Friday, May 27, 2016

தோட்­டத்­திற்கு எக்­கா­ரணம் கொண்டும் செல்ல மாட்டோம் வேறு எங்­கா­வது வீடு­களை அமைத்து தாருங்கள்

மண்­ச­ரிவு ஏற்­பட்டு 16 உயிர்­களை காவு கொண்ட புளத்கொ­ஹு­பிட்­டிய களு­பான தோட்­டத்­திற்கு இனிமேல் எக் காரணம் கொண்டும் நாங்கள் செல்ல மாட்டோம். எங்­களுக்கு வேறு எங்­கா­வது வீடு­களை அமைத்து தரு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இதனை மன்­றாட்­ட­மாக கோரு­கின்றோம் என்று புளத்­கோ­ஹு­பிட்­டிய மண்­ச­ரிவில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தெரி­வித்­தனர். தயவு செய்து களு­பான தோட்­டத்­திற்கு செல்­லு­மாறு எங்­களை வற்­பு­றுத்த வேண்டாம். அதனை ஒரு பாவப்­பட்ட இட­மா­கவே பார்க்­கின்றோம். எங்­களால் இனிமேல் புளத்­கோ­ஹு­பிட்­டிய களுப்­பான தோட்­டத்தில் நிம்­ம­தி­யாக வாழவே முடி­யாது என்றும் அந்த மக்கள் குமு­று­கின்­றனர்.

புளத்­கோ­ஹு­பிட்­டிய களு­பான தோட்­டத்தில் ஏற்­பட்ட மண்­ச­ரி­வை­ய­டுத்து, அங்­கி­ருந்து இடம்­பெ­யர்ந்து யக்­கல மகா­வித்­தி­யா­ல­யத்தில் 57 குடும்­பங்கள் தற்­கா­லி­க­மாக தஞ்­ச­ம­டைந்­துள்­ள அந்த மக்­கள் இந்த உருக்­க­மான கோரிக்­கையை முன்­வைத்­தனர். பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ந்தும் துய­ரத்தை வெளி­யி­டு­கையில்,

உங்­க­ளிடம் ஒரு­வி­ட­யத்தை மன்­றாடிக் கோரு­கின்றோம். நாங்கள் கோரு­கின்ற இந்த விட­யத்தை தயவு செய்து அர­சாங்­கத்­திடம் எடுத்துக் கூறுங்கள். புளத்­கோ­ஹு­பிட்­டிய களு­பான தோட்­டத்தில் நாம் இது­வரை காலமும் வசித்தோம். ஆனால் அங்கு ஏற்­பட்ட மண்­ச­ரி­வினால் எமது உற­வுகள் 16 பேரை இழந்­து­விட்டோம். அந்த 16 பேரும் மண்­னோடு மண்­ணாக புதைந்து போகி­னர்.

அந்த வகையில் பார்க்­கும்­போது புளத்­கோ­ஹு­பிட்­டிய களு­பான தோட்டம் வாழ்­வ­தற்கு ஆபத்­தான இட­மென்­பது நிரு­ப­ன­மா­கி­விட்­டது. எனவே எக்­கா­ரணம் கொண்டும் இதன்­பின்னர் புளத்­கோ­ஹு­பிட்­டிய களு­பான தோட்­டத்­திற்கு நாங்கள் செல்­லவே மாட்டோம். அங்கு சென்று எம்மால் ஒரு­போதும் நிம்­மி­யாக வாழ முடி­யாது.இதனை புரிந்து கொள்­ளுங்கள். எமது நிலை­மையை உண­ருங்கள். எமது 16 உற­வு­களை பரித்­தே­டுத்த அந்த தோட்­டத்தில் எம்மால் இனி வாழ முடி­யாது.
எனவே எமக்கு வேறு ஒரு பாது­காப்­பான இடத்தில் வீடு­களை அமைத்து தாருங்கள் நாங்கள் அங்­கி­ருந்து கொண்டு வேண்­டு­மானால் களு­பான தோட்­டத்­திற்கு தொழி­லுக்­காக சென்று வர­மு­டியும். ஆனால் களு­பான தோட்­டத்தில் வாழ மாட்டோம்.

மண்­ச­ரிவு ஏற்­பட்­டதன் பின்னர் எமது பகு­திக்கு வருகை தந்த அமைச்சர் திகாம்­பரம் புதிய வீடு­களை அமைத்து தரு­வ­தாக உறு­தி­ய­ளித்தார். ஆனால் களு­பான தோட்­டத்தில் எமக்கு வீடு­களை அமைக்க வேண்டாம். மாறாக வேறு ஓர் இடத்தில் எமக்கு வீடு­களை அமைத்து தர வேண்டுமென அமைச்சர் திகாம்பரத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இந்த விடயத்தில் அமைச்சர் மனோகணேசனும் எமக்கு ஆதரவு வழங்குவார் என நம்புகிறோம். தயவு செய்து எம்மை கைவிட்டு விட வேண்டாம். இந்த விடயத்தை அரசாங்கத்திடம் எடுத்து செல்லுங்கள் என்றனர்.

No comments: