Tuesday, March 8, 2011

சர்வதேச மகளிர் தினம் இன்று

சம உரிமை சமவாய்ப்பு எதிலும் முன்னேற்றம் எனும் தொனிப் பொருளில் பொதுவாக சர்வதேசமகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8ந் திகதியன்று உலகளாவிய ரீதியில்அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆண் ஆதிக்கத்தினால்இ பெண்கள் பல் வேறு வன்முறைகளுக்கும்உபாதைகளுக்கும் உட்பட்டு தங்கள் அடிப்படை உரிமைகளை இழந்தும் வேதனையில் மூழ்கியிருப்பதை உலகெங்கிலும் பரந்து வாழும் மக்களுக்கு ஞாபகப்படுத்தி பெண்களையும் சரிசமஉரிமையுடன் சுதந்திரமாக வாழ்வதற்கு அடித்தளம் அமைப்பதற்கு இந்த சர்வதேச மகளிர் தினம் உதவுகின்றது. பெண்கள் யுத்தம் மற்றும் வன்முறைகளினால் பெரும் துயரத்தைஅனுபவிக்கிறார்கள். பொதுவாக பெண்களின் பாதுகாப்புஇ சமூக அந் தஸ்து என்பனபாதிக்கப்பட்டுஇ இளம் விதவைகள் என்று நாமம் சூட்டப்பட்டு சமூகத்தில் நிலவும் ஆண் ஆதிக்க அவலங்களில் சிக்கி அவர்கள் வேதனைக்கடலில் மூழ்கி அல்லல்படுகிறார்கள்.

உலகில் கைத்தொழில் புரட்சி ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் மேற்கத்தைய நாடுகளில்தொழிற்சாலைகளில் பெண்கள் பணி புரிந்த காலத்தில் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைஎதிர்த்துஇ 1857 ஆம் ஆண்டு மார்ச் 8ம் திகதியன்றுஇ அமெரிக்காவின் நியூ யோர்க் நகரில் பெண்கள்தங்களுக்கும் ஆண்கள் பெறும் வேதனத்திற்கு சரிசமமான வேதனத்தையும் ஏனைய சலுகைகளையும் கோரி ஆடைத்தொழிற்சாலையில் வேலை நிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட்டநிகழ்வை நினைவு கூரும் முகமாகவே சர்வதேச மகளிர் தினத்தை அனுஷ்டிக்கும் யோசனையைமுதன் முதலில் முன்வைக்கப்பட்டது.

1908ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பெண்கள் தங்களுக்கு வாக்குரிமை கேட்டுஇ நடத்தியபோராட்டத்தை பார்த்து அமெரிக்க ஜனாதிபதி தியயோடர் ரூஸ்வெல்ட் நிலைகுலைந்து போனதாகவும் அதைத் தொடர்ந்து பெண்களின் உரிமை படிப்படியாகக் கிடைக்க ஆரம்பித்ததாகவும்அறிவிக்கப்படுகிறது. 1910 ஆம் ஆண்டில்இ ஹேகன் நகரில் சர்வதேச பெண்கள் மகாநாடு நடத்தப்பட்டது. அதையடுத்தே உலக நாடுகளில் சர்வதேச மகளிர் அமைப்பு கள் தோன்றின.பெண்களிடமும் மனித நேயம் இருக்கிறது. எனவே பாலியல் வேறுபாட்டிற்கு புறம்பாக ஆண்மைபெண்மை என்ற பாகுபாடு காண்பிக்காமல்இ தங்கள் உரிமைகளை வழங்கு மாறு பெண்ணினம் ஆணினத்திடம் அன்று அன்புக்கரம் நீட்டிய போது ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்தஅன்புக்கர த்தை பற்றிக் கொண்ட வேளையிலேயே ஆண் பெண் சமத்துவம் உலகில்சாத்தியமாகியது.

இலங்கையில் மார்ச் மாதம் 8ந் திகதியன்று சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.எனினும்இ அது பொதுவிடுமுறை தின மல்ல. உலகின் பல நாடுகள் இன்றைய தினத்தை விடுமுறைதினமாக அனுஷ்டிக்கின்றன. 1909 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் முதலாவது தேசிய பெண்கள்தினம் பெப்ரவரி 28ந் திகதியன்று அனுஷ்டிக்கப்பட்டது. 1910 ஆம் ஆண்டில் உலகெங்கிலும்இருந்து 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண் பிரதிநிதிகள் கோபெனேகளில் பெண் உரிமை குறித்துஇஒன்று கூடி கருத்துக்களை முன்வைத்தனர்.
பெண் உரிமையை பொறுத்தமட்டில் இலங்கை மற்ற நாடுகளை முந்திக் கொண்டு பெண்களின்உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டமை பாராட்டுக்குரிய ஒருவிடயமாகும். இந்தியாவுக்கு முன்னரே இலங்கைப் பெண் களுக்கு வாக்குரிமை கிடைத்தது.பாராளுமன்றம் பிரதிநிதித்துவத்தில் பெண்களுக்கு சரிசம வாய்ப்புக்கள் அளிக்கப்பட வேண்டும்என்பதற்கான சட்டம் இலங்கையில் இருக்கின்ற போதி லும்இ அது விடயத்தில் இலங்கையோ வேறுபல நாடுகளோ அந் தளவுக்கு முக்கியத்துவம் அளிக்க வறிவிட்டன.

உலகின் முதலாவது பெண் பிரதம மந்திரியாக 1960 ஆம் ஆண்டில் திருமதி ஸ்ரீமாவோபண்டாரநாயக்கவை நியமித்துஇ இலங்கை உலக சாதனையை ஏற்படுத்தியது. அதற்கு பின்னர்இஅவரது புதல்வி சந்திரிகா குமாரதுங்க இலங்கையின் நிறைவேற்று அதி காரத்தைக் கொண்டஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டார். எனினும்இ பாராளுமன்றத்தில் பெண்களுக்குஅளிக்கப்படும் விகிதா சாரம் மிகவும் குறைவாக இருப்பது வேதனையை அளிக்கின்றது.இலங்கையில் ஆண் ஆதிக்கம் வலுவிழந்து வருகின்ற போதிலும்இ பெண் உரிமைகளுக்குமுக்கியத்துவம் அளித்துஇ அவர்களுக்கு அரசியலில் கூடுதலான பிரதிநிதித்துவம் அளிப்பது மிகவும்அவசியமாகும்.

இறுதியில் மலையக பெருந்தோட்டங்களில் பணிபுரியும் பெண்களு க்கு சம சம்பளம் அளிப்பதிலும்இலங்கை பின்தங்கிய நிலையில் இருப்பதை நாம் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.தேயிலைத் தோட்டங்களிலும்இ இறப்பர் தோட்டங்களிலும் இந்த பெண்கள் சீரற்றகாலநிலையையும் பொருட்படுத்தாமல்இ நாட்டின் தேசிய வருமானத்தை கட்டியெழுப்புவதற்காகமேற்கொள்ளும் பங்களிப்பை நாம் மறந்துவிடலாகாது.

தோட்ட மக்களுக்கு சேவையாற்ற தமிழ் உறுப்பினர்கள் தேவை


களுத்துறை மாவட்டத்தில் தமிழர் ஒருவர் அமைப்பாளராக நியமிக்கப்பட்டு அமைச்சர் நிர்மல கொத்தலாவலவுடன் இணைந்து செயற்பட்டு வருவதன் காரணமாகவே கடந்த இரண்டு வருடகாலமாக களுத்துறை மாவட்ட தோட்ட மக்களுக்கு குறிப்பிடத்தக்க சேவையைப் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது. இப் பணியை இத்தோடு நிறுத்திவிடாது தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவும், பின்தங்கிய நிலையில் இருந்து வரும் தம் சமூகத்துக்கு சேவை செய்யவேண்டும் என்பதே தனது விருப்பமாகும் என புளத்சிங்கள பிரதேசபையில் ஐ.ம.சு.கூட்டமைப்பில் போட்டியிடும் களுத்துறை மாவட்ட ஸ்ரீ.ல.சு.க அமைப்பாளரான ரி. ஜெயராஜா ஹல்வத்துறை,கோவின்ன குடாகங்கை, கூழ்கா,கல்லுமலை,மில்லகந்த,கொபவல ஆகிய தோட்ட மக்கள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார்

மாகாணசபை உறுப்பினராகவோ,பாராளுமன்ற உறுப்பினராகவோ,பிரதேசசபை உறுப்பினராகத் தானும் இல்லாது கடந்த இரண்டு வருட காலத்தில் பல பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு கணினிக் கருவிகள், பாடசாலை உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன்,அரச முதலீட்டு வங்கியினால் 1000 மாணவர்களுக்கு தலா 200 ரூபா வீதம் சேமிப்புக்கணக்கும் ஆரம்பிக்கப்பட்டு பாஸ் புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மண் சரிவினால் பாதிப்புக்குள்ளான கீக்கியனகந்த பாடசாலைக்கென அமைச்சர் நிர்மலவுடன் இணைந்து மேற்கொண்ட உடனடி நடவடிக்கையினால் 1 இலட்சம் ரூபா தற்காலிக கட்டிடத்துக்கு வழங்கப்பட்டு புதிய பாடசாலைக்கென காணி ஒதுக்கப்பட்டு 100 இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட செலவில் இரண்டு மாடிக்கட்டிடமும் கட்டப்பட்டு பூர்த்தியடையும் நிலையில் உள்ளது.

அரம்பஹேன,அலுக்கெட்டிய,கின்னஸ்லிகல்லுமலை,மில்லகந்த,மிஹிரிக்கெலே,குடாகங்கை,கூழ்கா,என்டர்சன்,எம்பரகல,கொபவல ஆகிய தோட்டங்களுக்கு சுமார் 4 கோடி ரூபா செலவில் மின்சாரம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

தோட்டப் பாதைகள் கொங்கிறீட் போட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.கடந்த காலத்தில் அவசரகால சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல தோட்ட இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மலையக மக்கள் சுய சிந்தனையுடன் செயற்பட வேண்டும்


மலையக மக்கள் ஏனைய இதர கட்சிகளுக்கு ஏணியாக இருக்காது சுய சிந்தனையுடன் சுதந்திரமாகச் செயற்பட்டு உள்ளூராட்சித் தேர்தலில் தமது பிரதேச சபைகளுக்கு தமிழ் பிரதிநிதித்துவத்தைத் தெரிவு செய்து கொள்ள முன்வர வேண்டுமென இ.தொ.கா. வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.டி.இராஜன் இரத்தினபுரி இ.தொ.கா.பணிமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்; கடந்த உள்ளுராட்சி சபை இ.தொ.கா. தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பல பிரதிநிதிகளை பெற்றுக்கொண்டு அவர்களினூடாக பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டமையை யாரும் மறந்துவிட முடியாது. தற்போதைய சூழ்நிலையில் எமது மக்கள் தமக்கென பிரதிநிதிகளை இரத்தினபுரி மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு பெற்றுக்கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

ஏனைய கட்சிகளின் ஆசை வார்த்தைகளையும் அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும் நாம் விலைபோனால் எதிர்வரும் காலங்களில் நாம் யாருமே இல்லாத அநாதையாக மாறி விடுவோம். இரத்தினபுரி மாவட்டத்தில் அவ்வப்போது இன வன்முறைச் சம்பவங்கள் இடம் பெற்றால் அதனை தடுக்க கொழும்பிலிருந்து நடவடிக்கை எடுக்க முடியாது.தோட்டங்களில் எமக்கென உறுப்பினர் ஒருவர் இருந்தால் அவர் உடனடியாக செயற்பட்டு நடவடிக்கை மேற்கொள்வார்.இதனை கவனத்திற் கொண்டும் அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் எமது பிரதிநிதிகளை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்.