Tuesday, August 9, 2016

தேசிய தொழிலாளர்களுடன் கைகோர்த்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை மட்டுமே மலையக அரசியல்வாதிகள்,; தொழிற்சங்கவாதிகள் பேசி வருகின்றனரே தவிர மலையக மக்களின் ஏனைய இன்னோரன்ன பிரச்சினைகள் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றன என்று ஜே.வி.பி யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சமகால முன்னெடுப்புக்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில் எந்தவொரு நாட்டிலும் தொழிலாளர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை வழங்கி சகல துறைகளிலும் தொழிலாளர்களை முன்னேற்ற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருக்கின்றது. இதிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் விலகிச்செல்ல முடியாது. ஊலகளாவிய ரீதியில் தொழிலாளர்கள் நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருவதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தொழிலாளர்களின் உன்னதமான போராட்டங்கள் கொச்சைப்படுத்தப்படுகின்றன. தொழிலாளர்களுக்குரிய உரிமைகள் வழங்கப்படாத நிலையில் அவர்கள் பல்வேறு வழிகளில் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டள்ளார்கள். நாளுக்குநாள் தொழிலாளர்கள் மீதான சுமைகள் அதிகரித்து வருகின்றன. எனினும் இது தொடர்பாக யாரும் உரிய கவனம் செலுத்துவதாக இல்லை என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்றார் சந்திரசேகரன். 

இலங்கையைப் பொறுத்தளவில் விசேடமாக நாம் மலையகத் தொழிலாளர்களை குறிப்பிட வேண்டும். இவர்களுக்கு அநீதி அதிகரித்து காணப்படுகின்றது. மலையக அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் இவர்களுக்கு உரிய உரிமைகளை பெற்றுக்கொடுக்கின்றனரா என்பது கேள்விக்குரியாகும். தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினையை மட்டுமே முதன்மைப்படுத்தி கோசங்களை எழுப்பி வருகின்றனர். மலையக மக்களின் இன்னோரன்ன பிரச்சினைகளான வீடு, காணி, மக்களின் சமூக வாழ்க்கை, கல்வி, தொழில், சுகாதாரம் என ஏனைய பிரச்சினைகள் பற்றி குறிப்பிடுவதாகத் தெரியவில்லை. எனினும் இதனையும் உருப்படியாக செய்ததாக தெரியவில்லை. நல்லாட்சி இடம்பெறுவதாக தெரிவிக்கின்றார்கள் இன்று நல்லாட்சியில் இருக்கின்ற ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் என பலரும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வினை பெற்றுத் தருவதாக கூறினார்கள். இவர்களின் வாக்குறுதிகள் அனைத்தும் இப்போது காற்றில் பறந்து விட்ட நிலையில் தொழிலாளர்களை கைவிட்டள்ளார்கள். 

தேசிய ரீதியில் தொழிலாளர்கள் இருந்தும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை மலையக அரசியல்வாதிகள் பிரித்து வைத்திருக்கிறார்கள். அவ்வாறு பிரிந்து வைத்திருப்பதால் பாதக விளைவுகளே ஏற்படுகின்றன. பாழாய் போன தொழிற்சங்கங்களையும் மலையக அரசியல்வாதிகளையும் மலையகத் தொழிலாளர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். இதற்கும் அப்பால் வர்க்க ரீதியாக நாம் பார்க்கின்றபோது தொழிலாளர் சக்தி என்ற ஒன்று இருக்கிறது. மலையக தொழிலாளர்கள் நாட்டின் ஏனைய தொழிலாளர்களுடன் ஒன்று சேர்கின்றபோது தொழிலார் சக்தி பலமடைகின்றது. காத்திரமான வெற்றிகளை பெறக்கூடிய வாய்பர்பு அதிகமாகவே காணப்படுகின்றது.

தோட்ட மக்களுக்கு இப்போது சமூக ரீதியான பிரச்சினை ஒன்றும் உள்ளது மலையக பெருந்தோட்டங்களில் வாழ்வதா இல்லையா என்ற சிந்தனையுடன் இவர்கள் தொடர்ந்தும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் நாட்டில் உள்ள ஏனைய தொழிலாளர்களுடன் கைகோர்த்து போராட்டத்தின் ஊடாக தமது பிரச்சினைக்கான பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும். தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் மலையக அரசியல்வாதிகளும், தொழிற்சங்கங்களும் தோல்வி கண்டிருக்கின்றன. எனவே தொழிலாளர்கள் தேசிய போராட்டத்தினை முன்னெடுப்பதே சிறந்ததாகும். 

68 வருட காலமாக முதலாளித்துவ ஆட்சியாளர்களும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க தவறியுள்ளனர். எனவே பொதுவாக நாட்டு மக்களுக்கு புதிய பாதை என்ற ஒன்று தேவைப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்களின் மகிமையை தோட்டத் தொழிலாளர்களை பிரநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மழுங்கடிப்பு செய்கின்றன. இந்த நிலையில் இருந்து தொழிலா ளர்கள் மீண்டெழுதல் வேண்டும். அதற்கான காலம் இப்போது உதயமாகி இருக்கின்றது என்றார்.

Sunday, August 7, 2016

மலையக சமூகத்தின் எழுச்சிக்காக அரசாங்கம் தோள் கொடுக்க வேண்டும்

மலை­யக மக்­களின் பல்­வேறு விடங்கள் தொடர்­பா­கவும் காலத்­துக்­குக்­காலம் ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். இந்த ஆய்­வு­களின் அடிப்­ப­டையில் அபி­வி­ருத்­திக்கு வழி­காட்­டுதல் வேண்டும் என்று திறந்த பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி ஏ.எஸ்.சந்­தி­ரபோஷ் தெரி­வித்தார். மலை­யக மக்­களின் சம­கால போக்­குகள் தொடர்பில் கருத்து வின­விய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது குறித்து சந்­தி­ரபோஷ் மேலும் கருத்து தெரி­விக்­கையில் மலை­யக சமூகம் என்­பது இந்­நாட்டில் முக்­கி­யத்­துவம் மிக்க தனித்­துவம் வாய்ந்த ஒரு சமூ­க­மாகும். இச்­ச­மூ­கத்தின் கலா­சார விழு­மி­யங்கள் பெறு­மதி மிக்­க­ன­வாக விளங்­கு­கின்­றன.
ஏனைய இனங்­க­ளி­லி­ருந்தும் வேறு­பட்ட விசே­டித்த போக்­குகள் இம்­மக்­க­ளி­டையே காணப்­ப­டு­கின்­றன. இம்­மக்­களின் மகத்­துவம் சரி­யாக உண­ரப்­ப­டுதல் வேண்டும். நாட்டின் அபி­வி­ருத்­திக்கு தோள் கொடுக்கும் மலை­யக சமூ­கத்­தி­னரின் எழுச்­சிக்­காக அர­சாங்கம் தோள் கொடுக்க வேண்­டி­யதும் மிகவும் அவ­சி­ய­மாக உள்­ளது.
மலை­யக மக்கள் பல்­வேறு புதிய பரி­மா­ணங்­க­ளையும் கொண்டு விளங்­கு­கின்­றனர். இப்­ப­ரி­மா­ணங்கள் தொடர்பில் ஆங்­காங்கே கலந்­து­ரை­யா­டல்கள், கருத்துப் பரி­மா­றல்கள் என்­பன இடம்­பெற்று வரு­கின்­றன. பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மற்றும் ஆர்­வ­லர்கள் எனப் பலரும் இது தொடர்­பான விட­யங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். கலா­சாரம், பண்­பாடு, பொரு­ளா­தாரம் உள்­ளிட்ட பல விட­யங்கள் தொடர்­பா­கவும் கவனம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது.
எனினும் சம­கா­லத்தில் மலை­யக மக்­க­ளி­டையே ஏற்­பட்­டுள்ள பண்­பாடு, கலா­சாரம் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்­பான மாற்­றத்­தி­னையும் ஒட்­டு­மொத்­த­மாக பார்க்க முடி­யாத ஒரு நிலையில் இருக்­கின்றோம். துறை­சார்ந்த நிபு­ணர்கள், துறை­சார்ந்த ஆர்­வ­லர்கள் குறித்த விட­யங்­களை அறிந்து கொள்­வ­திலும் சிக்கல் நிலை மேலோங்கிக் காணப்­ப­டு­கின்­றது. சமூ­கத்தில் பல்­வேறு மாற்­றங்கள் ஏற்­பட்டு வரு­கின்ற நிலையில் இந்த மாற்­றங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்­டி­யதும், இடர்­பா­டு­களை களைந்து அபி­வி­ருத்­திக்கு இட்டுச் செல்ல வேண்­டி­யதும் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக விளங்­கு­கின்­றது.
மலை­யக மக்­களின் பல்­வேறு விட­யங்கள் குறித்தும் காலத்­துக்கு காலம் ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். இந்த ஆய்­வு­களின் ஊடாக நாம் பல்­வேறு விட­யங்­க­ளையும் விளங்கிக் கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும். வருடா வருடம் இத்­த­கைய ஆய்­வு­களை மேற்­கொள்ள முடி­யா­விட்­டாலும் குறிப்­பிட்ட ஒரு காலப்­ப­கு­தியை மையப்­ப­டுத்தி இந்த ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். ஆய்­வுகள் செய்து அபி­வி­ருத்தி செய்வோம் என்­பது ஒரு தொனிப்­பொ­ரு­ளாகும். வர­லாற்றைப் பார்த்து முன்­னோக்கிச் செல்வோம் என்­பதும் ஒரு முக்­கி­ய­மான கருத்­தாகும். இந்த நிலைகள் உரி­ய­வாறு கடைப்­பி­டிக்­கப் ­ப­டுதல் வேண்டும். ஆய்வு என்­பது சகல மட்­டங்­க­ளிலும் முக்­கி­யத்­துவம் பெற்று விளங்­கு­கின்­றது. உலக நாடுகள் பல­வற்றில் சமூகம் குறித்த கருத்துப் பரி­மா­றல்­க­ளுக்கு கள­மாக ஆய்வு அமைந்­தி­ருக்­கின்­றது என்­ப­தனை மறுத்­து­விட முடி­யாது.
யாழ்ப்­பாணம் மற்றும் கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இடம்­பெறும் ஆய்­வுகள் பலவும் சமூக ரீதியில் புதிய பரி­மா­ணங்கள் பல­வற்­றையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு உந்து சக்­தி­யாக அமை­கின்­றது என்­பதே உண்­மை­யாகும். இந்­தி­ய­ வம்­சா­வளி மலை­யக சமூ­கத்­தினர் இன்று பதி­னைந்து இலட்­சத்­துக்கும் அதி­க­மா­ன­வர்கள் உள்­ளனர்.
எனினும் துறை­சார்ந்த நிபு­ணர்­களை இனங்­காண்­ப­தற்கோ சம­கால பார்­வை­யினை செலுத்­து­வ­தற்கோ போது­மான தர­வுகள் எம்­மிடம் இல்லை. எனவே ஆய்­வுத்­து­றையை வளர்த்­தெ­டுக்க வேண்­டி­ய­தென்­பது மிகவும் அவ­சி­ய­மா­கின்­றது. மேற்­கத்­தேய நாடு­களைப் பொறுத்­த­வ­ரையில் கருத்­த­ரங்கு, கலந்­து­ரை­யா­டல்கள், ஆய்­வுகள் என்­பன அடிக்­கடி இடம்­பெற்று வரு­கின்­றன. சாதக, பாதக விளை­வுகள் ஆரா­யப்­ப­டு­கின்­றன. இத்­த­கைய நிலை­மைகள் சமூக அபி­வி­ருத்­திக்கு உந்து சக்­தி­யாக அமைந்து வரு­கின்­றன.
மலை­யக கல்வி தொடர்பில் மாநாடு நடத்­தப்­பட வேண்­டு­மென்று பேரா­சி­ரியர் தனராஜ் போன்­ற­வர்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். தனராஜ் கல்விப் புலத்தில் நீண்ட கால அனுபவமுள்ள ஒருவர். தேசிய சர்வதேச மாநாடுகள் பலவற்றிலும் அவர் பங்கேற்றுள்ளார். எனவே இந்த நிலையில் மலை­யக கல்வி தொடர்பில் மாநாடு ஒன்­றினை நடத்­து­வது குறித்தும் நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும். இதற்கு அனைத்துத் தரப்­பி­னரும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். பல்­வேறு ஆய்­வு­கள் சமூ­கத்தின் மேம்­பாட்­டுக்கும் அபி­வி­ருத்­திக்கும் பக்­க­ப­ல­மாகும் என்­ப­தனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

நன்றி- வீரகேசரி

பால்பண்ணையாளர்கள் சங்கம்

Etnuypah kw;Wk; mk;gfKt gpuNjr ghy; gz;izahsu;fis cs;slf;fp rq;fnkhd;iw mq;Fuhu;gzk; nra;atpUg;gjhf njhptpj;j ,e;jpa tk;rhtsp kf;fs; Kd;ddpapd; gpujp jiytu; R.g.Rg;gpukzpak; %ytsq;fspd; cr;r gad;ghl;bd; %yk; Etnuypah khtl;lj;jpy; jythf;fiy> nfhl;lfiy kw;Wk; mk;gfKt Mfpa gpuNjrq;fspy; fhy;eil Jiwapy; mgptpUj;jpia cWjpg;gLj;Jtjw;F nghJkf;fis Cf;fg;gLj;j Ntz;Lk; vd;whH.

fle;j 03-08-2016 md;W nfhl;lfiyapy; ghy;gz;izahsu;fs; rq;fnkhd;iw mikg;gJ njhlHghf  gz;izahsu;fis re;jpj;Jf; fUj;J njhptpj;j R.g.Rg;gpukzpak; Etnuypah khtl;lj;jpy; fhy;eilfis tsu;f;f $ba mjpfkhd tsq;fs; fhzg;gLfpd;wJ. Njrpa fhy;eil mgptpUj;jp rig kw;Wk; jdpahu; ghy; cw;gj;jpahsu;fs; Clhf fpilf;fg;ngWk; cr;r fl;l gyd;fs;> fle;j rpy tUlq;fshf fhy;eil tsu;g;ghsu;fis nrd;wilatpy;iy.
Njrpa fhy;eil mgptpUj;jp rig mur tptrha $l;Ljhgd rl;lj;jpd; fPo; 1973Mk; Mz;by; cUthf;fg;gl;lJ. mjd; ntspf;fs eltbf;iffs; 1974Mk; Mz;L Muk;gpf;fg;gl;lJ. md;W njhlf;fk; kiyaf kf;fs; cs;spl;l ehl;by; midj;Jg; gpuNjr kf;fSk; nghUshjhu epiyikfis Nkk;gLj;j fhy;eil cw;gj;jp kw;Wk; ghy; cw;gj;jp mikg;Gfs; Clhf nraw;gl;lJ.  Njhl;lj; Njapiy njhopiy khj;jpuk; ek;gpapUf;Fk; njhopyhsu;fs; jq;fsJ tho;thjhuj;ij cWjp nra;Ak; nghUl;L Ranjhopyhf fhy;eil tsu;g;ig Nkw;nfhz;ldu;. ,Ue;Jk; fle;j fhyq;fspy; fhy;eil tsu;g;G mUfp tUfpd;wJ. ,e;j epiyapy; Njhl;lg; gFjpfs; kw;Wk; ngUe;Njhl;l fpuhkg;gFjpfspy; ghy; cw;gj;jp kpfTk; Fiwtile;J tUfpd;wJ vdf;Fwpg;gpl;lhH.


,e;j tplak; njhlHghf mk;gfKt gpuNjr kw;Wk; Etnuypah gpuNjrj;jpy; ghy; gz;izahsu;fSf;F cjtpfis ngw;Wf;nfhLf;f rq;fk; xd;W ,y;yhjjd; fhuzkhfNt jdpkdpj Nghuhl;lj;Jf;F jhk; MshfptUtjhf ghy; gz;izahsu;fs; njuptpf;fpd;wdu;  vdf; Fwpg;gpl;lhu;. MfNt> gpuNjr gz;izahsu;Sf;fhf tpiutpy; rq;fk; xd;iw mq;Fuhg;gzk; nra;ag;NghtjhfTk; mt;thW Muk;gpf;fg;gLk; rq;fj;jpd; Clhf fhy;eil tsu;f;f $ba gapw;rpfs; tsq;fis ghJfhf;f $ba topKiwfs; ghy; cw;gj;jpia> ngUf;f $ba etPd Ntiyj;jpl;lq;fs; Gjpa njhopy;El;g Kiwfs;> Cf;Ftpg;Gfs;>  fhy; eil tsu;g;gjpy; Mu;tj;jpid J}z;b Ranjhopiy Nkw;nfhs;Sk; mstpyhd gapw;rpfs; kw;Wk; fz;fhl;rpfs; Nghd;wtw;iw elhj;j murhq;f kl;lj;jpy; eltbf;if Nkw;nfhs;sg;gLk;. ,jw;nfd fhy;eil cw;gj;jp Rfhjhu jpizf;fsk; kw;Wk; fhy;eilts mikr;R kw;Wk; r%f mgptpUj;jp mikr;R Mfpatw;wpd; cjtpfis ngUtjw;fhd eltbf;iffs; Kd;ndLf;fg;gl;Ls;sjhfTk; Rg;gpukzpak; Fwpg;gpl;lhH.

நிரந்தர கொடுப்பனவை பெற்றுத்தர லாய்க்கற்ற தமிழ் முற்போக்கு கூட்டணி

இடைக்கால கொடுப்பனவான 2,500 ரூபாயை முழுமையாகப் பெற வேண்டுமெனில், ஒரு தொழிலாளி கட்டாயமாக  25 நாட்களுக்கு வேலை செய்திருக்க வேண்டும். எந்தக் கம்பனி, தொழிலாளிகளுக்கு 25 நாட்கள் வேலை வழங்குகின்றது' என்று கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.கணபதி கேள்வி எழுப்பியுள்ளார். 

தோட்டத் தொழிலாளர்களுக்கு 2,500 ரூபாயை பெற்றுக்கொடுத்துவிட்டோம். இதற்காக முதல் முறையாக அரச திறைச்சேரியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மாபெரும் வெற்றியாகும் என சிலர் கூறித்திரிகின்றனர். தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக சொல்லப்படுகின்ற 2,500 ரூபாய் என்பது சம்பள உயர்வல்ல.   இடைக்கால கொடுப்பனவு மாத்திரமே என்பதை தொழிலாளர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அதிலும், தொழிலாளி பெற்றுக்கொள்ளும் சம்பளத்தோடு 2,500 ரூபாய் கொடுப்பனவை முழுமையாக வழங்கும் எந்த ஏற்பாடும் கிடையாது. மாறாக நாளுக்கு 100 ரூபாய்தான் வழங்கப்படும்' எனவும் அவர் குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, 'இடைக்கால கொடுப்பனவை மாபெரும் சாதனையாகக்காட்டி அரசியல் இலாபத்தை அறுவடைச் செய்யத்துடிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியினர்,  2,500 ரூபாய் ஒரிரு மாதங்களுக்கு மட்டுமே   தொழிலாளருக்கு கிடைக்கும் என்பதை சொன்னால் சிறப்பாக இருக்கும். 

தனியார்த்துறை தொழிலாளர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவு வழங்க வேண்டும் என சட்டம் இயற்றிய மார்ச் மாதத்திலிருந்து, இம்மாதம் வரையிலான நிலுவையையும் இணைத்து தோட்டத் தொழிலாளருக்கு வழங்க வேண்டும்' என்றார். 'நல்லாட்சிக்காரருக்கு வாக்குகளை வாரி வழங்கிய பெருந்தோட்டத் தொழிலாளருக்கு, 2,500 ரூபாய் கொடுப்பனவை முழுமையாகவும் நிரந்தரமாகவும் வழங்க அரசாங்கம் மறுப்பதால் தோட்டத் தொழிலாளர்களை பாரபட்சமாக நடத்துவது அம்பலமாகியுள்ளது. அத்துடன், நிரந்தர கொடுப்பனவை பெற்றுத்தர லாய்க்கற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியினரின் இயலாமையும் அம்பலத்துக்கு  வந்துள்ளது' என அவர் கூறினார்.

Tuesday, August 2, 2016

25 நாட்களுக்கான வேலையை உறுதிசெய்யவும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதத்துக்;கு 25 நாட்களுக்கான வேலையை, உறுதி செய்யுமாறு மலையக தொழிலாளர் முன்னணியின் மாநில நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.வரதராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர், 'மஸ்கெலியா பிளான்டேசன் நிர்வாகத்துக்கு உட்பட்ட சென்கிளையர், ட்றூப் தோட்டங்களில் வாரத்துக்;கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதாகவும் வெள்ளி, சனிக்கிழமைகளில் வேலை வழங்கப்படுவதில்லை எனவும் தொழிலாளர்கள் முறையிட்டுள்ளனர்.   

ஆனால், தொழிலாளர்களுக்கு வெள்ளி, சனிக்கிழமை நாட்களிலும் வேலை வழங்கும் வகையில், அவ்வவ் தோட்டங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன என்று  தொழிலாளர்கள் முறையிட்டதற்கு இணங்க, இதனை கம்பனி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளேன். தேயிலை மலைகளில் கொழுந்து அதிகமாக வளர்ந்துள்ளது. இதேவேளை, மலைகளில் அதிகளவான புற்களும் வளர்ந்துள்ள நிலையில், மேற்படி தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதற்கு நிர்வாகம் ஏன் தயங்குகின்றது. 

கூட்டொப்பந்த சரத்தின்படி நிர்வாகங்கள், மாதத்துக்கு 25 நாட்கள் வேலை வழங்க வேண்டும். ஆனால், வேலை வழங்க கூடிய நாட்களிலும் வேலை வழங்காமலிருப்பது திட்டமிட்ட செயலே ஆகும். இது தொடர்பாக தலவாக்கலை, சென்கிளையார் தோட்ட முகாமையாளருக்கும் ட்றூப் தோட்ட முகாமையாளருக்கும் ஹட்டன் உதவி தொழில் ஆணையாளருக்கும் பிரதிகள் இட்டு கடிதம் எழுதியிருக்கின்றேன். எனவே, மேற்படி விடயங்களை ஆட்சேபித்து, தொழிலாளர்கள் தொழிற்;சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதால் இவ்விடயத்தில் உடனடியாக தலையிட்டு, இங்குள்ள தொழிலாளர்களுக்கு போதிய வேலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளேன்' என்றார். 

தரகர்கள் தேவையில்லை

நல்லாட்சி அரசாங்கத்தின் மலையக பிரதிநிதிகள், தரகர்களுக்கூடாக வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவதாக கூறி மலையக இளைஞர், யுவதிகளை முட்டாள்களாக்க  திட்டமிட்டுள்ளனர். தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கு தரகர்கள் தேவையில்லை என்று அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வெள்ளையன் தினேஸ் கூறினார். 

'மலையக இளைஞர், யுவதிகளுக்கு தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதாக கூறி,  அரசாங்கத்தில் இருக்கின்ற மலையக அமைச்சர்கள் சிலர், ஹட்டன் உள்ளிட்ட நகரங்களில் இளைஞர், யுவதிகளை வரவழைத்து நேர்முக பரீட்சை நடத்துகின்றனர் என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், 'ஒரு காலத்தில் மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கு வடக்கு, கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் பெரும்பங்காற்றியிருக்கிறார்கள். அக்காலத்தில் ஆசிரியர் தொழிலை பெற்றுக்கொள்ளும் தகுதியை கொண்டவர்களாக மலையகத்தில் மிக, மிக சொற்ப தொகையினரே இருந்தனர். ஆனால், தற்போது நிலைமை அவ்வாறில்லை. பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான ஆசிரியர் தேவையை நிவர்த்திக்க தேவையான பட்டதாரிகள் மலையகத்திலேயே இருக்கின்றனர். 1982, 1983ஆம்  ஆண்டுகளில் சௌமிய மூர்த்தி தொண்டமான் 500 ஆசிரியர் நியமனங்களை மலையகத்துக்கு பெற்றுக்கொடுத்தார். அன்றிலிருந்து இன்றுவரை 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர் நியமனங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையகத்துக்கு பெற்றுக்கொடுத்துள்ளது' என்றார். 

'அன்று தோட்டங்களில் மாட்டு பட்டிகள்போல் காணப்பட்ட பாடசாலைகள் மாடி கட்டடங்களாக மாறியுள்ளன. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுப்படுத்தப்பட்ட பாடசாலைகளில் உயர்தரம் வரையிலான வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கானவர்கள்   அரசதுறைகளில் தொழில்களை பெற்றுள்ளனர்.  இவ்வாறு எண்ணிலடங்காத சேவைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக சமூகத்துக்காக முன்னெடுத்துள்ளது' என அவர் சுட்டிக்காட்டினார். 'அரசாங்கத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் குவிந்த வண்ணமுள்ளன. அதனை எமது இளைஞர், யுவதிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிக்காமல் அவர்களை முட்டாள்களாக எண்ணி தனியார் துறைகளிடம் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதாக கூறி நேர்முகப் பரீட்சைகளை நடத்தி வருகின்றார்கள். இதனை ஏற்றுக்கொள்ள எமது இளைஞர், யுவதிகள் ஏமாளிகள் அல்ல. எனவே, நல்லாட்சி அரசாங்கத்தில் இருக்கின்ற மலையக பிரதிநிதிகள் மக்களின் தேவைகளை அறிந்து செயற்பட வேண்டும்' என்றார். 

Thursday, July 28, 2016

160000 தொழிலாளர்கள் இன்னமும் லயன் அறைகளில்

நவீன அடிமைத் தனத்­தி­லி­ருந்து தோட்டத் தொழி­லா­ளர்­க­ளை மீட்டு அவர்­களை இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என அடை­யா­ளப்­ப­டுத்­து­வதை ஒழித்து இலங்­கை­யர்கள் என அடை­யா­ளப்­ப­டுத்தி கௌர­வப்­ப­டுத்த வேண்டும் என நேற்று சபையில் எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டாவும் ஜே.வி.பி. எம்.பி. யுமான அனுரகுமார திசா­நா­யக்க தெரிவித்தார்.

தோட்டத் தொழி­லா­ளர்களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு விசேட அதி­கார சபை­யொன்றை அமைத்து அதற்கு அதிக நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை மலை­யக மக்­களின் பொரு­ளா­தார உயர்வு மற்றும் வாழ்க்­கைத்­தர மேம்­பாடு தொடர்­பாக ஜே.வி.பி. எம்.பி. அனுர குமார திஸா­நா­யக்க சபை ஒத்­தி­வைப்பு பிரே­ர­ணையை முன்­வைத்து உரை­யாற்­றுகையிலேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.சபையில் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;
இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்து 67 வரு­டங்­க­ளா­கி­விட்­டன. ஆனால் இன்னும் மலை­யகத் தோட்டத் தொழி­லா­ளர்கள் அடிமைத் தன­மான லயன் அறைகளில் கூனிக் குறு­கியே வாழ்­கின்­றனர்.
1,60,000 தோட்டத் தொழி­லா­ளர்கள் இன்னும் லயன் அறைக­ளி­லேயே அடிப்­படை வச­தி­க­ளின்றி வாழ்ந்து வரு­கின்­றனர்.
தோட்­டங்­க­ளி­லி­ருந்து இளை­ஞர்கள், யுவ­திகள் வெளி­யே­று­கின்­றனர். ஆனால் அவர்கள் கல்­வித்­துறை சார்ந்த தொழில்­களை செய்­ய­வில்லை. மாறாக வீட்டு வேலை­க­ளுக்கும் ஹோட்­டல்­களில் மூட்டை தூக்கும் வேலை­க­ளுக்­குமே வரு­கின்­றனர்.
இங்கு ஒரு புதிய சம்­பி­ர­தாயம் உள்­ளது. கொழும்­பி­லுள்­ள­வர்­களின் வீட்டு வேலைக்கு ஆள் தேவை­யென்றால் தோட்­டத்­தி­லி­ருந்து ஒரு பிள்­ளையை கொண்டு வாருங்­களேன் என்றே கேட்­கின்­றனர்.
இந்­நிலை மாற வேண்டும். மாற்ற வேண்டும். கல்வித் துறையில் பின் தங்­கி­யி­ருக்கும் மலை­ய­கத்தில் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்.
தோட்டத் தொழி­லா­ளர்­களின் வாக்­கு­களை பெற்றுக் கொள்­கின்­றனர். ஆனால் அவர்­க­ளது அடிப்­படை வச­தி­களை செய்து கொடுக்­கப்­ப­டும்­போது பல விட­யங்­களை முன்­வைத்து அடிப்­படை வச­திகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை.
நாங்கள் லயன் அறை­களை வழங்­கு­கின்றோம். அதற்கு பதி­லாக குறைந்த கூலிக்கு வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்­த­னை­க­ளு­ட­னேயே கம்­ப­னிகள் தொழில்­களை வழங்­கு­கின்­றன.
நவீன அடிமைத் தனத்தின் அடை­யாளச் சின்­னங்­க­ளாவே தோட்ட மக்கள் இன்றும் வாழ்­கின்­றனர்.
இந்­தி­யா­வி­லி­ருந்து மலை­ய­கத்­திற்கு தொழி­லா­ளர்கள் கொண்டு வரப்­பட்டு லயன் அறைகளில் அடைத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். அந்த நிலை­மை­யி­லேயே இன்றும் 160,000 தொழி­லா­ளர்கள் வாழ்­கின்­றனர்.
போஷாக்குக் குறைந்த பிள்­ளை­களின் எண்­ணிக்கை 25 வீதம் அதி­க­ரித்­துள்­ளது. குறைந்த குறைந்த எடையுடன் பிள்­ளைகள் பிறக்­கின்­றனர்.
சௌமியமூர்த்தி தொண்­டமான் மன்றத்திற்கு அரசாங்கம் நிதியை வழங்­கி­யுள்­ளது. 1800 மில்­லியன் வழங்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக கோப் குழு­வுக்கு முன்­வைத்து விசா­ரிக்­கப்­பட வேண்டும்.
கடந்த கால மலை­யகத் தலை­வர்கள் தோட்டத் தொழி­லா­ளர்­களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கவில்லை. உயர் பிர­புத்­துவத் தலை­வர்களாக செயற்­பட்­ட­வர்­கள் மலை­யக மக்­களின் வாழ்க்­கையை உயர்த்­த­வில்லை.
தற்­போது புதிய தலை­வர்கள் உரு­வா­கி­யுள்­ளனர். இவர்கள் மலை­யகத் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு என்ன செய்­கின்­றனர் என்­பதை பொறுத்­தி­ருந்து தான் பார்க்க வேண்டும். அவர்­க­ளது நட­வ­டிக்கை எப்­ப­டி­யுள்­ளது என்­பதை பார்ப்போம்.
அவர்­க­ளுக்கு கிடைக்கும் சம்­பளம் போதாது. அத்­தோடு இவர்கள் இலங்­கையின் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்­காக தம்மை அர்ப்­ப­ணித்­த­வர்கள். அதற்­கா­கவே உயிரை அர்ப்­ப­ணித்­த­வர்கள். அவர்­க­ளது சந்­த­தி­யினர் இலங்­கையில் பிறந்­த­வர்கள்.
எனவே ஏன் நாம் அவர்­களை இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என அடை­யா­ளப்­ப­டுத்த வேண்டும்.? அவ்­வாறு அடை­யா­ளப்­ப­டுத்­து­வதை ஒழித்து அவர்­களை இலங்­கை­யர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்த வேண்டும்.
அத்­தோடு மலை­யக பெருந்­தோட்ட மக்­களின் பொரு­ளா­தா­ரத்தை வாழ்க்கை தரத்தை மேம்­ப­டுத்த அமைச்­சுக்­களை ஏற்­ப­டுத்­து­வதால் முடி­யாது என்­பதை அடை­யாளம் கண்­டுள்ளோம்.
எனவே விசேட அதி­கார சபை­யொன்றை ஏற்­ப­டுத்தி திறை­சேரி ஊடாக அர­சாங்கம் அதிக நிதியை ஒதுக்க வேண்டும். இதன் மூலம் அம் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க முடியும்.
தோட்டங்களில் மக்களுக்கு பாமஸிஸ்ட்கள் மருந்துகள் வழங்கப்படுகின்றனர். இது நியாயமா? அவர்களும் மனிதர்கள். அவர்களுக்கும் கௌரவம் உள்ளது. எனவே அவர்களது கலை, கலாசாரம் பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து மேம்படுத்த வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை கம்பனிகளுக்கு வழங்க முடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.