Sunday, August 7, 2016

மலையக சமூகத்தின் எழுச்சிக்காக அரசாங்கம் தோள் கொடுக்க வேண்டும்

மலை­யக மக்­களின் பல்­வேறு விடங்கள் தொடர்­பா­கவும் காலத்­துக்­குக்­காலம் ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். இந்த ஆய்­வு­களின் அடிப்­ப­டையில் அபி­வி­ருத்­திக்கு வழி­காட்­டுதல் வேண்டும் என்று திறந்த பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி ஏ.எஸ்.சந்­தி­ரபோஷ் தெரி­வித்தார். மலை­யக மக்­களின் சம­கால போக்­குகள் தொடர்பில் கருத்து வின­விய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது குறித்து சந்­தி­ரபோஷ் மேலும் கருத்து தெரி­விக்­கையில் மலை­யக சமூகம் என்­பது இந்­நாட்டில் முக்­கி­யத்­துவம் மிக்க தனித்­துவம் வாய்ந்த ஒரு சமூ­க­மாகும். இச்­ச­மூ­கத்தின் கலா­சார விழு­மி­யங்கள் பெறு­மதி மிக்­க­ன­வாக விளங்­கு­கின்­றன.
ஏனைய இனங்­க­ளி­லி­ருந்தும் வேறு­பட்ட விசே­டித்த போக்­குகள் இம்­மக்­க­ளி­டையே காணப்­ப­டு­கின்­றன. இம்­மக்­களின் மகத்­துவம் சரி­யாக உண­ரப்­ப­டுதல் வேண்டும். நாட்டின் அபி­வி­ருத்­திக்கு தோள் கொடுக்கும் மலை­யக சமூ­கத்­தி­னரின் எழுச்­சிக்­காக அர­சாங்கம் தோள் கொடுக்க வேண்­டி­யதும் மிகவும் அவ­சி­ய­மாக உள்­ளது.
மலை­யக மக்கள் பல்­வேறு புதிய பரி­மா­ணங்­க­ளையும் கொண்டு விளங்­கு­கின்­றனர். இப்­ப­ரி­மா­ணங்கள் தொடர்பில் ஆங்­காங்கே கலந்­து­ரை­யா­டல்கள், கருத்துப் பரி­மா­றல்கள் என்­பன இடம்­பெற்று வரு­கின்­றன. பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மற்றும் ஆர்­வ­லர்கள் எனப் பலரும் இது தொடர்­பான விட­யங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். கலா­சாரம், பண்­பாடு, பொரு­ளா­தாரம் உள்­ளிட்ட பல விட­யங்கள் தொடர்­பா­கவும் கவனம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது.
எனினும் சம­கா­லத்தில் மலை­யக மக்­க­ளி­டையே ஏற்­பட்­டுள்ள பண்­பாடு, கலா­சாரம் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்­பான மாற்­றத்­தி­னையும் ஒட்­டு­மொத்­த­மாக பார்க்க முடி­யாத ஒரு நிலையில் இருக்­கின்றோம். துறை­சார்ந்த நிபு­ணர்கள், துறை­சார்ந்த ஆர்­வ­லர்கள் குறித்த விட­யங்­களை அறிந்து கொள்­வ­திலும் சிக்கல் நிலை மேலோங்கிக் காணப்­ப­டு­கின்­றது. சமூ­கத்தில் பல்­வேறு மாற்­றங்கள் ஏற்­பட்டு வரு­கின்ற நிலையில் இந்த மாற்­றங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்­டி­யதும், இடர்­பா­டு­களை களைந்து அபி­வி­ருத்­திக்கு இட்டுச் செல்ல வேண்­டி­யதும் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக விளங்­கு­கின்­றது.
மலை­யக மக்­களின் பல்­வேறு விட­யங்கள் குறித்தும் காலத்­துக்கு காலம் ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். இந்த ஆய்­வு­களின் ஊடாக நாம் பல்­வேறு விட­யங்­க­ளையும் விளங்கிக் கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும். வருடா வருடம் இத்­த­கைய ஆய்­வு­களை மேற்­கொள்ள முடி­யா­விட்­டாலும் குறிப்­பிட்ட ஒரு காலப்­ப­கு­தியை மையப்­ப­டுத்தி இந்த ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். ஆய்­வுகள் செய்து அபி­வி­ருத்தி செய்வோம் என்­பது ஒரு தொனிப்­பொ­ரு­ளாகும். வர­லாற்றைப் பார்த்து முன்­னோக்கிச் செல்வோம் என்­பதும் ஒரு முக்­கி­ய­மான கருத்­தாகும். இந்த நிலைகள் உரி­ய­வாறு கடைப்­பி­டிக்­கப் ­ப­டுதல் வேண்டும். ஆய்வு என்­பது சகல மட்­டங்­க­ளிலும் முக்­கி­யத்­துவம் பெற்று விளங்­கு­கின்­றது. உலக நாடுகள் பல­வற்றில் சமூகம் குறித்த கருத்துப் பரி­மா­றல்­க­ளுக்கு கள­மாக ஆய்வு அமைந்­தி­ருக்­கின்­றது என்­ப­தனை மறுத்­து­விட முடி­யாது.
யாழ்ப்­பாணம் மற்றும் கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இடம்­பெறும் ஆய்­வுகள் பலவும் சமூக ரீதியில் புதிய பரி­மா­ணங்கள் பல­வற்­றையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு உந்து சக்­தி­யாக அமை­கின்­றது என்­பதே உண்­மை­யாகும். இந்­தி­ய­ வம்­சா­வளி மலை­யக சமூ­கத்­தினர் இன்று பதி­னைந்து இலட்­சத்­துக்கும் அதி­க­மா­ன­வர்கள் உள்­ளனர்.
எனினும் துறை­சார்ந்த நிபு­ணர்­களை இனங்­காண்­ப­தற்கோ சம­கால பார்­வை­யினை செலுத்­து­வ­தற்கோ போது­மான தர­வுகள் எம்­மிடம் இல்லை. எனவே ஆய்­வுத்­து­றையை வளர்த்­தெ­டுக்க வேண்­டி­ய­தென்­பது மிகவும் அவ­சி­ய­மா­கின்­றது. மேற்­கத்­தேய நாடு­களைப் பொறுத்­த­வ­ரையில் கருத்­த­ரங்கு, கலந்­து­ரை­யா­டல்கள், ஆய்­வுகள் என்­பன அடிக்­கடி இடம்­பெற்று வரு­கின்­றன. சாதக, பாதக விளை­வுகள் ஆரா­யப்­ப­டு­கின்­றன. இத்­த­கைய நிலை­மைகள் சமூக அபி­வி­ருத்­திக்கு உந்து சக்­தி­யாக அமைந்து வரு­கின்­றன.
மலை­யக கல்வி தொடர்பில் மாநாடு நடத்­தப்­பட வேண்­டு­மென்று பேரா­சி­ரியர் தனராஜ் போன்­ற­வர்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். தனராஜ் கல்விப் புலத்தில் நீண்ட கால அனுபவமுள்ள ஒருவர். தேசிய சர்வதேச மாநாடுகள் பலவற்றிலும் அவர் பங்கேற்றுள்ளார். எனவே இந்த நிலையில் மலை­யக கல்வி தொடர்பில் மாநாடு ஒன்­றினை நடத்­து­வது குறித்தும் நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும். இதற்கு அனைத்துத் தரப்­பி­னரும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். பல்­வேறு ஆய்­வு­கள் சமூ­கத்தின் மேம்­பாட்­டுக்கும் அபி­வி­ருத்­திக்கும் பக்­க­ப­ல­மாகும் என்­ப­தனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

நன்றி- வீரகேசரி

No comments: