Friday, February 12, 2016

அலட்சியம் வேண்டாம் வேதனையளிக்கிறது

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வ­தற்­கான கூட்டு ஒப்­பந்தம் இது­வரை கைச்­சாத்­தி­டப்­ப­டாத நிலையில் அந்த மக்கள் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்­டு­வ­ரு­கின்­றனர். தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரிப்­ப­தற்­கான கூட்டு ஒப்­பந்­தத்தை உரு­வாக்கும் நோக்கில் தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துக்கும் இடையில் பல சுற்றுப் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­ற­போதும் அனைத்து பேச்­சு­வார்த்­தை­களும் தோல்­வியில் முடி­வ­டைந்­துள்­ளன.

இந்­நி­லையில் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு மாதாந் தம் 2500 ரூபா கொடுப்­ப­னவை வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. எவ்­வா­றெ­னினும் அர­சாங்கம் இந்த விட­யத்தில் தலையிட்டு தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கலாம். அர­சாங்கம் தலை­யிட்­டி­ருந்­தாலும் ஒன்றும் நடக்­க­வில்லை. ஏற்­க­னவே இருந்த கூட்டு ஒப்­பந்தம் காலா­வ­தி­யாக தற்­போது ஒரு வருடம் பூர்த்­தி­யா­கப்­போ­கின்ற நிலையில் இன்னும் புதிய கூட்டு ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­திட முடி­ய­வில்லை.

நாட்டின் ஏனைய தொழிற்­து­றை­யினர் பெறு­கின்ற சம்­ப­ளத்­துடன் ஒப்­பி­டு­கையில் மிகவும் குறைந்­த­ள­வி­லான சம்­ப­ளத்­தையே தோட்டத் தொழி­லா­ளர்கள் பெறு­கின்­றனர். அவர்கள் தமக்கு அதி­க­ரித்­துக்­கொ­டுக்­கு­மாறு கோரி­யி­ருக்கும் சம்­பளத் தொகையும் நியா­ய­மா­ன­தா­கவே உள்­ளது. அந்த தொகைக்­கூட நாட்டின் ஏனைய துறை­யினர் பெறும் சம்­ப­ளத்­துடன் ஒப்­பி­டு­கையில் மிகவும் குறை­வா­ன­தாகும்.

இந்­நி­லையில் தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்­வுக்கு வழி வகுக்கும் கூட்டு ஒப்­பந்­தத்தை இது­வரை கைச்­சாத்­தி­டாமல் இருப்­ப­தா­னது ஒரு வகையில் அந்த மக்­களின் உரி­மை­களை மீறு­வ­தா­கவே அமைந்­துள்­ளது.

குறிப்­பாக தோட்டத் தொழி­லா­ளர்கள் இந்த நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு முது­கெலும்­பாக இருக்­கின்­றனர். ஆனால் அவ்­வாறு நாட்டின் பொரு­ளா­தா­ரத்­துக்கு முது­கெலும்­பாக இருக்கும் மக்­க­ளுக்கு ஒரு­வ­ருட கால­மாக சம்­பள உயர்வை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­விடின் இது எந்­த­ளவு தூரம் வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும் என்­பது புரி­கின்­றது.

எனவே அர­சாங்கம் இந்த விட­யத்தில் அலட்­சி­யப்­போக்கில் இருக்­க­வேண்டாம். குறிப்­பாக தொழிற்­சங்­கங்­களும் முத­லாளி மார் சம்­மே­ள­னமும் இதனை பார்த்­துக்­கொள்­ளட்டும் என்று அர­சாங்கம் இருந்­து­வி­டக்­கூ­டாது.

விசே­ட­மாக புதிய அர­சாங்­கத்­துக்கு தோட்டத் தொழி­லா­ளர்கள் பாரிய நம்­பிக்­கை­யுடன் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். எனினும் இந்த அர­சாங்­கமும் அந்த மக்­களின் இந்த பிரச்­சினை தொடர்பில் அலட்­சி­யப்­போக்­குடன் இருந்­து­வி­டக்­கூ­டாது. உட­ன­டி­யாக இந்த விட­யத்தில் தலை­யிட்டு அவர்­க­ளுக்கு நியா­ய­மான சம்­பள அதி­க­ரிப்பை வழங்­க­வேண்டும்.

மேலும் மலை­யக அர­சியல் தலை­மைத்­து­வங்­களும் இந்த விடயம் தொடர்பில் அதிக அக்­கறை செலுத்­த­வேண்டும். வர­லாறு முழு­வதும் தோட்டத் தொழி­லா­ளர்கள் பல்­வேறு விட­யங்­களில் ஏமாற்­றப்­பட்டு வந்­துள்­ளனர்.

குறிப்­பாக சுகா­தாரம், கல்வி உள்­ளிட்ட பல்­வேறு வச­திகள் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலேயே அந்த மக்கள் வாழ்ந்துவருகின்றனர். ஆனால் தற்போது உரிய முறையில் சம்பள உயர்வுக்கூட வழங்கப்படாமல் உள்ளனர்.

எனவே இந்த விடயத்தில் தொடர்ச்சியாக அலட்சியப்போக்குடன் இருக்கவேண்டாம். இது வேதனையளிக்கும் விடயமாகும். வேதனை தொடர்வதற்கு இடமளிக்கவேண்டாம்.