![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjX50VmjJWi8Nbo9xbh2gQbOsv4VOKxiNma1kQSyugrxACvFuHhzCCcGL2-CcaedqeNdTAsaF6dOJLFq1bBOOPm4qb3LLoxGR7VtGSbJXN81ndJe26Eyveu_MMYH6X8yWHIOGdhZihW71G1/s320/explotion230.jpg)
கொழும்பு ஹோர்டன் பிளேஸில் பஸ் வண்டியில் குண்டு வெடிப்பு நால்வர் காயம்
கொழும்பு மட்டக்குளியிலிருந்து மொரட்டுவ நோக்கிச் சென்ற 155 இல இ.போ.ச பஸ் வண்டியில் இன்று பிற்பகல் (16-09-2008) குண்டு வெடித்ததில் நால்வர் காயங்களுக்குள்ளானார்கள். இச் சம்பவம் கொழும்பு நகர மண்டபத்திற்கு அண்மையில் ஹோர்ட்டன் சுற்றுவட்ட பகுதியிலேயே இடம்பெற்றது. இந்த பஸ் வண்டியில் சுமார் 60 பேர் பயணித்தாகவும் சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்று இருப்பதை கண்ட பஸ் சாரதி அவசரமாக பயணிகளை இறக்கிய சிறிது நேரத்திலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.