ்­வா­தா­ரத்­தோடும் பொரு­ளா­தார நிலை­மை­க­ளு­டனும் பிள்­ளை­களின் கல்விச் செயற்­பாட்­டு­டனும் விளை­யாடி வரு­வ­தா­கவும் அதி­கா­ரிகள் மீதும் சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர் மீதும் தமது விரக்­தி­யையும் அதி­ருப்­தி­யையும் தெரி­வித்து கோஷங்­களை எழுப்­பி­யதை அவ­தா­னிக்க முடிந்­தது.
இவ்­வாறு நேற்று நான்­கா­வது நாளாக இடம்­பெற்ற தோட்டத் தொழி­லா­ளர்­களின் எதிர்ப்பு போராட்­டத்தில் பதுளை, நுவ­ரெ­லியா மற்றும் கண்டி மாவட்ட தொழி­லா­ளர்கள், ஆத­ர­வா­ளர்கள் இணைந்து கொண்­டனர். இதன்­போது எதிர்ப்பு பதா­கை­களை ஏந்­தி­ய­வாறு கோஷங்­களை எழுப்­பி­ய­துடன் வீதி­களை மறித்து டயர்­களை போட்டு எரித்­தனர்.
அத்­துடன் போடை சந்­தியில் கூடிய தொழி­லா­ளர்கள் ஹட்டன் சாஞ்சி மலை பிர­தான வீதியை மறித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­துடன் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்தன் பிர­தா­னி­யொ­ரு­வரின் உருவப் பொம்­மையை வீதியில் நிறுத்தி தீயிட்டு கோஷ­மிட்­டனர்.

நுவ­ரெ­லி­யாவில்
நுவ­ரெ­லியா, கண்டி பிர­தான வீதியில் லபுக்­கலை பிர­தே­சத்தில் கூடிய லபுக்­கலை மேற்­பி­ரிவு, கீழ்­பி­ரிவு, கொண்­டக்­கலை, வெஸ்டோ, பம்­ப­ர­கலை ஆகிய தோட்­டங்­களைச் சேர்ந்த தொழி­லா­ளர்கள் வீதியை மறித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இதனால் குறித்த பிர­தே­சத்தில் சுமார் இரண்டு மணி­நேரம் போக்­கு­வ­ரத்து தடைப்­பட்­ட­துடன் பெரும் வாகன நெரி­சலும் பதற்ற நிலையும் உரு­வா­னது.
போராட்­டத்தில் கலந்து கொண்ட தொழி­லா­ளர்கள் தமக்கு 1000 ரூபா சம்­பளம் பெற்றுத் தரப்­பட வேண்டும் என்றும் இல்­லையெல் 850 ரூபா­வை­யேனும் தமக்கு பெற்றுத் தர முத­லா­ளிமார் சம்­மே­ளனம் சம்­ம­திக்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்­பினர். தொழி­லா­ளர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட போராட்­டத்தின் போது நுவ­ரெ­லியா பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரித் தலை­மையில் பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டி­ருந்­தது.
மஸ்­கெ­லியா
மஸ்­கெ­லி­யாவில் கூடிய தோட்டத் தொழி­லா­ளர்கள் 1000 ரூபா கோரிக்­கையை கொண்ட பதா­தையை ஏந்­தி­ய­வாறு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இதன்­போது தமது எதிர்ப்­பி­னையும் வெ ளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். மஸ்­கெ­லியா எரி­பொருள் நிலை­யத்­திற்கு முன்­பாக கருப்புக் கொடி­களை ஏந்­தி­ய­வாறு போராட்­டத்தில் ஈடு­பட்ட தொழி­லா­ளர்கள் 1000 ரூபாவை பெற்றுத் தரு­மாறு இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் பொதுச் செய­லாளர் ஆறு­முகன் தொண்­ட­மானை கோரினர். இதன்­போது அனைத்து தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் அதி­கா­ரி­க­ளுக்கும் எதி­ரான கோஷங்­க­ளையும் எழுப்­பினர்.
பத்­தனை, போகா­வத்தை
தலவாக்கலை நாவலப்­பிட்டி பிரதான வீதியின் போகா­வத்தை நக­ரத்தில் அணி­தி­ரண்ட பத்­தனை, போகா­வத்தை தோட்டத் தொழி­லா­ளர்கள் பிர­தான வீதியை மறித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். தமக்கு நியா­ய­மான சம­ப­ளத்தை பெற்றுத் தரு­மாறு இதன்­போது கோஷங்­களை எழுப்பி நின்­றனர்.
பொக­வந்­த­லாவை வீதியில்
இதே­வேளை அட்டன் தர­வலை, சலங்­கந்தை, இன்­வரி, அட்லி, மாணிக்­க­வத்தை, பட்­டல்­கலை, என்சீ ஆகிய தோட்­டங்­களைச் சேர்ந்த ஆயி­ரக்­க­ணக்­கான தோட்டத் தொழி­லா­ளர்கள் சாலை மறியில் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர். தொழி­லா­ளர்கள் கம்­ப­னி­க­ளாலும் தொழிற்­சங்­கங்­க­ளாலும் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­வ­தாக தமது கவ­லை­யையும் கோபத்­தையும் வெ ளியிட்­டனர்.
தல­வாக்­கலை
தல­வாக்­கலை, இரட்­ன­க­ரிய, பாமஸ்டன் ஆகிய தோட்டத் தொழி­லா­ளர்கள் பாமஸ்டன் சந்­தியில் ஒன்­று­கூடி 1000 ரூபா கோரிக்­கையை முன்­வைத்த போராட்டம் நடத்­தினர். இதன்­போது 400 க்கும் மேற்­பட்ட தொழி­லா­ளர்கள் கலந்து கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். கூட்டு ஒப்­பந்­தத்தை உட­ன­டி­யாக புதுப்­பித்து தமக்கு சம்­பள அதி­க­ரிப்பை பெற்றுத் தரு­மாறு இதன்­போது வலி­யு­றுத்திக் கூறினர்.
இதே­வேளை லிந்­துலை ஹென்போல்ட் தோட்­டத்தைச் சேர்ந்த 500 க்கும் மேற்­பட்ட தொழி­லா­ளர்கள் தல­வாக்­கலை பாம் வீதியில் திஸ்­பன சந்­தியில் வீதியை மறித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இதனால் இங்கு சுமார் ஒரு­ம­ணி­நேரம் போக்­கு­வ­ரத்து ஸ்தம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.
மேலும் வட்­ட­வளை, டெம்­பல்ஸ்டோ தோட்­டங்­களைச் சேர்ந்த தொழி­லா­ளர்கள் அட்டன் கொழும்பு வீதியில் ரொசல்ல பிர­தே­சத்தில் கூடி பதா­கை­களை ஏந்­தி­ய­வாறும் எதிர்ப்புக் கோஷங்­களை எழுப்­பி­ய­வாறும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். அதே­போன்று அட்டன் ஸ்டிரதன் பிர­தேச தோட்டத் தொழி­லா­ளர்­களும் அட்டன் கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.
 அட்டன் வன­ராஜா மேற்­பி­ரிவு தோட்­டத தொழி­லா­ளர்கள் பொக­வந்­த­லாவை பிர­தான வீதியில் பதா­கை­களை ஏந்­தி­ய­வாறும் கோஷங்­களை எழுப்­பி­ய­வாறும் டிக்­கோய நக­ரத்தில் பேர­ணி­யு­ட­னான போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர். அத்­துடன் டிக்­கோயா பட்­டல்­கலை தோட்டத் தொழி­லா­ளர்­களும் டய­கம பிர­தான வீதியில் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.
பதுளை மாவட்­டத்தில்
இது இவ்வாறிருக்க பதுளை மாவட்டத்தில் அப்புத்தளை, வியாரகலை, தங்கமலை, கிளனூர் உள்ளிட்ட தோட்டங்களிலும், லுணுகலை அடாவத்தையிலும் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்பு வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அடாவத்தையில் ஒன்றுகூடிய தொழிலாளர்கள் வீதியில் டயர்களை போட்டு எரித்தும் கோஷங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பினை வெ ளியிட்டதுடன் உடனடியாக சம்பள அதிகரிப்பினை பெற்றுத் தருமாறு கோஷமிட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையீடு செய்து சம்பள அதிகரிப்பை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திக் கோரினர்.
நன்றி- வீரகேசரி

Thursday, September 29, 2016

சம்பள உயர்வுகோரி மலையகமெங்கும் போராட்டம்


சம்­பள அதி­க­ரிப்பை வலி­யு­றுத்தி தோட் டத் தொழி­லா­ளர்­களால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற எதிர்ப்புப் போராட்டம் மற்றும் ஆர்ப்­பாட்­டங்­களின் தொடர்ச்­சி­யாக நேற்று புதன்­கி­ழமை மூன்­றா­வது நாளாகவும் வீதி­களை மறித்தும் டயர்­களை எரித் தும் ஒப்­பாரி ஓல­மிட்டும் பேர­ணி­களை நடத்­தியும் தமது எதிர்ப்­பி­னையும் ஆதங்­கத்­தி­னையும் கவ­லை­யையும் தோட்டத் தொழிலாளர்கள் வெளிப்­ப­டுத்­தினர்.  
நுவ­ரெ­லியா மாவட்­டத்தின் அட்டன் நக­ரத்திற்­குட்­பட்ட தோட்­டங்கள், கொத்­மலை நானு­ஓயா, கண்டி மாவட்­டத்தில் பு­ஸல்­லாவை பிர­தேச பெருந்­தோட்­டங்­களைச் சேர்ந்த தொழி­லா­ளர்­களே இவ்­வாறு எதிர்ப் புப் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர்.  
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வாக  தோட்டத் தொழிலில் ஈடு­ப­டாத பொது­மக்­களும் முச்­சக்­க­ர­வண்டி சார­தி­களும் மற்றும் சமூக நலன் விரும்­பி­களும் இணைந்து கொண்டு கடு­மை­யான எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தினர். இந்த சந்­தர்ப்­பத்தில் வீதி­  
களை மறித்து ஆர்ப்­பாட்டம் நடத்­திய அதே­வேளை டயர்­க­ளையும் எரித்து தமது எதிர்ப்­பினை வெளிக்­காட்­டினர்.  
இதே­வேளை தமது கவ­லையை வெளிப்­ப­டுத்தும் முக­மாக தொழிலாளர்கள் ஒப்­பாரி வைத்து ஓல­மிட்­ட­துடன் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­திற்கு கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைத்­தனர். அத்­துடன் தோட்ட முகா­மை­யா­ளர்­க­ளிடம் மக­ஜர்­க­ளையும் கைய­ளித்­தி­ருந்­தனர்.
2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திக­தி­யுடன் காலா­வ­தி­யான கூட்டு ஒப்­பந்தம் 17 மாதங்கள் கடந்தும் புதுப்­பிக்­கப்­ப­டாமை, சம்­பள அதி­க­ரிப்­புக்கு முத­லா­ளிமார் சம்­மே­ளனம் தொடர்ச்­சி­யாக மறுப்பு தெரி­வித்து வரு­கின்­றமை மற்றும் பேச்­சு­வார்த்­தை­களில் எந்­த­வி­த­மான முன்­னேற்­றங்­களும் காணப்­ப­டாமை, அதி­கா­ரி­க­ளி­னதும் சம்­பந்­தப்­பட்­டோ­ரி­னதும் அச­மந்தப் போக்கு ஆகி­ய­வற்­றிற்கு எதிர்ப்புத் தெரி­வித்தே இவ்­வாறு தொடர்சசி­யான ஆர்ப்­பாட்­டங்­களை தொழி­லா­ளர்கள் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.
அந்த வகையில் புஸல்­லாவை பிர­தே­சத்தில் கட்­டு­கித்­துல, ஹெல்­பொட, பெரட்­டாசி, மெல்போர்ட், சோகம, சங்­கு­வாரி, பிளக்­போரஸ்ட், டெல்டா ஆகிய தோட்­டங்­களில் போராட்­டங்­க­ளையும் பேர­ணி­க­ளையும் நடத்­திய தோட்டத் தொழி­லா­ளர்கள் 1000 ரூபா சம்­ப­ளத்தை வழங்­கு­மாறும் கம்­ப­னியின் ஒடுக்­கு­முறை ஒழிக்­கப்­பட வேண்டும் என்றும் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு வாக்­க­ளித்­தது சம்­பளம் கேட்டு போரா­டு­வ­தற்கா? என்றும் கோஷங்­களை எழுப்­பினர். ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் கூறிய உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­ற வேண்டுமென்றும் தமக்கு நியா­ய­மான சம்­பளம் கிடைக்கும் வரையில் தமது போராட்­டத்தை கைவிடப்போவ­தில்லை என்றும் தொழிலாளர்கள் தெரி­வித்­தனர்.
ஒப்­பாரி
இது இவ்­வா­றி­ருக்க ஹட்டன் - பொக­வந்­த­லாவை வீதியை மறித்து தமது எதிர்ப்­பினை வெளியிட்ட பொக­வந்­த­லாவை, நோர்வூட் சென்ஜோன் டிலரி, வென்சர், டிக்­கோயா பிர­தேச தொழி­லா­ளர்­களும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர். டின்சின் தோட்டத் தொழி­லா­ளர்கள் தமது எதிர்ப்­பி­னையும் கவ­லை­யையும் வெளிப்­ப­டுத்தும் முக­மாக ஒப்­பாரி வைத்­த­தையும் அவ­தா­னிக்க முடிந்­தது.
இதே­வேளை வன­ராஜா தோட்டத் தொழி­லா­ளர்கள் பிர­தான வீதியில் சுலோ­கங்­களை ஏந்தி கோஷங்­களை எழுப்பி பேர­ணி­யாக சென்று தமது எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தினர். அத்­துடன் தமது கோரிக்­கை­களை நிறை­வேற்­று­மாறும் வலி­யு­றுத்தி வன­ராஜா தோட்ட முகா­மை­யா­ள­ரிடம் மகஜர் ஒன்­றையும் கைய­ளித்­தனர்.
மேலும் செஞ்ஜோன் டிலரி மேற்­பி­ரிவு, கியூ தோட்ட மக்கள் தமது எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்தி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­போது அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக முச்­சக்­கர வண்டி சார­தி­களும் இணைந்து கொண்டு ஆர்ப்­பாட்­டத்தை முன்­னெ­டுத்­தனர்.
மலை­யக மக்­க­ளுக்கு பொய்­யான வாக்­கு­று­தி­களை அளித்து தொழி­லா­ளர்­களை ஏமாற்­று­வ­தாக தெரி­வித்த முச்­சக்­க­ர­வண்டி சார­திகள் பொக­வந்­த­லா­வை­யி­லி­ருந்து கியூ தோட்­டத்­திற்கு செல்லும் 4 கிலோ மீற்றர் வீதி நீண்­ட­கா­ல­மாக செப்­ப­னி­டாது குன்றும் குழி­யு­மாக காணப்­ப­டு­வ­தா­கவும் கோசம் எழுப்பி, டயர்­களை எரித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.
இதே­வேளை நல்­ல­தண்ணி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட எமில்டன், லக் ஷ்­பான, சென்­அன்றூஸ், வாழை­மலை உள்­ளிட்ட தோட்­டங்­களைச் சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்­பட்ட தொழி­லா­ளர்கள் லக்ஷ்­பான தோட்ட தொழிற்­சா­லைக்கு முன்­பாக திரண்டு பதா­கை­களை ஏந்தி கோஷம் எழுப்பி தமது எதிர்ப்­பினை வெளியிட்­டனர். சம்­பள உயர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் சூளு­ரைத்­தனர்.
மேலும் நேற்று காலை 8.00 மணி­முதல் 10.00 மணி­வ­ரை­யான சுமார் இரண்டு மணி­நேர காலத்­திற்கு றதல்ல பிர­தான வீதியை மறித்து தோட்டத் தொழி­லா­ளர்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இதனால் அங்கு பாரிய போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. இதன்போது கார்லபேக், லேங்டல், ஈஸ்டல், தம்பகஸ்தலாவ, சமர்செட் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் இணைந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தமது வாழ்வாதார நிலைமைகளை வெ ளிப்படுத்தியதுடன் சம்பள அதிகரிப்பை உடனடியாக வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அத்துடன் தாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டால் போராட்டம் பாரியதாக அமையும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
நன்றி- வீரகேசரி

Tuesday, September 27, 2016

கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை மேலும் ஒருவார காலத்திற்கு ஒத்திப்போடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் தொழிலமைச்சர் ஜோன் செனவிரத்னவின் தலைமையில் பேச்சுவார்த்தை இடம்பெறவிருந்த நிலையில் முதலாளிமார் சம்மேளனம் அதற்குத் தயாரில்லை என நேற்று அறிவித்ததையடுத்து பேச்சுவார்த்தை அடுத்த வாரத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து தமது எதிர்பார்ப்புகள் தோல்வியடைந்து வரும் நிலையில் 3வது நாளாக நேற்றும் மலையகப் பிரதேசங்களின் பல தோட்டத் தொழிலாளர்கள் கறுப்புக் கொடியுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். பொகவந்தலாவை மற்றும் டன்சினன் பகுதிகளில் தொழிலாளர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், இந்தப் பிரச்சினையை தொடர்ந்தும் இழுத்தடிக்க இடமளிக்க முடியாது என்றும் ஒருவார காலத்திற்குள் இதற்கு ஒரு நிரந்தர தீர்வுகாண வழி செய்யப்படும் என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி இந்த விவகாரம் தொடர்பில் முழு அவதானத்தையும் செலுத்தி வருவதாகத் தெரிவித்த அமைச்சர் நேற்றும் அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி 18 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையில் எவ்வித இனக்கப்பாடும் எட்டப்படாமை தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொறுமையிழந்த நியைலேயே அவர்கள் சுயமாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலை முதலாளிமார் சம்மேளனம் ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு வழியேற்படுத்தும் என தொழிற்சங்கங்கள் நம்பிக்கை வெளியிடுகின்றன.
கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது எதுவித இணக்கப்பாடும் எட்டப்படாத நிலையில், தொழிலமைச்சரின் தலையீட்டுடன் தீர்வொன்றைக் காண்பதற்கு வழி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே இன்று இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தையில் ஒரு தீர்வு வரும் என தொழிலாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். எனினும் அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகியுள்ளது.
கூட்டு ஒப்பந்தத்தின் முக்கிய கட்சியான இ. தொ. கா வின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் எம்.பி. இது தொடர்பில் நேற்று தினகரனுக்குத் தெரிவிக்கையில்; இன்றைய பேச்சுவார்த்தையை எதிர்பார்த்திருந்த போதும் முதலாளிமார் சம்மேளனம் அதனை அடுத்த வாரத்திற்கு ஒத்திப்போட்டுள்ளமை அதிருப்தியளிப்பதாகக் குறிப்பிட்டார்.
இதேவேளை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்புக்காக காத்திருக்கும் நிலையில் அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல்வாதிகள் அவர்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லாது ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்படுவதைக் காணமுடிகின்றது.
ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சுமத்துவதும் அறிக்கைகளை வெளியிடுவதும் என தத்தமது அரசியல் நோக்கங்கள் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தி வருவதையும் காணமுடிந்தது.
கூட்டு ஒப்பந்தம் என்னவாகும்? தோட்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதை இன்னும் ஒருவார காலம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

சம்பள அதிகரிப்பை கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கூட்டு ஒப்பந்தத்தை உடனடியாக புதுப்பித்து தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவ தோட்டத் தொழிலாளர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டம் பொகவந்தலாவ, கெம்பியன், அத்துடன் சாமிமலை ஸ்ரபி தோட்டத்திலும் இடம்பெற்றன.

வீதிமறியல் போராட்டத்தின் காரமாண போக்குவரத்து தடைப்பட்டிருந்ததன் காரணமாக பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதேவேளை தொழிலாளர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி முதலாளிமார் சம்மேளனத்துக்கு  மகஜர் ஒன்றை அனுப்பி வைப்பதற்கு ஒருவார கால அவகாசத்தை கேட்டு ஸ்டர்ஸ்பி தோட்ட மக்கள் தோட்ட அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை தமது கோரிக்கைகள், நிலைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் தொடர்ந்தும் இழுத்தடிப்புக்களை மேற்கொண்டால் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.  

பொகவந்தலாவ மேற்பிரிவு, கீழ்ப்பிரிவு, டின்சின் தோட்டம், ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்றுகூடி பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை கொட்டியாக்கலை, கெம்பியன், மற்றும் செப்பல்டன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கெம்பியன் நகரத்தில்  ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். 

இதேபோன்று சாமிமலை ஸ்டர்ஸ்பி தோட்டத்திலும் சுமார் 500 இற்கு மேற்பட்டோர் ஒன்று திரண்டு அர்ப்பாட்டங்களையும், போராட்டங்களை முன்னெடுத்ததோடு முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிரான கோசங்களை எழுப்பினர். 

Saturday, September 17, 2016

சம்பள உயர்வு விடயத்தில் ஆறுமுகன் மாத்திரமல்ல ஏனைய மலையக அரசியல்வாதிகளுக்கும் பொறுப்புண்டு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் ஆறுமுகன் தொண்டமானை மட்டும் முன்னிறுத்திவ்ட்டு ஏனைய மலையக அரசியல்வாதிகள் கைகழுவி விடமுடியாது இப்பொறுப்பு மலையக அரசியல்வாதிகளுக்கும் இருக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவருமாகிய இராமலிங்கம் சந்திரசேகர் சம்பள உயர்வு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் சம்பள உயர்வு விடயத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள். இந்த ஏமாற்றம் என்பது தொழிலாளர்களின் பொறுமையை சோதிக்கின்றவொரு விடயமாகும். சும்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் உத்தியோகபூர்வமாகவும், உத்தியோகபூர்வமில்லாத நிலையிலும் பல தடவைகள் பேசப்பட்டு வந்துள்ளன.  எனினும் இவையணைத்தும் இணக்கப்பாடின்றி தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. கம்பனிகள் தனது இலாபத்தை மாத்திரம் கருதி செயற்படுகின்றமையே தோல்விக்கான காரணமாகும். தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினையை அவர்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை. இலாபமே நோக்கமாக காணப்படுகின்றது. தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையால் மூன்று இலட்சத்துக்கு அதிகமான தொழிலாளர்களும் அவர்களில் தங்கி வாழ்வோரும் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தோட்ட முதாலாளிமார் சம்மேளனம் தொடர்பில் ஒரு தீர்க்கமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டியவொரு கட்டம் இப்போதுள்ளது. 
தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கம்பனிகள் தெரிவி;க்கின்றன. ஆனால் ஏன்? ஏவ்வாறு தோட்டங்கள் நட்டத்தில் இயங்குகின்றன என்பது யாருக்கும் தெரியாது. ஏந்தெந்த துறைகளில் எந்தெந்த ஆண்டுகளில் நட்டம் ஏற்பட்டுள்ளது என்ற விளக்கங்களும் இல்லை. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்தல் வேண்டும். தோட்டங்களில் பறிக்கப்படும் தேயிலை கொழுந்தின் அளவு சந்தைவிலை என்பன பகிரங்கப்படுத்தப்படுதல் வேண்டும். இந்த விடயங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. கம்பனிகள் தங்களுக்கு சாதகமான வகையில் அறிக்கைகளை தயார் செய்யும் நிலைமையே காணப்படுகின்றது. எனவே தொழிலாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்ப வேண்டிய காலம் மேலெழுந்துள்ளது. முதலாளிமார்கள் தொழிலார்களை வஞ்சித்து வருகின்ற நிலையில் மலையக அரசியல் வாதிகள் தொழிலார்கள் தொடர்பில் பாராமுகத்துடனேயே செயற்பட்டு வருகின்றனர். 

மலையக மக்களின் வாழ்க்கையில் அபிவிருத்தியை ஏற்படுத்தப் போவதாக புதிதாக அரசியல் களம் புகுந்தவர்களால் உருப்படியாக எதனையும் சாதிக்க முடியவில்லை. மலையக அரசியல்வாதிகள் சம்பள உயர்வு விடயத்திலோ அல்லது வேறு விடயங்களிலோ ஆறுமுகன் தொண்டமானை மாத்திரம் முன்னிறுத்தி குற்றம் சுமத்தி கைகழுவிக்கொள்ள முடியாது. கடந்த தேர்தல் காலத்தில் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுத் தருவதாக கூறி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட ஏனைய மலையக அரசியல்வாதிகள் பலரும் தெரிவித்திருந்தனர். எனினும் இந்த வாக்குறுதிகள் அனைத்தும் இப்போது மீறப்பட்டுள்ளன. இந்த விடயத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடு என்ன? தொடர்;ச்சியாக அறிக்கை விடுவது மட்டுந்தானா? தோட்டத் தொழிற்துறையை நம்பி இருக்கின்ற பலரும் மக்களின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கு இவர்கள் என்ன பதிலை சொலலப் போகின்றார்கள். ஐ.தே.க வை பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கமும் சம்பள பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்றது. எனினும் இன்னும் சாதகமான முடிவுகள் எதுவுமில்லை.

தொழிலாளர்கள் யாரை நம்பியும் எந்தப் பயனும் உருப்படியாக கிடைத்துவிட வில்லை. இந்நிலையில் தொழிலாளர்கள் போராடுவதனைத் தவிர வேறு மார்க்கம் இல்லை. போராட்டமின்றி எந்தவொரு உரிமையும் உழைக்கும் வர்க்கததினருக்கு கிடைத்ததாக சரித்திரம் இல்லை.

தொழிலாளர்களின் குரலாக தொழிலாளர் வர்க்கத்துக்கு உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் முனைப்புடன் மக்கள் விடுதலை முன்னணியின் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் செயலாற்றி வருகின்றது. எனவே இச்சங்கத்தின் தலைமையின் கீழ் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும். இதன் மூலம் பல்வேறு சாதகமான விளைவுகளையும் நாம் தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுப்போம். தொழிலாளர் சக்தி மிகவும் பலமானது என்பனை சகலருக்கும் புரிந்து செயற்படுதல் வேண்டும் என்றார்.