Thursday, October 15, 2015

அரிய வகை உயிரினங்கள் அழியும் அபாயம்

இலங்கையில் மட்டுமே உள்ளதாக கூறப்படும் அரிய வகை உயிரினங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுச் சூழலியலாளரான பிரதீப் சமரவிக்கிரம தெரிவித்தார்.

"கொள கொடையா" என்றழைக்கப்படும் மீனினம், 4 அரியவகை பச்சோந்திகள், 10 வகையான வண்ணத்துப்பூச்சிகள், 11 வகையான முலையூட்டிகளே இவ்வாறு அழியும் நிலையை எதிர்கொண்டுள்ளன.

இவை, மகாவலி கங்கையை சூழ அமைந்துள்ள சிறிய சிறிய தீவுகளில் வாழ்ந்து வருவதாகவும் இக்கங்கையில் கொட்டப்படும் கழிவுகள் மற்றும் இராசாயன பதார்த்தங்கள் காரணமாக அவை அழியும் நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments: