Tuesday, May 31, 2016

அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து சம்­ப­ளத்தை பெறுவது சாத்­தி­ய­மற்­றது



கடந்த 18 வரு­டங்­க­ளாக கூட்டு ஒப்­பந்தம் மூலமே தோட்டத் தொழி­லா­ளரின் சம்­பளம் அதி­க­ரிக்­கப்­பட்டு வந்­துள்­ளது. தொழி­லா­ளரின் சம்­ப­ளத்தை அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து சுல­ப­மாகப் பெற்றுக் கொள்­ளலாம் என்றும் கூட்டு ஒப்­பந்த முறை­மையை மிக மோச­மாக விமர்­சனம் செய்தும் வந்­த­வர்கள், தற்­போது அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து சம்­பள உயர்வைப் பெற்றுக் கொள்­வது எந்­த­ளவு கடி­ன­மா­னது என்­ப­தையும் சாத்­தி­ய­மற்­றது என்­ப­தையும் அனு­பவ ரீதி­யாக உணர்ந்­தி­ருப்­பார்கள் என்று பெருந்­தோட்டத் தொழிற்­சங்க கூட்டுக் கமிட்­டியின் செய­லாளர் நாய­கமும் லங்கா தோட்டத் தொழி­லாளர் யூனியன் பொதுச்­செ­ய­லா­ள­ரு­மான எஸ். இரா­ம­நாதன் தெரி­வித்தார்.

கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் தொழிற்­சங்­கங்கள், தோட்டக் கம்ப­னி­களின் பிர­தி­நி­திகள் அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள், ஆகி­யோ­ருக்கு இடையே இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் விப­ரங்­களை கூட்டுக் கமிட்­டியின் தோழமைச் சங்க தலை­வர்­க­ளுக்கு விளக்­கு­வ­தற்­காக கண்டி இலங்கை தொழி­லாளர் செங்­கொடிச் சங்கக் காரி­யா­ல­யத்தில் நடத்­தப்­பட்ட கூட்­டத்தில் பேசி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். செங்­கோடிச் சங்­கத்தின் தலைவி மேனகா கந்­த­சாமி தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில் கே.எம். கிருஷ்­ண­மூர்த்தி, எஸ். முரு­கையா, ஏ. முத்­து­லிங்கம், எஸ். ஆனந்தி, எஸ். கந்­தையா, ஆர். சிரில் ஆகிய முக்­கி­யஸ்­தர்கள் கலந்து கொண்­டி­ருந்த இக்­கூட்­டத்தில் திரு இரா­ம­நாதன் தொடர்ந்து கருத்து தெரி­வித்­த­போது;

கூட்டு ஒப்­பந்­தத்தில் யார் கையொப்­ப­மி­டு­வது என்­பது முக்­கி­ய­மல்ல. யார் கையொப்­ப­மிட்­டாலும் தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்கு கூட்டு ஒப்­பந்த முறை­மையே சிறந்­த­தாகும் என்­பதும் தொழி­லா­ளர்­களின் பலத்தின் மூலம் பேரம்­பேசி சம்­பள உயர்­வையும் ஏனைய உரி­மை­க­ளையும் பெற்றுக் கொள்ள முடி­யுமே தவிர சந்­தர்ப்­ப­வாத அர­சி­யல்­வா­தி­களை நம்பி தொழி­லா­ளரின் உரி­மை­களை வென்­றெ­டுக்க முடி­யாது.

இன்று முத­லா­ளித்­துவ தோட்டக் கம்­ப­னி­களும் முத­லா­ளித்­துவ அர­சி­யல்­வா­தி­களும் ஒன்­று­பட்டு செயற்­ப­டு­கின்­றனர். தொழி­லா­ளரின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாமல் இழுத்­த­டிக்­கப்­ப­டு­வ­தற்கு கார­ணம் அர­சி­லுள்ள பெரும் புள்­ளி­களின் ஆத­ரவும் அனு­ச­ர­ணையும் தோட்டக் கம்ப­னி­க­ளுக்கு இருக்­கின்றமையே­யா­கும். இதனால் தான் என்­று­மில்­லா­த­வாறு தோட்டக் கம்­ப­னிகள் முரட்டுப் பிடி­வா­த­மாக நடந்து கொள்­கின்­றன. தோட்டக் கம்­ப­னிகள் தமது இறு­மாப்பைக் கைவிட்டு தொழி­லா­ளரின் சம்­பள உயர்வுக் கோரிக்­கையில் நியா­ய­மான தீர்­வினை மேற்­கொள்ள முன்­வர வேண்டும். தொழி­லா­ளர்­க­ளது அடிப்­படை சம்­பள உயர்வு, வரவு போனஸ், விலை­யேற்ற அல வன்ஸ், மேல­திக தேயிலை இறப்­ப­ருக்­கான கொடுப்­ப­ன­வு­களின் அதிகரிப்பையே நாம் முன்வைத்துள்ளோம்.

இக் கோரிக்கையினையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறோம். இக் கோரிக்கையினை வென்றெடுப்பதற்காக எதிர்வரும் நாட்களில் தோட்டக் கம்பனிகளுக்கும் அரசாங்கத்துக்கும் அழுத் தங்களைப் பிரயோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானிக்கப் பட்டிருப்பதாக வும் கூறினார்.