Wednesday, March 12, 2014

பெருந்தோட்ட உத்தியோகத்தர்கள்- முதலாளிமார் சம்மேளனம் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து


பெருந்தோட்ட உத்தியோகஸ்தர்களுக்கு 25 சதவீத சம்பள உயர்வு உட்பட ஏனைய நலன்களை  வலியுறுத்தி கூட்டு ஒப்பந்தம் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்திற்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் கொழும்பிலுள்ள முதலாளிமார் சம்மேளனத்தின் செயலகத்தில் கைச்சாத்திடப்படவுள்ளது

கடந்த முறை மேற்படி இரு சாரார்களுக்கும் இடையில்  கைச்சாத்திடப்பட்ட ஐந்து வருட கூட்டு ஒப்பந்தம்  கடந்த வருடம் அக்டோபர்  மாதத்தில் முடிவடைந்து  விட்டது. அதனைத் தொடர்ந்து  இலங்கை தோட்ட  சேவையாளர் சங்கம்   முதலாளிமார் சம்மேளனத்துடன் பல சுற்றுப்  பேச்சுவார்த்தை நடத்தியதன் பயனாக எவ்வித போராட்டமுமின்றி பேச்சுவார்த்தை மூலம்  05 வருட கூட்டு  ஒப்பந்தத்தை  மூன்று வருடங்களாக மாற்றியதுடன் கடைசியாக கடந்த வருடம்  அக்டோபர்  மாதம்  பெற்ற  சம்பளத்திலிருந்து  25 சதவிகித  சம்பள உயர்வு  உட்பட  ஏனைய நலன்களும்  நிலுவை சம்பளமும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச்செயலாளர்  கிங்ஸ்லி ராஜேந்திரன் ரொபர்ட் தெரிவித்தார்.