Friday, March 27, 2009

பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு தமிழ்மொழிமூல பாடநெறிகளுடன் தொழிற்பயிற்சி

பெருந்தோட்டங்களை அண்மித்திருக்கும் தொழில்நுட்ப பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பாடநெறிகளுடன் தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பதுளைப் பகுதியிலிருந்து 75 இளைஞர்கள் ரம்யமான முறையில் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர் என ஊவா மாகாண சபை உறுப்பினர் அ. அரவிந்குமார் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் தொழில்நுட்ப பயிற்சி நிலையங்களில் சிங்கள மொழிமூலமான பாடநெறிகளுடனேயே பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. இதனால், பெரும்பான்மை சமூக இளைஞர், யுவதிகளுக்கே கூடுதலான வாய்ப்புக்கள் இருந்து வந்தன. எமது சமூகத்தவர்களுக்கு அவ்வாய்ப்புக்கள் முழுமையாக கிடைக்கவில்லை. இந்நிலையினால், எமது சமூக இளைஞர், யுவதிகள் பெரும் பாதிப்புகளையும் எதிர்நோக்கியிருந்தனர்.

இதுகுறித்து, வாழ்க்கை தொழில்பயிற்சி பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து பதுளை மாவட்ட பெருந்தோட்டங்களின் இளைஞர், யுவதிகளிடையே விண்ணப்பங்கள் கோரப்பட்டு, ஆரம்பக்கட்டமாக 75 இளைஞர்களை தொழில்நுட்ப பயிற்சிகளில் ஈடுபடுத்தியுளள்ளதாகவும் தெரிவித்தார்

No comments: