Friday, July 24, 2009

இளைஞர்கள் தமக்கு கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்த வேண்டும்

மலையக இளைஞர்கள் தமக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும். தோட்ட தொழிலை மட்டும் நம்பியிருந்த காலம் மாறி இன்று சுயதொழிலில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக இவ்வாறு இளைஞர் வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் மூலமாக தனது அமைச்சினால் "நவசக்தி' சுயதொழில் நிதி உதவி மற்றும் பயிற்சி வழங்கல் திட்டத்தின் மூன்று நாள் பயிற்சியினை கண்டி குருதெனியவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கல்வி வள நிலையத்தில் ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் பேசும் போது தெரிவித்தார். மேலும் நவசக்தித் திட்டமானது சுயதொழில் ஒன்றினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் தொழில் பயிற்சி, ஆலோசனை வழங்குவதுடன் மக்கள் வங்கி மூலம் கடன் பெற்றுத் தரப்படும். இது வட்டியில்லாக் கடனாகவே இளைஞர்களுக்கு வழங்கப்படுவதோடு வங்கி வட்டியினை அமைச்சே செலுத்தவுள்ளது. இந்திய உயர் மட்டக்குழு மூலமாக பயிற்சியும் வழங்கப்பட்டு தொழில் அபிவிருத்திப் பற்றி மேற்பார்வை செய்யப்படவுள்ளது. வருமானம் பெறும் வழி, வருமானத்தினைப் பெருக்கிக் கொள்ளும் முறை, இடையூறுகள், பிரச்சினைகள் பற்றி தொடர்ந்தும் மேலான்மை செய்யப்படும். கடனை மூன்று மாதத்திற்குப்பின்னரே செலுத்த தொடங்க வேண்டும். இக் காலப்பகுதிக்குள் ஒரு நிலையான வருமானத்தை ஈட்ட முயற்சிக்க வேண்டும். இந்தப் பயிற்சியின்போது சித்தியடைபவர்களுக்கே இக்கடன் உதவி வழங்கப்படும். எனவே இந்த மூன்று நாள் பயிற்சியினை ஒழுங்கான முறையில் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
தொழிலாளரின் சம்பள உயர்வை முடக்கும் சில தொழிற்சங்கங்கள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை சாதகமாக்கிக் கொண்ட சில தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் அவற்றை முடக்கி வைத்துள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் பண்டாரவளை குருக்குடி டிவிசனில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் உலக நாடுகளில் வாழும் நமது இந்திய வம்சாவளியினர் குறிப்பாக மலேசியா, பிஜித்தீவு, மொரிசியஸ் மற்றும் தென்னாபிரிக்க நாடுகளில் வாழுபவர்கள் காலத்தின் தேவைக்கேற்ப தம்மை மாற்றி தமது தொழிற்துறை மற்றும் பொருளாதார பாதையிலும் புதிய வடிவங்களுடன் தன்னிறைவு அடைந்து வருகின்றனர்.அந்தவகையில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பெருந்தோட்டத்துறையில் கடமை புரியும் தொழிலாளர்களுக்கு வேலைக்குச் சென்றால் தான் வேதனம் என்ற வேதனைக்குரிய சம்பிரதாயம் தொடருகின்றது. இதை மாற்றியமைக்க மலையகத்திற்கு மாற்றம் தேவையென்ற தொனிப் பொருளில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் காங்கிரஸ் எதிர்கால நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது.