Tuesday, May 17, 2016

தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைக்கும் நடவடிக்கை தற்கொலைக்கு ஒப்பானது

1000 ரூபா சம்பள உயர்வுக்காக தொழிலாளர்களை போராட அழைப்பது வேடிக்கையானது மட்டுமல்ல அது கம்பனிகளுக்கு துணை போகும் செயலாகும் என மக்கள் தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.  

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது கூட்டு ஒப்பந்தம் சட்டப்படி இரத்துச் செய்யப்படாலம் இருக்கும் இந்நிலையில் நாளாந்த சம்பளமாக 1000 ரூபா வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதாகும். 

இந்தப்பின்னணியில் கூட்டு ஒப்பந்தத்துக்கு வெளியில் நாளாந்த 100 ரூபா மாதாந்தம் 2500 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைத்திருப்பது வேடிக்கையானது என்பதுடன் 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கையை காட்டிக்கொடுத்து பெருந்தோட்ட கம்பனிக்கு துணை போகும் நடவடிக்கையாகும். 

1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கையை இ.தொ.கா முன்மொழிந்திருந்தாலும் அது அனைத்துப் பெருந்தோட்டக் தொழிலாளர்களின் கோரிக்கையாகியுள்ளது. நியாயமான அக்கோரிக்கையை நாளாந்தம் ரூபா 100 என்ற கோரிக்கைக்கு தாத்துவது நேர்மையான அணுகுமுறையாகாது. 

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்ட நிலையில் தனியார் ஊழியர்களுக்கு 2,500 ரூபா வழங்கும்படி தனி;யார் துறையை கட்டாயப்படுத்துவதற்காக 2016ம் ஆண்டு 4ம் இல நிவாரணப்படி சட்டம் அமுலில் உள்ளது. அதன் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென தொழில் அமைச்சர் ஜோன் செனிவிரத்ன கூற காரணம் தோட்டத் தொழிலாளிகளுக்கு கூட்டு ஒப்பந்த அடிப்படையில் சம்பள உயர்வு தொடர்பில் இணக்கம் காணப்படாமைகும். 

நாளாந்தம் 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கப் போவதாக தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைப்பது வேடிக்கையானது. இதுவொரு வகையில் தொழிலாளர்களின் 1000 ரூபா கோரிக்கையை காட்டிக்கொடுத்துவ்pட்டு பெருந்தோட்டக் கம்பனிக்கு துணைபோவதாகும். இது வாழ்க்கை செலவு படியாக ரூ 17.50 வேண்டும் என போராடிய போது வெறும் 10 சதம் போதும் இணங்கிய காட்டிக்கொடுப்பு வரலாற்றை நினைவுப்படுத்துகிறது. 

ரூபா 1000 நாளாந்த சம்பளமாக இ.தொ.கா உட்பட கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்காது வாய் சவாடல்களை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

ஒரு கட்டத்தில் ரூபாய் 800 அதிகமாக வழங்க கம்பனிகளுக்கு உடன்பாடு இருந்த நிலையில் 2014ம் சட்டத்தின் படியான நாளாந்தம் ரூபா 100 சம்பள உயர்வுக்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் போராடப் போவதுடன் அதற்கு தொழிலாளர்களை அழைப்பது வேடிக்கையானது என்பதுடன் அவர்களை தற்கொலைக்கு தள்ளுவதற்கு ஒப்பானதாகும் என்று கூறியுள்ளார். 

நன்றி- தமிழ் மிரர்

No comments: