Thursday, July 28, 2016

160000 தொழிலாளர்கள் இன்னமும் லயன் அறைகளில்

நவீன அடிமைத் தனத்­தி­லி­ருந்து தோட்டத் தொழி­லா­ளர்­க­ளை மீட்டு அவர்­களை இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என அடை­யா­ளப்­ப­டுத்­து­வதை ஒழித்து இலங்­கை­யர்கள் என அடை­யா­ளப்­ப­டுத்தி கௌர­வப்­ப­டுத்த வேண்டும் என நேற்று சபையில் எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டாவும் ஜே.வி.பி. எம்.பி. யுமான அனுரகுமார திசா­நா­யக்க தெரிவித்தார்.

தோட்டத் தொழி­லா­ளர்களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு விசேட அதி­கார சபை­யொன்றை அமைத்து அதற்கு அதிக நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை மலை­யக மக்­களின் பொரு­ளா­தார உயர்வு மற்றும் வாழ்க்­கைத்­தர மேம்­பாடு தொடர்­பாக ஜே.வி.பி. எம்.பி. அனுர குமார திஸா­நா­யக்க சபை ஒத்­தி­வைப்பு பிரே­ர­ணையை முன்­வைத்து உரை­யாற்­றுகையிலேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.சபையில் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;
இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்து 67 வரு­டங்­க­ளா­கி­விட்­டன. ஆனால் இன்னும் மலை­யகத் தோட்டத் தொழி­லா­ளர்கள் அடிமைத் தன­மான லயன் அறைகளில் கூனிக் குறு­கியே வாழ்­கின்­றனர்.
1,60,000 தோட்டத் தொழி­லா­ளர்கள் இன்னும் லயன் அறைக­ளி­லேயே அடிப்­படை வச­தி­க­ளின்றி வாழ்ந்து வரு­கின்­றனர்.
தோட்­டங்­க­ளி­லி­ருந்து இளை­ஞர்கள், யுவ­திகள் வெளி­யே­று­கின்­றனர். ஆனால் அவர்கள் கல்­வித்­துறை சார்ந்த தொழில்­களை செய்­ய­வில்லை. மாறாக வீட்டு வேலை­க­ளுக்கும் ஹோட்­டல்­களில் மூட்டை தூக்கும் வேலை­க­ளுக்­குமே வரு­கின்­றனர்.
இங்கு ஒரு புதிய சம்­பி­ர­தாயம் உள்­ளது. கொழும்­பி­லுள்­ள­வர்­களின் வீட்டு வேலைக்கு ஆள் தேவை­யென்றால் தோட்­டத்­தி­லி­ருந்து ஒரு பிள்­ளையை கொண்டு வாருங்­களேன் என்றே கேட்­கின்­றனர்.
இந்­நிலை மாற வேண்டும். மாற்ற வேண்டும். கல்வித் துறையில் பின் தங்­கி­யி­ருக்கும் மலை­ய­கத்தில் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்.
தோட்டத் தொழி­லா­ளர்­களின் வாக்­கு­களை பெற்றுக் கொள்­கின்­றனர். ஆனால் அவர்­க­ளது அடிப்­படை வச­தி­களை செய்து கொடுக்­கப்­ப­டும்­போது பல விட­யங்­களை முன்­வைத்து அடிப்­படை வச­திகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை.
நாங்கள் லயன் அறை­களை வழங்­கு­கின்றோம். அதற்கு பதி­லாக குறைந்த கூலிக்கு வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்­த­னை­க­ளு­ட­னேயே கம்­ப­னிகள் தொழில்­களை வழங்­கு­கின்­றன.
நவீன அடிமைத் தனத்தின் அடை­யாளச் சின்­னங்­க­ளாவே தோட்ட மக்கள் இன்றும் வாழ்­கின்­றனர்.
இந்­தி­யா­வி­லி­ருந்து மலை­ய­கத்­திற்கு தொழி­லா­ளர்கள் கொண்டு வரப்­பட்டு லயன் அறைகளில் அடைத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். அந்த நிலை­மை­யி­லேயே இன்றும் 160,000 தொழி­லா­ளர்கள் வாழ்­கின்­றனர்.
போஷாக்குக் குறைந்த பிள்­ளை­களின் எண்­ணிக்கை 25 வீதம் அதி­க­ரித்­துள்­ளது. குறைந்த குறைந்த எடையுடன் பிள்­ளைகள் பிறக்­கின்­றனர்.
சௌமியமூர்த்தி தொண்­டமான் மன்றத்திற்கு அரசாங்கம் நிதியை வழங்­கி­யுள்­ளது. 1800 மில்­லியன் வழங்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக கோப் குழு­வுக்கு முன்­வைத்து விசா­ரிக்­கப்­பட வேண்டும்.
கடந்த கால மலை­யகத் தலை­வர்கள் தோட்டத் தொழி­லா­ளர்­களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கவில்லை. உயர் பிர­புத்­துவத் தலை­வர்களாக செயற்­பட்­ட­வர்­கள் மலை­யக மக்­களின் வாழ்க்­கையை உயர்த்­த­வில்லை.
தற்­போது புதிய தலை­வர்கள் உரு­வா­கி­யுள்­ளனர். இவர்கள் மலை­யகத் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு என்ன செய்­கின்­றனர் என்­பதை பொறுத்­தி­ருந்து தான் பார்க்க வேண்டும். அவர்­க­ளது நட­வ­டிக்கை எப்­ப­டி­யுள்­ளது என்­பதை பார்ப்போம்.
அவர்­க­ளுக்கு கிடைக்கும் சம்­பளம் போதாது. அத்­தோடு இவர்கள் இலங்­கையின் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்­காக தம்மை அர்ப்­ப­ணித்­த­வர்கள். அதற்­கா­கவே உயிரை அர்ப்­ப­ணித்­த­வர்கள். அவர்­க­ளது சந்­த­தி­யினர் இலங்­கையில் பிறந்­த­வர்கள்.
எனவே ஏன் நாம் அவர்­களை இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என அடை­யா­ளப்­ப­டுத்த வேண்டும்.? அவ்­வாறு அடை­யா­ளப்­ப­டுத்­து­வதை ஒழித்து அவர்­களை இலங்­கை­யர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்த வேண்டும்.
அத்­தோடு மலை­யக பெருந்­தோட்ட மக்­களின் பொரு­ளா­தா­ரத்தை வாழ்க்கை தரத்தை மேம்­ப­டுத்த அமைச்­சுக்­களை ஏற்­ப­டுத்­து­வதால் முடி­யாது என்­பதை அடை­யாளம் கண்­டுள்ளோம்.
எனவே விசேட அதி­கார சபை­யொன்றை ஏற்­ப­டுத்தி திறை­சேரி ஊடாக அர­சாங்கம் அதிக நிதியை ஒதுக்க வேண்டும். இதன் மூலம் அம் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க முடியும்.
தோட்டங்களில் மக்களுக்கு பாமஸிஸ்ட்கள் மருந்துகள் வழங்கப்படுகின்றனர். இது நியாயமா? அவர்களும் மனிதர்கள். அவர்களுக்கும் கௌரவம் உள்ளது. எனவே அவர்களது கலை, கலாசாரம் பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து மேம்படுத்த வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை கம்பனிகளுக்கு வழங்க முடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

No comments: