மக்களை ஓரணியில் திரட்டுவது தான் நோக்கம் - முத்தப்பன் செட்டியார்
பி.ரவிவர்மன்
இந்திய வம்சாவளி மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டி அவர்களின் அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரே இலட்சிய நோக்குடனேயே இலங்கை- இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்று முன்னணியின் தலைவரும் மேல் மாகாணசபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் தலைமை வேட்பாளருமான முத்தப்பன் செட்டியார் தெரிவித்தார். இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்த பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ள நிலையில் இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி என்ற புதியதோர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டதன் அவசியம் என்னவென்று ஞாயிறு தினக்குரலுக்கு முத்தப்பன் செட்டியார் வழங்கிய விசேட செவ்வியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள போது.
இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டதன் பிரதான நோக்கம் என்ன?
இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களான தமிழர்கள், முஸ்லிம்கள், மலையாளிகள்,தெலுங்கர்கள், கன்னடர்கள், மேமன் சமூகத்தினர், குஜராத்திகள் உள்ளடங்கிய அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து புதியதோர் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி எமது மக்களின் அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்பதே எமது பிரதான நோக்கமாகும்.
இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழும் இந்திய வம்சாவளி மக்கள் அடிப்படை அரசியல் வசதிகளின்றி பெரும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர். அதனை விட பாதுகாப்பு “கெடுபிடி” கைது, காணாமல் போதல் போன்ற பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த நிலைமையை மாற்றியமைப்பதே எமது பிரதான நோக்கமாகும். இந்த நோக்கத்தை அடைவதற்கான முதல்படியாகவே எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி சுயேச்சைக் குழு-5 இல் கண்ணாடி சின்னத்தில் களமிறங்கியுள்ளது.
பேரினவாத கட்சிகளுடன் கடந்த காலங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களால் எமது சமூகத்திற்கு எதனையும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. எனவே எமது சமூகத்தின் தனித்துவத்தை எதிர்காலத்தில் பேணிப் பாதுகாப்பதற்காக இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணியை பலப்படுத்த முன்வர வேண்டும்.
பல்வேறு அரசியல் கட்சிகள், பெரும்பாலான தொழிற்சங்கங்கள் உள்ள நிலையில் உங்கள் புதிய அரசியல் செயற்பாட்டின் நோக்கமென்ன?
ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக எமது மக்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதுடன் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். எமக்கான அரசியல் தளத்தை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளையே நாம் தற்போது முன்னெடுத்துள்ளோம் பாராளுமன்றத்தில் குரலெழுப்புவதும் அறிக்கைகள் விடுவதாலும் எமது சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க முடியாது. யதார்த்த பூர்வமாக சிந்தித்து எமது சமூகத்தின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். தமிழர்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்று சொல்பவர்கள் அதனால் எமது மக்களுக்கு கிடைத்த நன்மைகள் எதுவென்பதை இதுவரை சொல்ல முடியாதவர்களாகவேயுள்ளனர்.
தேர்தல் காலத்திலேயே உங்கள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றார்களே அது தொடர்பாக என்ன கூறுகின்றீர்கள்?
தேர்தல் காலத்தில் மாத்திரம் புதிதாக தோற்றுகின்றவர்கள் என்ற கருத்தை சிலர் தமது அரசியல் சுயலாபங்களுக்காக முன்வைக்கலாம். அது உண்மையில்லை. எமது முன்னணியில் புத்திஜீவிகள்,எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள் சாதாரண தரத்தை சேர்ந்தவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் உள்ளனர். எமது இலட்சியம், சிந்தனை, நோக்கம் என்பன இந்திய வம்சாவளியை ஓரணியில் திரட்டி பேரம் பேசும் அரசியல் சக்தியொன்றை உருவாக்குவதேயாகும்.
இலங்கை இந்தி வம்சாவளி மக்கள் முன்னணியின் எதிர்கால அரசியல் செயற்திட்டங்கள் எவ்வாறாக அமையப் போகின்றது?
இலங்கை இந்திய காங்கிரஸ் 1939 ஜூலை 25 இல் ஆரம்பிக்கப்பட்டது. அதன் தலைவராக வீ.ஆர்.எம்.ஏ.லெட்சுமணன் செட்டியார் மற்றும் இணைச் செயலாளர்களாக ஏ.அஸீஸ், எச்.எம் தேசா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்திய தேசபிதா மகாத்மாகாந்தி, பிரதமர் நேரு ஆகியோரின் ஆலோசனையின் பேரிலேயே அன்று இந்தியவம்சாவளி மக்கள் முன்னணி ஆரம்பிக்கப்பட்டது. இந்திய வம்சாவளி மக்கள் நலன் கருதியும் அவர்களை ஓரணியில் திரட்டவும் அமைக்கப்பட்ட இந்த அமைப்பு காலப்போக்கில் தொழிற்சங்கங்களாக மாற்றமடைந்து பிளவுபட்டு காலப்போக்கில் பல பிரிவுகளாக சிதறுண்டது. இவ்வாறு பிளவுண்டு சிதறுபட்ட அரசியல் தொழிற்சங்க பிரமுகர்கள் தமது அரசியல் நலன்கருதியே செயற்பட்டனரே தவிர இந்திய வம்சாவளி மக்கள் நலன்கருதி ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் செயற்படவில்லை. இவ்வாறு வளர்ச்சி பெற்ற தலைவர்கள் பெரும்பான்மை கட்சிகளுடன் இணைந்து தமது சுயலாப அரசியலையே முதன்மைப்படுத்தி இந்த நிலையிலே புதியதோர் அரசியல் விழிப்புணர்ச்சியை உருவாக்க இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை கட்சிகளின் தயவில் அரசியல் நடத்துபவர்கள் அவற்றின் செயற்பாடுகளுக்கு கட்டுப்பட்டவர்களாகவேயுள்ளனர்.இந்த நிலையை மாற்றியமைக்கவே நாம் புதியதோர் அரசியல் களத்தை தோற்றுவித்துள்ளோம்.
Sunday, March 29, 2009
Saturday, March 28, 2009
டன்சினன் தோட்டத்தில் மண்சரிவு அபாயம்
மத்திய மாகாணம் பூண்டுலோயா மத்திய பிரிவு தோட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த விடயம் குறித்து தோட்டத் தொழிற்துறை அமைச்சு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, சூழலியல் அமைப்புக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதேவேளை பூண்டுலோயா பகுதியிலேயே மேல் கொத்தமலைத் திட்டத்தின் நிலக்கீழ்ச் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மத்திய மாகாணம் பூண்டுலோயா மத்திய பிரிவு தோட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த விடயம் குறித்து தோட்டத் தொழிற்துறை அமைச்சு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, சூழலியல் அமைப்புக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதேவேளை பூண்டுலோயா பகுதியிலேயே மேல் கொத்தமலைத் திட்டத்தின் நிலக்கீழ்ச் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மதுவுக்கு எதிராக மகளிர் அமைப்பு
மலையகத்தில் புதியதொரு அரசியல் மற்றும் தொழிற்சங்க கலாச்சாரமொன்றினை ஏற்படுத்தும் வகையில் மதுவுக்கு எதிரான மகளிர் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உப தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்துள்ளார். தேர்தல் காலங்களிலும் தொழிற்கங்களுக்கு அங்கத்தவர்களை சேர்த்துக்கொள்ளும் காலங்களிலும் சில அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களால் தாராளமாக வழங்கப்படும் மதுபானம் தோட்டத் தொழிலாளர்களின் சுயசிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது. அத்துடன் மலையக பகுதிகளில் அதிகரித்து வருகின்ற மதுபாவனை இளைஞர்கள் உடல் ரீதியாக பாதிப்படைந்து வருகின்றனர். குடும்பத் தலைவர்களின் மது பாவனையால் அக் குடும்பங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது.
மலையகத்தில் புதியதொரு அரசியல் மற்றும் தொழிற்சங்க கலாச்சாரமொன்றினை ஏற்படுத்தும் வகையில் மதுவுக்கு எதிரான மகளிர் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உப தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்துள்ளார். தேர்தல் காலங்களிலும் தொழிற்கங்களுக்கு அங்கத்தவர்களை சேர்த்துக்கொள்ளும் காலங்களிலும் சில அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களால் தாராளமாக வழங்கப்படும் மதுபானம் தோட்டத் தொழிலாளர்களின் சுயசிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது. அத்துடன் மலையக பகுதிகளில் அதிகரித்து வருகின்ற மதுபாவனை இளைஞர்கள் உடல் ரீதியாக பாதிப்படைந்து வருகின்றனர். குடும்பத் தலைவர்களின் மது பாவனையால் அக் குடும்பங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது.
விவசாயத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள் வேலையில் இருந்து இடைநிறுத்தம்
பொகவந்தலாவை கெம்பியன் தோட்ட 57ம் பிரிவிலுள்ள தரிசு நிலங்களில் விவசாயம் செய்த 15 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், அவர்களுடைய உறவினர்களும் தோட்டங்களில் வேலை செய்வதிலிருந்து தோட்ட நிர்வாகம் இடைநிறுத்தி வைத்துள்ளனர் என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உப தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் தமது மேலதிக வருமானத்துக்காக தோட்டங்களிலுள்ள தரிசு நிலங்களில் விவசாயப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
பொகவந்தலாவை கெம்பியன் தோட்ட 57ம் பிரிவிலுள்ள தரிசு நிலங்களில் விவசாயம் செய்த 15 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், அவர்களுடைய உறவினர்களும் தோட்டங்களில் வேலை செய்வதிலிருந்து தோட்ட நிர்வாகம் இடைநிறுத்தி வைத்துள்ளனர் என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உப தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் தமது மேலதிக வருமானத்துக்காக தோட்டங்களிலுள்ள தரிசு நிலங்களில் விவசாயப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்பள உயர்வு தொடர்பாக மகஜரை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 500 ரூபா வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தொழிலாளர்களிடம் கையொப்பம் பெறப்பட்ட மகஜரொன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கும் நடவடிக்கையில் விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம். கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
பதுளையில் தொழிலாளர்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடலின் போது தெரிவித்த கிருஷ்ணசாமி அவர்கள் பதுளை மாவட்டத்தில் 65 தோட்டங்களும், 525 பிரிவுகளும் இருக்கின்ற போதிலும் 40 தோட்டங்களில் கையொப்பம் பெறும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளன. ஏனைய தோட்டங்களில் கையொப்பம் பெறும் நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் கையொப்பம் பெறப்பட்ட மகஜர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.
கூட்டொப்பந்தத்தில் மாதத்திற்கு 25 நாள் வேலையும், வருடத்திற்கு 300 நாள் வேலையும் வழங்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கூட்டொப்பந்தம் செய்தவர்களே வாரத்திற்கு இரண்டு, மூன்று நாள் வேலை வழங்கப்படும்பொழுது தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை கேட்பது உகந்த தருணம் இல்லை என்கிறார்கள். வரட்சி நிவாரணம் விவசாயிகள், சிறுதோட்ட சொந்தக்காரர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டு வருகிறது. பாதிப்படைந்து வருகின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு வரட்சி நிவாரணம் வழங்கப்படுவதில்லை என்றார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 500 ரூபா வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தொழிலாளர்களிடம் கையொப்பம் பெறப்பட்ட மகஜரொன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கும் நடவடிக்கையில் விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம். கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
பதுளையில் தொழிலாளர்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடலின் போது தெரிவித்த கிருஷ்ணசாமி அவர்கள் பதுளை மாவட்டத்தில் 65 தோட்டங்களும், 525 பிரிவுகளும் இருக்கின்ற போதிலும் 40 தோட்டங்களில் கையொப்பம் பெறும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளன. ஏனைய தோட்டங்களில் கையொப்பம் பெறும் நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் கையொப்பம் பெறப்பட்ட மகஜர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.
கூட்டொப்பந்தத்தில் மாதத்திற்கு 25 நாள் வேலையும், வருடத்திற்கு 300 நாள் வேலையும் வழங்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கூட்டொப்பந்தம் செய்தவர்களே வாரத்திற்கு இரண்டு, மூன்று நாள் வேலை வழங்கப்படும்பொழுது தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை கேட்பது உகந்த தருணம் இல்லை என்கிறார்கள். வரட்சி நிவாரணம் விவசாயிகள், சிறுதோட்ட சொந்தக்காரர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டு வருகிறது. பாதிப்படைந்து வருகின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு வரட்சி நிவாரணம் வழங்கப்படுவதில்லை என்றார்.
Friday, March 27, 2009
ஆளும் கட்சியுடன் இணைந்திருப்பதன் மூலமே சமூகம் முன்னேற்றமடையும்
ஆளும் கட்சியுடன் இணைந்திருப்பதன் மூலமே மலையக சமூகத்தை முன்னேற்றத்திற்கான வேலைத் திட்டங்களை மேற்கொள்ள முடியும். எமது பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாயின் எமது மக்கள் நன்கு சிந்தித்து செயற்பட வேண்டும் என பதுளை, ஆலி-எல பகுதி பெருந்தோட்டங்களின் தோட்டக்கமிட்டி முக்கியஸ்தர்கள் மத்தியில் பிரதி கல்வியமைச்சர் எம். சச்சிதானந்தன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கூட்டு ஒப்பந்தம் மார்ச் 31ம் திகதியுடன் முடிவடைகிறது. மீண்டும் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. அதன் பிரகாரம் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
ஊவா மாகாணசபை கே. விஸ்வநாதன் குறிப்பிடுகையில் தேயிலை தோட்டங்களில் 10 வீதமான பங்குகள் தொழிலாளர்களிடம், 30 வீதமான பங்குகள் தோட்டங்களை பொறுப்பேற்ற நிறுவனங்களிடமும், 40 வீதமான பங்குகள் அரசிடமும் இருந்து வருகிறது.
அரசினால் தோட்டங்களை நடத்த முடியாது நட்டத்தில் இயங்கியதால் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டன. தோட்ட நிறுவனங்கள் நடத்த முடியாத பட்சத்தில் அடுத்த பங்குதாரர்களான தொழிலாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
கம்பனிகள் பொறுப்பேற்றது முதல் தோட்டங்களின் வளங்கள் அனைத்துமே சுரண்டப்பட்டு விட்டன. அத்துடன் ஏக்கர் ஒன்றிற்கு 3500 தேயிலைச் செடிகள் இருக்க வேண்டிய இடத்தில் 1500- 2000 தேயிலைச் செடிகளே உள்ளன என்றார்.
ஆளும் கட்சியுடன் இணைந்திருப்பதன் மூலமே மலையக சமூகத்தை முன்னேற்றத்திற்கான வேலைத் திட்டங்களை மேற்கொள்ள முடியும். எமது பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாயின் எமது மக்கள் நன்கு சிந்தித்து செயற்பட வேண்டும் என பதுளை, ஆலி-எல பகுதி பெருந்தோட்டங்களின் தோட்டக்கமிட்டி முக்கியஸ்தர்கள் மத்தியில் பிரதி கல்வியமைச்சர் எம். சச்சிதானந்தன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கூட்டு ஒப்பந்தம் மார்ச் 31ம் திகதியுடன் முடிவடைகிறது. மீண்டும் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. அதன் பிரகாரம் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
ஊவா மாகாணசபை கே. விஸ்வநாதன் குறிப்பிடுகையில் தேயிலை தோட்டங்களில் 10 வீதமான பங்குகள் தொழிலாளர்களிடம், 30 வீதமான பங்குகள் தோட்டங்களை பொறுப்பேற்ற நிறுவனங்களிடமும், 40 வீதமான பங்குகள் அரசிடமும் இருந்து வருகிறது.
அரசினால் தோட்டங்களை நடத்த முடியாது நட்டத்தில் இயங்கியதால் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டன. தோட்ட நிறுவனங்கள் நடத்த முடியாத பட்சத்தில் அடுத்த பங்குதாரர்களான தொழிலாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
கம்பனிகள் பொறுப்பேற்றது முதல் தோட்டங்களின் வளங்கள் அனைத்துமே சுரண்டப்பட்டு விட்டன. அத்துடன் ஏக்கர் ஒன்றிற்கு 3500 தேயிலைச் செடிகள் இருக்க வேண்டிய இடத்தில் 1500- 2000 தேயிலைச் செடிகளே உள்ளன என்றார்.
பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு தமிழ்மொழிமூல பாடநெறிகளுடன் தொழிற்பயிற்சி
பெருந்தோட்டங்களை அண்மித்திருக்கும் தொழில்நுட்ப பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பாடநெறிகளுடன் தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பதுளைப் பகுதியிலிருந்து 75 இளைஞர்கள் ரம்யமான முறையில் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர் என ஊவா மாகாண சபை உறுப்பினர் அ. அரவிந்குமார் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் தொழில்நுட்ப பயிற்சி நிலையங்களில் சிங்கள மொழிமூலமான பாடநெறிகளுடனேயே பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. இதனால், பெரும்பான்மை சமூக இளைஞர், யுவதிகளுக்கே கூடுதலான வாய்ப்புக்கள் இருந்து வந்தன. எமது சமூகத்தவர்களுக்கு அவ்வாய்ப்புக்கள் முழுமையாக கிடைக்கவில்லை. இந்நிலையினால், எமது சமூக இளைஞர், யுவதிகள் பெரும் பாதிப்புகளையும் எதிர்நோக்கியிருந்தனர்.
இதுகுறித்து, வாழ்க்கை தொழில்பயிற்சி பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து பதுளை மாவட்ட பெருந்தோட்டங்களின் இளைஞர், யுவதிகளிடையே விண்ணப்பங்கள் கோரப்பட்டு, ஆரம்பக்கட்டமாக 75 இளைஞர்களை தொழில்நுட்ப பயிற்சிகளில் ஈடுபடுத்தியுளள்ளதாகவும் தெரிவித்தார்
பெருந்தோட்டங்களை அண்மித்திருக்கும் தொழில்நுட்ப பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பாடநெறிகளுடன் தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பதுளைப் பகுதியிலிருந்து 75 இளைஞர்கள் ரம்யமான முறையில் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர் என ஊவா மாகாண சபை உறுப்பினர் அ. அரவிந்குமார் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் தொழில்நுட்ப பயிற்சி நிலையங்களில் சிங்கள மொழிமூலமான பாடநெறிகளுடனேயே பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. இதனால், பெரும்பான்மை சமூக இளைஞர், யுவதிகளுக்கே கூடுதலான வாய்ப்புக்கள் இருந்து வந்தன. எமது சமூகத்தவர்களுக்கு அவ்வாய்ப்புக்கள் முழுமையாக கிடைக்கவில்லை. இந்நிலையினால், எமது சமூக இளைஞர், யுவதிகள் பெரும் பாதிப்புகளையும் எதிர்நோக்கியிருந்தனர்.
இதுகுறித்து, வாழ்க்கை தொழில்பயிற்சி பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து பதுளை மாவட்ட பெருந்தோட்டங்களின் இளைஞர், யுவதிகளிடையே விண்ணப்பங்கள் கோரப்பட்டு, ஆரம்பக்கட்டமாக 75 இளைஞர்களை தொழில்நுட்ப பயிற்சிகளில் ஈடுபடுத்தியுளள்ளதாகவும் தெரிவித்தார்
Subscribe to:
Posts (Atom)