Saturday, October 17, 2015

மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் பெய்துவரும் பலத்த மழையின் காரணமாக 7 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்ட்ட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார குறிப்பிடுகின்றார்.
மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு 8 மணிவரை அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை தவிர சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பரவலாக மழை பெய்துவருகின்றமையால் மண்மேடுகள் மற்றும் உயர் நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கேட்டுள்ளார்.
-News1st-

குளவி தாக்குதலில் 51 பேர் பாதிப்பு; 11 பேர் வைத்தியசாலையில்

புல்லாவ ஸ்டெலன்பேர்க் தோட்டம், வீடன் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்களை குளவி தாக்கியதில் 51 பேர் பாதிப்புக்குள்ளாகினர். 

இவர்களில் பெண்கள் 50 பேரும், தோட்டக் கணக்குப்பிள்ளை ஒருவரும் அடங்குவர். 

இவர்களில் 11 பேர் பாரிய பாதிப்புக்குள்ளாகி 7 பேர் புஸ்ஸல்லாவ வகுகப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

3 பேர் கம்பளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 

இச்சம்பவம் நேற்று (16-10-2015) பகல் வேலையில் இடம் பெற்றுள்ளது. 

குறித்த பெண்கள் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பிரதேசத்தில் கழுகு ஒன்று பாம்பு ஒன்றை இறைக்காக பெற்றுக் கொள்ள முயற்சித்த போது கழுகின் சிறகு அருகில் இருந்த குளவி கூட்டில் பட்டதால் குளவுக் கூடு கலைந்ததாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

Friday, October 16, 2015

வறுமையை ஒழிக்க சிக்கனமும் சேமிப்பும் அவசியம்

இன்று 17.10.2015 வறுமை ஒழிப்பு தினம்

உலகிலிருந்து வறுமை நீங்க வளர்முக நாடுகள் தனி மனித வருமான உயர்விற்கு வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும்.

ஒரு நாட்டின் பொருளாதார உயர்வானது அந்த நாடுகளில் வாழ்கின்ற குடிமக்கள் யாவரும் போதிய அளவு அத்தியாவசிய அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறையுள் சுத்தமான குடிநீர் போதியளவு கல்வி அறிவு வீதி கட்டமைப்பு வசதி, நவீன தொலைத்தொடர்பு வசதி ஆகியவைகளுடன் தனிமனித சுதந்திரம் போன்றவைகளில் தன்னிறைவு உள்ளவர்களாக இருத்தல் வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது.

1987 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த ஜோசப் ரெசின்சி உலகிலிருந்து வறுமை ஒழிக்கப்பட வேண்டுமென தனது வாலிப வயதிலிருந்து குரல் கொடுத்து வந்ததுடன் அதற்கான சமூகம் தழுவிய வேலைத்திட்டத்திலும் ஈடுபட்டார். இதன் பலனாக 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உலக வறுமை ஒழிப்பு தினமாக அக்டோபர் 17 ஆம் திகதியை பிரகடனப்படுத்தி உள்ளது. ஜோசப் ரெசின்சி என்பவரே உலகில் முதன் முதலில் வறுமை ஒழிக்கப்படல் வேண்டுமென போராடி அதை உலகளவில் சமூகமயக்கியவர் எனலாம்.

இதன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை தனது அங்கத்துவ நாடுகளை ஒன்றிணைந்து உலகிலிருந்து வறுமையை ஒழிப்பதற்கும் தனிமனித பொருளாதார உயர்விற்குமான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார்.

உலகில் வறுமையான நிலையின் மனித இனம் வாட்டம் பெற போர், இயற்கை சீற்றங்கள், காலநிலையில் சடுதியான ஏற்றத்தாழ்வுகள் கல்வி அறிவின்மை, அடிமைத்தனம் போன்றவைகளுடன் அரசியல் ரீதியான தாக்கங்களும் காரணமாக இருக்கின்றன.

வறுமை அல்லது பட்டினி என்பது ஒரு தனிமனிதன் ஒரு நாளைக்கு 1800 கலோரி உணவுக்கு குறைவாக உட்கொள்கின்றான் என்பதே அர்த்தமாகும். போஷாக்கற்ற அல்லது சீரான நேரம் தவறிய உணவு முறைகளால் பாரிய சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றது. இன்று ஆபிரிக்காவில் மக்கள் பட்டினிச்சாவின் விளிம்பில் நிற்கின்றார்கள். அங்கு மனித இன அழிவு தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இன்று குறைந்த வருமானம் பெறும் சமூகத்தினரிடையே வறுமையைக் குறைப்பது சவால்மிக்க ஒரு பணியாகும். இது அரசாங்கம் மட்டுமின்றி உலகில் உள்ள முழுமொத்தச் சமூகமும் எதிர்நோக்க வேண்டிய சவாலாகும். உலகிலிருந்து வறுமையை நீக்கவென உலக வங்கி உட்பட பல நாட்டு நிதி நிறுவனங்கள் பல ஆக்கபூர்வமான பங்களிப்புக்களை மிகத் தீவிரமாக செய்து கொண்டுதான் உள்ளது. ஆனால் வறுமை முற்றாக அல்லது பாதியளவு குறைக்கப்பட்டிருக்கின்றதா என்பது ஆய்வு செய்ய வேண்டியது.

எமது இலங்கைத் திருநாட்டைப் பொறுத்தவரை தனிமனித வருமானம் உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி அதிகாரிகள் அவ்வப்போது கூறிவந்துள்ளனர்.

இலங்கை மத்திய வங்கியின் வெளியிட்ட சிறு குழுக்கள் முறை நூலில் எமது நாட்டின் வறிய மக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாகவும் தற்சமயம் அத்தொகை நாட்டின் மொத்த சனத்தொகையில் 15 வீதத்தை விடக் குறைவாக காணப்படுகின்றது என மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித் கப்ரால் எழுதியுள்ளார். இதிலிருந்தும் தற்கால நல்லாட்சி அரசின் வேலைத்திட்டங்களின் மூலமாகவும் வறுமை ஒழிப்பு நடவடிக்கை மிகச் சீராக தூரநோக்கான செயல்திட்டத்துடன் முன்னெடுத்து வருகின்றது என சுட்டிக்காட்ட முடியும்.

கீழைத்தேய நாடுகளை ஆங்கிலேயர் ஆட்சி செய்த நேரத்தில் மக்களின் உணவிற்குத் தேவையான பொருட்களை பகிர்ந்தளித்தார்களே தவிர தூரநோக்கான பொருளாதார அபிவிருத்தியை மக்களுக்காகச் செய்யவில்லை. தங்களது நாட்டின் பொருளாதாரம் வெள்ளைக்கார மக்களின் நல்வாழ்விற்கான ஏற்பாடுகளை வசதிவாய்ப்புக்களுக்கு ஏற்புடைய தொழில் துறைகளையே ஏற்படுத்தி இருந்தனர்.

இதனால் தான் வறிய நாடுகள் செல்வந்த நாடுகள் என்ற இருபெரும் பிரிவுகள் தோற்றம் கண்டது. மக்களை வறுமை நிலையில் வைத்துக் கொள்ளவே விரும்பி அதற்கு செயல்வடிவமும் கொடுத்தார்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்தவுடன் இந்த மானிய உணவு விநியோகம் தொடர்ந்து வந்த அரசுகளால் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. அன்று மக்களுக்கு இலவசமாக ஒரு சேர் அரிசி இரண்டு சேர் (படி) அரிசி என்பன பெரும் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அரசியலை புரட்டிப்போடும் அளவிற்கு மானிய விநியோகம் செல்வாக்கு பெற்றிருக்கின்றது. இன்றும் இதை சமுர்த்தி கொடுப்பனவு ஊடாக மக்கள் பெற்று வருகின்றார்கள்.

எந்தவொரு மானிய இலவச விநியோகத்திற்கும் பணம் வழங்கப்பட முடியாது என உலக வங்கி சிவப்புக் கொடியை காட்டுகின்றது. கடன் வாங்கும் போது கைக்கொள்ளப்படும் இறுக்கமான நடைமுறை அரசியல் நீரோட்டத்தில் மாற்றம் காணுகின்றது.

வறுமை ஒழிக்கப்படுவதற்கு சிக்கனம் சேமிப்பும் கண்டிப்பாக தனிமனிதரிடத்திலும் நாட்டிலும் இருத்தல் அவசியம். பிரித்தானியரின் குடியேற்றப் பொருளாதார அபிவிருத்திக்கு முதலீட்டாக்கம் முக்கியம் என கண்டறியப்பட்டுள்ளது.

19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் சேமிப்பு வங்கியினை நிறுவிய முன்னோடிகள் என்ற பெருமை ஆளுநர் சேர். நாபர் வில்மட் ஹோட்டின் மற்றும் சேர். பொன்னம்பலம் இராமநாதன் ஆகியோர்களையே சாரும்.

இலங்கையில் சேமிப்பு வங்கியானது 6.8.1832 ல் தாபிக்கப்பட்டது. அன்று சேமிப்பு கணக்குகள் பணத்திற்கு பதிலாக தங்கப் பவுண்கள் கொண்டு திறக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.

எனவே ஒரு நாட்டிலிருந்தும் உலகிலிருந்தும் வறுமை ஒழிக்கப்பட வேண்டுமாக இருந்தால் நாட்டில் உற்பத்தி தொழில் துறை சார்ந்த திட்டங்கள் உருவாக்கத்துடன் நல்ல தூரநோக்கான அரசுகள் நாட்டில் இருத்தல் அவசியம். லஞ்சம் ஊழல் அற்ற ஆட்சியினால் மிக விரைவாக வறுமையிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியும்.

வறுமை என்பது என்றைக்கும் நிலையானதல்ல. வறுமையானது சிலரது வாழ்நாட்களில் கடத்த வேண்டியிருக்கும் ஒரு தற்காலிக வாய்ப்பு மட்டுமே. சிலர் இவ்வாய்ப்பை துரிதமாக கடந்து முன்னோக்கி செல்வதோடு மற்றும் சிலர் சில நாட்கள் கடந்து தாமதித்தேனும் பொருளாதார மீட்சிபெறுகின்றான். உலக மக்கள் சமூகம் வறுமையை எதிர்த்து நின்று உழைத்தால் இதை விரட்டி அடிக்கலாம் என்று கூறமுடியும்.

Thursday, October 15, 2015

தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்

தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு தொடர்­பான கூட்டு ஒப்­பந்தம் காலா­வ­தி­யாகி ஆறு மாதங்கள் ஆகியும் புதிய ஒப்­பந்தம் செய்து கொள்­ளப்­ப­ட­வில்லை. அதனால், தொழி­லாளர்­க­ளுக்கு சம்­பள உயர்வும் கிடைக்­க­வில்லை.

மேலும் தீபா­வளிப் பண்­டிகை காலத்தில் அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலையும் நாளுக்கு நாள் அதி­க­ரித்துச் செல்கின்­றது. எனவே, தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க அர­சாங்கம் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என மலை­யக மக்கள் முன்­னணி உப தலைவர் செல்­லையா சிவ­சுந்­தரம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.
அவர் மேலும் தமது அறிக்­கையில், தீபா­வளிப் பண்­டிகை நெருங்கி வரும் வேளையில் பருப்பு, சீனி முத­லான அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலை நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்ணம் இருக்­கின்­றது. இதனால் குறைந்த வரு­மானம் பெறு­கின்ற தோட்டத் தொழி­லா­ளர்கள் பெரும் பொரு­ளா­தாரச் சுமைக்கு முகங் கொடுக்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.
 
கடந்த வரவு செலவுத் திட்­டத்தில் அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கும், தனியார் துறை ஊழி­யர்­க­ளுக்கும் அறி­விக்­கப்­பட்ட சம்­பள உயர்வு வழங்­கப்­பட்­டுள்­ளது. எனினும், இந்த சம்­பள அதி­க­ரிப்பு தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்குக் கிடைக்­க­வில்லை. மேலும், அவர்­க­ளுக்கு கடந்த ஏப்­ரல் மாதத்­தி­லி­ருந்து கிடைக்க வேண்­டிய சம்­பள உயர்வும் கிடைக்­க­வில்லை.
 
அதற்­காக தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் கம்­ப­னி­க­ளுக்கும் இடையில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தைகள் அனைத்தும் தோல்­வியிலேயே முடிவடைந்­துள்­ளன. இந்­நி­லையில் அடுத்த மாதம் 10 ஆம் திகதி தீபா­வளிப் பண்­டி­கையைக் கொண்­டாடும் தோட்டத் தொழி­லா­ளர்கள் புத்­தாடை கொள்­வ­னவு செய்­யவும், பண்­டி­கைக்குத் தேவை­யான பல­கா­ரங்­களைத் தயா­ரிக்­கவும் பெரும் சிர­மத்தை எதிர்­நோக்கி வரு­கின்­றார்கள். பண்­டிகை காலத்­துக்குத் தேவை­யான அத்­தி­யா­வ­சியப் பொருட்கள் அனைத்­தி­னதும் விலை­வாசி திடீ­ரென அதி­க­ரித்­துள்­ளது. இதனால் ஏற்­க­னவே, பொரு­ளா­தாரச் சுமையில் சிக்கித் தவிக்கும் தொழி­லா­ளர்கள் மேலும் சுமைக்கு ஆளாகி இருக்­கின்­றார்கள். கம்­ப­னி­க­ளுக்கும், தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் இடையில் இடம்­பெறும் பேச்­சு­வார்த்­தைகள் தொடர்ந்து இழு­பறி நிலையில் காணப்­ப­டு­கின்­றது. எனவே, கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லிலும், பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் இன்­றைய அர­சாங்கம் ஆட்­சி­ய­மைக்க பெரு­ம­ளவில் நம்­பிக்­கை­யுடன் வாக்­க­ளித்த
 
மக்­க­ளுக்கு நிவா­ரணம் கிடைக்கும் வகையில் அர­சாங்கம் தலை­யிட்டு நியா­ய­மான சம்­பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் செல்­லையா
சிவ­சுந்­தரம் வேண்­டுகோள் விடுத்துள்ளார்.

அரிய வகை உயிரினங்கள் அழியும் அபாயம்

இலங்கையில் மட்டுமே உள்ளதாக கூறப்படும் அரிய வகை உயிரினங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுச் சூழலியலாளரான பிரதீப் சமரவிக்கிரம தெரிவித்தார்.

"கொள கொடையா" என்றழைக்கப்படும் மீனினம், 4 அரியவகை பச்சோந்திகள், 10 வகையான வண்ணத்துப்பூச்சிகள், 11 வகையான முலையூட்டிகளே இவ்வாறு அழியும் நிலையை எதிர்கொண்டுள்ளன.

இவை, மகாவலி கங்கையை சூழ அமைந்துள்ள சிறிய சிறிய தீவுகளில் வாழ்ந்து வருவதாகவும் இக்கங்கையில் கொட்டப்படும் கழிவுகள் மற்றும் இராசாயன பதார்த்தங்கள் காரணமாக அவை அழியும் நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அபாய அறிவித்தல்

பதுளை மாவட்டத்தில் மண் சரிவு, மலை சரிதல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும். இதனால் அம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 50,000 மக்களை அப்பிரதேசத்திலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.  
இதேவேளை பதுளை மாவட்டத்தில் கடந்த புதன் கிழமை மாலை மிகக் குறுகிய நேரத்தில் 80- 100 மி.லீ வரை மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
பதுளை மாவட்டம் மட்டுமன்றி நுவரெலியா, கேகாலை, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கும் மேற்படி அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இயக்குநர் பிரதீபு பொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.  
காற்றுடன் கூடிய மலை நாட்டின் பல பாகங்களிலும் பெய்யக்கூடுமென வாநிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
தொடர்ச்சியான மழையினால் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தை அண்டிய மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் பணித்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்யுமானால் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படும்  என தெரிவிக்கின்றனர். இதேவேளை நுவரெலியா, ஹட்டன், கினிகத்தேன உட்பட மலையகத்தின் பல பகுதிகளில் அதிக பனி மூட்டம் காணப்படுவதால் வாகனங்களை செலுத்வோர் மிக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
 
இறம்பொடை, வெதமுல்ல கயிறுக்கட்டி தோட்டத்திலுள்ள 2ஆம் லயன் குடியிருப்பிலிருந்து 7குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேற்படி லயன் குடியிருப்புத் தொகுதியின் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்டிருந்த மதில் இடிந்து விழும் அபாயமுள்ளதாக தெரிவித்தே குறித்த 7குடும்பங்களும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Wednesday, October 14, 2015

உள்ளூராட்சித் தேர்தல்களின் போது தமிழ் பிரதிநிதித்துவம் குறைவடையும் அபாயம்

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்­களில், தற்­போ­துள்ள மிகச் சொற்­ப­மான தமிழ் பிர­தி­நி­தித்­து­வங்கள் கூட கைந­ழுவிப் போகக்­கூ­டிய அபாயம் இருப்­ப­தாக மத்­திய மாகாண சபை உறுப்­பினர் எம்.சிவ­ஞானம் தெரி­வித்தார். ஞாயி­றன்று மாத்­தளை இ.தொ.கா. அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற தோட்டக் கமிட்டித் தலை­வர்­களின் கூட்­டத்தின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். மாவட்டப் பிர­தி­நிதி எஸ்.கம­ல­நா­தனின் தலை­மையில் நடை­பெற்ற இக் கூட்­டத்தில் அவர் மேலும் பேசிய போது.
 
கடந்த காலங்­களில் பெரும்­பான்மை இன அர­சியல் கட்­சிகள் தான் பல­வ­கை­யான திரு­கு­தா­ளங்­களைச் செய்து நமது மக்­களின் வாக்­கு­களைச் சித­ற­டித்து அவர்கள் நன்­மை­ய­டைந்து வந்­தனர். ஆனால் எதிர்­காலம் அப்­படி இருக்கப் போவ­தில்லை.
 
நம்­ம­வர்­களே தமது பலத்தைக் காட்­டு­வ­தாக முயற்­சி­களில் இறங்கி அதன் மூலம் நமது மக்கள் மத்­தியில் நிலவும் ஒற்­று­மையை சீர்­கு­லைத்து அவர்­களின் வாக்­கு­க­ளையும் சித­ற­டிக்கும் கைங்­க­ரி­யத்தில் இறங்கும் அபாயம் இருக்­கி­றது. ஆகவே பெருந்­தோட்­டங்­க­ளி­லுள்ள நமது மக்கள் மிகவும் விழிப்­பாக இருந்து பிரி­வி­னைக்கு வழி­வ­குக்கும் சக்­தி­களை ஓரங்­கட்ட முன்­வர வேண்­டி­யது காலத்தின் கட்­டா­ய­மாகும்.
 
தொழி­லா­ளர்கள் குடும்­பங்­க­ளுக்கு ஏழு பர்ச்சஸ் காணி வழங்கும் திட்­டத்தை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள போவ­தில்லை. தோட்­டங்கள் திட்­ட­மிட்டு காடு­க­ளாக மாற்­றப்­பட்டு வரு­கின்­றன. அப்­படி நிர்­வா­கத்தால் கைவி­டப்­பட்­டுள்ள காணி­களை ஒரு குடும்­பத்­துக்கு தலா இரண்டு ஏக்கர் வீதம் தொழி­லா­ளர்­க­ளுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்­ப­தையே நாங்கள் தொடர்ந்தும் வலி­யு­றுத்தி வரு­கின்றோம். ஆகவே நமது கோரிக்கை தொட­ரவே செய்யும் என்று குறிப்பிட்டார்.