Wednesday, August 12, 2009

தமிழ் வேட்பாளர்களிடம் ஒற்றுமையின்மையே தோல்விக்கு காரணம்

பதுளை மாவட்டத்தில் 22 வீதமான வாக்காளர்கள் தமிழ் சிறுபான்மையினர் எனவும், வேட்பாளர்களுக்கு இடையில் வாக்குகள் பிரிந்து சென்றதனால் சரியான பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெறவில்லை என பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.உரிய அடையாள அட்டைகள் இல்லாத காரணத்தினால் அதிக எண்ணிக்கையிலான தோட்டப்புற தமிழ் வாக்காளர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என ஐ.தே.க மாகாணசபை உறுப்பினர் வேலாயுதம் தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள தோட்ட நிர்வாகம் உரிய உதவிகளை வழங்கவில்லை. கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஊவா மாகாணசபைத் தேர்தலில் 5 தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும், இந்த தடவை அந்த எண்ணிக்கை மூன்றாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான தமிழ் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்ட காரணத்தினால் வாக்குகள் பிரிந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.