Sunday, January 11, 2009

மத்திய மாகாணசபை தேர்தல் அன்றும் இன்றும்

மத்திய மகாணசபைத் தேர்தல் - கண்டி மாவட்டத்தில் கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில்
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2,44,595 வாக்குகளை பெற்று 16 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். சிறுபான்மை மக்கள் சார்பாக எவரும் தெரிவாகவில்லை.
    எதிர்வரும் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் இ.தொ.கா சார்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைமதியுகராஜா, மற்றும் கே. செல்லமுத்து ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
  • மலையக மக்கள் முன்னணி சார்பில் கே. வரதராஜ் என்பவர் போட்டியிடுகின்றார்.
  • ஸ்ரீ.ல.சு.க சார்பாக கே. கோவிந்தராஜ் போட்டியிடுகின்றார்.
  • 2004 ஐக்கிய தேசிய கட்சி 2,02,264 வாக்குகளை பெற்று 14 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். சிறுபான்மை சமூகத்தின் சார்பில் தெரிவாகியிருந்த ஐந்து பேரில் இ.தொ.கா வின் துரை மதியுகராஜா தெரிவாகியிருந்தார்.
    மாத்தளை மாவட்டம்- 2004ம் ஆண்டு தேர்தலில்
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 92,510 வாக்குகளை பெற்று ஆறு பேர் தெரிவாகினர். தமிழ், முஸ்லீம் பிரதிநிதிகள் எவரும் தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    மத்திய மகாணத்தில் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை -56 கண்டி மாவட்டம்- 30 உறுப்பினர்கள்மாத்தளை மாவட்டம்-10 உறுப்பினர்கள்நுவரெலியா மாவட்டம்-16 உறுப்பினர்கள் வீரகேசரியில் - பானா. தங்கம்

மாத்தளை வாழ் தமிழ் மக்கள் சிந்தனைக்கு….

மாத்தளை மாவட்டத்தில் ஏறத்தாழ 35,000 தமிழர் வாக்குகள் இருந்த போதும் தமிழர் பிரதிநிதித்துவம் தெரிவு செய்யப்படவில்லை. 1994ம் ஆண்டில் ஒருவரும், 2000ம் ஆண்டில் ஒருவரும் மத்திய மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

எதிர்வரும் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் (வெற்றிலை சின்னம்) இ.தொ.கா சார்பாக எம். சிவஞானம், ஐ.தே.க சார்பாக (யானை சின்னம்) எம். சுதாகரனும் போட்டியிடுகின்றனர். இதேவேளை மாத்தளை எல்கடுவ தோட்டத்தைச் சேர்ந்த சண்முகம் ஸ்ரீனிவாஸ் தலைமையில் 13 தமிழ் வேட்பாளர்களை கொண்ட சுயேட்சைக் குழு களத்தில் இறங்கியுள்ளது.

15 - 16 ஆயிரம் விருப்பு வாக்குகளே மாகாணசபைக்கு தெரிவாவதற்கு போதுமானது. தமிழர்களின் வாக்குகளை சிதறடிப்பதற்கு மறைமுக முயற்சிகளும் இடம் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய மாத்தளை வாழ் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

தோட்டங்கள் கிராமங்களாக மாற்றப்பட வேண்டும்.
தோட்ட நிர்வாகங்களின் ஆதிகத்திலிருந்து மீள்வதே முன்னேற்றத்திற்கான முதல்படி!

இலங்கையில் காலனித்துவ காலம் தொட்டு இன்றுவரை சகல துறைகளிலும் பின் தங்கிய சமூகமாக மலையக சமூகம் காணப்படுகின்றது என்பதை கடந்த வரவு செலவு திட்ட உரையின் போது ஜனாதிபதி, பெருந்தோட்ட மக்கள் கணிசமாக வாழ்கின்ற நுவரெலியா மாவட்டத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த பின் தங்கிய நிலைமைக்கான அடிப்படை காரணம் என்ன? முதலாவதாக நாம் தோட்ட நிர்வாகங்களின் பிடியிலிருந்து மீள வேண்டும். தோட்ட நிர்வாகங்கள் தொழில் வழங்குநர்களாக மாத்திரமே செயற்பட வேண்டுமே தவிர அரசு நேரடியாக அம் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

பெருந்தோட்டப் புறங்களில் பல ஆண்டுகளாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது தோல்வியை தழுவியிருப்பதுடன் மேலும் மேலும் அம் மக்களின் ஏழ்மையை அதிகரிக்கவே வழிவகுத்துள்ளது. அரசு இம் மக்களின் சமூக, பொருளாதார மாற்றங்கள் ஏற்பட பெருந்தொகை நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்ட போதும் அத் திட்டங்கள் அனைத்தும் பெருந்தோட்டக் கம்பனிகள் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக மகிந்த சிந்தனையின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் பாதை சீரமைப்பிற்காக தோட்ட நிர்வாகங்கள் ஊடாக நிதி வழங்கப்பட்டது. ஆனால் தோட்ட கம்பனிகள் தோட்டப்புற பாதைகளை சீர் செய்யாமல் தோட்ட நிர்வாகிகளின் விடுதிகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் செல்கின்ற பாதைகளை சீர் செய்திருக்கின்றன.

எனவே அபிவிருத்தி திட்டங்கள், பொருளாதார செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் போது அங்கு வாழ்கின்ற மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை. ஆனால் கிராமப் புறங்களில் அல்லது நகரப்புறங்களில் அரசினால் நேரடியாக மேற்கொள்ளப்படும் போது தரமானதாகவும், சிறப்பானதாகவும் அமைகின்றன. ஆனால் பெருந்தோட்ட சமூகம் தோட்ட கட்டமைப்புக்கள் இருந்த போதும் ஏனைய சமூகங்களோடு முன்னேற்றத்தில் பங்கு கொள்ள முடியாது விலகி நிற்கின்றது.

பெருந் தோட்டங்களில் அடிப்படை அத்தியாவசிய சேவைகளான கல்வி, சுகாதாரம், தபால் சேவை என்பன அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. அரசின் நடவடிக்கையால் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தோட்டப் புறங்களில் தமிழ் கிராம அலுவலர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நியமிக்க போதும் அவர்கள் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்தவென உருவாக்கப்பட்டுள்ள மனிதவள நிறுவனம் தோட்ட கம்பனி நிர்வாகங்களின் நேரடி தொடர்பில் உள்ளது. அரச அபிவிருத்தி செயற் திட்டங்கள் பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள் ஊடாக நேரடியாக மேற்கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது. அரச திட்டங்களை மேற்கொள்ளும் போது தோட்ட நிர்வாகங்களிடம் கருத்துக்களை கேட்பதை விடுத்து அம் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, அதற்காக அங்கு உருவாக்கப்படும் கிராம அபிவிருத்தி சங்கம், விவசாய சங்கங்கள் கிராமிய எழுச்சி அமைப்புக்கள் போன்றவற்றின் ஊடாக செயற்பட அரசு முன்வர வேண்டும்- சந்திரமோகன்- லுணுகலை

Saturday, January 10, 2009

மத்திய மாகாணசபைத் தேர்தல் அன்றும் இன்றும்

எதிர்வரும் பெப்ரவரி 14ம் திகதி நடைபெறவுள்ள வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி ஆகிய பிரதான கட்சி கூட்டணிகளும், சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இந்திய வம்சாவளி மக்கள் செறிந்து வாழும் மத்திய மாகாணத்தில் சிறுபான்மை கட்சிகள் தனித்து போட்டியிடாமல் பிரதான தேசிய கட்சிகளில் இணைந்து போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆளும் அரசு கட்சியான ஐ.ம.சு முன்னணியின் வெற்றிலை சின்னத்தில்
இ.தொ.கா சார்பில் முன்னாள் மத்திய மாகாண கல்வியமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன், மற்றும் திருமதி அனுஷா சிவராஜா, சிங் பொன்னையா, ஏ. சத்திவேல் எம்.ராம், எம். ரமேஷ் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

மலையக மக்கள் முன்னணி சார்பில் எல். பாரதிதாசன், ஆர். கணகரட்ணம், எம். மயில்வாகனம் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் மத்திய மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் எஸ் அருள்சாமி, ஏ.கே. கல்யாணகுமார் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
புத்திரசிகாமணி தலைமையிலான மலையக தேசிய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் எம். நடராஜபிள்ளை போட்டியிட இருந்தபோதும் அவர் சுகயீனம் காரணமாக விலகிக் கொண்டார் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.

ஆக மொத்தம் ஐ.ம.சு முன்னணி சார்பில் 11 தமிழ் வேட்பாளர்களும், 8 பெரும்பான்மை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில்
ஐ.தே.க சார்பில் எம் ரவீந்திரன், ஏ.ஹரிசந்திரன், எல். நேருஜி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் பி. திகாம்பரம், சங்கத்தின் பொருளாளர் ஆர். உதயகுமார் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் சார்பில் எஸ் சதாசிவம், அக் கட்சியின் உப தலைவருமான கணபதி கணகராஜ் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் (மனோ கணேசன் தலைமை) பிரகாஷ் கணேசன் களத்தில் உள்ளார்.

குறிப்பு:-
  • 2004ம் ஆண்டு ஐ.தே.க யின் யானை சின்னத்தில் இ.தொ.கா சார்பில் போட்டியிட்ட ஆறு பேர் வெற்றி பெற்றிருந்தனர். அன்று ஐ.தே.க(ஐ.தே.க, இதொ.கா, தொழிலாளர் தேசிய சங்கம்) முன்னணிக்கு 1,38,572 வாக்குகள் கிடைத்திருந்ததால் இ.தொ.கா வின் உறுப்பினர்கள் ஆறு பேர் உட்பட மேலும் இருவர் தெரிவாகி இருந்தார்கள்.
  • 2004ம் ஆண்டு மலையக மக்கள் முன்னணி தனித்து போட்டியிட்டு 36,939 வாக்குகளை பெற்று இரு உறுப்பினர்கள் தெரிவானார்கள்.(எஸ் அருள்சாமி, பி.திகாம்பரம்)
  • 2004ம் ஆண்டு ஐக்கிய சுதந்திர முன்னணி (பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜே.வி.பி, இலங்கை ஜனநாயக முன்னணி) க்கு 89,192 வாக்குகள் பெற்று ஆறு உறுப்பினர்கள் தெரிவானார்கள். இங்கு சிறுபான்மை இனத்தவர்கள் யாரும் வெற்றி பெறவில்லை.
    எதிர்வரும் தேர்தலில் கள நிலைமைகள் முற்றும் மாறுபட்டவையாகவே காணப்படுகின்றன. முன்பு ஒன்றாக இணைந்து வெற்றி பெற்றவர்கள் இன்று இரு வௌ;வேறு கூட்டணிகளில் தனித்தனியாக போட்டியிடுகின்றனர். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற சிறுபான்மை கட்சிகளின் உறுப்பினர்கள் இம் முறை வெற்றி பெறுவது பெரும் பல பரீட்சையாக அமைந்துள்ளது. – பானா தங்கம்

Friday, December 12, 2008

தேயிலை தின விழா

புதுடில்லியில் 2005ம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட அனைத்துலக தேயிலை தினத்தின் நான்காவது ஆண்டு நிறைவு தினம் எதிர்வரும் 15ம் திகதி நாவலப்பிட்டி தமிழ் கலாச்சார மண்டபத்தில் கொண்டாடுவதற்கு பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இத் தினத்தின் அடிப்படை தொனிப்பொருளும் குறிக்கோளும் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கான “வாழ்வதற்காக சம்பளம்” முதலாவது புதுடில்லி பிரகடனத்தில்
• பெருந்தோட்டப் பெண்களின் கருத்துகளுக்கு உரிய இடம் வழங்கப்படும்,
• பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
• குடும்ப அளவை தீர்மானிப்பதிலும் இனப்பெருக்கம் தொடர்பான முடிவுகளிலும் பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

இத் தின நிகழ்வில் பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றத்தின் பங்காளி நிறுவனங்களின் சார்பில் பெருந்தோட்டத் தொழிலாளர்களும், சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களும் பெருந்தோட்டத்துறையில் பணியாற்றும் ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கு கொள்வர்.

பெருந்தோட்டத்துறை அடையாமல் இருக்கும் அரசின் திட்டங்கள் விடயத்தில் கவனத்தை செலுத்தி அது வந்தடைவதற்காக பிரச்சாரம் செய்தல்.

இத்தினத்தை ஐக்கிய நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்காலிக தொடர் வீடுகளில் அடிப்படை வசதியின்றி வாழும் குடும்பங்கள்

கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் பம்பேகமவில் ஏற்பட்ட இன வன்முறையாலும், பம்பேகம தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகளாலும் அப் பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் புசல்லாவ, கொத்மலை பகுதி தோட்டங்களில் குடியமர்த்தப்பட்டார்கள். இவ்வாறு சுமார் 40 குடும்பங்கள் எல்பொட தோட்டத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு புதிய வீடுகள் விரைவில் நிர்மாணிக்க தோட்ட நிர்வாகமும், மலையக அரசியல்வாதிகளும் வாக்குறுதி வழங்கிய போதிலும் தற்காலிக குடியிருப்பில் தங்கியுள்ள இவர்களுக்கு புதிய வீடுகளை அமைக்கும் பணி மிக மந்தமாகவே இடம்பெற்று வருகிறது. இதனால் தொழிலாளர்கள் தங்களுக்கு மலசலகூடம், குடிநீர் உட்பட பல அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் இத் தொழிலாளர்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த விடயத்தில் அரசியல்கட்சி தலைவர்களும், தோட்ட நிர்வாகமும் புதிய வீடுகளை கையளிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மாகாணசபைத் தேர்தலில் இ.தொ.கா- ஐ.ம.சு.மு இணைந்து போட்டி

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல்களில்இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே தெரிவித்தார்.

தேயிலை விலை வீழ்ச்சியால் 1,50,000 மேற்பட்டோர் பாதிப்பு

தேயிலை விலை வீழ்ச்சி காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் 1,50,000 இற்கும் மேற்பட்ட சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களை பாதுகாக்கும் இரத்தினபுரி மாவட்ட கிளையினர் தெரிவிக்கின்றனர்.
உலக சந்தையில் தேயிலையின் விலை தொடர்ந்து குறைவடைந்து வருகின்ற போதிலும் இலங்கையில் தேயிலை உர வகைகளின் விலை குறைக்கப்படவில்லை . இதனால் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களும் அவர்களை நம்பி வாழும் தொழிலாளர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். ஒரு இலையும் திரியுமான அரும்பு கொழுந்துகளை மாத்திரமே தேயிலை தொழிற்சாலை கொள்வனவு செய்கின்றன. இவ்வாறான கொழுந்து உற்பத்தி செய்யப்பட வேண்டுமெனின் உரிய காலத்தில் உரிய பசளை இடவேண்டும். அதற்கு பசளை விலை குறைக்கப்படவேண்டும். கடந்த காலங்களில் 60 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு கிலோ கொழுந்துகள் தற்போது 30 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர்.

நேரடி தபால் விநியோகம்; மேற்கொள்ள 355 பேர் நியமனம்

மலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கு நேரடி தபால் விநியோகத்தை மேற்கொள்வதற்காக தோட்டப்பகுதிகளைச் சேர்ந்த 355 பேருக்கு, தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சினால் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் எம். எஸ்.செல்லச்சாமி தெரிவித்துள்ளார். அண்மையில் தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சர் மகிந்த விஜேசேகர தலைமையில் தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வின் போதே இந் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. பெருந்தோட்ட பகுதிகளைச் சேர்ந்த 500 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கப்படவிருந்தது. எனினும் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 355 பேருக்கு மாத்திரமே நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. ஏனைய 155 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதியமைச்சர் தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மலையக தமிழ் இளைஞர்களை பார்வையிட அனுமதியில்லை – சிவஞானம்

பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்படும் வட, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் இளைஞர்கள் வௌ;வேறு வகையில் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர். பொலிஸ் நிலையங்களில் விசாரணைக்காக தடுத்துவைத்துள்ள இவ் இளைஞர்களை அவரது பெற்றோர்களாலும் உறவினர்களாலும் நண்பர்களாலும் நேரில் சென்று பார்வையிடவும் அவர்களிடம் உரையாடவும் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. ஆனால், மலையக இளைஞர்களை பார்வையிடச் செல்வோருக்கு இத்தகைய சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதில்லை. இது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல அடிப்படை மனித உரிமை மீறலுமாகும் என மாத்தளை மாநகரசபை உறுப்பினர் எம். சிவஞானம் நகரசபையின் மாதாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது தெரிவித்தார்
அவ்வாறு பார்வையிடவோ, பேசவோ அவரது பெற்றோருக்கு மட்டுமல்லாது எந்தவொரு நபருக்குமே இலகுவில் சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. சந்தர்ப்பம் வழங்கப்பட்டாலும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் முன்னிலையில் சிங்கள மொழியில் மட்டுமே இருவரும் பேசிக்கொள்ள வேண்டுமென நிர்ப்பந்திக்கப்படுகின்றது. இதன் காரணமாக சிங்கள மொழி தெரியாத பெற்றோர்கள் தம் பிள்ளைகளிடம் பேசக்கூட சந்தர்ப்பம் கிடைக்காது உள்ளனர். பொலிசாரது இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவோர் உடல், உள ரீதியாக பாதிக்கப்படுவதுடன் சமூகத்தில் பயங்கரவாதிகளென இனங்காட்டப்பட்டு வருகின்றனர். விசாரணையின் பின் இவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டாலும் இவர்களை சமூகம் சந்தேகத்துடனே நோக்குகின்றது. எனவே, இவ்வாறான செயற்பாடுகளை தடுத்துநிறுத்த ஜனாதிபதியும் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்

25 குடியிருப்புகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டம்

ஏல்கடுவ பிலான்டேசன் நிறுவனத்தினால் நிர்வகிகப்பட்டுவரும் பிட்டகந்த, தம்பளகல ஆகிய தோட்டத் தொழிலாளர்களுக்கு தலா 25 குடியிருப்புகளை உள்ளடக்கிய இருவேறு வீடமைப்புத் திட்டங்கள் அமைப்பதற்கு காணிகள் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டிருந்த பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டதையடுத்தே வீடமைப்புத் திட்டம் அமைக்கப்படவுள்ளன. லங்கா தோட்டத் தொழிலாளர் சங்கம் மேற்கொண்ட கடும் முயற்சியின் பயனாக தேசிய வீடமைப்பு அதிகாரசபை மேற்படி வீடமைப்புத் திட்டங்களை அமைத்துக்கொடுக்க இணக்கம் தெரிவித்தன. பேச்சுவார்த்தையில் லங்கா தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் எஸ்.ராமநாதன் நிதிச் செயலாளர் ஆர்.நடராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Sunday, December 7, 2008

தொழிலாளர்களும் - 2009ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டமும்

இந் நாட்டின் வருமானத்திற்கு வளம் சேர்க்கின்ற தேயிலையின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை காரணம் காட்டி பெருந் தோட்டங்களை நிர்வகிக்கின்ற கம்பனிகள் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தொழிலாளர்களின் சம்பள உயர்வு வழங்கப்படாததால் எதிர்வரும் 08-12-2008 பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள இறுதி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக மலையக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நாட்டின் பிரதான எதிர்கட்சியான ஐ.தே.க இன் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிலாளர் கூட்டமைப்பு, மற்றும் அரசு சார்பான ஏனைய தொழிற்சங்கங்கள் இதுபற்றி அக்கறை கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. கம்பனிகளுடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள தொழிற்சங்கங்களும், இவற்றுக்கு சார்பான தொழிற்சங்களும் தொழிலாளர் நலன் சார்ந்த நியாயமான இறுக்கமான கொள்கையை கடைபிடிக்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய விடயமாகும்.
தேயிலையின் மூலம் வருமானம்
2007ம் ஆண்டு தேயிலையில் கிடைத்த வருமானம் 1.02 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
2008ம் ஆண்டில் ஜனவரியில் இருந்து ஜூலை வரையான காலப்பகுதியில் தேயிலையின் வருமானம் 786 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 2007ம் ஆண்டு இதே காலப்பகுதியில் பெற்ற வருமானத்தை விட ஏறத்தாழ 42 வீதம் அதிகமாகும். 2006ம் ஆண்டில் பெறப்பட்ட மொத்த வருமானமே 836 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
இலங்கை தேயிலை சபையின் தலைவர் லலித் ஹெட்டியாராச்சியின் கூற்றுப்படி 2008 ம் ஆண்டு வருமானம் 1.4 – 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். தற்காலிக விலை தளம்பல் பாதிப்பு ஏற்பட்டாலும் வருமானம் 1.2-1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்க்கலாம்.
2006ம் ஆண்டில் 310.8 மில்லியன் கி.கி தேயிலையின் உற்பத்தி 2007ம் ஆண்டு 304.6 மில்லியன் கி.கி குறைவடைந்தது. 2008ம் ஆண்டு உற்பத்தி 315-320 மில்லியன் கி.கி வரை எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று எமது நாட்டில் வாழ்க்கைச் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளன. உலக சந்தையில் எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இவ்வாறான நிலைமை இருந்த போதிலும் அரசு அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்து அக்கறை கொண்ட போதும் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பள உயர்வு குறித்து பாராளுமன்றத்திலும், கொள்கை வகுக்கும் இடங்களிலும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கைத்தரும் வகையில் முன் வைக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய விடயமாகும்.

Saturday, December 6, 2008

பொது வசதிகளுக்காக காத்திருக்கும் பெருந்தோட்ட மக்கள்

நீறுபூத்த நெருப்பில் ஊதி ஊதித்தான் பயன்பெற வேண்டும் என்றால் அது மலையகத்தை பொறுத்தவரையில் ஊதியம் பயனற்ற செயல்.

அபிவிருத்தி என்ற ஒன்றோடு ஏனைய பிரதேசங்களையும் மலையகத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். கல்வியிலே ஏனைய பிரதேசங்களையும் மலையகத்தையும் ஒப்பிட்டு பாருங்கள் அனைத்திலும் பின்தங்கியே உள்ளது. பொது வசதிகள் என்கிற போது எதனை என்று கேள்வி எழுப்பலாம்.

தோட்டத்துக்கு தோட்டம் தேயிலை செடி உண்டு. மரத்துக்கு மரம் ஆலயங்கள் உண்டு ஆனால் தோட்டப் பகுதிகளில் பின்வரும் பொது வசதிகள் இல்லையே.
• தரமான வைத்தியசாலை.
• நூலக வசதி
• தபால் நிலையம்
• கலாச்சார மண்டபம்.
• கணினி நிலையங்கள்
• விளையாட்டு மைதானம்

இவை அனைத்தையும் அமைத்துத் தருவதாக தேர்தல் காலங்களில் பல்லவி பாடுபவர்கள் தேர்தலின் பின்னர் தோட்டப் பகுதி வீதிகளை மட்டும் புனரமைத்து கொடுத்து விட்டு மக்களின் வாயை அடைத்து விடுகின்றனர்.

அடிப்படை வசதிகளற்று காணப்படும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் எதிர்கால மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. காரணம் நூலக வசதிகளை பொறுத்த வரையில் நகரங்களில் மட்டுமே காணப்படுகிறது. தோட்டப்புற பாடசாலைகளில் நூலகம் காணப்பட்டாலும் அவ்வளவு தரமான நூல்கள் கிடைப்பதில்லை. அதைவிட ‘வாசிப்பே ஒரு மனிதனை பூரணப்படுத்தும்’ மலையக மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க தோட்ட வாரியாக நூலக வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

அமெரிக்காவில் பகல் என்றால் இலங்கையில் இருட்டு என்பர். அது போல கொழும்பிலே விடிவு மலையகத்தில் இருட்டு காரணம் கொழும்பு போன்ற நகரங்களில் காணப்படும் கணனி கல்விக்கும் பெருந்தோட்ட கணனி கல்விக்கும் பெருந்தோட்ட கணனி கல்விக்கும் பாரிய இடைவெளி உண்டு. தேர்ச்சிப் பெற்ற கணனி ஆசிரியர்கள் மலையகத்தைப் பொறுத்தவரையில் கிடைப்பது அரிது. அதைவிட பாடசாலைகளில் கணனி பாடங்கள் இடம் பெற்றாலும் அது அடிப்படை கணனி அறிவோடு நிறுத்தப்படுகிறது. ஆசிரியர்களுக்கு போதுமான வினக்கம் இன்னும் வழங்கப்படவில்லை. முதலில் குறிப்பாக பெருந்தோட்ட ஆசிரியர்கள் பலருக்கு ஆங்கிலத்தையும் கணனியையும் கற்பிக்க வேண்டும். பிறகுதான் மாணவர்களை பற்றி யோசிக்க முடியும்.

கணனி நிலையங்களை அமைத்து தரமான ஆசிரியர்களை உள்வாங்குவதன் மூலம் மலையக மாணவர்களும் கணனித் துறையில் பிரவேசிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.
விளையாட்டு மைதானம்

தோட்டப்பகுதிகளிலும், தோட்டப்பகுதி பாடசாலைகளிலும் சரி தரமான விளையாட்டு மைதானங்களை காண்பது அரிது. காரணம் இடப்பற்றாக்குறை என்பர். தரிசு நிலங்கள் தரிசாகவே காணப்பட வேளாண்மை நிலையங்களுக்கு அருகாமையில் மைதானம் அமைக்க எம்மவர்கள் கேட்க இறுதியில் விளையாட்டு மைதானமும் இல்லை. தரிசு நிலத்தின் பயன்பாடும் இல்லாமல் போய் விடும்.

மலையக சமுதாயத்தில் அதிகரித்த திறமை உடையோர் இருக்க எட்டடி காம்பிரவுக்குள் எதனை அவர்கள் ஒத்திகை பார்ப்பர். பாடுபவரா? ஆடுபவரா, நடிக்கத் தெரிந்தவரா? அனைத்து திறமையுமே மழுங்கடிக்கப்படுகின்றன. திறமைகளை வெளிக்கொண்டு வர நினைக்கும் கலைஞனுக்கு பாடசாலையை தவிர வேறு எந்த வழியும் இல்லை. அதற்கு கலாச்சார மண்டபம் இன்மையும் ஒரு காரணமே.

தோட்ட வைத்தியசாலைகள் அரசால் பொறுப்பேற்கப்படும் என்ற வாசகம். தோட்ட வைத்தியசாலைகளின் அடிப்படை தேவைகள் கூட இன்னும் நிவர்த்தி செய்யப்பட வில்லை. இவ்வாறு பல பொது வசதிகள் தோட்டப் பகுதிகளில் மட்டும் உருவாக்கப்படாமைக்கு காரணம் என்ன? அமைச்சுக்கள் உண்டு, அரச சார்பற்ற நிறுவனஙகள் உண்டு. மலையகத்திற்கு என்றால் பணம் பதுங்கி விடுமோ?

குமுறப் போகும் எரிமலையாய் கொதித்து நிற்கும் தோட்டப்பகுதி மேலும் மேலும் இக்கட்டான திசைக்கே இட்டுச் செல்லப்படுகின்றது- வீரகேசரியிலிருந்து
ஜனவசம தோட்டங்களில் தொழில் பிணக்குகளுக்கு தீர்வு எட்டப்படுவதில்லை

ஜனதா தோட்ட அபிவிருத்தி சபைக்கு உரித்தான (ஜனவசம) தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக நிலவி வரும் தொழில் பிணக்குகளுக்கும், அவர்களது அடிப்படை தேவைகளுக்கும் உரிய காலத்தில் தீர்வு எட்டப்படுவதில்லை. எனினும் இவர்கள் தலைமுறை தலைமுறையாக இதே தோட்டங்களில் வாழ்ந்து தொழில் செய்தும் இவர்கள் ஓய்வுபெறும் போது இவர்களுக்கு சேர வேண்டிய ஊழியர் சேலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்கால பணம் என்பவைகூட முறையாக வழங்கப்படுவதில்லை. இது குறித்து இ.தொ.கா தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட வைத்தியசாலைகளுக்கு எம்.பி.பி.எஸ் நியமனம்- சுரேஷ்

அரசினால் பொறுப்பேற்கப்பட்ட பெருந்தோட்ட வைத்தியசாலைகளுக்கு எம்.பி.பி.எஸ் தரத்திலான வைத்தியர்கள் வெக விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் பெருந்தோட்டப் பகுதிகளில் பாரிய சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகவும், அதனடிப்படையில் தோட்ட வைத்தியசாலைகளுக்கு தமிழ் மொழியில் பரிச்சயமுள்ள நியமனங்கள் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சம்பள அதிகரிப்பு வழங்காவிடில் வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்பதில்லை-ம.ம.மு

தோட்டத்தொழிலாளரின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் உத்தரவாதமளிக்காத பட்சத்தில் திங்கட்கிழமை இடம்பெறவிருக்கும் வரவு செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பை பகிஷ்கரிப்பதென மலையக மக்கள் முன்னணி 03-12-2008 மத்திய குழு கொழும்பில் கூடி நீண்ட நேரம் கலந்துரையாடியதன் பின்னரே இந்த முடிவை எடுக்கத் தீர்மானித்துள்ளது.
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அவசர கவனமெடுக்கும் பொறுப்பும் கடப்பாடும் அரசாங்கத்துக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களுக்கும் உள்ளது. இதிலிருந்து அவர்களால் விலகிநிற்க முடியாது. இவ்விடயம் தொடர்பாக இன்று சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவிக்க மத்திய குழு தீர்மானித்துள்ளது.