Tuesday, April 28, 2009

உள்ளுராட்சி சட்ட மூலத்தை மத்திய மாகாணசபை நிராகரிக்க வேண்டும்

மத்திய மாகாணசபையில் எதிர்வரும் மே 5 ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ள உள்ளுராட்சி விஷேட ஒழுங்குகள் சட்டமூலத்தை மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டுமென மாகாணசபை உறுப்பினர் கனபதி கணகராஜ் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி விஷேட ஒழுங்குகள் சட்டத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் சட்டமூலம் மலையக மக்களின் உள்ளூராட்சி உறுப்பினர் பிரதிநிதித்துவத்தை கீழ் மட்டத்திற்கு கொண்டு வந்துவிடும். தற்போது இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் சிறுபான்மையாக வாழுகின்ற பகுதிகளில் உள்ளூராட்சி சபைகளின் ஊடாக தமது பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துள்ளனர். அத்துடன், மாகாணசபை மற்றும் பாராளுமன்றத்திலும் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்துள்ளனர். மாகாணசபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்து கொள்ள முடியாத பிரதேசங்களில் உள்ளூராட்சி சபைகளின் ஊடாகத் தமது பிரதிநிதித்துவத்தைத் தெரிவு செய்து கொள்கின்றனர்.
இந்த விடயம் குறித்து மலையகத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையில் இந்தச் சட்ட மூலத்தினை மத்திய மாகாணத்தில் நிராகரிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோருவதுடன் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கின்ற மாகாணசபை உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் கோரவுள்ளதாக அவர் தெரிவித்தார்

No comments: