Tuesday, April 28, 2009

நியாயமான சம்பள உயர்வுக்கு தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த செயற்பாடு

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றினைந்து சிந்தித்து செயற்படுவதன் மூலம் தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியுமென இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் இரா.தங்கவேல் கெட்டபுலா தோட்டத்தில் இடம்பெற்ற தொழிற்சங்க கூட்டத்தில் தெரிவித்தார் கூட்டு ஒப்பந்தத்தை சாடுவதனாலோ விபரிதமான அறிக்கைகளை விடுவதனாலோ மரண சாசனம் என கொச்சைப் படுத்தி கூறுவதாலோ மலையக மக்களுக்கு எந்த விமோசனமும் கிட்டப் போவதில்லை. மாறாக கூட்டு ஒப்பந்தத்தின் கூட்டாளிகளை தம்வசப்படுத்தும் வகையில் தொழிலாளர்களுடைய அபிலாஷைகளையும் தேவைகளையும் கோரிக்கைகளையும் அதற்கான சான்றிதழ்களையும் சம்பந்தப்பட்டவர்களோடு கலந்துரையாடி ஆக்கபூர்வமான பங்களிப்பை அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டாக இணைந்து செயற்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தோட்ட முதலாளிகளும் அரசும் ஏற்றுக் கொள்ள அழுத்தம் கொடுப்பதாக அமையும் என்றார். இன்று அவசியம் தேவைப்படுவதெல்லாம் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒரே குரலில் ஒரே அழுத்தத்தில் உரிய கோரிக்கைகளை முன்வைப்பதே ஆகும். இதற்கு தொழிற்சங்க தலைவர்களின் புரிந்துணர்வும் கருத்தொற்றுமையுமே அவசியம்.

No comments: