Saturday, March 28, 2009

சம்பள உயர்வு தொடர்பாக மகஜரை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 500 ரூபா வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தொழிலாளர்களிடம் கையொப்பம் பெறப்பட்ட மகஜரொன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கும் நடவடிக்கையில் விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம். கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

பதுளையில் தொழிலாளர்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடலின் போது தெரிவித்த கிருஷ்ணசாமி அவர்கள் பதுளை மாவட்டத்தில் 65 தோட்டங்களும், 525 பிரிவுகளும் இருக்கின்ற போதிலும் 40 தோட்டங்களில் கையொப்பம் பெறும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளன. ஏனைய தோட்டங்களில் கையொப்பம் பெறும் நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் கையொப்பம் பெறப்பட்ட மகஜர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.

கூட்டொப்பந்தத்தில் மாதத்திற்கு 25 நாள் வேலையும், வருடத்திற்கு 300 நாள் வேலையும் வழங்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கூட்டொப்பந்தம் செய்தவர்களே வாரத்திற்கு இரண்டு, மூன்று நாள் வேலை வழங்கப்படும்பொழுது தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை கேட்பது உகந்த தருணம் இல்லை என்கிறார்கள். வரட்சி நிவாரணம் விவசாயிகள், சிறுதோட்ட சொந்தக்காரர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டு வருகிறது. பாதிப்படைந்து வருகின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு வரட்சி நிவாரணம் வழங்கப்படுவதில்லை என்றார்.

No comments: