Wednesday, October 14, 2015

உள்ளூராட்சித் தேர்தல்களின் போது தமிழ் பிரதிநிதித்துவம் குறைவடையும் அபாயம்

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்­களில், தற்­போ­துள்ள மிகச் சொற்­ப­மான தமிழ் பிர­தி­நி­தித்­து­வங்கள் கூட கைந­ழுவிப் போகக்­கூ­டிய அபாயம் இருப்­ப­தாக மத்­திய மாகாண சபை உறுப்­பினர் எம்.சிவ­ஞானம் தெரி­வித்தார். ஞாயி­றன்று மாத்­தளை இ.தொ.கா. அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற தோட்டக் கமிட்டித் தலை­வர்­களின் கூட்­டத்தின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். மாவட்டப் பிர­தி­நிதி எஸ்.கம­ல­நா­தனின் தலை­மையில் நடை­பெற்ற இக் கூட்­டத்தில் அவர் மேலும் பேசிய போது.
 
கடந்த காலங்­களில் பெரும்­பான்மை இன அர­சியல் கட்­சிகள் தான் பல­வ­கை­யான திரு­கு­தா­ளங்­களைச் செய்து நமது மக்­களின் வாக்­கு­களைச் சித­ற­டித்து அவர்கள் நன்­மை­ய­டைந்து வந்­தனர். ஆனால் எதிர்­காலம் அப்­படி இருக்கப் போவ­தில்லை.
 
நம்­ம­வர்­களே தமது பலத்தைக் காட்­டு­வ­தாக முயற்­சி­களில் இறங்கி அதன் மூலம் நமது மக்கள் மத்­தியில் நிலவும் ஒற்­று­மையை சீர்­கு­லைத்து அவர்­களின் வாக்­கு­க­ளையும் சித­ற­டிக்கும் கைங்­க­ரி­யத்தில் இறங்கும் அபாயம் இருக்­கி­றது. ஆகவே பெருந்­தோட்­டங்­க­ளி­லுள்ள நமது மக்கள் மிகவும் விழிப்­பாக இருந்து பிரி­வி­னைக்கு வழி­வ­குக்கும் சக்­தி­களை ஓரங்­கட்ட முன்­வர வேண்­டி­யது காலத்தின் கட்­டா­ய­மாகும்.
 
தொழி­லா­ளர்கள் குடும்­பங்­க­ளுக்கு ஏழு பர்ச்சஸ் காணி வழங்கும் திட்­டத்தை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள போவ­தில்லை. தோட்­டங்கள் திட்­ட­மிட்டு காடு­க­ளாக மாற்­றப்­பட்டு வரு­கின்­றன. அப்­படி நிர்­வா­கத்தால் கைவி­டப்­பட்­டுள்ள காணி­களை ஒரு குடும்­பத்­துக்கு தலா இரண்டு ஏக்கர் வீதம் தொழி­லா­ளர்­க­ளுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்­ப­தையே நாங்கள் தொடர்ந்தும் வலி­யு­றுத்தி வரு­கின்றோம். ஆகவே நமது கோரிக்கை தொட­ரவே செய்யும் என்று குறிப்பிட்டார்.

No comments: