Friday, May 27, 2016

அணுகுமுறைகள் முரண்பட்டு காணப்படுவதாலேயே பேச்சுக்கள், போராட்டங்கள் தோல்வியடைகின்றன

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வைப் பெற்­றுக் ­கொ­டுக்க வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டி­லேயே தொழிற்­சங்­கங்கள் இருந்து வரு­கின்­றன. ஆனாலும் தொழிற்­சங்­கங்­களின் அணு­கு­மு­றைகள் முரண்­பட்­ட­தாகக் காணப்­ப­டு­கின்­றன. அதி­கா­ரப்­போட்டி, மாறு­பட்ட கொள்கைத் திட்டம், மலை­யகத் தலை­மை­க­ளி­டத்தில் இருந்­து ­வ­ரு­கின்ற வரட்டு கௌர­வங்கள் ஆகி­ய­வற்றின் கார­ண­மாக பேச்­சு­வார்த்­தைகள், போராட்­டங்கள் மாத்­தி­ர­மின்றி அப்­பாவித் தொழி­லா­ளர்­களும் ஏமாற்­றப்­பட்டு, தோல்­வி­ய­டைந்து, சோர்ந்து போகின்­றனர் என்று ஐக்­கிய தோட்டத் தொழி­லாளர் சங்கப் பொதுச்­செ­ய­லாளர் முத்­து­லிங்கம் தெரி­வித்­துள்ளார்.
பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு விட­ய­மாக அவர் கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் மேலும் கூறு­கையில், தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வைப் பெற்­றுக் ­கொ­டுக்க வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டி­லேயே, தொழிற்­சங்­கங்கள் இருந்து வரு­கின்­றன. ஆனாலும் அத் தொழிற்­சங்­கங்­களின் அணு­கு­மு­றைகள் முரண்­பட்ட வகை­யி­லேயே அமைந்­துள்­ளன. தமக்கே அனைத்து ஆக்கற் சக்­தி­களும் இருப்­ப­தாக நி­னைத்தே தற்­போது மலை­யகத் தலை­மைகள் செயற்­பட்டு வரு­வதைக் காண முடி­கி­றது. அதி­கா­ரப்­போட்டி, மாறு­பட்ட கொள்கைத் திட்டம், மலை­யகத் தலை­மை­க­ளி­டத்தில் இருந்­து­வ­ரு­கின்ற வரட்டு கௌர­வங்கள் ஆகி­ய­வற்றின் கார­ண­மாக பேச்­சு­வார்த்­தைகள், போராட்­டங்கள் மாத்­தி­ர­மின்றி அப்­பாவித் தொழி­லா­ளர்­களும் ஏமாற்­றப்­பட்டு, தோல்­வி­ய­டைந்து, சோர்ந்து போகின்­றனர்.
தோட்டத் தொழி­லாளர் சமூகம் என்ற ரீதியில் முரண்­பா­டு­களை ஒதுக்கி வைத்து அனைத்து மலை­யக சிறிய, பெரிய தொழிற்­சங்­கங்­களும் ஒன்­றி­ணைந்து தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்­வினை முன்­னி­லைப்­ப­டுத்தி ஒன்­றி­ணைந்த போராட்­டங்­க­ளையும் ஒன்­றி­ணைந்த ஆக்கற் காரி­யங்­க­ளையும் முன்­னெ­டுக்க வேண்டும். இப்­போ­ராட்­டங்கள் அர­சையும், தோட்­டங்­களை பொறுப்­பேற்­றி­ருக்கும் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­தையும் வலி­யு­றுத்தி, அழுத்­தங்­களைக் கொடுக்­கக்­கூ­டி­ய­தா­கவே அமைய வேண்டும். அவ்­வாறு அமைந்தால் மாத்­தி­ரமே பிர­தி­ப­லனைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்கும்.
மலை­யக தொழிற்­சங்­கங்கள் தனித்­த­னி­யாக பிரிந்து நின்று போராட்­டங்­களை மேற்­கொள்­வதன் மூலம் போராட்டம் பல­வீ­ன­ம­டை­யவே செய்யும். அனைத்து தொழிற்­சங்­கங்­களின் இலக்கு சம்­பள உயர்வு விட­யத்தில் ஒன்­றா­ன­தாக இருக்கும் போது அத்­தொ­ழிற்­சங்­கங்கள் ஒன்­றி­ணைந்து போராட்­ட­மாக முன்­னெ­டுக்­கப்­படும் பட்­சத்தில் அதன் பயனை தோட்டத் தொழி­லா­ளர்கள் அனு­ப­விக்க கூடி­ய­தாக இருக்கும். அர­சாங்­கத்­தினால் தனியார் துறை­யி­ன­ருக்கும் வரவு செலவுத் திட்­டத்தின் மூலம் அறி­விக்­கப்­பட்ட 2500 ரூபா சம்­பள உயர்வு தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு மட்டும் கிடைக்­காமை அடிப்­படை உரிமை மீற­லாகும். இதனை அனை­வரும் புரிந்­து­கொண்டு செயற்­படல் வேண்டும். முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ஷ தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வு வழங்­கப்­படல் வேண்­டு­மென்று அடிக்­கடி கூறி வந்த போதிலும் அக்­கூற்று இது­வ­ரையில் போலித்­த­ன­மா­ன­தான அமைந்து விட்­டமை வேத­னைக்­கு­ரி­ய­தாகும்.
தற்­போ­தைய வாழ்க்கைச் செலவு உயர்­வினை தோட்டத் தொழி­லா­ளர்­க­ளினால் எதிர்­கொள்ள முடி­யாது அவர்கள் சொல்­லொணாத் துய­ரங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர். வாழ்க்கைச் செல­வினை ஈடு­செய்ய முடி­யா­மை­யினால் அவர்கள் தோட்டத் தொழில் துறை­யி­லி­ருந்து வில­கிச்­சென்று கொண்­டி­ருக்­கின்­றனர். இந்­நிலை தொடரும் பட்­சத்தில் தொழி­லா­ளர்கள் இன்றி தோட்டத் தொழில் துறை­யி­னையே மூட­வேண்­டிய அவலம் ஏற்படும். உழைப்பிற்கேற்ற சம்பளமின்மை, இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றினால் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்தும் நீடிக்க அனு­ம­திக்க முடி­யாது. இந்­நிலை நீடித்து பெருந்­தோட்­டங்கள் மூட வேண்­டிய சூழல் ஏற்­ப­டு­மே­யானால் அத் தோட்­டங்­களை நம்­பி­யி­ருக்கும் தொழி­லா­ளர்­களின் சாபங்­க­ளுக்கு அனைத்து மலை­யக தலை­மை­களும் உட்­ப­ட­வேண்­டி­வரும் என்றார்.

தோட்­டத்­திற்கு எக்­கா­ரணம் கொண்டும் செல்ல மாட்டோம் வேறு எங்­கா­வது வீடு­களை அமைத்து தாருங்கள்

மண்­ச­ரிவு ஏற்­பட்டு 16 உயிர்­களை காவு கொண்ட புளத்கொ­ஹு­பிட்­டிய களு­பான தோட்­டத்­திற்கு இனிமேல் எக் காரணம் கொண்டும் நாங்கள் செல்ல மாட்டோம். எங்­களுக்கு வேறு எங்­கா­வது வீடு­களை அமைத்து தரு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இதனை மன்­றாட்­ட­மாக கோரு­கின்றோம் என்று புளத்­கோ­ஹு­பிட்­டிய மண்­ச­ரிவில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தெரி­வித்­தனர். தயவு செய்து களு­பான தோட்­டத்­திற்கு செல்­லு­மாறு எங்­களை வற்­பு­றுத்த வேண்டாம். அதனை ஒரு பாவப்­பட்ட இட­மா­கவே பார்க்­கின்றோம். எங்­களால் இனிமேல் புளத்­கோ­ஹு­பிட்­டிய களுப்­பான தோட்­டத்தில் நிம்­ம­தி­யாக வாழவே முடி­யாது என்றும் அந்த மக்கள் குமு­று­கின்­றனர்.

புளத்­கோ­ஹு­பிட்­டிய களு­பான தோட்­டத்தில் ஏற்­பட்ட மண்­ச­ரி­வை­ய­டுத்து, அங்­கி­ருந்து இடம்­பெ­யர்ந்து யக்­கல மகா­வித்­தி­யா­ல­யத்தில் 57 குடும்­பங்கள் தற்­கா­லி­க­மாக தஞ்­ச­ம­டைந்­துள்­ள அந்த மக்­கள் இந்த உருக்­க­மான கோரிக்­கையை முன்­வைத்­தனர். பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ந்தும் துய­ரத்தை வெளி­யி­டு­கையில்,

உங்­க­ளிடம் ஒரு­வி­ட­யத்தை மன்­றாடிக் கோரு­கின்றோம். நாங்கள் கோரு­கின்ற இந்த விட­யத்தை தயவு செய்து அர­சாங்­கத்­திடம் எடுத்துக் கூறுங்கள். புளத்­கோ­ஹு­பிட்­டிய களு­பான தோட்­டத்தில் நாம் இது­வரை காலமும் வசித்தோம். ஆனால் அங்கு ஏற்­பட்ட மண்­ச­ரி­வினால் எமது உற­வுகள் 16 பேரை இழந்­து­விட்டோம். அந்த 16 பேரும் மண்­னோடு மண்­ணாக புதைந்து போகி­னர்.

அந்த வகையில் பார்க்­கும்­போது புளத்­கோ­ஹு­பிட்­டிய களு­பான தோட்டம் வாழ்­வ­தற்கு ஆபத்­தான இட­மென்­பது நிரு­ப­ன­மா­கி­விட்­டது. எனவே எக்­கா­ரணம் கொண்டும் இதன்­பின்னர் புளத்­கோ­ஹு­பிட்­டிய களு­பான தோட்­டத்­திற்கு நாங்கள் செல்­லவே மாட்டோம். அங்கு சென்று எம்மால் ஒரு­போதும் நிம்­மி­யாக வாழ முடி­யாது.இதனை புரிந்து கொள்­ளுங்கள். எமது நிலை­மையை உண­ருங்கள். எமது 16 உற­வு­களை பரித்­தே­டுத்த அந்த தோட்­டத்தில் எம்மால் இனி வாழ முடி­யாது.
எனவே எமக்கு வேறு ஒரு பாது­காப்­பான இடத்தில் வீடு­களை அமைத்து தாருங்கள் நாங்கள் அங்­கி­ருந்து கொண்டு வேண்­டு­மானால் களு­பான தோட்­டத்­திற்கு தொழி­லுக்­காக சென்று வர­மு­டியும். ஆனால் களு­பான தோட்­டத்தில் வாழ மாட்டோம்.

மண்­ச­ரிவு ஏற்­பட்­டதன் பின்னர் எமது பகு­திக்கு வருகை தந்த அமைச்சர் திகாம்­பரம் புதிய வீடு­களை அமைத்து தரு­வ­தாக உறு­தி­ய­ளித்தார். ஆனால் களு­பான தோட்­டத்தில் எமக்கு வீடு­களை அமைக்க வேண்டாம். மாறாக வேறு ஓர் இடத்தில் எமக்கு வீடு­களை அமைத்து தர வேண்டுமென அமைச்சர் திகாம்பரத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இந்த விடயத்தில் அமைச்சர் மனோகணேசனும் எமக்கு ஆதரவு வழங்குவார் என நம்புகிறோம். தயவு செய்து எம்மை கைவிட்டு விட வேண்டாம். இந்த விடயத்தை அரசாங்கத்திடம் எடுத்து செல்லுங்கள் என்றனர்.