Thursday, June 1, 2017

மண்சரிவு அபாயம் - 60 பேர் வெளியேற்றம்


நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாரண்டன் தோட்டத்தில் 31.05.2017 அன்று ஏற்பட்ட மண்சரிவில் ஒரு வீடு சேதமானதுடன் ஒரு லயன் குடியிருப்பை சேர்ந்த 60 பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர். 

12 குடும்பங்கள் வசிக்கின்ற இந்த ஒரு லயன் குடியிருப்பில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் நிலவுவதனால் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர். 

இந் நிலையில் பாதுகாப்பு நலன் கருதி ஒரு லயன் குடியிருப்பை சேர்ந்த சுமார் 60 பேர் வரை அக்குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு தோட்ட வெளிகல உத்தியோகத்தர் வீடுகளிலும், உறவினர்கள் வீடுகளிலும் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர்உணவு பொருட்களை வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. 

கடந்த சில தினங்களாக நாடளாவிய ரீதியில் பெய்துவரும் அடைமழையினால் பேரழிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நுவரெலியா மாவட்டத்திலும் அதிக காற்றுடன் அடை மழை பெய்து வருகின்றமை குறிப்பிடதக்கது.