Wednesday, April 22, 2009

தொழிலற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி

மத்திய மாகாணத்தில் பொருளாதார மேம்பாட்டை அபிவிருத்தி செய்வதற்கென தொழிலற்ற இளைஞர், யுவதிகள் ஆயிரம் பேருக்கு தொழிற்பயிற்சி பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்தியமாகாண தமிழ் கல்வியமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் மலையகத்திலுள்ள 68 பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப கல்வி பிரிவுகள் இயங்குகின்றன. அவற்றில் கல்வி போதிப்பதற்கென 10 ஆசிரியர்கள் இந்தியாவிலிருந்து பயிற்சி பெற்று திரும்பியுள்ளனர். 18 மலையக விஞ்ஞான ஆசிரியர்கள் இந்தியாவில் விஞ்ஞான பட்டதாரிகளாக திரும்பியுள்ளனர் என்றார்.

கைத்தறி நெசவு உற்பத்தியையும், சந்தை வாய்ப்பையும் ஏற்றுமதி துறையில் பல்வேறு ஊக்குவிப்புக்களையும் எதிர்பார்ப்பதோடு விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக பாடசாலை மட்டங்களிலும் பிதேச செயலாளர் மட்டத்திலும் திட்டமிடல் தொடர்பாக ஆவன செய்யப்படும் என்றார்.

தோட்ட பிரதேச பிள்ளைகளின் கல்வி நிலைமையை மேம்படுத்துவதற்காக நகர்புற காடசாலை மாணவர்கள் பெறும் சகல வசதிகளையும் பெற்றுக்கொடுத்து சமத்துவ கல்வி சூழலை உருவாக்க வேண்டும் என்றார்.