Saturday, March 28, 2009

மதுவுக்கு எதிராக மகளிர் அமைப்பு

மலையகத்தில் புதியதொரு அரசியல் மற்றும் தொழிற்சங்க கலாச்சாரமொன்றினை ஏற்படுத்தும் வகையில் மதுவுக்கு எதிரான மகளிர் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உப தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்துள்ளார். தேர்தல் காலங்களிலும் தொழிற்கங்களுக்கு அங்கத்தவர்களை சேர்த்துக்கொள்ளும் காலங்களிலும் சில அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களால் தாராளமாக வழங்கப்படும் மதுபானம் தோட்டத் தொழிலாளர்களின் சுயசிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது. அத்துடன் மலையக பகுதிகளில் அதிகரித்து வருகின்ற மதுபாவனை இளைஞர்கள் உடல் ரீதியாக பாதிப்படைந்து வருகின்றனர். குடும்பத் தலைவர்களின் மது பாவனையால் அக் குடும்பங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது.

No comments: